Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
சினிமாப்பாடலில் தமிழ் இலக்கியம்!
2 posters
Page 1 of 1
Re: சினிமாப்பாடலில் தமிழ் இலக்கியம்!
ரஜினிகாந்தின் 100வது படமான ‘ஸ்ரீராகவேந்திரா’வில் ‘
ஆடல் கலையே தேவன் தந்தது’ என்ற அட்டகாசமான
பாடல் உண்டு.
அதில் ஒட்டக்கூத்தரின் பாடலின் முதல் வரியைப்
பயன்படுத்தியிருப்பார் வாலி. இப்படி:
-
‘மல்லிகையை வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்
மெல்லிசையின் ஓசைபோல் மெல்லச் சிரித்தாள்.’
-
(அதாவது, மல்லிகையில் வண்டுகள் ஊதினால்
ஒரு மெலிதான சத்தம் வருமல்லவா,
அப்படி மென்மையாகச் சிரிக்கிறாளாம் இவள் )
-
ஆடல் கலையே தேவன் தந்தது’ என்ற அட்டகாசமான
பாடல் உண்டு.
அதில் ஒட்டக்கூத்தரின் பாடலின் முதல் வரியைப்
பயன்படுத்தியிருப்பார் வாலி. இப்படி:
-
‘மல்லிகையை வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்
மெல்லிசையின் ஓசைபோல் மெல்லச் சிரித்தாள்.’
-
(அதாவது, மல்லிகையில் வண்டுகள் ஊதினால்
ஒரு மெலிதான சத்தம் வருமல்லவா,
அப்படி மென்மையாகச் சிரிக்கிறாளாம் இவள் )
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: சினிமாப்பாடலில் தமிழ் இலக்கியம்!
சினிமாப்பாடலில் இலக்கியங்கள் என ஒரு திரி ஆரம்பிக்கலாம் போலும் ..
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும். (காமத்துப்பால்-குறிப்பறிதல்-1094 )
இக்கருத்தை உள்ளடக்கிய திரைப்படப் பாடல்
உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின் றாயே !
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின் றாயே!
நேரிலே பார்த்தால் என்ன?
நிலவென்ன தேய்ந்தா போகும்?
புன்னகை புரிந்தால் என்ன
பூமுகம் சிவந்தா போகும்?
இது கவிஞர் கண்ணதாசன் இயற்றி , P.B. ஸ்ரீனிவாஸ் அவர்களால் பாடப்பட்டது. படம் தெரியவில்லை.
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும். (காமத்துப்பால்-குறிப்பறிதல்-1094 )
இக்கருத்தை உள்ளடக்கிய திரைப்படப் பாடல்
உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின் றாயே !
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின் றாயே!
நேரிலே பார்த்தால் என்ன?
நிலவென்ன தேய்ந்தா போகும்?
புன்னகை புரிந்தால் என்ன
பூமுகம் சிவந்தா போகும்?
இது கவிஞர் கண்ணதாசன் இயற்றி , P.B. ஸ்ரீனிவாஸ் அவர்களால் பாடப்பட்டது. படம் தெரியவில்லை.
Last edited by Nisha on Mon 7 Apr 2014 - 9:29; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சினிமாப்பாடலில் தமிழ் இலக்கியம்!
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார். ( காமத்துப்பால்-புணர்ச்சி விதும்பல் -1289 )
இக்குறளின் முதல்அடி பயின்று வந்துள்ள திரைப்பாடல்.
கொஞ்சிப்பேசும் கிளியே! -நல்
இன்பம் தரும் ஜோதியே!
மானே! மலரினும் மெல்லியது காதலே!
மகிழ்வோம் நாமே! புதுமை வாழ்விலே!
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் எழுதிய இப்பாடல் இடம்பெற்ற படம் நாடோடி மன்னன்
செவ்வி தலைப்படு வார். ( காமத்துப்பால்-புணர்ச்சி விதும்பல் -1289 )
இக்குறளின் முதல்அடி பயின்று வந்துள்ள திரைப்பாடல்.
கொஞ்சிப்பேசும் கிளியே! -நல்
இன்பம் தரும் ஜோதியே!
மானே! மலரினும் மெல்லியது காதலே!
மகிழ்வோம் நாமே! புதுமை வாழ்விலே!
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் எழுதிய இப்பாடல் இடம்பெற்ற படம் நாடோடி மன்னன்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சினிமாப்பாடலில் தமிழ் இலக்கியம்!
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி --- குறள் 1118
"ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் ஒளியில்லை"
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று ---குறள் 1112.
"அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை"
வாழ்தல் உயிர்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து ---குறள் 1124
"அவள் இல்லாமல் நானில்லை,
நான் இல்லாமல் அவள் இல்லை"
காதலை வாழி மதி --- குறள் 1118
"ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் ஒளியில்லை"
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று ---குறள் 1112.
"அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை"
வாழ்தல் உயிர்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து ---குறள் 1124
"அவள் இல்லாமல் நானில்லை,
நான் இல்லாமல் அவள் இல்லை"
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சினிமாப்பாடலில் தமிழ் இலக்கியம்!
இரண்டு மூன்று வருடம் முன்னால் இந்த தலைப்பில் ஒரு திரி தொடங்கி பலர் பாடல் பகிர்ந்த நினைவு. தேடி எடுத்தபின் இன்னும் பதிகிறேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சினிமாப்பாடலில் தமிழ் இலக்கியம்!
நான் மலரோடு தனியாக என ஆரம்பிக்கும் பாடலை கண்ணதாசன் எழுதி இருக்கிறார்.
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன்
இப்பாடலை கீழே இருக்கும் நள வெண்பா உணர்த்துவதை பாருங்கள்.
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தளைக் காணென்றான் வேந்து.
(நளவெண்பா 184)
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன்
இப்பாடலை கீழே இருக்கும் நள வெண்பா உணர்த்துவதை பாருங்கள்.
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தளைக் காணென்றான் வேந்து.
(நளவெண்பா 184)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சினிமாப்பாடலில் தமிழ் இலக்கியம்!
நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தின் வரும் பாடல் இது
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்வித்திருக்காப்பு
எந்த சினிமாப்பாட்டுக்களில் வந்திருக்கின்றதென கண்டு பிடியுங்கள் பார்ப்போம்!
குனித்த புருவமும் கொவ்வைச் செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇம் மாநிலத்தே..!
இந்த வரிகளும் குத்துப்பாட்டு ஒன்றின் இடையே வரும்னு நினைக்கிறேன். கண்டு பிடிங்க..
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்வித்திருக்காப்பு
எந்த சினிமாப்பாட்டுக்களில் வந்திருக்கின்றதென கண்டு பிடியுங்கள் பார்ப்போம்!
குனித்த புருவமும் கொவ்வைச் செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇம் மாநிலத்தே..!
இந்த வரிகளும் குத்துப்பாட்டு ஒன்றின் இடையே வரும்னு நினைக்கிறேன். கண்டு பிடிங்க..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சினிமாப்பாடலில் தமிழ் இலக்கியம்!
படம்: தளபதி
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்:எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுவர்ணலதா
அடி ராக்கம்மா கையைத் தட்டு
புது ராகத்தில் மெட்டுக் கட்டு
அடி ராக்கோழி மேளம் கொட்டு
இந்த ராசாவின் நெஞ்சத் தொட்டு
அட ராசாவே பந்தல் நட்டு
புது ரோசாப்பூ மாலை கட்டு
அதை ராசாத்தி தோளில் இட்டு
தினம் ராவெல்லாம் தாளம் தட்டு
இது கட்டுக்காவல் இது ஒத்துக்காது
இதைக் கட்டிப் போட ஒரு சூரன் ஏது
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாங்குஜக்குச்சா
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாங்குஜக்குச்சா
அடி ராக்கம்மா கையத் தட்டு
புது ராகத்தில் மெட்டுக் கட்டு
அட ராசாவே பந்தல் நட்டு
புது ரோசாப் பூ மாலை கட்டு
தேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும்
மச்சான் இங்கே அது ஏன் கூறு
அட ஊரு சனம் யாவும் ஒத்துமையாச் சேரும்
வம்பும் தும்பும் இல்லை நீ பாரு
மத்தளச் சத்தம் எட்டு ஊருதான்
எட்டனும் தம்பி அடி ஜோராக
வைக்கிற வானம் அந்த வானையே
தைக்கணும் தம்பி விடு நேராக
அட தம்பட்டம் தாரதான் தட்டிப் பாடு
முத்தம்மா முத்தம் சிந்து
பனி முத்துப் போல் நித்தம் வந்து
அட மாமா நீ ஜல்லிக்கட்டு
இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு
அடி பக்கம் நீதான் ஒரு வைக்கப்போரு
உன்ன கொஞ்சம் மேஞ்சா என்ன அக்கப் போரு
(ஜாங்குஜக்கு)
அடி ராக்கம்மா கையத் தட்டு
புது ராகத்தில் மெட்டுக் கட்டு
அட மாமா நீ ஜல்லிக்கட்டு
இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு
வாசலுக்கு வாசல் வண்ண வண்ணமாக
இங்கே அங்கே ஒளி விளக்கேத்து
அட தட்டிருட்டுப் போச்சு
பட்டப் பகலாச்சு எங்கும் இன்பம் என்னும் பூப்பூத்து
நல்லவர்க்கெல்லாம் எதிர் காலமே
நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா
உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால்
உள்ளங்கையில்தான் வெற்றி வாராதா
அட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான்
கண்ணம்மா கன்னம் தொட்டு
சொகம் காட்டம்மா சின்ன மெட்டு
பூமாலை வெச்சுப்புட்டு
புது பாட்டெல்லாம் வெளுத்துக் கட்டு
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தமுடன் எடுத்த பொற்ப்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே
அடி ராக்கம்மா கையத் தட்டு
புது ராகத்தில் மெட்டுக் கட்டு
அட ராசாவே பந்தல் நட்டு
புது ரோசாப் பூ மாலை கட்டு
அட ஒன்னப் போல இங்கு நானுந்தாண்டி
அடி ஒண்ணு சேர இது நேரந்தாண்டி
(ஜாங்கு ஜக்கு)
--
அடி ராக்கம்மா கையத் தட்டு
புது ராகத்தில் மெட்டுக் கட்டு
அட ராசாவே பந்தல் நட்டு
புது ரோசாப் பூ மாலை கட்டு
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சங்க இலக்கியம்
» இலக்கியம் படித்த கௌரி..!
» அறவுரை - (சிறுவர் இலக்கியம்)
» தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி
» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
» இலக்கியம் படித்த கௌரி..!
» அறவுரை - (சிறுவர் இலக்கியம்)
» தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி
» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|