சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

ஆண்மைக் குறைவு: ஓர் அதிர்ச்சி சர்வே!  Khan11

ஆண்மைக் குறைவு: ஓர் அதிர்ச்சி சர்வே!

2 posters

Go down

ஆண்மைக் குறைவு: ஓர் அதிர்ச்சி சர்வே!  Empty ஆண்மைக் குறைவு: ஓர் அதிர்ச்சி சர்வே!

Post by nazimudeen Fri 18 Nov 2011 - 20:33

ஆண்மைக் குறைவு: ஓர் அதிர்ச்சி சர்வே!

உலகம்
முழுக்க நடந்துகொண்டிருக்கும் ஆய்வுகளில் இப்போது முக்கிய இடத்தைப்
பிடித்திருப்பது, `ஆண்மைக் குறைவு' பற்றிய ஆராய்ச்சியே! ஏனெனில், உலகம்
முழுக்க இந்த பிரச்சினையால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை நாளுக்கு
நாள் கூடிக்கொண்டே போகிறது. குறிப்பாக இந்தியாவில் இதன் தாக்கம் அதிகமாம்! ஏன்?

இந்தியா ஒரு விவசாய நாடாக இருந்தது! எங்கு பார்த்தாலும் விளைநிலங்களாக இருந்தன. எழுபது
சதவீத மக்கள் விவசாய வேலை பார்த்து,
விவசாயிகளாக வாழ்ந்துவந்தார்கள். அதிகாலையிலே எழுந்து, வயலுக்கு
செல்வார்கள். கடுமையாக உழைப்பார்கள். அவர்கள் உற்பத்தி செய்த இயற்கை
உணவை, அவர்கள் சுவையாக தயாரித்து உட்கொண்டார்கள். குளம், ஏரி, வாய்க்கால் போன்ற நீர் நிலைகளில்
நீச்சல் அடித்து குளித்து வந்தார்கள்.

கிராமிய
விளையாட்டுக்களை விளையாடினார்கள். இரவில் நிம்மதியாகத் தூங்கினார்கள்.
இந்தியர்களின் உழைப்பு நிறைந்த
இந்த வாழ்க்கை முறை இன்று படிப்படியாக மறைந்து, கனவில்கூட காண
முடியாததாகி விட்டது. சிறுவர்களுக்கோ உடல்
இயக்கம் நிறைந்த வெளி விளையாட்டுகள் இல்லை. டெலிவிஷன்
முன்பும் கம்ப்யூட்டர் முன்பும் பால பருவத்தை தொலைக்கும் இவர்கள்,
இளைஞர்களாகும் போது முழு நேரப்டிப்பு - அதன்பின் `ஒயிட் காலர் ஜாப்' எனப்படும் அலுவலக இருக்கை
வேலை போன்ற எந்திரத்தன வாழ்க்கை முறையால் ஆட்க்கொள்ளப்பட்டு மனஉளைச்சல், அமைதிஇன்மை போன்ற
பல காரணங்களால் அவர்களின் மனம், உடல் ஆரோக்கியம் கெட்டு இறுதியில் ஆண்மைக் குறைபாடு
தோன்றுகிறது.
ஆண்மைக் குறைபாடு
என்பது, செக்ஸ் எழுச்சியின்மையாகும்! சமீபத்தில் `இந்தியன் இன்ஸ்டியூட் ஆப்
செக்சுவல் தெரபி' எடுத்த சர்வேயின் படி
ஆண்மைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஐந்தாண்டுகளில் 7 சதவீதம்
அதிகரித்திருக்கிறார்கள். அதன்படி திருமணமானவர்களில் 22 சதவீதம் பேர் வரை
இந்த பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

உடல்
உழைப்பின்மைதான் ஆண்மைக் குறைவுக்கான பாதிப்பில் முதலிடத்தில் இருக்கிறது.
மனித உடலே உழைப்பதற்காகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது. உழைத்தால்தான் உடல்
சீராக இயங்கும். உடல் சீராக இயங்கினால்தான் உடல் முழுக்க ரத்த ஓட்டம்
சீர்படும். உச்சி முதல் பாதம் வரை ஆக்டிவ் ஆக இருக்கும். உடல் உழைப்பு
இல்லாவிட்டால் உடல் நோய்களின் கூடாரம் ஆகிவிடும்.
மனித
இனம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆனாலும், அதில் பெரும்பாலான காலங்கள் மனித
இனம் பட்டினிக்கு உள்ளாகியிருக்கிறது. பட்டினிச் சாவை குறைக்க இயற்கை
தரும் வாய்ப்பாக
இருந்தது கொழுப்பு. மனிதன் நன்றாக சாப்பிடும்போது அதில் உள்ள அதிகப்படியான
கொழுப்பு தோலுக்கு அடியில், வயிறு, தொடைப் பகுதிகளில் படிந்திருக்கும்.
பட்டினிக்காலங்களில்
அது கரைந்து, ஒரு சில நாட்களுக்கு உடலை பாதுகாக்கும். ஆனால் கடந்த ஐம்பது
ஆண்டுகளில் இந்தியாவில் பட்டினிச் சாவு குறைந்துகொண்டே வருகிறது. இப்போது
பட்டினிச் சாவே இல்லை என்ற நிலையை
அடைந்திருக்கிறோம். அதனால் உடலுக்கான கொழுப்பின் தேவை குறைந்துவிட்டது.
அதை
புரிந்துகொள்ளாமல் மனிதர்கள் அதிக அளவு கொழுப்பு நிறைந்த உணவுகளை
சாப்பிட்டு, உடல் இயக்கத்தை சீர்குலைக்கிறார்கள். ஆண்களுக்கு உடல் உழைப்பு
குறைவதற்கு முக்கிய காரணமாக இருப்பது, அவர்கள் பார்க்கும் வேலை. எல்லோரும்
உட்கார்ந்து பார்க்கும் சொகுசான வேலையைத்தான்
விரும்புகிறார்கள். சொகுசாக
பயணிக்கிறார்கள்.

நடை பயிற்சியோ, உடற் பயிற்சியோ செய்வதில்லை. அதனால் அவர்கள்
உடல் இயக்கம் சீரற்று போகிறது. உடல் ஆரோக்கியத்திற்காக சாப்பிடுதல் என்ற
நிலை மாறி, சுவைக்காக சாப்பிடுகிறோம். வறுத்த, பொரித்த உணவுகளை வகைவகையாக
உண்ணுகிறோம்.
அதனால் உடலுக்குள்
எண்ணெ அதிகமாக செல்கிறது. உடல் உழைப்பு இல்லாத இன்றைய
மனிதர்களுக்கு எண்ணெய் சத்தே தேவையில்லை. எந்த எண்ணெய், என்ன பெயரில்
அழைக்கப்பட்டாலும் அதில் கொழுப்பு சத்துதான் இருக்கிறது. ஏற்கனவே இருக்கும்
கொழுப்பை குறைக்க முடியாத நிலையில் மென்மேலும் எண்ணெயை பயன்படுத்தி
கொழுப்பைச் சேர்க்கிறார்கள்.
இதனால்
ரத்த நாளங்களில் கொழுப்பு படிகிறது. இதயம் ரத்த நாளங்களால்
சூழப்பட்டிருப்பதைப் போல், ஆண் உறுப்பும்
ரத்த நாளங்களாலே இயங்குகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு படியும்போது,
முதலில் ஆண்மைக் குறைவு ஏற்படும். உறுப்பு எழுச்சி குறையும். திருப்தியாக
செக்ஸ் வைத்துக்கொள்ள முடியாது.
விஞ்ஞான முன்னேற்றம்
மனிதனை சோம்பேறியாக்கி விட்டது என்றுகூட சொல்லலாம். ஆண்மைக் குறைவால்
பாதிக்கப்பட்டவர்களில் 100 பேரை வகைப்படுத்தி ஆராய்ந்தபோது அவர்கள்..
o உடல் உழைப்பு இல்லாமையால்- 31 சதவீதம் பேர் ஆண்மைக்குறைவுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

o மனஉளைச்சல் மற்றும் வேலை தரும் அழுத்தத்தால்- 28 சதவீதம் பேர் இந்த பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
o முரண்பாடான வாழ்க்கை முறையால் ஆண்மைக் குறைவுக்கு உள்ளானவர்கள்- 14 சதவீதம்.
o தவறான உணவுப் பழக்கத்தால் 12 சதவீதம் பேருக்கு
ஆண்மைக்குறைவு ஏற்பட்டுள்ளது.
o அதிக அளவில் மது அருந்துவதால் 8 சதவீதம் பேருக்கு ஆண்மைக் குறைவு உருவாகியுள்ளது.
o
இதர காரணங்களால் 7 சதவீதம் பேருக்கு ஆண்மைக்குறைபாடு தோன்றுவதாக
தெரியவந்துள்ளது. இந்த குறைபாட்டை கவனிக்காமலே விட்டுவிட்டால், அடுத்த
ஐந்தாண்டுகளில் இதய பாதிப்பு தொடங்கிவிடும். இதய பாதிப்பு என்கிற யானை
வரும் முன்பே, அதை
உணர்த்துகின்ற மணியோசையாக ஆண்மைக்குறைவு தோன்றுகிறது.
மன
உளைச்சல் மக்களை மிக அதிக அளவில் தாக்கிக்கொண்டிருக்கிறது. கடந்த சில
ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியர்களில் 2 சதவீதம் பேர் மன உளைச்சலுடன்
இருப்பதாக குறிப்பிட்ட ஆய்வறிக்கைகள் தற்போது அது நான்கு சதவீதமாக
உயர்ந்திருப்பதாக குறிப்பிடுகிறது.
மூளைக்கும்,
உடலின் குறிப்பிட்ட
உறுப்புகளுக்கு மட்டும் அதிக வேலை கொடுப்பது, அத்தகைய வேலைகளை ஓய்வின்றி
பார்ப்பது, நேரத்துக்கு தூங்குவதை தவிர்ப்பது, குறிப்பிட்ட இலக்கை அடைய கடுமையான
போட்டி மனப்பான்மையுடன் செயல்படுவது, நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று
தேவையற்ற பிரச்சினைகளில் சிக்குவது போன்றவைகளெல்லாம் மனஉளைச்சலுக்கான அடையாளங்கள்.
திருமணமான
ஆண்கள் மனைவியிடம் நல்லுறவை
பேண முடியாமல் குழம்புவதும் மன உளைச்சலுக்கான முக்கியமாக காரணமாகிறது.
2020-ம் ஆண்டில் உலகிலே மன அழுத்ததம்தான் பெரிய நோயாக இருக்கும் என்று
எச்சரிக்கிறது இன்னொரு புள்ளிவிபரம்.
வாழ்வியல்
சிக்கல்களால் ஆண்மைக் குறைவு அதிகரித்துவருவதால், அதை தீர்க்க மருத்துவ
உலகம் புதிய புதிய வழிமுறைகளை கையாண்டு வருகிறது. 1970-களில் செக்ஸ்
தெரபியும், 1980-களில்
உறுப்பில் ஊசி மருந்து செலுத்தும் முறையும், ஆபரேஷன் இணைப்பு மூலம்
மேம்படுத்தும் முறையும் உருவாகின.
இதில்
புரட்சிகரமான மாற்றம் வயாகரா வடிவில் வந்தது. 1990-ல் உருவாக்கப்பட்ட அது,
1998-ல் முழுமையான பயன்பாட்டிற்கு வந்தது. இதய நோய் மாத்திரையான அது,
பின்பு உறவின் எழுச்சிக்கான மருந்தாக உலகம் முழுக்க வரவேற்பை பெற்றது.
ஆயினும் அந்த நேரத்திற்கு அது
எழுச்சியாக இருந்தாலும், ஒவ்வொரு நேரமும் அது தேவை என்ற நிலை ஏற்படுகிறது.
அந்த
நிலையை மாற்ற கதிர்களை பாய்ச்சி ரத்த நாளங்களை சீர்படுத்தி, வளப்படுத்தும்
சிகிச்சை தற்போது உள்ளது. ஆண்மைக் குறைவை போக்க சிகிச்சைகள் இருந்தாலும்
வாழ்க்கை முறை மாற்றங்களால் உடலை வளப்படுத்தவும், மனதை அமைதிப்படுத்தவும்
ஆண்கள் முன்வர வேண்டும். முறையாக தினமும்
உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
தினமும் குறைந்தது பத்தாயிரம் அடியாவது நடக்க வேண்டும்.
கொழுப்பு
சத்து நிறைந்த உணவுகளை தவிர்த்து, காய்கறி, பழங்களை உணவில் அதிகம் சேர்க்க
வேண்டும். யோகா, தியானம் போன்றவைகளை செய்து மனஅமைதியுடன் வாழ வேண்டும்.
ஆரோக்கியமும், மன அமைதியும் ஆண்மைக் குறைவை தவிர்க்கும்.
நன்றி: பிரபல
செக்ஸாலஜிஸ்ட் - டாக்டர் டி. காமராஜ், சென்னை

--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
nazimudeen
nazimudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 0

http://pnonazim.blogspot.com

Back to top Go down

ஆண்மைக் குறைவு: ஓர் அதிர்ச்சி சர்வே!  Empty Re: ஆண்மைக் குறைவு: ஓர் அதிர்ச்சி சர்வே!

Post by *சம்ஸ் Fri 18 Nov 2011 - 20:54

சத்து நிறைந்த உணவுகளை தவிர்த்து, காய்கறி, பழங்களை உணவில் அதிகம் சேர்க்க
வேண்டும். யோகா, தியானம் போன்றவைகளை செய்து மனஅமைதியுடன் வாழ வேண்டும்.
ஆரோக்கியமும், மன அமைதியும் ஆண்மைக் குறைவை தவிர்க்கும்.

நன்றி அருமையான பகிர்விற்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum