Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
இவ்வளவு அன்பா!
2 posters
Page 1 of 1
இவ்வளவு அன்பா!
--
-
தகடூர் என்னும் நாட்டைச் சிற்றரசன் ஒருவன்
ஆண்டு வந்தார். அவர் பெயர் அதியமான்.
ஒருநாள் அவரைச் சந்திக்கச் சென்றார் அவ்வையார்.
அவர் அவரை ஓர் உயர்ந்த ஆசனத்தில் அமர்த்தி
வைத்து, ஒரு நெல்லிக் கனியைத் தந்து உண்ணுமாறு
கேட்டுக் கொண்டார்.
-
“இந்த நெல்லிக்கனி அபூர்வமான சக்தியுடையது;
எந்நாளும் வலிமையைத் தரும் வல்லமையை
உடையது. நீண்ட ஆயுளை வளர்க்க வல்லது!’
-
நீங்கள் தமிழுக்குச் செய்யும் தொண்டால் நான்
உள்ளம் உருகினேன். இதைத் தாங்கள் உண்டால்
நெடுங்காலம் வாழ்ந்திருக்கலாமே… என்ற
எண்ணத்திலே தந்தேன்!” என்று மனமுருகினார்
அதியமான்.
-
அதன்பின் அவர் அவரிடம் விடைபெற்று பறம்பு
மலைக்குச் சென்றார். பறம்பு மலையைப் பாரி
என்பவன் ஆண்டு வந்தான். அவனும் சிற்றரசன் தான்!
ஆனால், அதிய மானைப் போல வள்ளல் தன்மை
நிரம்பியவன்.
அரசனைத் தரிசித்தவுடன் அவ்வையார் பொதுவாக,
அந்த நாட்டை விட்டுக் கிளம்பிச் சென்று விடுவார்.
அதன்படி அவ்வையார் பாரியைப் பார்த்தவுடன்
கிளம்ப எத்தனித்தார். பாரிக்கோ அவ்வையார்
மேலும் சில நாட்கள் தன்னிடம் தங்க வேண்டும்
என்று விருப்பம். எனவே, அவரைத் தன்னிடம் தங்க
வைக்கத் தந்திரம் ஒன்றை அவன் செய்தார்.
-
அவர் கிளம்பும் போது ஏகப்பட்ட பொருட்களைப்
பரிசளித்தான். பின் சிவிகை ஒன்றில் அவரை ஏற்றி
அனுப்பி வைத்தான். நாட்டின் எல்லைப் புறத்தை
அடைந்தவுடன் திடீரென வழிப்பறிக்
கொள்ளைக்காரன் ஒருவன் வந்து அவ்வையாரிடம்
இருந்த பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றான்.
-
வேறு வழியில்லாத அவ்வை திரும்பி வந்து பாரியிடம்
புகார் செய்தார். பாரி இதைக் கேட்டு ஆறுதல்
கூறினான்.
“நடந்ததை எண்ணி வருந்த வேண்டாம். அந்தத்
திருடனைப் பிடிக்க ஏற்பாடு செய்கிறேன். நீங்கள்
சில காலம் தங்கி ஓய்வு எடுங்கள். போகும் போது
அதைவிட அதிகமாகவே தருகிறேன்!” என்றார்.
-
அவ்வையாரும் அவர் விருப்பத்துக்கு இணங்கினார்.
இவ்வாறு மூன்று தடவை கிளம்பினார் அவ்வையார்.
மூன்று தடவையும் பழைய வழிப்பறிக்
கொள்ளைக்காரனே வந்து பொருளைக் கவர்ந்து
சென்றான்.
-
அவ்வையார் வருந்தினார்.
-
“”வழிப்பறிக் கொள்ளையை அடக்கக் கூடாதா?” என்று
முறையிட்டார். பாரி அவரிடம் பணிவுடன் கூறினான்.
-
“”அடக்கலாம் என்று தான் நினைத்தேன். பின் விட்டு
விட்டேன். அவன் வழிப்பறி செய்ததால் தானே
தாங்கள் வந்து இவ்வளவு காலம் தங்கி இருக்கிறீர்கள்!
அவனுக்கு ஏதாவது தண்டனை தரத் தாங்கள்
தீர்மானித்தால், எனக்குத் தான் நீங்கள் அந்தத்
தண்டனையைத் தர வேண்டும். ஏனென்றால் வழிப்
பறிக் கொள்ளைக்காரனாக வந்தவன் நான் தான்!
உங்களைத் தங்க வைக்கத்தான் நான் அப்படிச்
செய்தேன்!” என்றார்.
-
அவ்வையார் வியந்து போனார்.
“”இந்த ஏழைக் கிழவி மேல் இவ்வளவு அன்பா?” என்று
மெய்யுருகிப் போனார்.
-
———————————–
நன்றி: சிறுவர் மலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
Re: இவ்வளவு அன்பா!
ஆகா! என்ன அருமையான குணம்...ஏழையாக இருந்தாலும் அன்புக்கு இலக்கணம் அல்லவா...
நன்றி அண்ணா..சிறப்பு பதிவிற்கு..
நன்றி அண்ணா..சிறப்பு பதிவிற்கு..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» இந்த சிறிசி என்ன கேட்டிருக்கும் (அன்பா இருக்கு)
» இவ்வளவு போதும்...
» இளநீரில் இவ்வளவு மருத்துவ குணங்களா?
» நயன்தாரா படத்துக்கு இவ்வளவு பட்ஜெட்டா?
» இவ்வளவு ட்ராஃபிக்ல செல்லுலு பேசறீங்களே..?
» இவ்வளவு போதும்...
» இளநீரில் இவ்வளவு மருத்துவ குணங்களா?
» நயன்தாரா படத்துக்கு இவ்வளவு பட்ஜெட்டா?
» இவ்வளவு ட்ராஃபிக்ல செல்லுலு பேசறீங்களே..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|