சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா (மலையாளம்) Khan11

ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா (மலையாளம்)

2 posters

Go down

ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா (மலையாளம்) Empty ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா (மலையாளம்)

Post by சே.குமார் Tue 19 Jul 2016 - 21:22

ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா (மலையாளம்) OruSecondClassYathra05092015114741am


போலீஸ்காரர்கள் இருவர் பயிற்சி காலத்தில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக கீரியும் பாம்புமாக இருக்கிறார்கள். மேலதிகாரியின் உத்தரவின் பேரில் கீரியும் பாம்பும் இரண்டு கைதிகளை கன்னூரில் இருந்து திருவனந்தபுர சிறைக்கு மாற்றுவதற்காக இரயில் இரண்டாம் வகுப்பு பெட்டியில் அழைத்துச் செல்கிறார்கள். மரங்கள் நிறைந்த அழகான பாதையில்... வளைந்து நெளிந்து பயணிக்கும் பாதையில்... ஆறுகள், ஏரிகள் மீதான நீண்ட பாலங்களில்... இரயில் பயணிப்பது போல படமும் அழகாய் பயணிக்கிறது.
இரண்டு கைதிகளில் ஒருவரான செம்பான் வினோத் ஜோஸ், கோவிலில் நகையைத் திருடி, தனது வளர்ப்புத்தாய்... அட நம்ம பரவை முனியம்மா... கையில் கொடுக்க, அவர் அது கோவிலில் திருடியது என்பதை அறியாது கழுத்து... காது... கால் என எல்லா இடத்திலும் போட்டுக் கொண்டு அதே கோவிலுக்குப் போக... அப்புறம் என்ன திருடருக்கு ஜெயில்ல சாப்பாடு.
இரண்டாவது கைதி வினித் சீனிவாசன்... படிப்பு ஏறாததால் டீக்கடையில் வேலை... கூடப்படித்து நல்ல மார்க் எடுத்து வெளியூரில் படிக்கச் சென்ற பெண் மீது காதல்... ஆனால் அது ஓகே ஆனதா என்பதை கடைசி வரை காட்டவில்லை என்பது வேறு விஷயம். அளவில்லா பாசம் கொண்ட அக்கா... அக்காவும் தம்பியும் ஒரு தாய் மக்கள் என்றாலும் அப்பா வேறு... ஆம் முதல் கணவனின் மறைவுக்குப் பின்னர் மேஸ்திரி நெடுமுடி வேணு அவர்களை அழைத்து வந்து குடும்பம் நடத்தி பிறந்தவர்தான் வினீத். வேணுவுக்கோ தன் மனைவியின் மகள் மீது மோகம்... அவளை அடையத் துடிக்கிறார். அதற்கான நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார். அவரின் இந்த கேவலமான எண்ணத்துக்கு மனைவி எதிரியாகிறாள். அக்காவை அந்த காமுகனிடம் இருந்து காப்பாற்ற கொலை செய்யத் திட்டமிடுகிறான் மகன். அந்த திட்டத்தை அறிந்த வேணுவோ அதில் மனைவியை பலி கொடுக்கிறார். அம்மாவைக் கொன்ற குற்றத்திற்காக சிறைக்கு அடைக்கப்படுகிறான்.
ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா (மலையாளம்) Oru-Second-Class-Yathra-Stills-32

இரயிலில் இருந்து தப்பி அப்பாவைத் தேடிச் செல்லும் வினீத்தை தேடி இரண்டு போலீஸ்காரர்களும் முதல் கைதியும் அலைவது சுவராஸ்யம்... அந்த விசாரணையில்தான் நாயகனின் கதை விரிகிறது. அக்காவுடன் வேறு ஊரில் இருக்கும் அப்பாவை கண்டுபிடித்தானா...? அக்காவை காப்பாற்றினானா...? போலீஸ் அவனைப் பிடித்ததா..? இரண்டு போலீஸ்காரர்களுக்குமான பிரச்சினை தீர்ந்ததா...? இரண்டாவது கைதி அவர்களோடு பயணித்தானா இல்லையா...? என்பதுதான் மீதிக்கதை.
படம் வந்து ஒரு வருசத்துக்கு மேலாச்சு... இப்போதுதான் பார்ப்பதற்கு வாய்த்திருக்கிறது. இந்தப் படத்தில் பள்ளி விழாவில் படிக்கும் பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். அக்கா நிக்கி கல்ராணிக்கும் தம்பி வினீத் ஸ்ரீனிவாசனுக்கும் இடையிலான வயசு வித்தியாசம் அதிகமில்லை என்பது உறுத்தல், அப்படியிருக்கு நிக்கி சின்ன குழந்தையாக இருக்கும் போதே அவரின் அம்மாவை மனைவியாக்கிக் கொள்ளும்  நெடுமுடி வேணு 'உன்னைய விரும்பிக் கட்டலை... அன்னைக்கே உம்மவ என்னையக் கவர்ந்துட்டா... என்னைக்கா இருந்தாலும் அவளை அடையணும்ன்னுதான் கூட்டியாந்தேன்' என்று சொல்லும் போது  பொறுத்தமில்லாமல் தோன்றுகிறது.
ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா (மலையாளம்) Oru-Second-Class-Yathra-Stills-34

வினித் சீனிவாசன் படங்கள் அதிகம் பார்த்ததில்லை... காமெடிகலந்த திரில்லர் படம் என்பதால் நடிப்பு பரவாயில்லைதான்... அக்காவாக வரும் நிக்கி கல்ராணி அழகு... வினித் விரும்பும் பெண்ணாக வரும்  அபர்ணா பாலமுரளிக்கு அதிக வேலை இல்லை... கொஞ்ச நேரமே வருகிறார். நெடுமுடி வேணுவின் வில்லத்தனம் சூப்பர். போலீஸ்காரர்களின் மோதலும்... அவர்களோடு வினீத்தை தேடி பயணிக்கும் கைதி வினோத்தின் நடிப்பும் கலக்கல். 
செகண்ட் கிளாஸ் யாத்ரா ஒரு சுகமான பயணம்.

-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா (மலையாளம்) Empty Re: ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா (மலையாளம்)

Post by Nisha Sun 24 Jul 2016 - 17:37

குமாரின் எழுத்தில் சினிமா பார்க்காதவர்களையும் பார்க்க தூண்டும் இன்னுமொரு அழகான விமர்சனம். 

அருமை குமார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா (மலையாளம்) Empty Re: ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா (மலையாளம்)

Post by சே.குமார் Mon 25 Jul 2016 - 6:15

Nisha wrote:குமாரின் எழுத்தில் சினிமா பார்க்காதவர்களையும் பார்க்க தூண்டும் இன்னுமொரு அழகான விமர்சனம். 

அருமை குமார்.

நன்றி அக்கா....
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா (மலையாளம்) Empty Re: ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா (மலையாளம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum