Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
பூட்டோவை தூக்கில் போட்ட ஜியா உடல் சிதறி சாவு!
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
பூட்டோவை தூக்கில் போட்ட ஜியா உடல் சிதறி சாவு!
நடுவானத்தில் விமானம் வெடித்துச் சிதறியதால், பாகிஸ்தான் அதிபர் ஜியா_வுல்_ஹக் அடையாளம் தெரியாதபடி உடல் சிதைந்து மரணம் அடைந்தார். ராணுவ தளபதியாக இருந்து, புரட்சி நடத்தி பாகிஸ்தான் அதிபர் ஆனவர் ஜியா. 64 வயதான அவர் 11 ஆண்டுகளாக அதிபராக பதவியில் நீடித்தார்.
ஜியா இரும்பு மனம் படைத்தவர். பூட்டோ பாகிஸ்தானின் பிரதமராக இருந்தபோது அவரால் ஜியா தளபதியாக நியமிக்கப்பட்டார். ஆனால் நன்றி மறந்த ஜியா 1977_ம் ஆண்டில் ராணுவ புரட்சி நடத்தி, பிரதமராக இருந்த பூட்டோவை சிறையில் அடைத்து விட்டு, ஆட்சியை கைப்பற்றினார். பின்னர் 1979_ல் பூட்டோவை தூக்கிலிட்டார்.
தொடர்ந்து அதிபர் பதவியில் நீடித்து வந்த ஜியா, 17_8_1988 அன்று பாகிஸ்தானில் மூல்தான் நகருக்கு அருகேயுள்ள ராணுவ முகாமை பார்வையிடச் சென்றார். அவருடன் அமெரிக்க தூதர் ரபீல், முதன்மை ராணுவ தளபதி அக்தர் அப்துல் ரகிமான் மற்றும் உயர் ராணுவ அதிகாரிகளும் சென்றார்கள்.
முகாமை பார்வையிட்டபின் விமானத்தில் புறப்பட்டனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பகவல்பூர் என்ற இடத்துக்கு அருகே நடுவானத்தில் தீப்பிடித்து, வெடித்து சிதறி விழுந்தது. இந்த விபத்தில் ஜியாவும், அமெரிக்க தூதரும் ராணுவத் தளபதியும், மற்ற அதிகாரிகளும் பலி யானார்கள். விபத்து பிற்பகல் 3 மணி அளவில் நடந்தது.
ஜியா சென்ற விமானத்தில் மொத்தம் 30 பேர் இருந்தார்கள். அனைவருமே விபத்தில் உயிர் இழந்து விட்டனர். விபத்து நடந்த இடம் தலைநகர் இஸ்லாமாபாத் துக்கு தென்மேற்கே 480 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. ஜியா மரணம் அடைந்ததை தொடர்ந்து புதிய அதிபராக குலாம் இஷாக்கான் பதவி ஏற்றுக்கொண்டார்.
ஜியா சென்ற விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் வெகு தூரம் சிதறிக் கிடந்தன. அவற்றை ராணுவத்தினர் சேகரித்தனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து 11 உடல்கள் மீட்கப்பட்டன. இதில் ஜியா, அமெரிக்க தூதர் ரபீல் ஆகியோர் உள்பட 4 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டன.
உடல்கள் உருக்குலைந்து போய்விட்டன என்றாலும் உடல்கள் அருகே கிடந்த மெடல்கள் மற்றும் பதவிக்கு உரிய அடையாளச் சின்னங்கள் ஆகியவற்றைக்கொண்டு தான் அடையாளம் கண்டுபிடிக்க முடிந்தது. அமெரிக்க தூதர் உடல், தனி விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஜியா விமானத்தில் பயணம் செய்தபோது முஸ் லிம்களின் புனித நூலான குரானை வைத்திருந்தார். விபத்து நடந்த இடத்தில் அந்த குரான் புத்தகம் கண்டுபிடிக்கப்பட்டது. அதை பத்திரமாக எடுத்து சென்றனர். ஜியா உடலை ஒரு மரப்பெட்டியில் வைத்து விமானம் மூலம் ராவல் பிண்டி நகருக்கு கொண்டு போனார்கள். அங்குள்ள அதிபர் மாளிகையில் ஜியா உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உறவினர்களும் மற்றும் பொது மக்களும் இறுதி மரியாதை செலுத்தினர்.
பின்னர் ஜியா உடல் அங்கிருந்து பீரங்கி வண்டியில் ஏற்றப் பட்டு பைசால் மசூதிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. (இந்த மசூதி உலகிலேயே பெரிய மசூதியாகும்) ஜியா உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டி மீது பாகிஸ்தான் கொடி போர்த்தப்பட்டு இருந்தது. பீரங்கி வண்டி மெதுவாக செல்ல பாகிஸ்தான் முப்படை தளபதிகளும் பின்னால் நடந்து சென்றார்கள்.
பீரங்கி வண்டியில் இருந்து ஜியா உடல் இருந்த பெட்டியை ஜியாவின் 2 மகன்கள், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் முகமதுகான் ஜ×னேஜோ மற்றும் ராணுவ அதிகாரிகள் சுமந்து வந்து புதைகுழி அருகே வைத்தனர். ஜியாவின் உடல் உருக்குலைந்த நிலையில் இருந்ததால் பெட்டியை திறக்காமலேயே வைத்து இருந்தனர். ஜியா முகத்தை யாருக்கும் காட்டவில்லை.
சவக்குழி அருகே வைக்கப்பட்டிருந்த ஜியா உடலுக்கு ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். பிரதமர் ராஜீவ் காந்தி சார்பில் வெளிநாட்டு இலாகா மந்திரி நரசிம்மராவ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
வங்காளதேச அதிபர் எர்ஷாத், ஈரான் ஜனாதிபதி அலி காமேனி, துருக்கி அதிபர் கெனான், எவரான் பிரதமர் துர்காத் ஓஜால் ஆகியோர் உள்பட 70 நாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் தூதர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். வெளிநாட்டுத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி முடித்ததும், "குரான்" ஓதுவது போன்ற மற்ற இறுதிச் சடங்குகள் நடந்தன. அதைத் தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் ஜியா உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ஜியா 1924_ம் ஆண்டு ஆகஸ்டு 12_ந்தேதி ஜலந்தர் நகரில் பிறந்தார். (இப்போது அந்த நகரம் பஞ்சாபில் உள்ளது.) இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாக இருந்த போது, டேராடூனில் உள்ள ராணுவ பள்ளியில் படித்து பயிற்சி பெற்று குதிரைப்படை அதிகாரியானார்.
பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்து சென்றபிறகு, பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்து கவசப்படை தளபதியாக பணியாற்றினார். 1971_ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமராக பூட்டோ பதவி ஏற்றதைத் தொடர்ந்து, ஜியாவை தனது பாதுகாப்பு அதிகாரியாக நியமித்தார். பிறகு 1976_ம் ஆண்டு ராணுவ தளபதியாக ஆக்கப்பட்டார். ஒரே ஆண்டில் ராணுவ புரட்சி செய்து அதிபரானார். பூட்டோவை தூக்கிலிட்டார்.
பாகிஸ்தானின் சர்வாதிகாரியாக 11 ஆண்டுகள் இருந்தார். அவரது ஆட்சியில் அவரை எதிர்த்து யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையெல்லாம் முறியடித்து வந்த ஜியாவின் வாழ்க்கை விமான விபத்தில் முடிந்துவிட்டது. ஜியா மனைவி பெயர் ஷாபிகா. 2 மகன்களும், மகள்களும் இருந்தார்கள்.
அதிபர் ஜியா சென்ற விமானம் வெடித்துச் சிதறியது எப்படி என்பது பற்றி முரண்பட்ட தகவல்கள் வெளிவந்தன. ஏவுகணை (ராக்கெட்) தாக்குதலால் விமானம் வெடித்து சிதறி இருக்கலாம் என்றும் அல்லது ஹெலிகாப்டர் விமானம் மோதியதால் நொறுங்கி இருக்கலாம் என்றும் முதலில் கூறப்பட்டது.
ஆனால் பிறகு விமான விபத்துக்கு நாசவேலையே காரணம் என்று கூறப்பட்டது. இதுபற்றிய விசாரணை அறிக்கை புதிய அதிபர் இஷாக்கானிடம் கொடுக்கப்பட்டது. "ஜியா விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு தரையில் இருந்து "ரிமோட் கண்ட்ரோல்" கருவியை இயக்கி, வெடிகுண்டை வெடிக்கச் செய்து இருக்கிறார்கள்" என்று, நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.
ஜியா விமானம் புறப்படுவதற்கு முன், ஜியாவுக்கும், மற்றவர்களுக்கும் அன்பளிப்பாக சில மாம்பழக்கூடைகள் விமானத்தில் ஏற்றப்பட்டன. அந்த மாம்பழக் கூடைக்குள் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டு இருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.
ராணுவத்தினரின் ஒத்துழைப்புடன்தான் இந்த நாசவேலை நடந்து இருக்கவேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர். ஜியாவை பிடிக்காத ராணுவ அதிகாரிகள் சதி செய்து விமானத்துக்கு வெடிவைத்து இருக்கிறார்கள் என்று அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்தனர்.
Maalaimalar
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பூட்டோ தூக்கில் போடப்பட்டார்; கருணை காட்ட ஜியா மறுப்பு
» ஆப்கனில் சாலையோர குண்டு வெடிப்பு: 22 பேர் உடல் சிதறி பலி.
» கைதடிப் பாலத்துக்கு அருகில் நேற்று இரண்டு பிள்ளைகளின் தந்தை உடல் சிதறி மரணம்!!!
» பெங்களூர் அருகே டேங்கர் லாரி தீப்பிடித்து 6 பேர் உடல் கருகி சாவு
» ஜிப்பா போட்ட மைனரு... ஜிமிக்கி போட்ட பெண்டிரு...
» ஆப்கனில் சாலையோர குண்டு வெடிப்பு: 22 பேர் உடல் சிதறி பலி.
» கைதடிப் பாலத்துக்கு அருகில் நேற்று இரண்டு பிள்ளைகளின் தந்தை உடல் சிதறி மரணம்!!!
» பெங்களூர் அருகே டேங்கர் லாரி தீப்பிடித்து 6 பேர் உடல் கருகி சாவு
» ஜிப்பா போட்ட மைனரு... ஜிமிக்கி போட்ட பெண்டிரு...
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|