Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
சபல ஆண்களை சமாளிப்பது எப்படி?
5 posters
Page 1 of 1
சபல ஆண்களை சமாளிப்பது எப்படி?
சபல ஆண்களை சமாளிப்பது எப்படி?
பணி இடத்தில் அனைவரும் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சில சபலபுத்தி கொண்டவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் கலையை பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவர் மேலதிகாரியாக இருந்து தொலைத்தால் அதிக சங்கடம். என்றாலும்கூட சில உத்திகளைக் கடைப்பிடித்தால், இதுபோன்ற தொல்லைகளைத் தவிர்த்துவிடலாம்.
சக ஆண் ஊழியர்கள் தொடக்கத்தில் நல்ல மாதிரி பட்டால்கூட அளவுக்கு அதிகமாக அவர்களிடம் பேச வேண்டாம். யாரைப் பற்றியுமே சரியான முடிவுக்கு வர சிறிது காலம் தேவை. அதுவரை பொறுத்திருந்து, பிறகு நட்பு பாராட்டுவது நல்லது.
உங்களுக்கு உங்கள் வேலை மிகவும் தேவையானதாக இருக்கலாம். அந்த வருமானத்தை நம்பித்தான் உங்கள் குடும்பமும், வருங்காலமும் இருக்கிறது என்கிற நிலைகூட இருக்கலாம். ஆனால் இதையெல்லாம் உங்கள் மேலதிகாரியிடம் சொல்லாதீர்கள். 'நாம் கொஞ்சம் அத்துமீறினாலும் இந்த வேலை இவளுக்கு மிக முக்கியம் என்பதால் ஒத்துப்போகக் கூடும் (அல்லது குறைந்தது தன்னைக் காட்டிக் கொடுக்கமாட்டாள்)' என்கிற எண்ணத்தை அவர் மனதில் பதிய வைப்பானேன்?
சொந்த சோகங்களை அதிகமாக வெளிப்படுத்தினால் 'நான் இருக்கிறேன் உனக்கு. கவலைப்படாதே' என்கிற போர்வையில் மேலதிகாரி எல்லைமீறப் பார்க்கலாம்.
உடை விஷயத்தில் சுயசிந்தனை இருப்பதில் தவறில்லை. என்றாலும் பொதுவாக ஆடை குறித்த ஆண்களின் எண்ணம் கொஞ்சம் பிற்போக்குத்தனமானதுதான். அதனால் ஆடை விஷயத்தில் கவனம் தேவை. அதே சமயம் உடையைவிட முக்கியம் பாடி லாங்குவேஜ் எனப்படும் உடல் மொழி. துணிச்சலான பெண்களிடம் வாலாட்டுவதைவிட பயந்து நடுங்கும் பெண்களிடம் எல்லைமீறப் பார்ப்பது சபலக்காரர்களுக்கு எளிது.
பலரும் காரில் செல்லும்போது ஒன்றை மறந்து விடுவார்கள். ஓட்டுநர் ஒருவர் இருக்கிறார் என்பதை மறந்துவிட்டு வீட்டின் அந்தரங்கங்களை எல்லாம் பேசிக் கொள்வார்கள். இதேபோல பணி இடத்திலும் ஒரு தவறு நடக்கலாம். தொலைபேசியில் அந்தரங்க விஷயங்களைப் பேசும்போது பிறர் கேட்க வாய்ப்பு உண்டு என்பதை மறக்க வேண்டாம்.
எந்த நியாயமான காரணமும் இல்லாமல் மேலதிகாரி உங்களுக்குத் தனி சலுகை எதையாவது அளித்தால், அதை உறுதியுடன் மறுத்து விடுங்கள். “எனக்குப் பிறந்த நாள்” என்று ஸ்வீட் பாக்ஸை நீட்டினால், மறுப்பது நாகரிகமாக இருக்காது என்கிறீர்களா? வா ங்கிக் கொள்ளுங்கள். உடனடியாக உங்கள் துறையிலிருக்கும் பிறரையும் கூப்பிட்டு, அந்த மேலதிகாரி முன்பாகவே, பகிர்ந்து கொள்ளுங்கள்.
சக ஆண் ஊழியர்கள் 'அடல்ட்ஸ் ஒன்லி' ஜோக்குகள் அடித்தால், உடனே உங்கள் எதிர்ப்பை பதிவுசெய்துவிடுங்கள். அதைவிட முக்கியம் நீங்களும் அதுபோன்ற ஜோக்குகளைப் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது. 'இவ்வளவு தாராளமாக இருப்பவள், பிறவற்றிலும் தாராளமாக இருப்பாள்' என்ற எண்ணம் எழலாம்.
சக பெண் ஊழியர்களிடம் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். சபல ஆண் பணியாளர்களை எதிர்க்க இது உதவும். உங்கள் முழு நம்பிக்கையைப் பெற்ற சக ஊழியர்களும் உங்களுக்கு உதவ முன்வருவர். தனித்தீவாக இருக்காதீர்கள்.
உங்கள் வேலையில் நீங்கள் மிகச் சிறப்பானவராக இருந்துவிட்டால், எந்த மேலதிகாரியும் உங்களை அலட்சியப்படுத்திவிடவோ, தவறான கண்ணோட்டத்தில் அணுகவோ முயற்சிக்க மாட்டார்கள். 'ஏடாகூடமாக நடந்து கொண்டால், ஒரு மிக நல்ல பெண் ஊழியரை இழந்து விடுவோம்' என்ற எண்ணமேகூட சில தவறான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக்கூடும்.
நன்றி முத்தமிழ் மன்றம்
பணி இடத்தில் அனைவரும் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சில சபலபுத்தி கொண்டவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் கலையை பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவர் மேலதிகாரியாக இருந்து தொலைத்தால் அதிக சங்கடம். என்றாலும்கூட சில உத்திகளைக் கடைப்பிடித்தால், இதுபோன்ற தொல்லைகளைத் தவிர்த்துவிடலாம்.
சக ஆண் ஊழியர்கள் தொடக்கத்தில் நல்ல மாதிரி பட்டால்கூட அளவுக்கு அதிகமாக அவர்களிடம் பேச வேண்டாம். யாரைப் பற்றியுமே சரியான முடிவுக்கு வர சிறிது காலம் தேவை. அதுவரை பொறுத்திருந்து, பிறகு நட்பு பாராட்டுவது நல்லது.
உங்களுக்கு உங்கள் வேலை மிகவும் தேவையானதாக இருக்கலாம். அந்த வருமானத்தை நம்பித்தான் உங்கள் குடும்பமும், வருங்காலமும் இருக்கிறது என்கிற நிலைகூட இருக்கலாம். ஆனால் இதையெல்லாம் உங்கள் மேலதிகாரியிடம் சொல்லாதீர்கள். 'நாம் கொஞ்சம் அத்துமீறினாலும் இந்த வேலை இவளுக்கு மிக முக்கியம் என்பதால் ஒத்துப்போகக் கூடும் (அல்லது குறைந்தது தன்னைக் காட்டிக் கொடுக்கமாட்டாள்)' என்கிற எண்ணத்தை அவர் மனதில் பதிய வைப்பானேன்?
சொந்த சோகங்களை அதிகமாக வெளிப்படுத்தினால் 'நான் இருக்கிறேன் உனக்கு. கவலைப்படாதே' என்கிற போர்வையில் மேலதிகாரி எல்லைமீறப் பார்க்கலாம்.
உடை விஷயத்தில் சுயசிந்தனை இருப்பதில் தவறில்லை. என்றாலும் பொதுவாக ஆடை குறித்த ஆண்களின் எண்ணம் கொஞ்சம் பிற்போக்குத்தனமானதுதான். அதனால் ஆடை விஷயத்தில் கவனம் தேவை. அதே சமயம் உடையைவிட முக்கியம் பாடி லாங்குவேஜ் எனப்படும் உடல் மொழி. துணிச்சலான பெண்களிடம் வாலாட்டுவதைவிட பயந்து நடுங்கும் பெண்களிடம் எல்லைமீறப் பார்ப்பது சபலக்காரர்களுக்கு எளிது.
பலரும் காரில் செல்லும்போது ஒன்றை மறந்து விடுவார்கள். ஓட்டுநர் ஒருவர் இருக்கிறார் என்பதை மறந்துவிட்டு வீட்டின் அந்தரங்கங்களை எல்லாம் பேசிக் கொள்வார்கள். இதேபோல பணி இடத்திலும் ஒரு தவறு நடக்கலாம். தொலைபேசியில் அந்தரங்க விஷயங்களைப் பேசும்போது பிறர் கேட்க வாய்ப்பு உண்டு என்பதை மறக்க வேண்டாம்.
எந்த நியாயமான காரணமும் இல்லாமல் மேலதிகாரி உங்களுக்குத் தனி சலுகை எதையாவது அளித்தால், அதை உறுதியுடன் மறுத்து விடுங்கள். “எனக்குப் பிறந்த நாள்” என்று ஸ்வீட் பாக்ஸை நீட்டினால், மறுப்பது நாகரிகமாக இருக்காது என்கிறீர்களா? வா ங்கிக் கொள்ளுங்கள். உடனடியாக உங்கள் துறையிலிருக்கும் பிறரையும் கூப்பிட்டு, அந்த மேலதிகாரி முன்பாகவே, பகிர்ந்து கொள்ளுங்கள்.
சக ஆண் ஊழியர்கள் 'அடல்ட்ஸ் ஒன்லி' ஜோக்குகள் அடித்தால், உடனே உங்கள் எதிர்ப்பை பதிவுசெய்துவிடுங்கள். அதைவிட முக்கியம் நீங்களும் அதுபோன்ற ஜோக்குகளைப் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது. 'இவ்வளவு தாராளமாக இருப்பவள், பிறவற்றிலும் தாராளமாக இருப்பாள்' என்ற எண்ணம் எழலாம்.
சக பெண் ஊழியர்களிடம் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். சபல ஆண் பணியாளர்களை எதிர்க்க இது உதவும். உங்கள் முழு நம்பிக்கையைப் பெற்ற சக ஊழியர்களும் உங்களுக்கு உதவ முன்வருவர். தனித்தீவாக இருக்காதீர்கள்.
உங்கள் வேலையில் நீங்கள் மிகச் சிறப்பானவராக இருந்துவிட்டால், எந்த மேலதிகாரியும் உங்களை அலட்சியப்படுத்திவிடவோ, தவறான கண்ணோட்டத்தில் அணுகவோ முயற்சிக்க மாட்டார்கள். 'ஏடாகூடமாக நடந்து கொண்டால், ஒரு மிக நல்ல பெண் ஊழியரை இழந்து விடுவோம்' என்ற எண்ணமேகூட சில தவறான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக்கூடும்.
நன்றி முத்தமிழ் மன்றம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சபல ஆண்களை சமாளிப்பது எப்படி?
பொதுவா பெண்புத்தி பின்புத்தி என்பதை
நிரூபிக்காம இருக்கணும்..!
-
நிரூபிக்காம இருக்கணும்..!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
Re: சபல ஆண்களை சமாளிப்பது எப்படி?
இத்திரிக்கு கருத்தெழுத காலை 7.00க்கு திறந்தேன் இப்பொழுது 9.11 அதுவரை நேரம் இடம் தரவில்லை காரியாலய வேலை அதிகமாகிவிட்டது
முக்கியமான விடயத்தினை பெண்களுக்கான புத்திமதியாக எழுதியிருக்கின்ற இந்த விடயம் மிகச் சிறந்தது
தலைப்போடு ஒத்து விளக்கம் அமைந்திருப்பதும் சிறப்பே
பெருவாரியாக நோக்கும் போது ஆண்கள் சபலப்புத்தி உடையவர்கள் என்று பெண்களால் குற்றம் சாட்டப்பட்டு வருவதை பார்க்கிறோம்
ஆண் பெண் பிண்ணிப்பிணைந்த வாழ்க்கையினுள் ஆண்களற்று பெண்களும் பெண்களற்று ஆண்களும் எங்கும் தனித்த வாழ்வு கசப்பானதே வெகுவாக உணர்ந்தவர்கள் நாங்கள்
எமது நாட்டுகளைப்பொறுத்த வரையில் இந்த கலப்பு காரியாலய நடைமுறை இல்லாமல் இல்லை என்றே சொல்லலாம்
மேலே குறிப்பிட்டது போல் பெண்கள் தங்களைச் சுற்றி ஒரு வேலியை அமைத்துக்கொண்டார்களானால் அவர்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் அதே நேரம் தவறுகள் இடம்பெறுவதற்கு பெண்களும் காரணமாக அமைந்து விடுகின்றார்கள் ஆண்களை விட அதிகமாக பெண்களே இடம் கொடுப்பததை காணக்கிடைக்கிறது
உடைவிடயத்தில் அவர்கள் காட்டும் அனாகரிகமான முறை மேலும் ஆண்களை சபலப்படச்செய்கிறது
மனிதனாக படைக்கப்பட்ட ஆண் ஆசைக்கும் அடிமைப்பட்டவனாகவே இருக்கிறான் சபலத்தினை தூண்டாத இடங்களில் சச்சரவுகள் இடம்பெற வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம்
இந்த விடயத்தில் மிக முக்கியமாக பெண்களே கவனமாக இருக்க வேண்டும்
முக்கியமான விடயத்தினை பெண்களுக்கான புத்திமதியாக எழுதியிருக்கின்ற இந்த விடயம் மிகச் சிறந்தது
தலைப்போடு ஒத்து விளக்கம் அமைந்திருப்பதும் சிறப்பே
பெருவாரியாக நோக்கும் போது ஆண்கள் சபலப்புத்தி உடையவர்கள் என்று பெண்களால் குற்றம் சாட்டப்பட்டு வருவதை பார்க்கிறோம்
ஆண் பெண் பிண்ணிப்பிணைந்த வாழ்க்கையினுள் ஆண்களற்று பெண்களும் பெண்களற்று ஆண்களும் எங்கும் தனித்த வாழ்வு கசப்பானதே வெகுவாக உணர்ந்தவர்கள் நாங்கள்
எமது நாட்டுகளைப்பொறுத்த வரையில் இந்த கலப்பு காரியாலய நடைமுறை இல்லாமல் இல்லை என்றே சொல்லலாம்
மேலே குறிப்பிட்டது போல் பெண்கள் தங்களைச் சுற்றி ஒரு வேலியை அமைத்துக்கொண்டார்களானால் அவர்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் அதே நேரம் தவறுகள் இடம்பெறுவதற்கு பெண்களும் காரணமாக அமைந்து விடுகின்றார்கள் ஆண்களை விட அதிகமாக பெண்களே இடம் கொடுப்பததை காணக்கிடைக்கிறது
உடைவிடயத்தில் அவர்கள் காட்டும் அனாகரிகமான முறை மேலும் ஆண்களை சபலப்படச்செய்கிறது
மனிதனாக படைக்கப்பட்ட ஆண் ஆசைக்கும் அடிமைப்பட்டவனாகவே இருக்கிறான் சபலத்தினை தூண்டாத இடங்களில் சச்சரவுகள் இடம்பெற வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம்
இந்த விடயத்தில் மிக முக்கியமாக பெண்களே கவனமாக இருக்க வேண்டும்
Re: சபல ஆண்களை சமாளிப்பது எப்படி?
நிஜம் தான் ஹாசிம்!
பெண்களின் பேச்சு,செய்கை, நடை, உடை, பாவனை என அனைத்துமே முன்கூட்டிய விழிப்போடு இருந்து விட்டால் போதும்!
கேலியாய் கிண்டலாய் சில வார்த்தைகளை கேட்டு சிரித்து அல்லது மௌனமாய் சொல்வதும் கூட பெண்மை மீதான ஆண்கள் தவறான புரிதலுக்கு வழி வகுக்கிறது.
ஆரம்பத்திலேயே பெண்கள் தமக்கான் மதிப்பை தகக வைத்து கொண்டால் பின் வரும் நாட்களில் பிரச்சனைகள் வராது. அவரவர் மதிப்பும்,மரியாதையும் அவர்கள் நடந்து கொள்ளும் முறைமையில் தான்.
பெண்களின் பேச்சு,செய்கை, நடை, உடை, பாவனை என அனைத்துமே முன்கூட்டிய விழிப்போடு இருந்து விட்டால் போதும்!
கேலியாய் கிண்டலாய் சில வார்த்தைகளை கேட்டு சிரித்து அல்லது மௌனமாய் சொல்வதும் கூட பெண்மை மீதான ஆண்கள் தவறான புரிதலுக்கு வழி வகுக்கிறது.
ஆரம்பத்திலேயே பெண்கள் தமக்கான் மதிப்பை தகக வைத்து கொண்டால் பின் வரும் நாட்களில் பிரச்சனைகள் வராது. அவரவர் மதிப்பும்,மரியாதையும் அவர்கள் நடந்து கொள்ளும் முறைமையில் தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சபல ஆண்களை சமாளிப்பது எப்படி?
ஆண்கள் சபல புத்தி உடையவர்கள் என்பது குற்றச்சாட்டு என்பதை விட அது தான் மனித இயல்பு என கொண்டால் ஆண் பெண் நட்புக்களுக்குள் பாதிப்பு வராது !
எது எப்படி இருந்தாலும் பெண்களாய் நாங்கள் நடந்து கொள்ளும் முறைமை, எடுத்து வைக்கும் அடிகள் தான் அவர்களின் மனதில் சலனங்களை தோற்றுவிக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
எது எப்படி இருந்தாலும் பெண்களாய் நாங்கள் நடந்து கொள்ளும் முறைமை, எடுத்து வைக்கும் அடிகள் தான் அவர்களின் மனதில் சலனங்களை தோற்றுவிக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சபல ஆண்களை சமாளிப்பது எப்படி?
அது சத்தியமான உண்மை இதை விபரிப்பதற்கு பல்லாயிரம் பந்திகள் எழுதிடலாம் அத்தனை உதாரணங்கள் எம்மததியில் இடம்பெறுகிறது எழுதுவதற்கு சூழல் இடம்தரவில்லைNisha wrote:ஆண்கள் சபல புத்தி உடையவர்கள் என்பது குற்றச்சாட்டு என்பதை விட அது தான் மனித இயல்பு என கொண்டால் ஆண் பெண் நட்புக்களுக்குள் பாதிப்பு வராது !
எது எப்படி இருந்தாலும் பெண்களாய் நாங்கள் நடந்து கொள்ளும் முறைமை, எடுத்து வைக்கும் அடிகள் தான் அவர்களின் மனதில் சலனங்களை தோற்றுவிக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
Re: சபல ஆண்களை சமாளிப்பது எப்படி?
Nisha wrote:நிஜம் தான் ஹாசிம்!
பெண்களின் பேச்சு,செய்கை, நடை, உடை, பாவனை என அனைத்துமே முன்கூட்டிய விழிப்போடு இருந்து விட்டால் போதும்!
கேலியாய் கிண்டலாய் சில வார்த்தைகளை கேட்டு சிரித்து அல்லது மௌனமாய் சொல்வதும் கூட பெண்மை மீதான ஆண்கள் தவறான புரிதலுக்கு வழி வகுக்கிறது.
ஆரம்பத்திலேயே பெண்கள் தமக்கான் மதிப்பை தகக வைத்து கொண்டால் பின் வரும் நாட்களில் பிரச்சனைகள் வராது. அவரவர் மதிப்பும்,மரியாதையும் அவர்கள் நடந்து கொள்ளும் முறைமையில் தான்.
உண்மை தான் நிஷா.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சபல ஆண்களை சமாளிப்பது எப்படி?
பானுஷபானா wrote:Nisha wrote:நிஜம் தான் ஹாசிம்!
பெண்களின் பேச்சு,செய்கை, நடை, உடை, பாவனை என அனைத்துமே முன்கூட்டிய விழிப்போடு இருந்து விட்டால் போதும்!
கேலியாய் கிண்டலாய் சில வார்த்தைகளை கேட்டு சிரித்து அல்லது மௌனமாய் சொல்வதும் கூட பெண்மை மீதான ஆண்கள் தவறான புரிதலுக்கு வழி வகுக்கிறது.
ஆரம்பத்திலேயே பெண்கள் தமக்கான் மதிப்பை தகக வைத்து கொண்டால் பின் வரும் நாட்களில் பிரச்சனைகள் வராது. அவரவர் மதிப்பும்,மரியாதையும் அவர்கள் நடந்து கொள்ளும் முறைமையில் தான்.
உண்மை தான் நிஷா.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» மன அழுத்தம் -சமாளிப்பது எப்படி?
» கர்ப்ப கால குமட்டலை சமாளிப்பது எப்படி?
» பருவ மழை மாற்றங்கள்… சமாளிப்பது எப்படி?
» சுட்டெரிக்கும் வெயிலை சமாளிப்பது எப்படி
» ஆண்களை விட பெண்களே அன்பை எதிர்பார்க்கின்றனர்
» கர்ப்ப கால குமட்டலை சமாளிப்பது எப்படி?
» பருவ மழை மாற்றங்கள்… சமாளிப்பது எப்படி?
» சுட்டெரிக்கும் வெயிலை சமாளிப்பது எப்படி
» ஆண்களை விட பெண்களே அன்பை எதிர்பார்க்கின்றனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|