சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

பாடலுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Khan11

பாடலுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

2 posters

Go down

பாடலுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Empty பாடலுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by rammalar Sat 17 May 2014 - 12:13

பாடலுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Images?q=tbn:ANd9GcTzDol0gChA2LNLlcWH4t4gL_UNllK-6S_hGC8MdIp2yInw63fe


காக்கைகா காகூகை, 


கூகைக்கா  காகாக்கை

கோக்குக்கூ  காக்கைக்குக் 

கொக்கொக்க -- கைக்கைக்குக்

காக்கைக்குக் கைக்கைக்கா  கா 

-
-----------------------------------------------
கவி காளமேகம் பாடிய பாடலாம்..
-
அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பாடலுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Empty Re: பாடலுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by rammalar Sat 17 May 2014 - 12:24

வரதன் என்பவர் கவி காளமேகம் ஆன கதை
----------------------------------------

வைஷ்ணவரான வரதன் என்பவர் ஸ்ரீரங்கம்
மடப்பள்ளியில் சமையல் காரராக இருந்தார்
திருவானைக்கா என்கிற  பக்கத்து ஊரில் 
இருந்த  மோகனாங்கி என்கிற சைவப்பெண் 
மேல் காதலாகி சைவரானார்..
-
ஒரு  நாள் அந்தப் பெண்ணுக்காக  திருவானைக்கா
கோவிலில் காத்திருந்து, அப்படியே  களைத்து  
தூங்கிப்போனதில் அதிருஷ்டம்  அடித்தது வரதனுக்கு

அன்றிரவு  ஒரு   அந்தணன் செய்த  தவத்தை மெச்சி 
சரஸ்வதி தேவி   பிரத்யட்சமாகி கோவிலில் 
படுத்திருந்த  அந்த  அந்தணனைப் பரிசோதிக்க  தனது 
வாய்   தாம்பூலத்தை  அவனுக்கு அளிக்க  முன்வந்த
போது,  அந்த  அந்தணன்  அவளை யார்  என்று 
அறியாமல், உன்  எச்சில்  எனக்கு  வேண்டாம் என்று  
மறுக்க,
அருகே  படுத்துறங்கிய  வரதனுக்கு  அந்த தாம்பூலத்தை  
வாயில்  அளித்தாள்  கலைமகள்.  
வரதனும்  தூக்கத்தில்  அது தனது   காதலி மோகனாங்கி
என்று அரைத்தூக்கத்தில்  சந்தோஷத்தோடு  வாங்கி
மென்று  உண்டான்.

அந்தக் கணம்  முதல்   கல்விக்கடவுள் சரஸ்வதியருளால்  
கவி இயற்றும் சக்தி வந்தது.  சகல  சாஸ்திரங்களும்
அவனுள் அடக்கம். கருமேகம் அடித்து நொறுக்கி மழை
பொழிவது போல் தமிழ்  கடல் மடையாக  அவனிடமிருந்து
வெளிப்பட்டது. 

அதனால் வரதனின் பெயர் '' காள -மேகம்''  ஆயிற்று. 
ஆசு கவியானான்

--

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பாடலுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Empty Re: பாடலுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by rammalar Sat 17 May 2014 - 12:53

திருமலைராயன் பட்டினம்  என்று  காரைக்கால் 
பக்கம்  ஒரு  ஊர்.   அதில்  காளமேகம் போய்க்
கொண்டிருக்கும்போது சில புலவர்கள் அவரை 
மடக்கி ஒரு  சிலேடை  சொல்ல வைத்தனர்.  

அவரோ கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்புக்கும்  
வாழைப்பழத்துக்கும் உள்ள ஒற்றுமையை வைத்து 
அருமையான ஒரு சிலேடைப்பாட்டு இயற்றினார். 
-


        நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதன் முடிமேலிருக்கும்
        வெஞ்சினத்துப் பற்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த்
        தேம்பாயுஞ் சோலைத் திருமலைராயன் வரையில்
        பாம்பாகும் வாழைப்பழம்

-
விளக்கம்:
 
வாழை சில நன்றாக பழுத்து கனிந்து போய் இருக்கும் 
(பாம்பு நஞ்சை (விஷத்தை) உடையது)  வாழையைத்
தோல் உரித்து உள்ளே  தள்ளுகிறோம். (பாம்பு  சட்டை
உரிக்கும் (தோல்).
நாதர் முடி மேல் இருக்கும்  நல்ல பாம்பு..
(வாழை  உச்சியிலிருக்கும்)
பல் பட்டால் வாழைப்பழம் துண்டாகி  வயிற்றில்
இறங்கும். 
(பாம்பின் விஷப்பல் பட்டால் ஆள்  மீள மாட்டான்). 
எனவே  ரெண்டும்  ஒன்றே.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பாடலுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Empty Re: பாடலுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by rammalar Sat 17 May 2014 - 12:58

முதலில் சொன்ன பாட்டுக்கு அர்த்தம்:
-


காக்கைக்கு    --  காக்காவிற்கு  

ஆகா  கூகை --  ஆந்தையைப்  பிடிக்காது.  ஒத்துப்போகாது. 

கோக்கு     -    கோ  ​ என்றால்  அரசன்.

கூ       =      பூமி,  அவன்  நாடு, 

காக்கை    -     காப்பது   அரசாள்வது 

கொக்கொக்க --   கொக்கைப்  போன்று 

கைக் கை    -    விரோதிகளை வென்று 
கா               காப்பது.



கோர்வையாகச் சொன்னால் காக்கைக்கு இரவில் 
கண்  தெரியாது. ஆந்தைக்கு பகலில் கண்
தெரியாது  ரெண்டுக்கும் நட்பு கிடையாது 
காக்கையை விட  ஆந்தை பலம் கொண்டது. 
எனவே காக்கை தனக்கு சாதகமான பகலில் 
ஆந்தையை விரட்டும்.
-
ஒரு ராஜாவுக்கு தனது நாட்டைக்காப்பது 
இன்றியமையாதது. எதிரிகளை எப்படி கொக்கு 
நிதானமாக காத்திருந்து  உறுமீன்  வந்தவுடன் 
சட்டென்று  அதைக் கவ்வுமோ  அது போல்
எதிரி அசந்திருக்கிற சமயத்தில் அவன் மேல்
படை எடுத்து வென்று நாட்டைக் காப்பது அவசியம் 
என்று  பொருள். ,
---

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பாடலுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Empty Re: பாடலுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by Nisha Sun 18 May 2014 - 16:52

திரி இலக்கியங்கள் பகுதிக்கு நகர்த்தி இருக்கின்றேன் ஐயா.

இம்மாதிரி விளக்கம் தரும் போது இயன்றவரை தலைப்பில் அப்பாடல் வரி அல்லது யாரால் இயற்றப்பட்டது என எழுதினால் நல்லது.

காளமேகபுலவரில் பாட வரிகளுக்கான விளக்கம் என்பது போல் தலைப்பில் இருந்தால் தேடும் போது இலகுவாக கிடைப்பதோடு ஒரே பதிவு மீண்டும் மீண்டும் வருதலையும் தவிர்க்கலாம் அல்லவா..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாடலுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Empty Re: பாடலுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum