Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
நாச்சியார் விமர்சனம்
Page 1 of 1
நாச்சியார் விமர்சனம்
-
வயது வந்தவர்களின் காதலே இங்கு பலரால் பகடைக்காயாகப்
பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில்,
இரண்டு மைனர்கள் காதல், அவர்களுக்கு நடக்கும் விபரீதம்,
அதன் விளைவுகளுக்குக் காரணமானவர்களுக்கான முடிவு...
என்ற களத்தை நூறு நிமிடப் படமாகப் பேச முயல்கிறது,
'நாச்சியார்' திரைப்படம்.
நேர்மையான போலீஸ் அதிகாரி ஜோதிகாவிடம் (நாச்சியார்),
மைனர் சிறுமியை ஒருவர் பலாத்காரம் செய்த வழக்கு
விசாரணைக்கு வருகிறது. அதில் தொடர்புடையதாகக்
கருதப்படும் ஜி.வி.பிரகாஷை காவல்துறை வளைத்துப் பிடிக்கிறது.
விசாரணைக்குப் பிறகு, ஜி.வி கூர்நோக்கு இல்லத்தில் அடைபட,
கர்ப்பமாக இருக்கும் அந்தச் சிறுமியை ஜோதிகாவே தத்தெடுத்துப்
பார்த்துக்கொள்கிறார். சில நாள்களில் அந்தச் சிறுமியின்
குழந்தையும் பூமியைத் தொடுகிறது.
என்ன இது... பாலா படம் மாதிரியே இல்லையே, என்கிறீர்களா?
அதேதான்! முதல்பாதியில் எங்குமே படைப்பாளி பாலாவை
நீங்கள் பார்க்கமுடியாது. இடைவேளையின்போது ஓர் உண்மை
உடைய, இரண்டாம்பாதியில் அது பற்றிய விசாரணையில்
களமிறங்குகிறார், ஜோதிகா.
இந்த இரண்டு மைனர்களின் அறியாமையைப் பயன்படுத்திக்
கொண்டவர்கள் யார் என்பது 'நாச்சியாரி'ன் மீதிக்கதை.
அசிஸ்டென்ட் கமிஷனர் நாச்சியாராக ஜோதிகா. வாயும், கையும்
சேர்ந்தே 'பேசும்' உடல்மொழி. நடிப்பு, வசன உச்சரிப்பு என
அனைத்திலும் மெனக்கெட்டிருக்கிறார். முதல் முறையாக
சொந்தக்குரல் பொருந்திப்போகும் இந்தக் கேரக்டரில், பலமுறை
பார்த்த துள்ளல் ஜோதிகாவாக இல்லாமல், யாரைத் திட்டலாம்,
யாரைப் போட்டு மிதிக்கலாம் எனப் பரபரவென்று சுற்றும்
போலீஸ் அதிகாரியாக மிரட்டியிருக்கிறார்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Re: நாச்சியார் விமர்சனம்
ஒரே மாதிரியான கதைகளிலும் கேரக்டர்களிலும் மட்டுமே
நடித்துக்கொண்டிருந்த 'நடிகர்' ஜி.வி பிரகாஷுக்கு இது நிச்சயம்
வெரைட்டியான வேடம்தான். சில இடங்களில் நடிப்பு துருத்திக்
கொண்டு தெரிந்தாலும், பாலா படத்தின் முக்கியக் கேரக்டர்
என்னென்ன மேனரிஸங்களோடு இருக்குமோ அதையெல்லாம்
'காத்தவரயன்' கேரக்டரில் பக்காவாக செய்கிறார்.
நல்ல முன்னேற்றம் ஜி.வி!. மைனர் பெண் 'அரசி'யாக வரும்
இவானா, கண்களாலேயே படத்தைத் தாங்குகிறார்.
சில இடங்களில் சிறுமியாகவும், 'அவன்மேல மட்டும் தப்பு
இல்லை மேடம்; நானும்தான்!' என மெச்சூரிட்டியோடு சொல்லும்
இடம்... எனப் பல காட்சிகளில் பார்வையால் படத்திற்குப்
பலம் சேர்த்திருக்கிறார். வெல்கம் குட்டிப்பெண்ணே!
முக்கியக் கதாபாத்திரங்களைத் தவிர, படத்தில் வரும்
‘இன்ஸ்பெக்டர் ஃபெரோஸ்கான்’ (ராக்லைன் வெங்கடேஷ்),
டாக்டர் குரு, பாட்டி கொளப்புள்ளி லீலா, வழக்குரைஞரராக
வரும் மை.பா.நாராயணன்... நடித்த பெரும்பாலான நடிகர்கள்
கதாபாத்திரத்துடன் மிகச்சரியாக பொருந்தியிருக்கிறார்கள்;
தேவையான அளவு நடித்தும் இருக்கிறார்கள்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Re: நாச்சியார் விமர்சனம்
'எளியவர்களைச் சுரண்டும் வலியவர்கள், இரு துருவங்களையும்
சந்திக்கும் ஒரு போலீஸ் அதிகாரியின் முடிவு' என்ற ஒன்லைனை
அழுத்தமான கதையாகச் சொல்கிறார், இயக்குநர் பாலா.
வழக்கமான பாலாவின் படங்களில் இருந்து இது வித்தியாசமான
அனுபவம் தருகிறது. இரண்டாம் பாதியை த்ரில்லராக தர
முனைந்ததெல்லாம் சரிதான். ஆனால், அந்த இன்டர்வெல்
ட்விஸ்ட்டை காலங்காலமாக கோலிவுட்டை கவனித்துவரும்
ரசிகன் ஈஸியாக கணித்துவிடுவானே!.
தவிர, பாலா படங்களின் பலமே அதிலுள்ள காட்சிகள் கோபம்,
வெறுப்பு, குரோதம், நகைச்சுவை... என ஏதேனும் ஓர்
உணர்ச்சியையாவது ரசிகனுக்குக் கடத்துவது. அது இந்தப்
படத்தில் மிஸ்ஸிங்.
படத்தின் மொத்தக் கதையையும் தாங்கி நிற்கும் ஃப்ளாஷ்பேக்
காட்சியில் அழுத்தம் இல்லை. காவல்துறையை நல்லவர்கள்
புழங்கும் இடமாகவும் சென்னையின் பூர்வகுடிகளை சந்தேகக்
கண்ணோட்டத்தோடும் அணுகும் படங்களை இன்னமும் எ
த்தனை காலத்திற்குப் பார்ப்பது?
குற்றம் செய்தவனுக்கு சட்டத்தில் இருந்து விலகி, தானாகவே
கொடூரமான தண்டனையைக் கொடுக்கும் நாச்சியாரை
காவல்துறை 'ஜஸ்ட் லைக் தட்'டாக அணுகுவது, படத்தில்
பயன்படுத்தப்பட்டிருக்கும் 'சென்னை மொழி', நீதிமன்றம்,
சமூக சீர்திருத்தப்பள்ளி தொடங்கி,கல்யாண வீடு,
டெபுடி கமிஷனர் அருகில் இருந்துகொண்டு உதவி கமிஷனரை
விரட்டும் போலீஸ் ஏட்டம்மா, மருத்துவமனை ஆயா வரை...
இயல்பில் இருந்து விலகி நிற்கும் இடங்கள் அதிகம்.
முக்கியமாக, 'ஆணவக்கொலை நடக்கும் இடங்களுக்கு உன்னை
ட்ரான்ஸ்ஃபர் செய்கிறேன்' என உயரதிகாரி நாச்சியாரிடம்
சொல்வது, ஃபேஸ்புக் புரட்சியாக இருக்கிறது. தவிர, போலீஸ்
'விசாரணையை' நியாயப்படுத்துவது, மனித உரிமைகள்
ஆணையத்தை நக்கலடிப்பது போன்றவையெல்லாம் இனியும்
வேண்டாமே!.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Re: நாச்சியார் விமர்சனம்
குப்பை மேடுகளின் புழுதியில் இருந்து எழும் ஈஸ்வரின் கேமரா
குப்பங்களின் இண்டு இடுக்குகள் வழியே காவல் நிலையத்தின்
இருட்டு லாக்கப்களுக்கும், அழுக்கு படிந்த கூர்நோக்கு
இல்லத்திற்கும் அலுப்பே தட்டாமல் பயணிக்கிறது.
இசை, இளையராஜா. பாடலோ பின்னணி இசையோ பெரிதாக
ஈர்க்கவில்லை. நிறைய காட்சிகள் அந்தரத்தில் தொங்குவது
போல இருக்கிறது. சதீஷ் சூர்யாவின் எடிட்டிங் ஓரளவுக்கு
ஒத்துழைத்திருக்கிறது.
இதையெல்லாம் மீறி, ‘ஏழைகளை சோதிப்பதே இந்தக்
கடவுளுக்கு வேலையாப்போச்சு’ என்றதும், 'அவருக்கும்
பொழுது போகணும்ல, விடு... நாம நமக்கேற்றபடி ஃப்ரெஷ்ஷா
ஒரு கடவுள் பண்ணிப்போம்’, '
'நீங்க எங்களைப் பிடிச்ச படைய்யா! கடைசிவரை உங்களை
சொறிஞ்சிகிட்டேதான் இருக்கணும்!', ‘தோப்பனார் வடகலை,
தாயார் தென்கலை’, 'அருள்தரும் அரபு நாட்டினிலே’
என்று பாடும்போது, 'போகவேண்டியதுதானே அங்கயே...'
எனப் படத்தில் இருக்கும் பாலாவின் டிரேட் மார்க் பகடிகளுக்கு
லைக்ஸ்!
பாலா படத்தை பாசிட்டிவ் முடிவோடு பார்க்க விரும்புபவர்கள்,
இந்த நாச்சியாரோடு கைகுலுக்கிவிட்டு வரலாம்.
-
--------------------------------------
விகடன் விமர்சனக் குழு
-விகடன்
\
குப்பங்களின் இண்டு இடுக்குகள் வழியே காவல் நிலையத்தின்
இருட்டு லாக்கப்களுக்கும், அழுக்கு படிந்த கூர்நோக்கு
இல்லத்திற்கும் அலுப்பே தட்டாமல் பயணிக்கிறது.
இசை, இளையராஜா. பாடலோ பின்னணி இசையோ பெரிதாக
ஈர்க்கவில்லை. நிறைய காட்சிகள் அந்தரத்தில் தொங்குவது
போல இருக்கிறது. சதீஷ் சூர்யாவின் எடிட்டிங் ஓரளவுக்கு
ஒத்துழைத்திருக்கிறது.
இதையெல்லாம் மீறி, ‘ஏழைகளை சோதிப்பதே இந்தக்
கடவுளுக்கு வேலையாப்போச்சு’ என்றதும், 'அவருக்கும்
பொழுது போகணும்ல, விடு... நாம நமக்கேற்றபடி ஃப்ரெஷ்ஷா
ஒரு கடவுள் பண்ணிப்போம்’, '
'நீங்க எங்களைப் பிடிச்ச படைய்யா! கடைசிவரை உங்களை
சொறிஞ்சிகிட்டேதான் இருக்கணும்!', ‘தோப்பனார் வடகலை,
தாயார் தென்கலை’, 'அருள்தரும் அரபு நாட்டினிலே’
என்று பாடும்போது, 'போகவேண்டியதுதானே அங்கயே...'
எனப் படத்தில் இருக்கும் பாலாவின் டிரேட் மார்க் பகடிகளுக்கு
லைக்ஸ்!
பாலா படத்தை பாசிட்டிவ் முடிவோடு பார்க்க விரும்புபவர்கள்,
இந்த நாச்சியாரோடு கைகுலுக்கிவிட்டு வரலாம்.
-
--------------------------------------
விகடன் விமர்சனக் குழு
-விகடன்
\
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|