சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

உள்ளாட்சி தேர்தல் பணிகளை உடனே தொடங்க வேண்டும்; தி.மு.க.வினருக்கு கருணாநிதி வேண்டுகோள் Khan11

உள்ளாட்சி தேர்தல் பணிகளை உடனே தொடங்க வேண்டும்; தி.மு.க.வினருக்கு கருணாநிதி வேண்டுகோள்

2 posters

Go down

உள்ளாட்சி தேர்தல் பணிகளை உடனே தொடங்க வேண்டும்; தி.மு.க.வினருக்கு கருணாநிதி வேண்டுகோள் Empty உள்ளாட்சி தேர்தல் பணிகளை உடனே தொடங்க வேண்டும்; தி.மு.க.வினருக்கு கருணாநிதி வேண்டுகோள்

Post by நண்பன் Sat 24 Sep 2011 - 8:25

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அக்டோபர்
17, 19ம் தேதிகளில் உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. பொதுவாக
அரசின் சார்பில் தேர்தல் நாளுக்கான அறிவிக்கை வெளிவந்து, அதற்கு ஒரு சில
நாட்களுக்குப் பிறகுதான் வேட்புமனு தாக்கலுக்கான நாள் தொடங்கும். ஆனால்
இந்த முறை தேர்தல் அறிவிக்கை வெளிவந்த அடுத்த நாளே வேட்புமனு தாக்கல்
செய்வது தொடங்கி விட்டது.

அது மாத்திரமல்ல; இந்தத்
தேர்தலில் எந்தெந்த தொகுதிகள் பொதுத் தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள்
பெண்களுக்கான தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் தனித் தொகுதிகள் என்ற அடிப்படை
விவரங்கள் எதுவும் எதிர்க்கட்சிகளுக்குத் தெரிவிக்கப்படவில்லை. இதுவரை
பொதுத் தொகுதியாக இருந்து, பலரும் அங்கே போட்டியிட எதிர்பார்த்துக்
கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று அந்தத் தொகுதியை தனித் தொகுதி என்று
அறிவித்த காரணத்தால் - அங்கே போட்டியிடுவதற்கு வேட்பாளர்களைத்
தேர்ந்தெடுப்பதில் அரசியல் கட்சிகளுக்கெல்லாம் நெருக்கடி.

அதுபோலவே
திடீரென்று பெண்கள் தொகுதியாக மாற்றப்பட்ட இடங்களில், இரண்டொரு நாட்களில்
பெண் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசரமும் ஏற்பட்டது. மாநில
தேர்தல் ஆணையரிடம் இந்த கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பிய நேரத்தில்,
மாநிலத் தேர்தல் ஆணையர், வேட்புமனு வாங்குகின்ற இடத்திலே அது யாருக்கான
தொகுதி என்று ஒட்டப்பட்டிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.

ஒவ்வொரு
வேட்பாளரும் தாங்கள் வேட்பு மனு வாங்க வேண்டிய இடத்திற்குச் சென்று, அங்கே
நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதைப் பார்த்து தெரிந்துகொண்டு அதற்குப் பிறகு
வேட்பு மனுக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாம். வேட்பு மனு தாக்கல்
செய்வதற்கான தேதி 22-9-2011 முதல் தொடக்கம் என்ற போதிலும், அந்தத் தேதியில்
சென்று வேட்பு மனுக்களைக் கேட்டபோது, அந்த மனுக்கள் தேர்தல்
ஆணையத்திலிருந்து இதுவரை வந்து சேரவில்லை என்ற பதில்களே பல இடங்களில்
கிடைத்துள்ளன.

இதற்கு முன்பு நடைபெற்ற எந்த
உள்ளாட்சி மன்றத் தேர்தல்களிலும் இப்படி நடைபெறவில்லை. அரசின் இந்தச்
செயல்களால், பல தொகுதிகள் மாற்றப்பட்டுவிட்ட நிலையில் புதிய வேட்பாளர்களைத்
தேர்வு செய்து அறிவித்திருக்கிறோம். எனவே பல பேருக்கு தாங்கள் வேட்பாளராக
நிற்க முடியவில்லையே என்று வருத்தம் ஏற்பட்டிருக்கலாம். பல பேர் திடீரென்று
வேட்பாளராக நிற்க வேண்டிய நிலை உண்டாகியிருக்கலாம்.

அதையெல்லாம்
எண்ணிக் கொண்டிருக்காமல், தேர்தலுக்குப் பிரச்சாரம் செய்ய, வாக்குகளைக்
கேட்க, வீடு வீடாகச் சென்று மக்களிடம் முறையிட நேரம் இல்லாமல் இருக்கலாம்,
எனவே கழக தொண்டர்கள் உடனடியாக தங்கள் பணிகளைத் தொடங்கிட வேண்டும். இது
உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் என்பதால் தேர்தல் பிரசாரத்திற்காக பெரிய
கூட்டம் என்றெல்லாம் நேரத்தைச் செலவழிக்காமல், வீட்டிற்கு வீடு சென்று
வாக்குகளைக் கேட்க வேண்டும்.

தி.மு.க. உள்ளூர்
பிரச்சினைகளில் எந்த அளவிற்கு கடந்த காலங்களில் செயல்பட்டுள்ளது
என்பதையெல்லாம் வாக்காளர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இந்த முறை
உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் நாம் ஆட்சியினரை எதிர்த்துப்
போட்டியிடவிருக்கிறோம். நமக்குள்ளே எழுந்த போட்டியின் காரணமாகவும் -
நம்மவர்கள் சிலர் நடந்து கொண்ட செயல்பாடுகளின் காரணமாகவும் மிகப்பெரிய
தோல்வியை சட்டமன்றத் தேர்தலில் நாம் அடைந்தோம்.

இந்தச்
சூழ்நிலைகளிலிருந்தெல்லாம் நாம் எழுந்து நின்று வழக்கம் போல் மக்கள்
பணியாற்றிட வேண்டுமென்றால், நமக்குள்ள அரிய வாய்ப்பாக வந்துள்ள இந்த
உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை முறையாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தேர்தலில் முன் நின்று பணியாற்ற, உழைக்க கழகத்தைச் சேர்ந்த முன்னணியினர்
சிறையிலே இருந்தால், அதற்கடுத்த மட்டத்திலே உள்ள ஏனைய கழகத்தினர்
ஒவ்வொருவரும் தம்மை வேட்பாளராக எண்ணித் தேர்தல் பணிகளிலே ஈடுபட வேண்டும்.


நமது கட்சியின் சார்பில் போட்டியிடுபவர்கள், கடந்த
முறை போட்டியிட்டிருந்தால் அவர்கள் தங்கள் தேர்தல் செலவு கணக்குகளைக்
காட்டியிருக்க வேண்டும் என்றும், அவ்வாறு காட்டாதவர்களின் வேட்பு
மனுக்களையெல்லாம் ரத்து செய்வதற்கான முயற்சியில் மாநில தேர்தல் ஆணையத்தின்
உதவியோடு ஆளுங்கட்சியினர் ஈடுபட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

எனவே
அதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். நாட்டு நிலைமைகளை வாக்காளர்களிடம்
திண்ணை தோறும், தெருக்கள் தோறும் விளக்கிட வேண்டும். இருக்கும் நாட்களோ ஒரு
சில; ஆற்ற வேண்டிய பணிகளோ மிகப் பல. உதவாதினி ஒரு தாமதம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உள்ளாட்சி தேர்தல் பணிகளை உடனே தொடங்க வேண்டும்; தி.மு.க.வினருக்கு கருணாநிதி வேண்டுகோள் Empty Re: உள்ளாட்சி தேர்தல் பணிகளை உடனே தொடங்க வேண்டும்; தி.மு.க.வினருக்கு கருணாநிதி வேண்டுகோள்

Post by kalainilaa Sat 24 Sep 2011 - 13:17

இந்த தேர்தல் எப்படி நடக்குது என்று பார்க்கனும் ,கடந்த தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் ,
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum