சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Today at 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Today at 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Today at 12:49

» இலங்கை அழகி
by rammalar Today at 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Today at 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Today at 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18

» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11

» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00

» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11

» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01

» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03

» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41

» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37

» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24

» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16

» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46

» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44

» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37

» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31

» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15

» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23

» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55

» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51

» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34

» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39

ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார் Khan11

ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார்

Go down

ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார் Empty ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார்

Post by rammalar Tue 24 Oct 2017 - 13:34

டோக்கியோ,

ஜப்பான் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு திடீர் தேர்தலை 
சந்திக்க தயார் என்று பிரதமர் ஷின்ஜோ கடந்த மாதம் அறிவித்தார். 
அவருடைய ஆட்சி முடிவடைவதற்கு இன்னும் ஓராண்டு இருந்த 
நிலையில் அவருடைய இந்த முடிவு பெரும் பரபரப்பை 
ஏற்படுத்தியது. 

உலகளாவிய பொருளாதார மந்த நிலை, வடகொரியாவின் 
அச்சுறுத்தல், தென் சீனக்கடல் பிரச்சினை ஆகியவற்றுக்கு இடையே 
பாராளுமன்றத்துக்கு திடீரென தேர்தலை நடத்தினால் தம்மால்
நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று ஷின்ஜோ அபே உறுதியாக 
நம்பினார்.

இந்த நிலையில், 465 உறுப்பினர்களை கொண்ட ஜப்பான் 
பாராளுமன்றத்துக்கு, அக்டோபர் 22–ந் தேதி தேர்தல் நடைபெறும் 
என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் ஜப்பானில் 
தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் ஷின்ஜோ அபே தலைமையில் எல்.டி.எப். என்னும் தாராளவாத 
ஜனநாயக கட்சி கூட்டணி அமைத்து ஒரு அணியாக போட்டியிட்டது.
டோக்கியோ நகரின் முதல் பெண் கவர்னரான
யூரிகோ கொய்கேவின் நம்பிக்கை கட்சி இன்னொரு அணியாகவும், 
கம்யூனிஸ்டு கட்சிகள் பசிபிஸ்ட் என்ற கூட்டணியையும் அமைத்து 
போட்டியிட்டன.

நேற்று முன்தினம் மாலை ஓட்டுப்பதிவு முடிந்த உடன் அனைத்து 
தொகுதிகளிலும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இதில் ஷின்ஜோ 
அபேயின் தாராளவாத ஜனநாயக கட்சி அபார வெற்றி கண்டது. 

தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 233 இடங்கள் தேவை 
என்ற நிலையில் அந்த கட்சி 284 இடங்களை பிடித்து ஆட்சியை 
கைப்பற்றியது. ஷின்ஜோ அபே மீண்டும் பிரதமர் ஆகிறார்.

கடந்த தேர்தலில் தாராளவாத ஜனநாயக கட்சி பெற்ற வெற்றியை 
விட தற்போது 6 இடங்கள் குறைவு என்றாலும், அடுத்த ஆண்டு 
தேர்தல் நடந்தால் இப்போது கிடைத்துள்ள வெற்றி 
ஷின்ஜோ அபேவுக்கு கிடைத்திருக்குமா? என்பது சந்தேகமே என்று 
ஜப்பான் நாட்டின் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

நம்பிக்கை கட்சியை தொடங்கிய டோக்கியோ நகரின் 
பெண் கவர்னர் யூரிகோ கொய்கேவின் கூட்டணிக்கு 50 இடங்கள் 
கிடைத்தன. கொய்கே இந்த தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் 
அவருடைய கட்சி ஷின்ஜோ அபேயின் கூட்டணிக்கு கடும் சவாலை 
அளித்து இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.

கம்யூனிஸ்டு கூட்டணிக்கு 55 இடங்கள் கிடைத்தன. மீதமுள்ள 
66 தொகுதிகளையும் சிறுசிறு கட்சிகள் கைப்பற்றின.

திடீர் தேர்தலை நடத்தி ஆட்சியை கைப்பற்றிய பிரதமர்
ஷின்ஜோ அபே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு 
நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘நெருக்கடியான சூழ்நிலைகளிலும் 
ஜப்பானிய மக்களின் நலன்களை பாதுகாப்பதிலும், அவர்கள் 
அமைதியாகவும், செல்வச் செழிப்புடன் வாழவும் உறுதியுடன் 
செயல்படுவேன். வடகொரியாவின் அணுகுண்டு, ஏவுகணை 
சோதனைகளுக்கு ராஜதந்திர ரீதியாக பதிலடி கொடுக்கப்படும்.

நாட்டில் முதலீடு, கல்வி, உற்பத்தி பெருக்கம் ஆகியவற்றுக்கு 
முக்கியத்துவம் அளிக்கப்படும். அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு 
பயணம் மேற்கொள்ளும்போது ஜனாதிபதி டிரம்பை சந்திப்பேன். 
அப்போது அவருடன் வடகொரிய விவகாரம் குறித்து முழுமையாக 
விவாதிப்பேன்’’ என்றார்.

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஷின்ஜோ அபேவுக்கு பிரதமர் 
மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் 
பதிவில், ‘‘பெரும் தேர்தலில் வெற்றி கண்டுள்ள எனது நெருங்கிய
நண்பர் ஷின்ஜோ அபேவுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள். 

உங்களுடைய இந்த வெற்றியின் மூலம், இந்தியா–ஜப்பான் 
இடையேயான உறவுகள் மேலும் முன்னெடுத்து செல்லப்படும் என்று 
எதிர்பார்க்கிறேன்’’ என குறிப்பிட்டு உள்ளார்.
-
-----------------------------------
தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24236
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum