Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு
3 posters
Page 1 of 1
இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு
இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு
முன்னுரை:
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு"
எனும் வள்ளுவரின் வார்த்தைகளை வாழ்க்கையாய் வாழ்த்திட்டவர். ஏழ்மையிலும் உண்மை ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து இந்தியாவின் முதல் குடிமகனாய் உயர்ந்தவர். பெற்றோரின் சுமை குறைக்க நாளும் நாளிதழ்களைச் சுமந்திட்ட நல்லவர். மீனவக் குடும்பத்தில் பிறந்து விண்மீன்களை அளந்திட்ட வித்தகர். அயல்நாட்டில் வேலை கிடைத்திட்ட போதும் தாய்நாடே சிறந்தது என்று எண்ணிய தன்னலமற்றவர். அவரே எ.பி.ஜே.அப்துல்கலாம்.
பிறப்பு மற்றும் இளமைப் பருவம் :
கடலை நேசித்திடும் படகோட்டியான ஜெய்னுலாப்தீனுக்கு மகனாய்ப் பிறந்திட்ட அப்துல்கலாம் நேசித்தது என்னவோ வானைத் தான். பள்ளிக் காலத்தில் கடற்கரையில் பறவை பறப்பதைக் கண்டு பறக்க எண்ணிய இப்பறவை தன் கனவுகளை நிறைவேற்றிட ராமேஸ்வரம், திருச்சி , சென்னை எனப் பல இடங்களுக்கு பறந்து தன் அறிவுக்கான தீனியை சேகரித்தது. இயற்பியல் முடித்திட்டாலும் விண்ணையே அதிகம் விரும்பியதால் இப்பறவை சென்னைக்குப் பறந்திட்டது.
ஆரம்பகாலப் பணி:
"என் கடன் பணி செய்து கிடப்பதே"
எனும் வாசகத்தை நெஞ்சில் நிறுத்தி தாய்நாட்டுக்காக தன்னலமற்று உழைத்தவர். 1959ல் அறிவியல் ஆய்வு உதவியாளராக தன் பணியைத் துவங்கியவர் தன் கடின உழைப்பால் 1963ல் ஏவூர்த்திப் பொறியாளனாய்ப் பூத்திட்டார்.
ஏவுகணை நாயகன் :
பெண் ஆசை துறந்த துறவிக்கு விண்ணாசை மட்டும் விடவே இல்லை. ஆணாய் இருந்து அப்பாச்சி, எஸ்.எல்.வி 3, அக்கினி எனப் பல ஏவுகணைகளை ஈன்று எடுத்தார். அக்கினி பறந்தது என்னவோ வானில் தான் அது உருவாக்கிய தாக்கம் என்னவோ அனைத்து இந்தியர் வாழ்வில் தான். எஸ்.எல்.வி 3 பணியின் போது பல தடைகள் வந்திட்ட போதும் கூட கலங்காமல் எடுத்த காரியத்தை முடித்தார். எஸ்.எல்.வி 3 முதலில் தோல்வி கண்டாலும் அடுத்த முயற்சியில் அதை வெற்றி பெறச் செய்து இந்தியாவை வானம் தாண்டியும் வெற்றி பெறச் செய்தார். விடா முயற்சி வெற்றியே தரும் என நிருபித்துக் காட்டினார்.
நான்கு மகிழ்ச்சிகள்:
"வேதம் மட்டுமல்ல எம் வித்தகரின் மகிழ்ச்சி கூட நான்கு தான்"
மண்ணில் பிறந்து ஆழியால் வளர்க்கப்பட்ட வல்லவர் விண்வெளி ஆராய்ச்சியில் தன் இளமைக் காலம் 20 ஆண்டுகள் செலவிட்டதும், வயிற்றில் இருக்கும் சிசுவை தாய்க் காப்பதைப் போல தாய்நாட்டைக் காக்க பாதுகாப்புத் துறையில் பணியாற்றியதும், அணுசக்தி சோதனை நிகழ்த்தி உலக அரங்கில் இந்தியாவைத் தலை நிமிர்த்தியதும், ஒற்றை கால் கொண்ட மழலை மலர்களின் செயற்கை கால் எடை 3 கிலோவிலிருந்து 300 கிராமாக மாற்றியது தான் இந்த நல்லவரின் நான்கு மகிழ்ச்சியாம்.
விருதுகள்:
தமிழகத்தின் வைரத்திற்கு இரத்தின விருதை வழங்கி பெருமை செய்தது நம் பாரதம். இந்த அறிவியல் மேதைக்கு ஆழ்வார் ஆராய்ச்சி மையம் ராமனுஜம் விருது வழங்கி சிறப்பித்தது. இதனன்றி பத்ம பூசன், பத்ம விபூசன் எனப் பல விருதுகளைப் பெற்றார் இந்தப் பெருமைக்குரிய மனிதர்.
முதல் குடிமகனான மூன்றாவது தமிழன்:
அக்னிக்கு சிறகு கொடுத்தவர் இந்தியாவை ஏற்றப் பாதையில் கொண்டு செல்ல வந்தார் முதல் குடிமகனாய். ஜனாதிபதி தேர்தலில் தடைகளைத் தாண்டி வெற்றி பெற்றவர் இந்திய இளைஞர்கள் இதயத்தில் முடி சூடா மன்னராய் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டார். மக்களின் குடியரசுத் தலைவர் என அனைவராலும் போற்றப் பட்டார். ஜனாதிபதி ஆன பின்பு நாட்டிற்கு தன்னால் வீண் செலவு வரக் கூடாது என்று எண்ணி எளிமையை மட்டுமே கடைபிடித்தார். பூக்களையும் சைவ உணவுகளையும் அதிகம் விரும்பியவர். முதல் குடிமகனான பின்பும் கூட இந்த தமிழன் நேசித்தது என்னவோ ஆசிரியப் பணியைத்தான்.
காலத்தால் அழியாத கலாம்:
சராசரி மனிதருக்கு வேண்டுமானால் முடிவுரை இருக்கலாம் , சரித்திர நாயகனுக்கு அல்ல .சின்னதொரு துகளாம் அணுவிலும் சரி ,பேரண்டமாம் பால்வெளியிலும் சரி தன் பெயரை எழுதிச் சென்ற தலைவன். அழித்தாலும் மீண்டும் உயிர்த்தெழும் "பீனிக்ஸ்" போன்றவர். ஒரு நெல்மணி மண்ணில் புதைவதால் அது மரிந்தது என்று அர்த்தமல்ல இன்னும் ஆயிரம் நெல்மணிகளைக் கொடுக்கப் போகின்றது என்று தான் அர்த்தம் .அதுபோல தான் எங்கள் ஏவுகணை நாயகனும் இந்தியாவின் கடைசி மாணவனும் ,இளைஞனும் இருந்திடும் வரையிலும் வாழ்த்திடுவார் இந்தியாவிற்கும், இளைஞர்களுகும் முதுகெலும்பாய் இருந்தவர் .கனவு காணுவோம் கலாமின் கனவை நிறைவேற்றிட.
"ராமேஸ்வரத்தில் தோன்றிய
புதிய ராகம்
கடின உழைப்பும் விடா முயற்சியுமே
இதன் தாரக மந்திரம்
வானைத் தாண்டி கொடி நாட்டிய சிகரம்
அவர் காட்டிய பாதையிலே செல்கின்றது எமது கரம் "
புதிய ராகம்
கடின உழைப்பும் விடா முயற்சியுமே
இதன் தாரக மந்திரம்
வானைத் தாண்டி கொடி நாட்டிய சிகரம்
அவர் காட்டிய பாதையிலே செல்கின்றது எமது கரம் "
ramya karthick- புதுமுகம்
- பதிவுகள்:- : 11
மதிப்பீடுகள் : 10
Re: இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு
ரெத்தினச் சுருக்கமான விவரணம் ஒரு வாழ்ந்த சரித்திரம் பற்றியது அருமை சகோதரி தொடருங்கள் உங்கள் ஆக்கங்களை
Re: இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு
நேசமுடன் ஹாசிம் wrote:ரெத்தினச் சுருக்கமான விவரணம் ஒரு வாழ்ந்த சரித்திரம் பற்றியது அருமை சகோதரி தொடருங்கள் உங்கள் ஆக்கங்களை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நாயகம் அவர்களின் வாழ்க்கை சரித்திரம் ஒரு வழிகாட்டி.
» முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு
» ஆதம் (அலை) அவர்களின் வரலாறு
» வாழ்க்கை வழிகாட்டி புத்தகத்தை நீங்களே உருவாக்கி நண்பர்களுக்கு பரிசளிக்க
» கல்பனா சாவ்லா வாழ்க்கை வரலாறு
» முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு
» ஆதம் (அலை) அவர்களின் வரலாறு
» வாழ்க்கை வழிகாட்டி புத்தகத்தை நீங்களே உருவாக்கி நண்பர்களுக்கு பரிசளிக்க
» கல்பனா சாவ்லா வாழ்க்கை வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|