சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

சினிமா விமர்சனம் : தீவண்டி (மலையாளம்) Khan11

சினிமா விமர்சனம் : தீவண்டி (மலையாளம்)

Go down

சினிமா விமர்சனம் : தீவண்டி (மலையாளம்) Empty சினிமா விமர்சனம் : தீவண்டி (மலையாளம்)

Post by சே.குமார் Mon 24 Sep 2018 - 8:54

சினிமா விமர்சனம் : தீவண்டி (மலையாளம்) Theevandi-et00070647-08-02-2018-03-43-39


தீவண்டி...
மலையாளத்தில் தீவண்டி என்றால் இரயில் என்பதை அறிவோம்... நம்ம ஊர்ல சிகரெட் இருந்தாத்தான் வேலை ஆகும் என எழுந்தது முதல் கக்கூஸ்  முதல் படுக்கைக்குச் செல்லும் வரை ஊதித் தள்ளுபவரை  சுத்த தமிழ்ல 'செயின் சுமோக்கர்'ன்னு சொல்லுவோம்ல அப்படிப்பட்ட ஆளைச் சுற்றிப் பிண்ணப்பட்ட கதை என்பதால் படத்தின் பெயரே 'தீவண்டி' என்பதாய்.
பினீஸ் தாமோதரன் என்ற பெயர் இருந்தாலும் படம் முழுவதும் 'தீவண்டி'யாய் டொவினோ தாமஸ். கர்ணனும் கவச குண்டலமும் மாதிரி டொவினோவும் சிகரெட்டுமாய்... அதனால் திரையெங்கும் புகை... அம்மன் படத்துக்கு நம்மூரு தியேட்டர்ல சாம்பிராணி போட்ட மாதிரி.

காலையில் எழும்போதே காபி எங்கே என்று எழுபவர்களைப் போல் சிகரெட் பாக்கெட்டைத் தேடியபடியே எழுகிறார் டொவினோ. 150 சிகரெட் பிடித்து ஒருவன் சாதனை பண்ணியிருக்கிறான் என்பதை நண்பன் சொல்ல, காதலி மேல் உள்ள கோபத்தில் அந்த சாதனையை நான் முறியடிக்கிறேன் என பதினாறு பாக்கெட் சிகரெட்டை ஓரே சமயத்தில் பிடித்து நண்பர்கள் மத்தியில் சாதனையாளராகிறார். 
அடித்துப் பெய்யும் மழை நாளில் மருத்துவமனை செல்லாமல் வீட்டிலேயே பிறந்து, செத்துப் போயிருச்சு என வெள்ளைத் துணியில் சுற்றி பெஞ்சின் மீது வைத்து விட்டுப் போக, மாமன் பிடிக்கும் சிகரெட் புகையினால் முகத்தில் லேசான மாற்றம் தெரிகிறது. மனசுக்குள் மகிழ்ச்சி மழை அடிக்க மழலையின் முகத்தில் புகையை ஊதுகிறார் மாமா... குழந்தை அதை உள்வாங்கி மெல்ல அழ ஆரம்பிக்கிறது.

அந்தக் காட்சியின் பின்புலத்தில் உலகத்தில் சிகரெட் வாசனையில் உயிர் பெற்ற இரண்டாவது குழந்தை இது என்று சொல்கிறார்கள். முதலாவது ஆளான பாப்லோ பிக்காசோ, தன் மாமா ஊதிய சிகரெட்டால்தான் உயிர் பெற்றாராம். அதை அப்படியே உருவி வைத்து விட்டார் இயக்குநர். இனி நம்மாளுக பிறந்த குழந்தை அழலையே என்றதும் சிகரெட் வாங்கி வாங்க என்று சொல்லாமல் இருந்தால் சரி.
வளர் பருவத்தில் பிடித்துத் தூக்கிப் போட்ட சிகரெட்டை எடுத்து சுவைத்துப் பார்க்கிறான். பின்னர் மாமாவுக்கு சிகரெட் வாங்குகிறான்... அது தனக்குமானதாய்.... இரண்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதாய் ஆகிவிட... பள்ளிப் பருவத்தில் பாழடைந்த வீட்டுக்குள் சிகரெட் சுவையை அனுபவிக்க ஆரம்பிக்கிறார்கள்.
இரவில் வெளியில் வந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் போது போலீஸில் மாட்டி, காவல் நிலையத்தில் வைத்து வீட்டார் முன் உண்மை வெளிப்பட, சிகரெட் பிடித்துக் கொள் என்ற அனுமதி கிடைக்கிறது. பின்னர் சிகரெட்டும் கையுமாய் அலைய ஆரம்பிக்கிறான்.

படத்தின் ஆரம்பத்தில் சிகரெட் குடிப்பது உடல் நலத்துக்கு தீங்கென்றார்கள். டோரண்டில் பார்க்கும் போது டொவினோ சிகரெட் பிடிக்கும் போதெல்லாம்.... அதுவும் பதினாறு பாக்கெட் சிகரெட்டை அடுக்கி வைத்து மொத்தமாய் வாயில் வைத்து புகையை கப்...கப்பென விடும் போது பெண்களின் சத்தம் காதை பிளக்கிறது... அப்ப சிகரெட் பிடிப்பதை பெண்கள் விரும்புகிறார்கள் என்கிற போது நாயகி மட்டும் முத்தம் கொடுக்க வேண்டும் என்றால் சிகரெட்டை நிறுத்து என்கிறாளே ஏன்..?
சரி விடுங்க... தீவண்டியினாலே பிடிக்காத சூரஜ் வெஞ்சரமூடுவின் மகள் சம்யுக்தாவிற்கு சின்ன வயது முதலே அவன் மீது காதல்... அந்தக் காதலைச் சொல்லி, அது திருமணம் நிச்சயம் வரை செல்கிறது. முத்தம் கொடுக்க முயலும் போது முதல் சிகரெட்டை நிறுத்து என்கிறாள் மனைவி ஆகப்போகும் காதலி... நிறுத்திடலாமே முத்தத்தை என்கிறான் தீவண்டி. அப்படிப்பட்டவன் தாலியை சிகரெட் பாக்கெட்டில் வைத்து மாமனார் வீட்டில் காட்டக் கொண்டு செல்ல, மங்களகரமான பொருளை எதில் வைத்து எடுத்து வருகிறாய் என மூளும் கோபத் தீயில் திருமணம் தடைபடுகிறது.

சினிமா விமர்சனம் : தீவண்டி (மலையாளம்) Theevandi_Tovino-compressed
இதற்கிடையே அரசியல் ஒரு பக்கமாகப் பயணித்து வருகிறது, இடைவேளைக்குப் பின் அது தீவண்டியோடு பயணப்பட ஆரம்பிக்கிறது.

ப்ளூவேல் விளையாட்டு அடிமை டிரைவரால் விபத்துக்குள்ளாகிறார் எம்.எல்.ஏ, அவர் பிழைக்க மாட்டாரென அந்த இடத்துக்கான போட்டியில் பொண்ணு கொடுக்க இருந்த மாமனும் அக்காவின் கணவனும்... அந்த இடத்தில் அக்காவின் கணவனுக்காக பேசுகிறான் தீவண்டி... 

வார்த்தை முற்றி பெண் கொடுக்க இருந்த மாமன் நீ சிகரெட் பிடிக்காமல் இத்தனை நாள் இருந்தால் நான் விட்டுக் கொடுக்கிறேன் என்கிறார். அவர் மனசுக்குள் இப்படியேனும் தீவண்டி மாறினால் மகளின் திருமணத்தை நடத்தலாம் என்ற நப்பாசையும் இருக்கிறது. உதட்டு முத்தம் கூட வேண்டாம் சிகரெட்டை முத்தமிடுவேன் என்றவன் அக்காவின் கணவனுக்காக முடியாத சவாலுக்கு ஒத்துக் கொள்கிறான். அந்த சவாலை சமாளிக்க அவன் படும்பாடு... அதைப் பார்த்தால் ரசிக்கலாம்.
தான் எப்படியும் தேர்தலில் சீட் வாங்க வேண்டும் என்பதால் ஒரு தீவில் அவனை கொண்டு போய் இறக்கி விடுகிறான் அக்கா கணவன்... அங்கு சிகரெட் இல்லை... இரண்டு தடியர்கள் கிடாருடன் உட்கார்ந்து 'தீவண்டி...' 'தீவண்டி...' எனப் பாடுகிறார்கள். அங்கிருந்து அவனை வெளியில் கொண்டு வர காதலியின் தகப்பன் ஆட்களை அமர்த்துகிறான். அவனுக்கும் எப்படியும் தானே சீட் வாங்கி விட வேண்டும் என்ற ஆசையும் இருக்கத்தான் செய்கிறது. பின்னே கோடிகளில் மிதக்க யாருக்குத்தான் ஆசையிருக்காது.

அக்கா கணவன்... காதலியின் அப்பா... ஜெயிக்கப் போவது யார்..? என்ற கேள்வியோடு இறுதிக் காட்சிகள் நகர்கிறது. இவர்களின் எண்ணத்தில் மண்ணைப் போட்டானா... இல்லை சிகரெட் வேண்டான்டாங்கிற எண்ணம் கொண்டானாங்கிறதுதான் படத்தின் முடிவு.
மிகச் சிறந்த படமெல்லாம் கிடையாது... நகைச்சுவை, காதல், கொஞ்சம் அரசியல் என பயணிக்கும் படம் சிகரெட் புகையால் நிரம்பி நிற்கிறது. ஒரு தடவை ஜாலியாப் பாக்கலாம். தீவண்டியாய் ஜொலித்திருக்கும் டொவினோ, அவருக்கு இணையாய் முதல் படம் என்பது தெரியாமல் நடத்திருக்கும் சம்யுக்தா, நகைச்சுவை மட்டுமல்ல குணசித்திரம், வில்லன் என எதுவாகினும் நான் சிறந்த நடிகனே என்பதை நடிப்பால் சொல்லும் சூரஜ், மாமாவாக வருபவர், நண்பர்கள் என எல்லாருக்காகவும் பார்க்கலாம்.
நம்ம கமல் என்னய்யா கமல்... சம்யுக்தா உதட்டை இங்கிலீஸ் படத்துல மாதிரி உருஞ்சி எடுத்துடறான் டொவினோ... அப்ப இந்த பொம்பளப் புள்ளங்கதாய்யா அந்தக் கத்துக் கத்துக... நல்ல வளர்ச்சி... இதைச் சொன்னா ஆணாதிக்கவாதின்னு சொல்லுவாங்க...
இயக்குநர் பெல்லினிக்கு முதல் படம் என்றார்கள். தோல்விப் படமாக இல்லாமல் கொடுத்திருக்கிறார். அடுத்த படத்தில் இன்னும் ஜொலிப்பார் என நம்பலாம். இசை படத்துக்கு வலு சேர்க்கிறது.
தீவண்டி... வேகமாகப் போகவில்லை என்றாலும் மெதுவாகவும் போகவில்லை.

ஒரு முறை பார்க்கலாம்.
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum