Latest topics
» பூக்கள்by rammalar Today at 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Today at 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
எல்லோரும் உங்களை விரும்ப வேண்டுமா?
2 posters
Page 1 of 1
எல்லோரும் உங்களை விரும்ப வேண்டுமா?
நீங்கள் யாரை அதிகமாக விரும்புவீர்கள்! அழகாக இருப்பவர்களையா? இனிமையாக பேசுகிறவர்களையா? சிரித்த முகம் உள்ளவர்களையா? வெகுளியாக இருப்பவர்களையா? இப்படி கவரக்கூடிய எதாவது ஒரு குணம் இருப்பவர்களைதான் நீங்கள் விரும்புவீர்களா? உங்களிடம் கேட்டால் 'ஆம்' என்றுதான் சொல்வீர்கள், ஆனால் சில வேளைகளில் இந்த குணங்கள் எதுவுமே இல்லாதவர்களையும் நீங்கள் விரும்பியிருப்பீர்கள், அவர்களிடமும் மணிக்கணக்கில் பேசியிருப்பீர்கள், நீங்கள் எதிர்பார்க்கும் குணம் இல்லாத போதும் அவர் உங்களை விரும்ப வைத்திருக்கிறார் அது எப்படி?
சிலர் இயற்கையிலேயே அழகில்லாதவர்களாக இருக்கலாம், அது நீங்களாகவும் இருக்கலாம். சிலருக்கு இனிமையாக பேசுகின்ற வரம் கிடைக்காமலிருக்கலாம், அதுவும் நீங்களாகவும் இருக்கலாம், பரவாயில்லை, அழகு என்பது நம்மில் பிரதிபலிக்க வேண்டிய ஒன்று, அது உடம்பிலிருந்து தான் பிரதிபலிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை, நம் செயல்களில் பிரதிபலிக்கலாம், எண்ணங்களில் பிதிபலிக்கலாம், குணநலன்களில் பிரதிபலிக்கலாம்.
உங்கள் உதடுகள் சில்லறைகளைப் போல சிணுங்கிக் கொண்டிருக்க மறுக்கலாம், பரவாயில்லை, பேசுவது இரண்டு வார்த்தைகளாக இருந்தாலும் சில்லறையாக சிந்தாமல் நோட்டுக்களாக அவிழ்த்து விட்டால், உங்கள் பேச்சுக்களே விரும்பப்படும். சிலரைப்போல சிரித்த மாதிரியான முகம் உங்களுக்கு இயற்கையாகவே இல்லாமல் இருக்கலாம். பரவாயில்லை, சிரிப்பை தேவைக்கு சிந்தினாலே போதும் நீங்கள் அனைவராலும் விரும்பப்படுவீர்கள்.
இப்படிதான் சிலருக்கு முக்கிய தகுதிகள் தோற்றத்திலோ, உதடுகளிலோ, நடை உடை பாவனைகளிலோ, இருப்பதில்லை. அவை மறைந்திருந்து கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும். அப்படிப்பட்டவர்களை உங்களுக்கும் விரும்பத் தோன்றும். நண்பனாக்கிக் கொள்ளத் தோன்றும். நீங்களும் உங்களுக்கு பிடித்தமான ஒரு விசயத்தில் உங்களை வெளிப்படுத்திக் கொண்டிருங்கள். உங்களுக்குள் இருக்கும் ஒரு அழகை வெளியே பிரதிபலித்துக் காட்டுங்கள், எல்லாராலும் விரும்பப் படுவீர்கள்.
பிறருக்கு பிடித்தமானவராக இருக்க தினம் தினம், புதுப்புதுத் துணிமணிகளை உடுத்த வேண்டிய தேவையில்லை, அணிந்திருக்கும் உடை உங்களுக்கு பிடித்தமானதாகவும், சுத்தமானதாகவும் இருந்தாலே போதும். நாளுக்கு நாள் உங்களை கலர்கலராக மாற்றிக்கொண்டிருந்தால் பார்ப்பவர்களின் மனம் ஆரம்பத்தில் விரும்பினாலும் போகப்போக ஏளனமாக பார்க்க ஆரம்பிக்கும்.
மற்றவர்கள் உங்களை விரும்ப வேண்டுமென்பது, உங்கள் தோற்றத்தை விரும்ப வேண்டும் என்ற முடிவிற்கு வந்து விடாதீர்கள். நீங்கள் ஒரு படைப்பாளியாக இருந்தால், உங்களை விடவும் உங்கள் படைப்பு விரும்பப் படுவதையே விரும்புவீர்கள். நீங்கள் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தீர்களானால், உங்களை விடவும் உங்கள் நிறுவனம் விரும்பப் பட வேண்டுமென்றே எதிர்பார்ப்பீர்கள். உங்கள் உள்ளிருக்கும் அழகின் வெளிப்பாடுதான் நீங்கள் ஆரம்பிக்கும் நிறுவனமாகவும், தொழிலாகவும், படைப்பாகவும் வெளிப்படும் போது, அவை விரும்பத்தக்கதாக இருந்தால் நீங்களும் விரும்பத் தக்கவர்களாகவே இருப்பீர்கள்.
சில கல்லூரிகளின் கடைசி நாட்களில், மாணவிகளிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த மாணவன் யார் என்ற பட்டியல் கேட்கப்படும். அப்போது அந்த மாணவிகள் மிகவும் அழகான ஒரு மாணவனையோ அல்லது இடைவிடாமல் பேசிக்கொண்டிருக்கும் ஒரு மாணவனையோ, யாரையாவது கிண்டலடித்து சிரிப்பை வரவழைக்கின்ற மாணவனையோ மிகவும் பிடிக்கும் என்று சொல்லமாட்டார்கள். அவர்களின் பட்டியலில் ஆத்மார்த்தமான வேறு ஒரு முடிவே வரும். அமைதியாக இருந்தாலும், அழகில்லாமல் இருந்தாலும், தன்னுள் இருக்கும் அழகான குணத்தை செயல்களாக உருவாக்கிக் கொண்டிருக்கும் மாணவனையே மிகவும் பிடிக்கும் என்ற பட்டியலை தயார் செய்வார்கள்.
ஏனைன்றால் அவன் அமைதியாக இருந்தாலும், பொறுப்புகளை முன் கூட்டியே யோசித்து, செயற்பட்டுக் கொண்டிருப்பவனாக இருப்பான். கல்லூரி பாடங்களில் மட்டுமல்ல, கல்லூரி விழாவிலிருந்து சுற்றுலா வரையிலும் எவற்றையெல்லாம் மற்றவர்கள் எவற்றைச் செய்யாமல் இருக்கிறார்களோ, அவைகளை முன்னதாகவே யோசித்து தன் அழகை வித்தியாசமாக வெளிப்படுத்திக் கொண்டிருப்பான். இப்படி தன் விருப்பங்களில், திறமைகளில் இருக்கின்ற அழகினை செயல் வடிவமாக செதுக்கிக் கொண்டிருப்பவர்களையே மற்றவர்கள் விரும்ப ஆரம்பிப்பார்கள்.
தோற்ற அழகு மட்டுமே உள்ளவர்களை மற்றவர்கள் கண்களால் படம் பிடித்து, இதயத்தில் எளிதாக சேமித்து வைப்பார்கள். அழகாக இருப்பவர்கள் மற்றவர்கள் இதயத்தில் எளிதாக இடம்பிடித்து விடுவார்கள். ஆனால் அவர்களின் அழகு அட்டைப்படத்தைப் போல வெளியில்தான் அழகாக இருக்கும், உள்ளே புரட்டிப் பார்க்கும் போது ஒன்றுமிருக்காது. அதுவே அழகற்ற அட்டைப் படமாக இருந்தாலும் புரட்ட புரட்ட இனிக்கும் புத்தகங்களைப் போல இருப்பவர்களே, மற்றவர்களின் இதயத்தில் அழிக்க முடியாத தனி இடத்தைப் பிடித்தவர்களாக இருப்பார்கள்.
சிலர் இயற்கையிலேயே அழகில்லாதவர்களாக இருக்கலாம், அது நீங்களாகவும் இருக்கலாம். சிலருக்கு இனிமையாக பேசுகின்ற வரம் கிடைக்காமலிருக்கலாம், அதுவும் நீங்களாகவும் இருக்கலாம், பரவாயில்லை, அழகு என்பது நம்மில் பிரதிபலிக்க வேண்டிய ஒன்று, அது உடம்பிலிருந்து தான் பிரதிபலிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை, நம் செயல்களில் பிரதிபலிக்கலாம், எண்ணங்களில் பிதிபலிக்கலாம், குணநலன்களில் பிரதிபலிக்கலாம்.
உங்கள் உதடுகள் சில்லறைகளைப் போல சிணுங்கிக் கொண்டிருக்க மறுக்கலாம், பரவாயில்லை, பேசுவது இரண்டு வார்த்தைகளாக இருந்தாலும் சில்லறையாக சிந்தாமல் நோட்டுக்களாக அவிழ்த்து விட்டால், உங்கள் பேச்சுக்களே விரும்பப்படும். சிலரைப்போல சிரித்த மாதிரியான முகம் உங்களுக்கு இயற்கையாகவே இல்லாமல் இருக்கலாம். பரவாயில்லை, சிரிப்பை தேவைக்கு சிந்தினாலே போதும் நீங்கள் அனைவராலும் விரும்பப்படுவீர்கள்.
இப்படிதான் சிலருக்கு முக்கிய தகுதிகள் தோற்றத்திலோ, உதடுகளிலோ, நடை உடை பாவனைகளிலோ, இருப்பதில்லை. அவை மறைந்திருந்து கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும். அப்படிப்பட்டவர்களை உங்களுக்கும் விரும்பத் தோன்றும். நண்பனாக்கிக் கொள்ளத் தோன்றும். நீங்களும் உங்களுக்கு பிடித்தமான ஒரு விசயத்தில் உங்களை வெளிப்படுத்திக் கொண்டிருங்கள். உங்களுக்குள் இருக்கும் ஒரு அழகை வெளியே பிரதிபலித்துக் காட்டுங்கள், எல்லாராலும் விரும்பப் படுவீர்கள்.
பிறருக்கு பிடித்தமானவராக இருக்க தினம் தினம், புதுப்புதுத் துணிமணிகளை உடுத்த வேண்டிய தேவையில்லை, அணிந்திருக்கும் உடை உங்களுக்கு பிடித்தமானதாகவும், சுத்தமானதாகவும் இருந்தாலே போதும். நாளுக்கு நாள் உங்களை கலர்கலராக மாற்றிக்கொண்டிருந்தால் பார்ப்பவர்களின் மனம் ஆரம்பத்தில் விரும்பினாலும் போகப்போக ஏளனமாக பார்க்க ஆரம்பிக்கும்.
மற்றவர்கள் உங்களை விரும்ப வேண்டுமென்பது, உங்கள் தோற்றத்தை விரும்ப வேண்டும் என்ற முடிவிற்கு வந்து விடாதீர்கள். நீங்கள் ஒரு படைப்பாளியாக இருந்தால், உங்களை விடவும் உங்கள் படைப்பு விரும்பப் படுவதையே விரும்புவீர்கள். நீங்கள் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தீர்களானால், உங்களை விடவும் உங்கள் நிறுவனம் விரும்பப் பட வேண்டுமென்றே எதிர்பார்ப்பீர்கள். உங்கள் உள்ளிருக்கும் அழகின் வெளிப்பாடுதான் நீங்கள் ஆரம்பிக்கும் நிறுவனமாகவும், தொழிலாகவும், படைப்பாகவும் வெளிப்படும் போது, அவை விரும்பத்தக்கதாக இருந்தால் நீங்களும் விரும்பத் தக்கவர்களாகவே இருப்பீர்கள்.
சில கல்லூரிகளின் கடைசி நாட்களில், மாணவிகளிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த மாணவன் யார் என்ற பட்டியல் கேட்கப்படும். அப்போது அந்த மாணவிகள் மிகவும் அழகான ஒரு மாணவனையோ அல்லது இடைவிடாமல் பேசிக்கொண்டிருக்கும் ஒரு மாணவனையோ, யாரையாவது கிண்டலடித்து சிரிப்பை வரவழைக்கின்ற மாணவனையோ மிகவும் பிடிக்கும் என்று சொல்லமாட்டார்கள். அவர்களின் பட்டியலில் ஆத்மார்த்தமான வேறு ஒரு முடிவே வரும். அமைதியாக இருந்தாலும், அழகில்லாமல் இருந்தாலும், தன்னுள் இருக்கும் அழகான குணத்தை செயல்களாக உருவாக்கிக் கொண்டிருக்கும் மாணவனையே மிகவும் பிடிக்கும் என்ற பட்டியலை தயார் செய்வார்கள்.
ஏனைன்றால் அவன் அமைதியாக இருந்தாலும், பொறுப்புகளை முன் கூட்டியே யோசித்து, செயற்பட்டுக் கொண்டிருப்பவனாக இருப்பான். கல்லூரி பாடங்களில் மட்டுமல்ல, கல்லூரி விழாவிலிருந்து சுற்றுலா வரையிலும் எவற்றையெல்லாம் மற்றவர்கள் எவற்றைச் செய்யாமல் இருக்கிறார்களோ, அவைகளை முன்னதாகவே யோசித்து தன் அழகை வித்தியாசமாக வெளிப்படுத்திக் கொண்டிருப்பான். இப்படி தன் விருப்பங்களில், திறமைகளில் இருக்கின்ற அழகினை செயல் வடிவமாக செதுக்கிக் கொண்டிருப்பவர்களையே மற்றவர்கள் விரும்ப ஆரம்பிப்பார்கள்.
தோற்ற அழகு மட்டுமே உள்ளவர்களை மற்றவர்கள் கண்களால் படம் பிடித்து, இதயத்தில் எளிதாக சேமித்து வைப்பார்கள். அழகாக இருப்பவர்கள் மற்றவர்கள் இதயத்தில் எளிதாக இடம்பிடித்து விடுவார்கள். ஆனால் அவர்களின் அழகு அட்டைப்படத்தைப் போல வெளியில்தான் அழகாக இருக்கும், உள்ளே புரட்டிப் பார்க்கும் போது ஒன்றுமிருக்காது. அதுவே அழகற்ற அட்டைப் படமாக இருந்தாலும் புரட்ட புரட்ட இனிக்கும் புத்தகங்களைப் போல இருப்பவர்களே, மற்றவர்களின் இதயத்தில் அழிக்க முடியாத தனி இடத்தைப் பிடித்தவர்களாக இருப்பார்கள்.
Re: எல்லோரும் உங்களை விரும்ப வேண்டுமா?
மிக மிக நல்ல பதிவு சாதிக் நான் தொடருங்கள்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» உங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா!
» மாங்காய் வேண்டுமா? மரம் வேண்டுமா?
» வாங்க எல்லோரும் தெரிந்துக்கொள்க...
» பைத்தியக்காரர்களின் உளறலுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்ப வில்லை'
» உங்கள் கஷ்டங்கள் தீர வேண்டுமா? உங்கள் வேதனைகள் தீர வேண்டுமா? ஒரே வழி
» மாங்காய் வேண்டுமா? மரம் வேண்டுமா?
» வாங்க எல்லோரும் தெரிந்துக்கொள்க...
» பைத்தியக்காரர்களின் உளறலுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்ப வில்லை'
» உங்கள் கஷ்டங்கள் தீர வேண்டுமா? உங்கள் வேதனைகள் தீர வேண்டுமா? ஒரே வழி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|