Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
சினிமா : ராமானுஜன் தலைமுறை
2 posters
Page 1 of 1
சினிமா : ராமானுஜன் தலைமுறை
பார்க்க வேண்டும் என்று நினைத்த இரண்டு படங்களை பார்க்கும் வாய்ப்பு சென்ற வாரத்தில் கிடைத்தது. அந்தப் படங்கள் ராமானுஜன் மற்றும் தலைமுறைகள். இரண்டுமே ரொம்ப எதிர்ப்பார்ப்போடு இருந்த படங்கள். மேலும் இங்கு தியேட்டருக்கெல்லாம் வராத படங்கள் வரிசையில் இந்தப்படங்களும் இருந்ததால் இணையத்தில் பார்க்க காத்திருக்க வேண்டியிருந்தது.
கிறிஸ்தவப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் மகனை வீட்டை விட்டுத் துரத்தும் அப்பாவாக மறைந்த கேமராக் கவிஞன் இயக்குநர் பாலுமகேந்திரா... அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். தொப்பி போட்டு அளவான மீசை வைத்து போட்டோக்களில் பார்த்த பாலுமகேந்திராவா இது, வாழ்க்கை முதுமையில் அந்த உருவத்தை எப்படி மாற்றி வைத்திருக்கிறது என்ற நினைப்போடு பார்த்தபடம்.
அண்ணனின் காதல் திருமணத்துக்குப் பின் படிப்புக்கு தடை விதிக்கப்படும் தங்கை, திருமணம் செய்து பெண் குழந்தை பிறக்கும் என மூன்று ஆண்குழந்தைகளைப் பெற்றிருக்கிறாள். நான்காவதாய் வயிற்றில்... அப்பாவுக்கு முடியலை என்பதை அறிந்து அங்கு வரும் மகன் அவரின் மனசில் இடம் பிடித்தானா? மகனைத் தொடர்ந்து வரும் மருமகளையும் பேரனையும் அவர் ஏற்றுக் கொண்டாரா? மகளுக்கு பெண் குழந்தை பிறந்ததா? அவரின் வாழ்க்கை என்னவானது? என்பதை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் பாலுமகேந்திரா.
குழந்தை பிறந்து வீட்டுக்குத் திரும்பும் மகளிடம் என்ன குழந்தை என்று கேட்கும் தந்தை, அவளை மருத்துவமனையில் சேர்த்து வீட்டுக்கும் மருத்துவமனைக்குமாக அலையும் மகனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கமாட்டாரா? அவருக்கு இருக்கும் இரண்டாவது வீட்டில் அந்த அம்மா பெயரை மட்டும் சொல்லி அவரை திரையில் காட்டாவிட்டாலும் வீட்டுக்கு இரண்டு மூன்று முறை வரும் சித்தி பெண் என்ன ஆனாள்? காதல் மணம் புரிந்து வீட்டை விட்டுப்போன மகனின் மகன் மீது கொள்ளைப் பாசம் வைக்கும் தாத்தா, வீட்டிலேயே இருக்கும் மகள் வயிற்றுப் பேரன்கள் மூவருடனும் பேசவேயில்லையே ஏன்? வீட்டிலேயே இருக்கும் அத்தை பையன்களுடன் அந்தப் பேரன் பேசவும் இல்லை. அவர்களுக்கான காட்சியும் இல்லையே ஏன்? ஆங்கிலம் மட்டுமே பேசுவேன் என்று சொல்லும் பேரன் கிராமத்திலேயே தங்கி அங்கு படிப்பதென்பது சினிமாவுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்... நடைமுறைக்கு ஒத்துவருமா? என்பது போன்ற கேள்விகள் வரிசையாய் எழுந்தாலும் படம் ஒரு தலைமுறையின் வாழ்க்கையை அளவாய், அழகாய் காட்டியது.
பேரனுடனான தாத்தாவின் சந்தோஷங்களை அழகாய்ச் சொன்ன தலைமுறைகள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
*******************
கணிதமேதை இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை இரண்டரை மணி நேரப்படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஞான ராஜசேகரன். அவரின் கணித அறிவு, அதற்காக அவர் செய்யும் செயல்கள், திருமணம், தன்னோட திறமையை நிரூபிப்பதற்கான போராட்டம், வெளிநாட்டு வாழ்க்கை, காசநோய், மரணம் என அவரின் வாழ்க்கையின் ஒட்டு மொத்த நிகழ்வுகளையும் காட்டியிருக்கிறார்.
இராமானுஜர் வாழ்க்கை வரலாற்றைப் படித்ததில்லை. ஆனால் படத்தில் பெரியவரான பின்னர் அவர் எதற்கெடுத்தாலும் அழுவது போல் காட்டியிருப்பது ஏனோ பிடிக்கவில்லை. உண்மையில் அவர் அப்படிப்பட்டவரா என்பதை நன்கு விவரம் அறிந்த நட்புக்கள் சொன்னால் நன்றாக இருக்கும். அம்மாவாக வரும் சுகாசினி வில்லி போல் காட்சிப்படுத்தப்பட்டு கடைசியில் தாய்மனசைக் காட்டுகிறார். அப்பாவாக வரும் நிழல்கள் ரவி, அப்பாஸ், சரத்பாபு, ஓய்.ஜி என நிறைய நடிகர்கள் நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.
இராமானுஜராக வாழ்ந்திருக்கிறார் புதுமுகம் அபினவ், தேடிப்பிடித்துப் போட்டிருக்கிறார்கள். வீரபாண்டிய கட்டப்பொம்மன் என்றதும் நமக்கு சிவாஜி நினைவில் ஆடுவதுபோல் இனி இராமானுஜர் என்றாலே இந்த அபினவ்தான் நினைவில் ஆடுவார். பொருத்தமான மனிதர். அவரை மணந்து கொண்டு மாமியாரின் கொடுமைக்கு உட்பட்டாலும் வெளிக்காட்டாமல் வெகுளித்தனமான சின்னப்பெண்ணாக பாமா தனது பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்.
ஆங்கிலேயர்கள் அனைவரும் தமிழ் பேசுவதுதான் ஒட்டாமல் இருக்கிறது. ஆனால் அவர்களை ஆங்கிலத்தில் பேசவைத்து தமிழில் பொருள் போட்டிருந்தால் பாதிக்கும் மேலான படம் ஆங்கிலப்படம் போல் ஆகியிருக்கும் என்பதே உண்மை. அதனால் இயக்குநர் ஆங்கிலேயர்களை தமிழ் பேச வைத்திருக்கிறார்.
இன்றைக்கு நாம் பயன்படுத்தும் ATM, MAIL அனைத்துக்கும் இவர் கண்டுபிடித்த கணிதமே அடிப்படை என்பதை எத்தனை பேர் அறிவோம். சாகும் தருவாயில் கூட மார்க் தீட்டாவைக் கண்டுபிடித்த தமிழன் இராமானுஜரின் வாழ்க்கையை அழகாய் தொகுத்திருக்கும் இந்தப் படத்தை அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். பாரதியைப் போல்தான் ராமனுஜரின் மரணத்திலும் ஒரு சிலரே கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை படத்தின் மூலம் அறிந்தபோது வேதனையாக இருந்தது.
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சினிமா : ராமானுஜன் தலைமுறை
தலைமுறைகள் குறித்த விமர்சனமும் , சந்தேகங்களும் அசத்தலோ அசத்தல். படத்தை பார்த்தோமா போனோமா என்றில்லாமல் இந்தமாதிரி லாஜிக் இல்லாத சம்பவங்களுக்கான சந்தேகங்களை கேட்பது எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு.
ராமானுஜம் விமர்சனமும் அருமை. இன்னும் எழுதுங்கள்.
ராமானுஜம் விமர்சனமும் அருமை. இன்னும் எழுதுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|