Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Yesterday at 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகத்தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகத்தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது
பாரதிய ஜனதாக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் திருச்சியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வரும் ஆகஸ்டில் நடைபெறவுள்ள பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஊழல், கறுப்புப்பணம், அரசின் செயலற்ற தன்மை ஆகியவை குறித்து பாரதிய ஜனதாக்கட்சி கேள்வி எழுப்பவுள்ளது. தற்போதைய மத்திய அரசு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாத, வெளிப்படையான நிர்வாகம் இல்லாததாக உள்ளது.
மத்திய அரசு மக்களுக்கு தேவையான எதையும் செய்யவில்லை, அப்படியே செய்தாலும் மூடிமறைத்தே செய்கிறது. 2010ம் ஆண்டில் மத்திய அமைச்சரவை குறைந்த தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அந்தளவுக்கு எந்த முடிவும் எடுக்காமல் மத்திய அரசு ஓட்டி வருகிறது. மத்திய அரசின் நிர்வாகத்தில் குறைபாடு உள்ளது என்பதை உள்துறை அமைச்சர் சிதம்பரமே ஒத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி உள்ளது.
எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி விவகாரம், வீணாகும் உணவு தானியங்கள் ஆகிய சிறிய விஷயங்களில் கூட மத்திய அரசால் முடிவு எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. அதனால் தான் அந்த விஷயங்களில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மக்களைப்பற்றியே மத்திய அரசு சிந்திக்கவில்லை. குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட பலர் தூக்குதண்டனைக்காக காத்துள்ளனர். அவர்கள் விஷயத்தில் கூட மத்திய அரசு மவுனம் காத்து வருவது நிர்வாக சீர்கேட்டுக்கு சிறந்த உதாரணமாகும். சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை மறுசீரமைப்பு நல்ல நிர்வாகத்தக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. மறுசீரமைப்பில் அமைச்சர்களின் செயல்பாடுகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
2ஜி ஊழல் விவகாரத்தில் அரசுக்கு நஷ்டமே ஏற்படவில்லை என்று தவறான தகவலை மக்களிடம் தெரிவித்தவர் இன்னும் மத்திய அமைச்சராக நீடிக்கிறார். ஆகையால், வரப்போகும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் ஊழல், கறுப்புப்பணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கையிலெடுக்க போகிறோம். இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்கும், தமிழக மீனவர்கள் பிரச்னைக்கும் பாரதிய ஜனதா பாராளுமன்றத்தில் கண்டிப்பாக குரல் கொடுக்கும். இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகத்தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் எங்களுக்கு ஒரு எம்.எல்.ஏ.,வோ, எம்.பி.,யோ இல்லாத நிலையிலும், தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். இவ்விஷயத்தில் தமிழக கட்சிகள் இன்னும் உரக்க குரல் கொடுக்கவேண்டும். ஊழல் விஷயத்தில் பாரதிய ஜனதாவின் நிலைப்பாடு எப்போதும் ஒன்றாகத்தான் இருக்கும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக தண்டனை அனுபவிக்கவேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டாக அதிகரித்து வரும் பணவீக்கத்தை குறைக்க மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றமும், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைக்கிறது.
வீணாக போகும் உணவு தானியங்களைக் கூட ஏழை மக்களுக்கு கொடுக்க மத்திய அரசு தயக்கம் காட்டி வரும் நிலையில் தான் ஆட்சி உள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோல் கச்சா பொருட்களின் விலை குறைந்து வரும் நிலையில், தொடர்ந்து விலையேற்றப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்தில் இயங்க வேண்டும் என்பதற்காக, மக்களைப்பற்றி கவலைப்படாமல் விலை உயர்வு அடிக்கடி நடக்கிறது. ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி, மூடிமறைத்து, ஏதோ ஒருவகையில் சம்பாதிக்கின்றனர். இதற்கு பாரதிய ஜனதா கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது.
பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தபோது பஞ்சகாலங்களில் உணவு தானியங்கள் மத்திய அரசால், மாநில அரசுகளுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டது. இப்போது விலைகொடுத்தாலும் கிடைப்பதில்லை. முடக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதாக மத்திய அரசின் நிர்வாகம் உள்ளது. மத்திய அரசு, மாநில அரசுகளை துச்சமாக மதிக்கிறது.
சட்டசபைத் தேர்தல் மூலம் பாரதிய ஜனதாக்கட்சி மக்களோடு இன்னும் நெருங்கவேண்டியுள்ளது என்பதை தெரிந்து கொண்டுள்ளது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதாக்கட்சி போட்டியிடும். பாரதிய ஜனதா 2ஜி ஊழல் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் அளிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வரும் ஆகஸ்டில் நடைபெறவுள்ள பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஊழல், கறுப்புப்பணம், அரசின் செயலற்ற தன்மை ஆகியவை குறித்து பாரதிய ஜனதாக்கட்சி கேள்வி எழுப்பவுள்ளது. தற்போதைய மத்திய அரசு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாத, வெளிப்படையான நிர்வாகம் இல்லாததாக உள்ளது.
மத்திய அரசு மக்களுக்கு தேவையான எதையும் செய்யவில்லை, அப்படியே செய்தாலும் மூடிமறைத்தே செய்கிறது. 2010ம் ஆண்டில் மத்திய அமைச்சரவை குறைந்த தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அந்தளவுக்கு எந்த முடிவும் எடுக்காமல் மத்திய அரசு ஓட்டி வருகிறது. மத்திய அரசின் நிர்வாகத்தில் குறைபாடு உள்ளது என்பதை உள்துறை அமைச்சர் சிதம்பரமே ஒத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி உள்ளது.
எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி விவகாரம், வீணாகும் உணவு தானியங்கள் ஆகிய சிறிய விஷயங்களில் கூட மத்திய அரசால் முடிவு எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. அதனால் தான் அந்த விஷயங்களில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மக்களைப்பற்றியே மத்திய அரசு சிந்திக்கவில்லை. குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட பலர் தூக்குதண்டனைக்காக காத்துள்ளனர். அவர்கள் விஷயத்தில் கூட மத்திய அரசு மவுனம் காத்து வருவது நிர்வாக சீர்கேட்டுக்கு சிறந்த உதாரணமாகும். சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை மறுசீரமைப்பு நல்ல நிர்வாகத்தக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. மறுசீரமைப்பில் அமைச்சர்களின் செயல்பாடுகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
2ஜி ஊழல் விவகாரத்தில் அரசுக்கு நஷ்டமே ஏற்படவில்லை என்று தவறான தகவலை மக்களிடம் தெரிவித்தவர் இன்னும் மத்திய அமைச்சராக நீடிக்கிறார். ஆகையால், வரப்போகும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் ஊழல், கறுப்புப்பணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கையிலெடுக்க போகிறோம். இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்கும், தமிழக மீனவர்கள் பிரச்னைக்கும் பாரதிய ஜனதா பாராளுமன்றத்தில் கண்டிப்பாக குரல் கொடுக்கும். இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகத்தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் எங்களுக்கு ஒரு எம்.எல்.ஏ.,வோ, எம்.பி.,யோ இல்லாத நிலையிலும், தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். இவ்விஷயத்தில் தமிழக கட்சிகள் இன்னும் உரக்க குரல் கொடுக்கவேண்டும். ஊழல் விஷயத்தில் பாரதிய ஜனதாவின் நிலைப்பாடு எப்போதும் ஒன்றாகத்தான் இருக்கும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக தண்டனை அனுபவிக்கவேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டாக அதிகரித்து வரும் பணவீக்கத்தை குறைக்க மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றமும், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைக்கிறது.
வீணாக போகும் உணவு தானியங்களைக் கூட ஏழை மக்களுக்கு கொடுக்க மத்திய அரசு தயக்கம் காட்டி வரும் நிலையில் தான் ஆட்சி உள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோல் கச்சா பொருட்களின் விலை குறைந்து வரும் நிலையில், தொடர்ந்து விலையேற்றப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்தில் இயங்க வேண்டும் என்பதற்காக, மக்களைப்பற்றி கவலைப்படாமல் விலை உயர்வு அடிக்கடி நடக்கிறது. ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி, மூடிமறைத்து, ஏதோ ஒருவகையில் சம்பாதிக்கின்றனர். இதற்கு பாரதிய ஜனதா கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது.
பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தபோது பஞ்சகாலங்களில் உணவு தானியங்கள் மத்திய அரசால், மாநில அரசுகளுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டது. இப்போது விலைகொடுத்தாலும் கிடைப்பதில்லை. முடக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதாக மத்திய அரசின் நிர்வாகம் உள்ளது. மத்திய அரசு, மாநில அரசுகளை துச்சமாக மதிக்கிறது.
சட்டசபைத் தேர்தல் மூலம் பாரதிய ஜனதாக்கட்சி மக்களோடு இன்னும் நெருங்கவேண்டியுள்ளது என்பதை தெரிந்து கொண்டுள்ளது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதாக்கட்சி போட்டியிடும். பாரதிய ஜனதா 2ஜி ஊழல் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் அளிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Re: இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகத்தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது
மக்களைப்பற்றியே மத்திய அரசு சிந்திக்கவில்லை. குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட பலர் தூக்குதண்டனைக்காக காத்துள்ளனர். அவர்கள் விஷயத்தில் கூட மத்திய அரசு மவுனம் காத்து வருவது நிர்வாக சீர்கேட்டுக்கு சிறந்த உதாரணமாகும். சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை மறுசீரமைப்பு நல்ல நிர்வாகத்தக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. மறுசீரமைப்பில் அமைச்சர்களின் செயல்பாடுகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
பதிவுக்கு நன்றி நண்பர் சாதிக்.
பதிவுக்கு நன்றி நண்பர் சாதிக்.
Similar topics
» வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு வருகிறது கட்டுப்பாடு? மத்திய அரசு அடுத்த அதிரடி
» முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவித்தொகை
» உடனே புகார் செய்ய 24 மணிநேர உதவி மையம் செயல்பட்டு வருகிறது.
» தமிழக முகாம்களிலுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு ஜெயலலிதாவினால் உதவிப் பொருட்கள்
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவித்தொகை
» உடனே புகார் செய்ய 24 மணிநேர உதவி மையம் செயல்பட்டு வருகிறது.
» தமிழக முகாம்களிலுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு ஜெயலலிதாவினால் உதவிப் பொருட்கள்
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|