Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
தீபாவளியைப் புறந்தள்ளு! - யாதுமானவள்
+4
*சம்ஸ்
kalainilaa
முனாஸ் சுலைமான்
யாதுமானவள்
8 posters
Page 1 of 1
தீபாவளியைப் புறந்தள்ளு! - யாதுமானவள்
தீபாவளியை தமிழர்கள் ஏன் கொண்ட்டாடக் கூடாது என்பதற்கான விளக்கக் கவிதை இது.
தீபாவளி எதற்காகக் கொண்டாடுகிறார்கள் என்பதை அறியாமலே எத்தனையோ காலமாக நம் தமிழ் நாட்டில் உருவாகிவிட்ட வடமாநில பண்டிகையிது... படித்துப் பாருங்கள்... தீபாவளியை தெரிந்து கொள்ளுங்கள்..
தீபாவளியைப் புறந்தள்ளு!
காலகா லமாகமிகக் கோலாக லமாகக்
கொண்டா டிவரு கின்றோம்
ஏலுமோ எமதாகுமோ யெதற்கோ யெனவா
ராய வும்மறுக் கின்றோம்
ஓங்கியே உயர்வாழ்வு மேவாழ்ந் தநந்
திராவி டநாட் டினிலே
தீங்கென ஆரியர்திரள் திரளாக புகுந்து
பலதீங் குகள்செய் தனரே! (1)
ஆவோ டாடும் புள்ளும் பன்றியும்
ஆமை யோடத் தனையும்
காவினி லலைந்து திரிந்தவர் திரிந்ததைக்
கொன்றுண் டுவரு வதையும்
தாயினு மேலெனத் தங்குடி காத்திட்ட
தன்னி கர்மன் னர்களும்
ஆயிடு மோயிக் கொடுமையெ லாமென
ஆங்கதைத் தடுத்து வந்தார். (2)
அஞ்சியே யோடவே நேரிடக் கண்டு
நமதொப் பிலாவேந் தரையே
நஞ்சினா லானதன்மூளை யினாற்பல
சூழ்ச்சிகள் செய்து செய்தே
ஒவ்வோ ரரசனாய் நெறிகெட் டமுறை
யினில்கொன் றேவீழ்த் தியுமே
அவ்வோர் பெயர்களை மாற்றியும் வெற்றி
யென்றா டிக்களித் தனரே! (3)
உயிரென ஒழுக்கந் தன்னில் கொண்டவன்
திறமிகு பொன்னனெ னுமன்னன்
பயிரின் வேலி யெனத்தன் மக்களைப்
பாங்குடன் காத்து வந்தான்
புலைவேள் வியையு மவர்செய் யின்னலும்
பாய்ந்த வன்தடுத் ததனால்
கொலைகா ரர்கொடுஞ் சூழ்ச்சி யினாலக்
கொற்ற வனுயிரைக் குடித்தனரே! (4)
தகத்தக வென்னும் மண்டப மொன்று
கட்டிட விழைந்து செய்தான்
மகிழ்வுடன் தானும் அதனைக் காணவ
மைச்சர் களோடு சென்றான்
பொய்த்தூண் ஒன்றின் உள்ளில் மறைந்து
நின்ற வோர்ஆ ரியனும்
அய்யோ மன்னன் அலறிட விரைந்து
குத்தியும் கொன்று விட்டான்! (5)
பொன்னன் தமையன் பொற்கண் ணன்புதுப்
பொலிவுட ணரியணை யேறியதும்
அண்ணனைப் போலவே கண்ணெனக் காப்ப
தைப்பொறுக் காவா ரியனும்
தோணியி லுலவிடும் போதுமெய்க் காவல
போலவே மறைந்துனின் றிருந்து
மீனினுக் கிரையாய்ப் போவெனக் கடலுள்
திடுமெனத் தள்ளி கொன்றான். (6)
மாவலி சூரன் சம்பரன் தாடகை
மற்றை யோரெ லாமுயர்
மேவிடும் திறனொடு திராவிடம் காத்திட்ட
மன்னர் கள்தா னறிவீர்
அத்தனை பேரையும் தோளின் புயத்தால்
அண்டி டவிய லாமல்
எத்தரி னிழிந்தசூழ்ச் சிகளா லெமதுய
ரரசுகள் வீழ்ந்து விட்டார்! (7)
அந்த வகையில் வந்தவன் மாந்தரன்
என்ற வோர்மாண் பரசன்
செந்தமிழ் நாட்டின் வளமிகு மேற்குப்
பகுதி யையாண் டுவர
வேள்விகள் செய்த வீணர் கள்தன்
னையச்சே ரன்விரட் டிவிட்டு
சேய்தனை யணைக்கும் தாயென மக்களைத்
தரமுடன் காத்து வந்தான்! (8)
ஆயினு மாரியர் சிலபோ தெல்லை
புகுந்துதொல் லைசெய் திடவே
போயினன்; போரிட் டானப் புல்லர்
புறமுது கிட்டவே ளையிலே
ஆங்கே மறைந்து நின்றவோ ராரியன்
மனையாள் அம்பெ டுத்து
ஓங்கியே விடுத்தாள் துளைத்திட மார்பினில்
மாந்தரன் மாய்ந்து விட்டான்! (9)
கொன்றவள் சென்று அருகினி லிருந்த
கங்கையில் முழுகி விட்டு
தன்னுடை படிந்த குருதிக் கரையை
களைந்து புத்து டுத்தி
தன்றன் குடும்பந் தன்னொடு மகிழ்வாய்
வெற்றியைக் கூறி விட்டு
தன்னிலை யற்றுச் சுற்றஞ் சூழ
களித்த வள்மகிழ்ந் திட்டாள்! (10)
அரிந்து கொன்றான் தனித்து லாவிய
மூத்தர சியத்தா டகையை
மறைந்து கொன்றான் வாலியை யுமமந்த
மாண்பிலா வடரா மனவன்
இக்கொடுங் கொலைகளை மறைத்திட விதவிதப்
புதுக்கதை புனைந்து வைத்து
பக்தியாய் நாமும் போற்றினால் மோட்சம்
என்றே புளுகி வைத்தார்! (11)
அஃதினி லொன்றே தீபாவளியாம் ஆரியன்
மனைவி காளி தேவியாம்
மாந்தர னென்ற மன்னன் தான்கொடும்
பாவிந ரகாசுர னென்றும்
நம்பிடும் படியே நாகூ சாமல்
நம்மவ ரிடமே கூறிவிட்டு
நம்மையு மவருடன் சேர்ந்து களித்திடு
மாறவர் செய்து விட்டார்! (12)
அன்றைய நீட்சிதா னின்றும் ஆரியர்
தொடர்கதை யாக்கிவ ருகின்றார்
மத்தியில் செலுந்தமி ழமைச்சர் களையவர்
தூற்றி யேமகிழ் கின்றார்
புத்தியி லூறிடுஞ் சூழ்ச்சி யினாலர
சேற்றிடும் யெண்ணத் தால்மிகப்
புத்தியு டனுள்ள சிதம்பரத் தைவெளி
யேற்றி டமுய லுகின்றார்! (13)
திராவிடன் ஆண்ட போதும் முயன்றான்
திருத்திட முடிய வில்லை
மருந்தெனக் கசக்கும் இந்நா ளெனக்குத்
துளியும் பிடிக்க வில்லை
இனியா ரிடமுமு றைசெய்வ தும்வீ
ணென்றறிந் தகார ணத்தால்
துணிவா யிந்தத் தீநா ளினைநாம்
தவிர்த்திட வேண்டு மென்பேன் (14)
போதும் போதுமித் தீபா வளியைநந்
தமிழர் கள்போற் றியதும்
போதமில் லாநம்முன் னோ ருமிதைப்
புனித மென்றா டியதும்
அறிவிற் சிறந்த தமிழருக் கினியும்
ஆரியப் பண்டிகை யாகாது!
புரியும் படிநா னுரைத்து விட்டேன்
புறந்தள் ளியிதனை மீண்டிடுக! (15)
- லதாராணி பூங்காவனம்.
தீபாவளி எதற்காகக் கொண்டாடுகிறார்கள் என்பதை அறியாமலே எத்தனையோ காலமாக நம் தமிழ் நாட்டில் உருவாகிவிட்ட வடமாநில பண்டிகையிது... படித்துப் பாருங்கள்... தீபாவளியை தெரிந்து கொள்ளுங்கள்..
தீபாவளியைப் புறந்தள்ளு!
காலகா லமாகமிகக் கோலாக லமாகக்
கொண்டா டிவரு கின்றோம்
ஏலுமோ எமதாகுமோ யெதற்கோ யெனவா
ராய வும்மறுக் கின்றோம்
ஓங்கியே உயர்வாழ்வு மேவாழ்ந் தநந்
திராவி டநாட் டினிலே
தீங்கென ஆரியர்திரள் திரளாக புகுந்து
பலதீங் குகள்செய் தனரே! (1)
ஆவோ டாடும் புள்ளும் பன்றியும்
ஆமை யோடத் தனையும்
காவினி லலைந்து திரிந்தவர் திரிந்ததைக்
கொன்றுண் டுவரு வதையும்
தாயினு மேலெனத் தங்குடி காத்திட்ட
தன்னி கர்மன் னர்களும்
ஆயிடு மோயிக் கொடுமையெ லாமென
ஆங்கதைத் தடுத்து வந்தார். (2)
அஞ்சியே யோடவே நேரிடக் கண்டு
நமதொப் பிலாவேந் தரையே
நஞ்சினா லானதன்மூளை யினாற்பல
சூழ்ச்சிகள் செய்து செய்தே
ஒவ்வோ ரரசனாய் நெறிகெட் டமுறை
யினில்கொன் றேவீழ்த் தியுமே
அவ்வோர் பெயர்களை மாற்றியும் வெற்றி
யென்றா டிக்களித் தனரே! (3)
உயிரென ஒழுக்கந் தன்னில் கொண்டவன்
திறமிகு பொன்னனெ னுமன்னன்
பயிரின் வேலி யெனத்தன் மக்களைப்
பாங்குடன் காத்து வந்தான்
புலைவேள் வியையு மவர்செய் யின்னலும்
பாய்ந்த வன்தடுத் ததனால்
கொலைகா ரர்கொடுஞ் சூழ்ச்சி யினாலக்
கொற்ற வனுயிரைக் குடித்தனரே! (4)
தகத்தக வென்னும் மண்டப மொன்று
கட்டிட விழைந்து செய்தான்
மகிழ்வுடன் தானும் அதனைக் காணவ
மைச்சர் களோடு சென்றான்
பொய்த்தூண் ஒன்றின் உள்ளில் மறைந்து
நின்ற வோர்ஆ ரியனும்
அய்யோ மன்னன் அலறிட விரைந்து
குத்தியும் கொன்று விட்டான்! (5)
பொன்னன் தமையன் பொற்கண் ணன்புதுப்
பொலிவுட ணரியணை யேறியதும்
அண்ணனைப் போலவே கண்ணெனக் காப்ப
தைப்பொறுக் காவா ரியனும்
தோணியி லுலவிடும் போதுமெய்க் காவல
போலவே மறைந்துனின் றிருந்து
மீனினுக் கிரையாய்ப் போவெனக் கடலுள்
திடுமெனத் தள்ளி கொன்றான். (6)
மாவலி சூரன் சம்பரன் தாடகை
மற்றை யோரெ லாமுயர்
மேவிடும் திறனொடு திராவிடம் காத்திட்ட
மன்னர் கள்தா னறிவீர்
அத்தனை பேரையும் தோளின் புயத்தால்
அண்டி டவிய லாமல்
எத்தரி னிழிந்தசூழ்ச் சிகளா லெமதுய
ரரசுகள் வீழ்ந்து விட்டார்! (7)
அந்த வகையில் வந்தவன் மாந்தரன்
என்ற வோர்மாண் பரசன்
செந்தமிழ் நாட்டின் வளமிகு மேற்குப்
பகுதி யையாண் டுவர
வேள்விகள் செய்த வீணர் கள்தன்
னையச்சே ரன்விரட் டிவிட்டு
சேய்தனை யணைக்கும் தாயென மக்களைத்
தரமுடன் காத்து வந்தான்! (8)
ஆயினு மாரியர் சிலபோ தெல்லை
புகுந்துதொல் லைசெய் திடவே
போயினன்; போரிட் டானப் புல்லர்
புறமுது கிட்டவே ளையிலே
ஆங்கே மறைந்து நின்றவோ ராரியன்
மனையாள் அம்பெ டுத்து
ஓங்கியே விடுத்தாள் துளைத்திட மார்பினில்
மாந்தரன் மாய்ந்து விட்டான்! (9)
கொன்றவள் சென்று அருகினி லிருந்த
கங்கையில் முழுகி விட்டு
தன்னுடை படிந்த குருதிக் கரையை
களைந்து புத்து டுத்தி
தன்றன் குடும்பந் தன்னொடு மகிழ்வாய்
வெற்றியைக் கூறி விட்டு
தன்னிலை யற்றுச் சுற்றஞ் சூழ
களித்த வள்மகிழ்ந் திட்டாள்! (10)
அரிந்து கொன்றான் தனித்து லாவிய
மூத்தர சியத்தா டகையை
மறைந்து கொன்றான் வாலியை யுமமந்த
மாண்பிலா வடரா மனவன்
இக்கொடுங் கொலைகளை மறைத்திட விதவிதப்
புதுக்கதை புனைந்து வைத்து
பக்தியாய் நாமும் போற்றினால் மோட்சம்
என்றே புளுகி வைத்தார்! (11)
அஃதினி லொன்றே தீபாவளியாம் ஆரியன்
மனைவி காளி தேவியாம்
மாந்தர னென்ற மன்னன் தான்கொடும்
பாவிந ரகாசுர னென்றும்
நம்பிடும் படியே நாகூ சாமல்
நம்மவ ரிடமே கூறிவிட்டு
நம்மையு மவருடன் சேர்ந்து களித்திடு
மாறவர் செய்து விட்டார்! (12)
அன்றைய நீட்சிதா னின்றும் ஆரியர்
தொடர்கதை யாக்கிவ ருகின்றார்
மத்தியில் செலுந்தமி ழமைச்சர் களையவர்
தூற்றி யேமகிழ் கின்றார்
புத்தியி லூறிடுஞ் சூழ்ச்சி யினாலர
சேற்றிடும் யெண்ணத் தால்மிகப்
புத்தியு டனுள்ள சிதம்பரத் தைவெளி
யேற்றி டமுய லுகின்றார்! (13)
திராவிடன் ஆண்ட போதும் முயன்றான்
திருத்திட முடிய வில்லை
மருந்தெனக் கசக்கும் இந்நா ளெனக்குத்
துளியும் பிடிக்க வில்லை
இனியா ரிடமுமு றைசெய்வ தும்வீ
ணென்றறிந் தகார ணத்தால்
துணிவா யிந்தத் தீநா ளினைநாம்
தவிர்த்திட வேண்டு மென்பேன் (14)
போதும் போதுமித் தீபா வளியைநந்
தமிழர் கள்போற் றியதும்
போதமில் லாநம்முன் னோ ருமிதைப்
புனித மென்றா டியதும்
அறிவிற் சிறந்த தமிழருக் கினியும்
ஆரியப் பண்டிகை யாகாது!
புரியும் படிநா னுரைத்து விட்டேன்
புறந்தள் ளியிதனை மீண்டிடுக! (15)
- லதாராணி பூங்காவனம்.
Last edited by யாதுமானவள் on Thu 20 Oct 2011 - 17:18; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தீபாவளியைப் புறந்தள்ளு! - யாதுமானவள்
திராவிடன் ஆண்ட போதும் முயன்றான்
திருத்திட முடிய வில்லை
மருந்தெனக் கசக்கும் இந்நா ளெனக்குத்
துளியும் பிடிக்க வில்லை
இனியா ரிடமுமு றைசெய்வ தும்வீ
ணென்றறிந் தகார ணத்தால்
துணிவா யிந்தத் தீநா ளினைநாம்
தவிர்த்திட வேண்டு மென்பேன் (14)
தமிழ்(ச்சி) என்றால் இதுதான் எனக்கு மலையில் ஏறுவது போன்றுள்ளது புரிந்து கொள்வது உங்க அழகுத்தமிழ் சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் நல்லா இருக்கு :flower:
Re: தீபாவளியைப் புறந்தள்ளு! - யாதுமானவள்
மிக்க நன்றி முனாஸ்..
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தீபாவளியைப் புறந்தள்ளு! - யாதுமானவள்
அந்த வகையில் வந்தவன் மாந்தரன்
என்ற வோர்மாண் பரசன்
செந்தமிழ் நாட்டின் வளமிகு மேற்குப்
பகுதி யையாண் டுவர
வேள்விகள் செய்த வீணர் கள்தன்
னையச்சே ரன்விரட் டிவிட்டு
சேய்தனை யணைக்கும் தாயென மக்களைத்
தரமுடன் காத்து வந்தான்! (8)
நாகசுரனின் பெயர்
மாந்தரன் என்பதை அறியமுடிந்தது.
தீபாவளி பற்றிய கவி வரிகள்,
தீயில் கருகிய திராவிடனின்
உண்மை முகத்தை காட்டியது.
விளக்கமும் ,அதன் அர்த்தமும்,
அடையாளம் காட்டியது .
திராவிடனின் மறுமுகம்
உங்கள் கவியாகும் .
பாராட்டுக்கிறேன் .தொடருங்கள்
வெண் பனி புகைக் கூட்டம்
விலக சூரியனாய் மாறட்டும்
உங்கள் பணி.உங்கள் பாணியில் .
என்ற வோர்மாண் பரசன்
செந்தமிழ் நாட்டின் வளமிகு மேற்குப்
பகுதி யையாண் டுவர
வேள்விகள் செய்த வீணர் கள்தன்
னையச்சே ரன்விரட் டிவிட்டு
சேய்தனை யணைக்கும் தாயென மக்களைத்
தரமுடன் காத்து வந்தான்! (8)
நாகசுரனின் பெயர்
மாந்தரன் என்பதை அறியமுடிந்தது.
தீபாவளி பற்றிய கவி வரிகள்,
தீயில் கருகிய திராவிடனின்
உண்மை முகத்தை காட்டியது.
விளக்கமும் ,அதன் அர்த்தமும்,
அடையாளம் காட்டியது .
திராவிடனின் மறுமுகம்
உங்கள் கவியாகும் .
பாராட்டுக்கிறேன் .தொடருங்கள்
வெண் பனி புகைக் கூட்டம்
விலக சூரியனாய் மாறட்டும்
உங்கள் பணி.உங்கள் பாணியில் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தீபாவளியைப் புறந்தள்ளு! - யாதுமானவள்
மிக்க நன்றி கலைநிலா...! தங்கள் வாழ்த்தில் மகிழ்ந்தேன்! நன்றிகள்!பாராட்டுக்கிறேன் .தொடருங்கள்
வெண் பனி புகைக் கூட்டம்
விலக சூரியனாய் மாறட்டும்
உங்கள் பணி.உங்கள் பாணியில் .
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தீபாவளியைப் புறந்தள்ளு! - யாதுமானவள்
வாழ்த்துக்கள் அக்கா முத்தான தமிழில் அருமையாக தந்தகவி சூப்பர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தீபாவளியைப் புறந்தள்ளு! - யாதுமானவள்
*சம்ஸ் wrote:வாழ்த்துக்கள் அக்கா முத்தான தமிழில் அருமையாக தந்தகவி சூப்பர்
நன்றி சம்ஸ்!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தீபாவளியைப் புறந்தள்ளு! - யாதுமானவள்
இக்கொடுங் கொலைகளை மறைத்திட விதவிதப்
புதுக்கதை புனைந்து வைத்து
பக்தியாய் நாமும் போற்றினால் மோட்சம்
என்றே புளுகி வைத்தார்! (11)
அஃதினி லொன்றே தீபாவளியாம் ஆரியன்
மனைவி காளி தேவியாம்
மாந்தர னென்ற மன்னன் தான்கொடும்
பாவிந ரகாசுர னென்றும்
நம்பிடும் படியே நாகூ சாமல்
நம்மவ ரிடமே கூறிவிட்டு
நம்மையு மவருடன் சேர்ந்து களித்திடு
மாறவர் செய்து விட்டார்!
ஆக இதுநாள்வரை அறிந்திராத வரலாற்று உண்மையினை படம்பிடித்துக்காட்டுவதாய் அமைந்த உங்கள் கவிதையில் தீபாவளியானது அனியாயமான கொலைகளை மறைப்பதற்கு உருவாக்கப்பட்ட திருவிழாவாக ஆக்கப்பட்டிருக்கிறது இதை அறியாதவர்கள் மூதாயர் வழியில் பின்பற்றி கொண்டாடி வருகிறார்கள் என்று தெளிவான உங்கள் வாதத்தினை வைத்துவிட்டீர்கள் புரிபவர்களுக்கு இது மிகப்பெரிய வழிகாட்டலாக அமையும்
உங்களின் துணிச்சலையும் பாராட்டியாக வேண்டும் ஒட்டுமொத்த தமிழர்களும் கொண்டாடும் தீபாபளியை ஒரு தனி புரட்சிக் கவிஞராக அதிலுள்ள எதிர்மறையான விடயத்தையும் எடுத்துக்காட்டி தனித்து நிற்பதில் வளமையான உங்களின் ஆற்றல் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது இதுவே தேவையும் கூட அத்தனைபேரும் ஒத்து ஓதுவதில் அதிலுள்ள குறைகள் தெரிவதில்லை தெரிந்தவர்கள் தங்களின் வாதங்களை முன்வைக்கும் போததான் அது பற்றிய சிந்தனைகளும் உருவாகும் மிக்க மகிழ்ச்சி நன்றி பாராட்டுகள்
Re: தீபாவளியைப் புறந்தள்ளு! - யாதுமானவள்
அருமை அக்கா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தீபாவளியைப் புறந்தள்ளு! - யாதுமானவள்
அக்கா அருமைதான் எங்கள் நிலை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் பானு மேடம் நாங்கள் காத்திருக்கிறோம் கொண்டாடுவதற்குபானுகமால் wrote:அருமை அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தீபாவளியைப் புறந்தள்ளு! - யாதுமானவள்
நேசமுடன் ஹாசிம் wrote:இக்கொடுங் கொலைகளை மறைத்திட விதவிதப்
புதுக்கதை புனைந்து வைத்து
பக்தியாய் நாமும் போற்றினால் மோட்சம்
என்றே புளுகி வைத்தார்! (11)
அஃதினி லொன்றே தீபாவளியாம் ஆரியன்
மனைவி காளி தேவியாம்
மாந்தர னென்ற மன்னன் தான்கொடும்
பாவிந ரகாசுர னென்றும்
நம்பிடும் படியே நாகூ சாமல்
நம்மவ ரிடமே கூறிவிட்டு
நம்மையு மவருடன் சேர்ந்து களித்திடு
மாறவர் செய்து விட்டார்!
ஆக இதுநாள்வரை அறிந்திராத வரலாற்று உண்மையினை படம்பிடித்துக்காட்டுவதாய் அமைந்த உங்கள் கவிதையில் தீபாவளியானது அனியாயமான கொலைகளை மறைப்பதற்கு உருவாக்கப்பட்ட திருவிழாவாக ஆக்கப்பட்டிருக்கிறது இதை அறியாதவர்கள் மூதாயர் வழியில் பின்பற்றி கொண்டாடி வருகிறார்கள் என்று தெளிவான உங்கள் வாதத்தினை வைத்துவிட்டீர்கள் புரிபவர்களுக்கு இது மிகப்பெரிய வழிகாட்டலாக அமையும்
உங்களின் துணிச்சலையும் பாராட்டியாக வேண்டும் ஒட்டுமொத்த தமிழர்களும் கொண்டாடும் தீபாபளியை ஒரு தனி புரட்சிக் கவிஞராக அதிலுள்ள எதிர்மறையான விடயத்தையும் எடுத்துக்காட்டி தனித்து நிற்பதில் வளமையான உங்களின் ஆற்றல் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது இதுவே தேவையும் கூட அத்தனைபேரும் ஒத்து ஓதுவதில் அதிலுள்ள குறைகள் தெரிவதில்லை தெரிந்தவர்கள் தங்களின் வாதங்களை முன்வைக்கும் போததான் அது பற்றிய சிந்தனைகளும் உருவாகும் மிக்க மகிழ்ச்சி நன்றி பாராட்டுகள்
மிக்க நன்றிகளும் மகிழ்வும் ஹாசிம்....! சிறு சிறு மூடப்பழங்களைக்கூட எளிதில் திருத்தி விடலாம். ஆனால் இதுபோன்ற பெரும் நிகழ்வுகளை மக்கள் புரிந்து கொண்டாலும் ஏற்ருக்கொல்வதேன்பது எளிதல்ல.... என்னால் முயன்றலவுக்கு இவ்வுண்மையைத் தெளிவாகக்கூறியுள்ளேன் என நினைக்கிறேன். தங்கள் வாழ்த்திற்கு நன்றி!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தீபாவளியைப் புறந்தள்ளு! - யாதுமானவள்
யாதுமானவள் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:இக்கொடுங் கொலைகளை மறைத்திட விதவிதப்
புதுக்கதை புனைந்து வைத்து
பக்தியாய் நாமும் போற்றினால் மோட்சம்
என்றே புளுகி வைத்தார்! (11)
அஃதினி லொன்றே தீபாவளியாம் ஆரியன்
மனைவி காளி தேவியாம்
மாந்தர னென்ற மன்னன் தான்கொடும்
பாவிந ரகாசுர னென்றும்
நம்பிடும் படியே நாகூ சாமல்
நம்மவ ரிடமே கூறிவிட்டு
நம்மையு மவருடன் சேர்ந்து களித்திடு
மாறவர் செய்து விட்டார்!
ஆக இதுநாள்வரை அறிந்திராத வரலாற்று உண்மையினை படம்பிடித்துக்காட்டுவதாய் அமைந்த உங்கள் கவிதையில் தீபாவளியானது அனியாயமான கொலைகளை மறைப்பதற்கு உருவாக்கப்பட்ட திருவிழாவாக ஆக்கப்பட்டிருக்கிறது இதை அறியாதவர்கள் மூதாயர் வழியில் பின்பற்றி கொண்டாடி வருகிறார்கள் என்று தெளிவான உங்கள் வாதத்தினை வைத்துவிட்டீர்கள் புரிபவர்களுக்கு இது மிகப்பெரிய வழிகாட்டலாக அமையும்
உங்களின் துணிச்சலையும் பாராட்டியாக வேண்டும் ஒட்டுமொத்த தமிழர்களும் கொண்டாடும் தீபாபளியை ஒரு தனி புரட்சிக் கவிஞராக அதிலுள்ள எதிர்மறையான விடயத்தையும் எடுத்துக்காட்டி தனித்து நிற்பதில் வளமையான உங்களின் ஆற்றல் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது இதுவே தேவையும் கூட அத்தனைபேரும் ஒத்து ஓதுவதில் அதிலுள்ள குறைகள் தெரிவதில்லை தெரிந்தவர்கள் தங்களின் வாதங்களை முன்வைக்கும் போததான் அது பற்றிய சிந்தனைகளும் உருவாகும் மிக்க மகிழ்ச்சி நன்றி பாராட்டுகள்
மிக்க நன்றிகளும் மகிழ்வும் ஹாசிம்....! சிறு சிறு மூடப்பழங்களைக்கூட எளிதில் திருத்தி விடலாம். ஆனால் இதுபோன்ற பெரும் நிகழ்வுகளை மக்கள் புரிந்து கொண்டாலும் ஏற்ருக்கொல்வதேன்பது எளிதல்ல.... என்னால் முயன்றலவுக்கு இவ்வுண்மையைத் தெளிவாகக்கூறியுள்ளேன் என நினைக்கிறேன். தங்கள் வாழ்த்திற்கு நன்றி!
நன்றி அக்கா எமது கருத்தில் ஒரு உள்ளத்திற்கேனும் விளங்கிவிட்டால் அதில் எமக்குப்பெருமையே தொடருங்கள்
Re: தீபாவளியைப் புறந்தள்ளு! - யாதுமானவள்
ஒரு பேனாமுனையால் இத்தனைவிடயங்களை அதிலும் குறிப்பாக அறிந்திடாத படிக்க முயன்றிராத விடையங்களை மிக நாசுக்காக படிக்கத்தந்த கவிதை
மூட நம்பிக்கையில் மனிதன் இன்னும் மீளாது அதைவெறித்தனமாக கடைபிடித்து வரும் இவர்களுக்கு மத்தியில் மிகவும் துணிச்சலாக ஒரு தனிப்படையாக தாங்கள் தந்திருக்கும் விடையமாவும் பயனுள்ளதே.
எப்பவுமே உங்களின் திறமை சேனையில் என்றும் தனித்து நிற்கும் இதையும் அப்படியேதான் நான் பார்கிறேன் இது போன்ற ஆக்கங்கள் சேரவேண்டிய இடங்களை சென்றடைய வேண்டுமென உங்களைக்கேட்டுக்கொள்கிறேன்.
மூட நம்பிக்கையில் மனிதன் இன்னும் மீளாது அதைவெறித்தனமாக கடைபிடித்து வரும் இவர்களுக்கு மத்தியில் மிகவும் துணிச்சலாக ஒரு தனிப்படையாக தாங்கள் தந்திருக்கும் விடையமாவும் பயனுள்ளதே.
எப்பவுமே உங்களின் திறமை சேனையில் என்றும் தனித்து நிற்கும் இதையும் அப்படியேதான் நான் பார்கிறேன் இது போன்ற ஆக்கங்கள் சேரவேண்டிய இடங்களை சென்றடைய வேண்டுமென உங்களைக்கேட்டுக்கொள்கிறேன்.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: தீபாவளியைப் புறந்தள்ளு! - யாதுமானவள்
பாயிஸ் wrote:ஒரு பேனாமுனையால் இத்தனைவிடயங்களை அதிலும் குறிப்பாக அறிந்திடாத படிக்க முயன்றிராத விடையங்களை மிக நாசுக்காக படிக்கத்தந்த கவிதை
மூட நம்பிக்கையில் மனிதன் இன்னும் மீளாது அதைவெறித்தனமாக கடைபிடித்து வரும் இவர்களுக்கு மத்தியில் மிகவும் துணிச்சலாக ஒரு தனிப்படையாக தாங்கள் தந்திருக்கும் விடையமாவும் பயனுள்ளதே.
எப்பவுமே உங்களின் திறமை சேனையில் என்றும் தனித்து நிற்கும் இதையும் அப்படியேதான் நான் பார்கிறேன் இது போன்ற ஆக்கங்கள் சேரவேண்டிய இடங்களை சென்றடைய வேண்டுமென உங்களைக்கேட்டுக்கொள்கிறேன்.
மிக்க நன்றி பாயிஸ்....! இவளுக்கென்ன இப்படி திமிர் என்று நான் மேடையில் பேசினாலும் எழுத்தாக வடித்தாலும் எதிர்ப்பவர்களே நிறைய பேர். காலம் கடந்து புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு நான் தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறேன்... முடிந்தளவு என் எண்ணங்களை பகிர்கிறேன்...
மிக்க நன்றி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தீபாவளியைப் புறந்தள்ளு! - யாதுமானவள்
நல்லா ஜாலியா கொண்டாடுங்க அக்கா ...........முன்கூட்டிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்நண்பன் wrote:அக்கா அருமைதான் எங்கள் நிலை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் பானு மேடம் நாங்கள் காத்திருக்கிறோம் கொண்டாடுவதற்குபானுகமால் wrote:அருமை அக்கா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தீபாவளியைப் புறந்தள்ளு! - யாதுமானவள்
ஆகட்டும் ஆகட்டும்பானுகமால் wrote:நல்லா ஜாலியா கொண்டாடுங்க அக்கா ...........முன்கூட்டிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்நண்பன் wrote:அக்கா அருமைதான் எங்கள் நிலை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் பானு மேடம் நாங்கள் காத்திருக்கிறோம் கொண்டாடுவதற்குபானுகமால் wrote:அருமை அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தீபாவளியைப் புறந்தள்ளு! - யாதுமானவள்
பானுகமால் wrote:நல்லா ஜாலியா கொண்டாடுங்க அக்கா ...........முன்கூட்டிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்நண்பன் wrote:அக்கா அருமைதான் எங்கள் நிலை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் பானு மேடம் நாங்கள் காத்திருக்கிறோம் கொண்டாடுவதற்குபானுகமால் wrote:அருமை அக்கா
பானு அக்காவந்து அடி தருவாங்க கவிதையே தீபாவளிக்கு எதிராக அக்கா எழுதிருக்காங்க நீங்க அவங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறிங்களே :,;: :,;:
Similar topics
» மரணத்திற்குப் பின்....(யாதுமானவள்)
» ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்
» தூயவனைத் துதித்திடுவோம் ...!(.யாதுமானவள் )
» தமிழர் திருநாள் தைப்பொங்கல் - யாதுமானவள்
» தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
» ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்
» தூயவனைத் துதித்திடுவோம் ...!(.யாதுமானவள் )
» தமிழர் திருநாள் தைப்பொங்கல் - யாதுமானவள்
» தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|