Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
4 பெண்களை ஏமாற்றி திருமணம் கல்யாண மோசடி மன்னன் கைது
3 posters
Page 1 of 1
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: 4 பெண்களை ஏமாற்றி திருமணம் கல்யாண மோசடி மன்னன் கைது
நான்கு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன் சென்னையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மந்தைவெளியை சேர்ந்தவர் ராணி (25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் ஒரு புகார் அளித்தார்.
அதில், ‘தனது கணவரான கிறிஸ்டோபர் காந்தி (40) தன்னை தவிர மேலும் 3 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் தர்மா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் கிறிஸ்டோபர் காந்தி 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை உடனடியாக கைது செய்தார்.
கிறிஸ்டோபர் காந்தியிடம் நடத்திய விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கிறிஸ்டோபர் காந்தி சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். வசதியான குடும்பத்தை சார்ந்தவர்.
தண்ணீர் கேன் மொத்த விற்பனை செய்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமாக 3 வீடுகளும், கார்களும் உள்ளன. இவருக்கும் ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது.
பின்னர், அவரை விட்டு பிரிந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்த ஒரு பெண்ணின் விவரங்களை திருமண தகவல் மையம் மூலம் சேகரித்தார்.
அந்த பெண்ணை நேரடியாக சந்தித்து திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். முதலில் மறுத்த அந்த பெண் நாளடைவில் கிறிஸ்டோபர் காந்தியின் அணுகுமுறையால் திருமணத்திற்கு சம்மதித்தார்.
பெற்றோர் துணையோடு சேலத்தில் திருமணத்தை முடித்தார். பின்னர், அவருடன் சிறிது காலம் குடும்பம் நடத்தியுள்ளார். இதிலும், அவருக்கு சலிப்பு ஏற்பட்டது.
3வது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். மீண்டும் திருமண தகவல் மையம் மூலம் வேட்டையை தொடங்கினார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த ராணி சிக்கினார். அவரிடமும் திருமணம் செய்து கொள்வதாக விருப்பம் தெரிவித்தார்.
காதல் வலைவீசி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். பெற்றோர் எதிர்ப்பை மீறி திருச்செந்தூர் கோயிலில் 2007ல் திருமணம் நடந்தது. 2 வருடத்திற்கு முன்பு மயிலாப்பூரில் குடியேறினர். இதற்கிடையில், கிறிஸ்டோபர் காந்தியின் சிந்தனையோ 4வது திருமணம் செய்து கொள்ள துடித்தது.
அதன்படி, சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணை தொடர்பு கொண்டு அவருடன் பழக்கத்தை ஏற்படுத்தினார். இருவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பதிவுத் திருமணம் நடந்தது.
ரகசியமாக வைத்திருந்தார். 3வது மனைவியின் தொடர்பையும் துண்டிக்கவில்லை. இதற்கிடையில், நாமக்கல்லில் லஞ்ச ஒழிப்பு எஸ்ஐ போல நடித்துபோது போலீசில் கிறிஸ்டோபர் காந்தி சிக்கினார். இந்த விவரம் போட்டோவுடன் பத்திரிகைகளில் வெளியானது. கிறிஸ்டோபரின் கல்யாண லீலைகள் அம்பலமானது.
4 பெண்களை மட்டும் திருமணம் செய்தாரா? அல்லது வேறு பெண்களையும் ஏமாற்றியுள்ளாரா என்று போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினால் தெரியவரும் என்கின்றனர் போலீசார்.
மோசடி தெரிந்தபிறகும் 4வது திருமணம்
இரண்டு திருமணம் செய்தபோதே கிறிஸ்டோபர் காந்தி மீது திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதையும் மீறி அவர் 4 திருமணம் செய்துள்ளார். மேலும், 3வது பெண் திருமண மோசடியை கண்டு பிடித்து தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், வங்கி லாக்கரில் இருந்த பெண்ணின் அனைத்து நகைகளும் மீட்கப்பட்ட பிறகு போலீசில் புகார் அளித்துள்ளனர்.
விசாரிக்காமல் திருமணம் வேண்டாம்
கூட்டுக் குடும்ப வாழ்க்கை, உறவினர்களோடு ஒன்று கூடி வாழும் வாழ்க்கையும் குறைந்து வருகிறது. இதன் விளைவு உறவினர்களும், நண்பர்களும் இல்லாமல் போய் விடுகின்றனர்.
இதனால், பெண்ணுக்கு வரன் தேடுவதில் பெற்றோருக்கு பின்னடைவு ஏற்படுகிறது. இதனால், திருமண தகவல் மையம் மூலம் பதிவு செய்து அவசர கோலத்தில் போதிய விசாரணை நடத்தாமல் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.
இது கிறிஸ்டோபர் காந்தி போன்ற மோசடி பேர்வழிகளுக்கு வசதியாகிவிட்டது. எனவே, மேட்ரிமோனிய தகவலை மட்டுமே நம்பி ஏமாற வேண்டாம். முழு விசாரணை நடத்தி அதன் பிறகே திருமணம் செய்து வைக்கலாம்.
அதில், ‘தனது கணவரான கிறிஸ்டோபர் காந்தி (40) தன்னை தவிர மேலும் 3 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் தர்மா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் கிறிஸ்டோபர் காந்தி 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை உடனடியாக கைது செய்தார்.
கிறிஸ்டோபர் காந்தியிடம் நடத்திய விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கிறிஸ்டோபர் காந்தி சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். வசதியான குடும்பத்தை சார்ந்தவர்.
தண்ணீர் கேன் மொத்த விற்பனை செய்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமாக 3 வீடுகளும், கார்களும் உள்ளன. இவருக்கும் ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது.
பின்னர், அவரை விட்டு பிரிந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்த ஒரு பெண்ணின் விவரங்களை திருமண தகவல் மையம் மூலம் சேகரித்தார்.
அந்த பெண்ணை நேரடியாக சந்தித்து திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். முதலில் மறுத்த அந்த பெண் நாளடைவில் கிறிஸ்டோபர் காந்தியின் அணுகுமுறையால் திருமணத்திற்கு சம்மதித்தார்.
பெற்றோர் துணையோடு சேலத்தில் திருமணத்தை முடித்தார். பின்னர், அவருடன் சிறிது காலம் குடும்பம் நடத்தியுள்ளார். இதிலும், அவருக்கு சலிப்பு ஏற்பட்டது.
3வது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். மீண்டும் திருமண தகவல் மையம் மூலம் வேட்டையை தொடங்கினார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த ராணி சிக்கினார். அவரிடமும் திருமணம் செய்து கொள்வதாக விருப்பம் தெரிவித்தார்.
காதல் வலைவீசி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். பெற்றோர் எதிர்ப்பை மீறி திருச்செந்தூர் கோயிலில் 2007ல் திருமணம் நடந்தது. 2 வருடத்திற்கு முன்பு மயிலாப்பூரில் குடியேறினர். இதற்கிடையில், கிறிஸ்டோபர் காந்தியின் சிந்தனையோ 4வது திருமணம் செய்து கொள்ள துடித்தது.
அதன்படி, சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணை தொடர்பு கொண்டு அவருடன் பழக்கத்தை ஏற்படுத்தினார். இருவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பதிவுத் திருமணம் நடந்தது.
ரகசியமாக வைத்திருந்தார். 3வது மனைவியின் தொடர்பையும் துண்டிக்கவில்லை. இதற்கிடையில், நாமக்கல்லில் லஞ்ச ஒழிப்பு எஸ்ஐ போல நடித்துபோது போலீசில் கிறிஸ்டோபர் காந்தி சிக்கினார். இந்த விவரம் போட்டோவுடன் பத்திரிகைகளில் வெளியானது. கிறிஸ்டோபரின் கல்யாண லீலைகள் அம்பலமானது.
4 பெண்களை மட்டும் திருமணம் செய்தாரா? அல்லது வேறு பெண்களையும் ஏமாற்றியுள்ளாரா என்று போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினால் தெரியவரும் என்கின்றனர் போலீசார்.
மோசடி தெரிந்தபிறகும் 4வது திருமணம்
இரண்டு திருமணம் செய்தபோதே கிறிஸ்டோபர் காந்தி மீது திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதையும் மீறி அவர் 4 திருமணம் செய்துள்ளார். மேலும், 3வது பெண் திருமண மோசடியை கண்டு பிடித்து தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், வங்கி லாக்கரில் இருந்த பெண்ணின் அனைத்து நகைகளும் மீட்கப்பட்ட பிறகு போலீசில் புகார் அளித்துள்ளனர்.
விசாரிக்காமல் திருமணம் வேண்டாம்
கூட்டுக் குடும்ப வாழ்க்கை, உறவினர்களோடு ஒன்று கூடி வாழும் வாழ்க்கையும் குறைந்து வருகிறது. இதன் விளைவு உறவினர்களும், நண்பர்களும் இல்லாமல் போய் விடுகின்றனர்.
இதனால், பெண்ணுக்கு வரன் தேடுவதில் பெற்றோருக்கு பின்னடைவு ஏற்படுகிறது. இதனால், திருமண தகவல் மையம் மூலம் பதிவு செய்து அவசர கோலத்தில் போதிய விசாரணை நடத்தாமல் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.
இது கிறிஸ்டோபர் காந்தி போன்ற மோசடி பேர்வழிகளுக்கு வசதியாகிவிட்டது. எனவே, மேட்ரிமோனிய தகவலை மட்டுமே நம்பி ஏமாற வேண்டாம். முழு விசாரணை நடத்தி அதன் பிறகே திருமணம் செய்து வைக்கலாம்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: 4 பெண்களை ஏமாற்றி திருமணம் கல்யாண மோசடி மன்னன் கைது
இரண்டு திருமணம் செய்தபோதே கிறிஸ்டோபர் காந்தி மீது திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மட்டும் விதி விலக்கா?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» மயிலாப்பூரில் 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது
» 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி!
» தென் ஆப்பிரிக்காவில் பெண்களை ஏமாற்றி கற்பழித்தவருக்கு 50 ஆண்டு ஜெயில்
» 10 ஆண்டுகளில் 15 பேரை ஏமாற்றி திருமணம்
» மத்திய கிழக்கிலிருந்து வரும் பெண்களை ஏமாற்றி பயணப் பொதிகள் கொள்ளை
» 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து சொத்துக்களை பறித்த காதல் ராணி!
» தென் ஆப்பிரிக்காவில் பெண்களை ஏமாற்றி கற்பழித்தவருக்கு 50 ஆண்டு ஜெயில்
» 10 ஆண்டுகளில் 15 பேரை ஏமாற்றி திருமணம்
» மத்திய கிழக்கிலிருந்து வரும் பெண்களை ஏமாற்றி பயணப் பொதிகள் கொள்ளை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|