Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
வாழ்ந்து காட்டுவோம்!
3 posters
Page 1 of 1
வாழ்ந்து காட்டுவோம்!
-
"அரிது அரிது மானிடராயப் பிறத்தல் அரிது' என்றார் அவ்வையார். அரியதொரு மானிடப் பிறவியை எடுத்த நாம், குடும்ப வாழ்க்கையில் நாளும் நாளும் மகிழ்ச்சியை அனுபவிக்கிறோமா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.
சமூகம் என்பது பெரிய குடும்பம்; குடும்பம் என்பது சிறிய சமூகம். வாழ்க்கையில் வெற்றி பெற படிப்பு, பதவி, பணம், நண்பர்கள் தொடர்பு என இவை மட்டுமே முக்கியம் என்று பலரும் கருதுகிறார்கள். ஆனால், தன் குடும்பத்தைச் சிறப்பாக நிர்வகிக்கத் தெரிந்தவர்களே வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.
-
நல்லதொரு குடும்பமே பல்கலைக்கழகமாகத் திகழ்கிறது. குடும்பத்தின் அடித்தளம் திருமண வாழ்க்கையாகும். அன்பின் முகவரியாய் திருமண வாழ்க்கை அமைந்துவிட்டால், அங்கே மகிழ்ச்சித் தென்றல் எப்போதும் வீசும்.
மண வாழ்வில் இன்பம் - திருமணம் என்பது ஆண் பெண் இருவரின் எண்ணங்களின் சங்கமமாய் மிளிர வேண்டும்.
"அடக்கம், பொறுமை, தியாகம், இரக்கம், அழகு, ஒப்புரவு, தொண்டு முதலியன அமைந்த ஒன்று பெண்மை' என்றார் தமிழ்த் தென்றல் திரு.வி.க.
-
பெண்மையின் சிறப்பினை உணராமல் "மனைவிக்கு என்ன தெரியும்...?' என்று ஒரு கணவன் தாழ்வாக மதிப்பிடக் கூடாது. வாழ்க்கை என்னும் பாதையில், இல்லறம் என்னும் வண்டி இனிதே ஓட, கணவனும் மனைவியும் இரு சக்கரங்கள் என்பதை எவரும் மறந்திட இயலாது.
-
கணவனின் நிலையை மனைவியும், மனைவியின் நிலையைக் கணவனும் உணர்ந்த சூழலில் அங்கே அன்பு வளரும்; பாசம் மலரும்; மகிழ்ச்சி நிறையும்.
-
குடும்ப வாழ்வின் வெற்றிக்காகக் கடுமையாக உழைத்து, சாதனை புரியும் ஆற்றலை ஓர் ஆண் பெற்றிருக்க வேண்டும். அத்தகைய ஆணையே உயிராகப் போற்றிப் பாதுகாக்கும் பணியை ஒரு பெண் பெறுவாள். இதனைச் சங்க இலக்கியமான "குறுந்தொகை' "வினையே ஆடவர்க்கு உயிரே; மனையுறை மகளிருக்கு ஆடவர் உயிர்' எனப் பெருமையாகக் கூறுகிறது.
-
"காதல் ஒருவனைக் கைப்பிடித்தே, அவன் காரியம் யாவினும் கைகொடுத்தே' என மகாகவி பாரதியும் பெண்ணின் கடமையினைப் பாடுகிறார்.
-
ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தம் வாழ்வில் மூன்று நிலைகளைச் சந்தித்தாக வேண்டும். அவையாவன...
-
* குடும்ப வாழ்வில் ஓர் ஆணும் பெண்ணும் இணைவது என்பது முதல் நிலையாகும்.
=
* குழந்தை பிறந்து அவர்களைப் பெரியவர்களாக்கும் வரை தொடரும் உறவு இரண்டாவது நிலையாகும்.
-
* கணவனும் மனைவியும் தங்கள் உணர்ச்சிகளைத் துறந்து உள்ளக் காதலை வளர்த்துக் கொள்ளும் நிலை மூன்றாவது கட்டமாகும். இதுவே முதியோர் காதலாகும்.
-
குழந்தைகளைப் பேணுதல் - திருமணம் என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை தந்த பரிசு என்று கூறினால், குழந்தை என்பது திருமண வாழ்க்கை தந்த பரிசு என்று கூறலாம். குழந்தைகளின் வளர்ச்சியே ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியாகும். பெற்றோர்களே ஒரு குழந்தைக்கு முதல் ஆசிரியர்கள் ஆவர். குழந்தைக்குப் பண்புள்ள ஒரு தாய் கிடைத்துவிட்டால், அது குழந்தைப் பருவத்திலேயே தூய்மையான அன்பைப் புரிந்து கொள்கிறது. சுயநலத்தைத் தவிர்த்து, நல்ல குணங்களுடன் வளர்கின்றது.
-
தாயின் அன்பும், தந்தையின் அரவணைப்பும் குழந்தையின் எதிர்கால வாழ்வைச் சிறந்த முறையில் அமைக்க அடித்தளமாக உள்ளன.
-
குழந்தைகளுக்கு எதிரே பெற்றோர் தீய சொற்களைப் பேசுவது, ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வது, தங்கள் மனக்கசப்பை வெளிப்படுத்துவது போன்றவற்றைச் செய்தல் கூடாது.
-
சிறுவயதில் குழந்தைகள் நெஞ்சில் படியும் தீய எண்ணங்கள், அவர்கள் எதிர்கால வாழ்க்கையைப் பாதிக்கும். குழந்தைகளுக்கு வழிகாட்ட பெற்றோர் பல்வேறு நீதிகளை விளக்கமாகச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். அவர்களே நல்ல எடுத்துக்காட்டு மனிதர்களாக வாழ்ந்தால் போதும். குடும்ப வாழ்வின் இன்பமும் வெற்றியும் பிள்ளைகளுக்கு தானே வந்து சேரும்.
-
"இன்பம் சூழ்ந்த குடும்பம் இப்பிறவியிலேயே காணும் சுவர்க்கமாகும்' என்றார் பெüரிங் என்ற மேனாட்டு அறிஞர். எனவே, குடும்ப வாழ்க்கை சுவர்க்கமாக அமைந்திட அன்பு, பொறுமை, சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுக்கும் தன்மை போன்ற நல்ல பண்புகளை வளர்ப்போம். மகிழ்ச்சியாக வாழ்வோம்.
-
-------------------------------------
குடந்தை பாலு, சென்னை.
நன்றி: தினமணி
_________________
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
Re: வாழ்ந்து காட்டுவோம்!
நிச்சயம் வாழ்ந்து காட்டுவோம்!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» குழந்தைகளிடம் அன்பு காட்டுவோம் ******************************************************.
» குழந்தைகளிடம் அன்பு காட்டுவோம்
» ஜனவர்-28 சிறை நிரப்பும் போராட்டம்.இறையருளால் வென்று காட்டுவோம்.
» உலகில் வாழ்ந்து பயனில்லை
» கனவுகளில் வாழ்ந்து விடுகிறேன்
» குழந்தைகளிடம் அன்பு காட்டுவோம்
» ஜனவர்-28 சிறை நிரப்பும் போராட்டம்.இறையருளால் வென்று காட்டுவோம்.
» உலகில் வாழ்ந்து பயனில்லை
» கனவுகளில் வாழ்ந்து விடுகிறேன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|