Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
ஐக்கியத்துடனும் பலத்துடனும் ஐ.தே.க அரசாங்கத்தை எதிர்கொள்ள வேண்டும்
Page 1 of 1
ஐக்கியத்துடனும் பலத்துடனும் ஐ.தே.க அரசாங்கத்தை எதிர்கொள்ள வேண்டும்
ஐக்கியத்துடனும் முழுமையான பலத்துடனும் அரசாங்கத்தை எதிர் கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாராளுமன்றத்தில் அறை கூவல் விடுத்தார்.
வரவு செலவுத் திட்ட வாசிப்பின் போது அக்கட்சி நடந்து கொண்ட விதம் குறித்து வருத்தம் தெரிவித்த ஜனாதிபதி; வரவு செலவுத் திட்டம் சாத்தியமற்றது எனக் கண்டால் அதனைத் தோற்கடிக்க செயற்பட்டிருக்க வேண்டுமே தவிர வரவு செலவுத் திட்ட வாசிப்பைக் குழப்ப முயற்சித்திருக்கக் கூடாது எனவும் அவர் சபையில் தெரிவித்தார்.
அரச வளங்களை விற்று வரவு செலவுத் திட்ட குறைநிரப்பினை பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் நோக்கமல்ல என தெரிவித்த ஜனாதிபதி, மஹிந்த சிந்தனை கொள்கை திட்டத்தின் எதிர்பார்ப்பும் அதுவல்ல எனத் தெரிவித்தார்.
நாட்டில் 65 வீத மக்கள் ஏற்றுக் கொண்டுள்ள வரவு செலவுத் திட்டத்தையே இம்முறை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வெளிநாடுகளிலிருந்து வரும் தீர்வுகள் இலங்கைக்குப் பொறுத்தமானதல்ல என்பதை தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவோர் ஏனோ புரிந்து கொள்கின்றார்களில்லை எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். வரவு செலவுத் திட்டத்தின் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் நிதியமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்றத்துக்கு வருகை தந்து குழுநிலை விவாதத்தின் பதிலுரையை நிகழ்த்தினார்.
ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது :-
2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நாட்டு மக்களின் மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த வரவு - செலவுத்திட்டத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த தினத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஜனநாயக தேசிய முன்னணி ஆகிய கட்சியினர் அதற்கு ஆதரவு வழங்கியதோடு பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினர் அதனை எதிர்த்து குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்தனர். வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க இடமளிக்கக் கூடாது என்ற நோக்கத்தில் மிக மோசமாக அவர்கள் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த வரவு செலவுத் திட்டம் சாத்தியமற்றது நாட்டுக்குப் பொருத்தமற்றது என அவர்கள் கருதியிருந்தால் குழப்பம் விளைவிப்பதை விடுத்து அதனைத் தோற்கடிக்கும் நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டிருக்க வேண்டும். அதனை விடுத்து அவர்கள் சபையில் நடந்துகொண்ட விதம் பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கு உகந்ததல்ல என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த வரவு - செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் போது எதிர்க் கட்சியினால் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ‘தெயட கிருள’ தேசத்துக்கு மகுடம் கண்காட்சிக்கான செலவு, ‘லங்கா புத்ர’ வங்கி, ஊழியர் சேமலாப நிதி ஆகியன உள்ளிட்ட சில விடயங்கள் அவர்களின் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.
அவர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சகல விபரங்களுடனான பதில் எதிர்வரும் ஜனவரியில் வழங்கப்படும். தனிப்பட்ட விதத்தில் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதனை அனுப்புவதற்கு ஜனாதிபதி செயலகத்தைப் பணித்துள்ளேன்.
எமது நாட்டிலுள்ள சகல மக்களின் வாழ்க்கை மேம்பாடு, அபிவிருத்தியை இலக்காகக் கொண்டே இம்முறை வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டது. அதனால் அபிவிருத்தித் மட்டும் 500 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாத்தின் போது எதிர்க் கட்சியில் பேச்சாளர்கள் இல்லாததால் பல நாட்கள் சபை அமர்வுகளை அடுத்த நாளுக்கு ஒத்திவைக்கப்பட்ட சந்தர்ப்பங்களையும் நான் இங்கு குறிப்பிட வேண்டும்.
2005 ஆம் ஆண்டிற்குப் பின்னர் நாட்டில் பாரிய அபிவிருத்தி இடம்பெறுவதை தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட எதிர்க் கட்சிகள் பல ஏற்றுக்கொண்டுள்ளன.
எம்மிடமிருந்து மீள ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சென்றுள்ள அமைச்சரே இதுபோன்ற அபிவிருத்தியை மேற்கொண்ட அரசு இதற்கு முன்பு இருந்ததில்லை என தெரிவித்ததை நான் நினைவு கூர வேண்டும்
இந்த வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, ஓய்வூதியம், உள்ளூர் உற்பத்தி, விவசாயம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இராணுவ முகாம்கள் அமைந்திருப்பது குறித்து சபையில் சிலர் கருத்துக்களை விவாதங்களின் போது தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு மாவட்டங்கள் தோறும் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தமை புதிய விடயமல்ல. அதற்கிணங்கவே அரசாங்கம் இராணுவ முகாம்கள் +(திrஜி{மியி. தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இதனை ஒருபோதும் அகற்றப்போவதில்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்ட வாசிப்பின் போது அக்கட்சி நடந்து கொண்ட விதம் குறித்து வருத்தம் தெரிவித்த ஜனாதிபதி; வரவு செலவுத் திட்டம் சாத்தியமற்றது எனக் கண்டால் அதனைத் தோற்கடிக்க செயற்பட்டிருக்க வேண்டுமே தவிர வரவு செலவுத் திட்ட வாசிப்பைக் குழப்ப முயற்சித்திருக்கக் கூடாது எனவும் அவர் சபையில் தெரிவித்தார்.
அரச வளங்களை விற்று வரவு செலவுத் திட்ட குறைநிரப்பினை பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் நோக்கமல்ல என தெரிவித்த ஜனாதிபதி, மஹிந்த சிந்தனை கொள்கை திட்டத்தின் எதிர்பார்ப்பும் அதுவல்ல எனத் தெரிவித்தார்.
நாட்டில் 65 வீத மக்கள் ஏற்றுக் கொண்டுள்ள வரவு செலவுத் திட்டத்தையே இம்முறை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வெளிநாடுகளிலிருந்து வரும் தீர்வுகள் இலங்கைக்குப் பொறுத்தமானதல்ல என்பதை தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவோர் ஏனோ புரிந்து கொள்கின்றார்களில்லை எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். வரவு செலவுத் திட்டத்தின் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் நிதியமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்றத்துக்கு வருகை தந்து குழுநிலை விவாதத்தின் பதிலுரையை நிகழ்த்தினார்.
ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது :-
2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நாட்டு மக்களின் மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த வரவு - செலவுத்திட்டத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த தினத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஜனநாயக தேசிய முன்னணி ஆகிய கட்சியினர் அதற்கு ஆதரவு வழங்கியதோடு பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினர் அதனை எதிர்த்து குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்தனர். வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க இடமளிக்கக் கூடாது என்ற நோக்கத்தில் மிக மோசமாக அவர்கள் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த வரவு செலவுத் திட்டம் சாத்தியமற்றது நாட்டுக்குப் பொருத்தமற்றது என அவர்கள் கருதியிருந்தால் குழப்பம் விளைவிப்பதை விடுத்து அதனைத் தோற்கடிக்கும் நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டிருக்க வேண்டும். அதனை விடுத்து அவர்கள் சபையில் நடந்துகொண்ட விதம் பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கு உகந்ததல்ல என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த வரவு - செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் போது எதிர்க் கட்சியினால் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ‘தெயட கிருள’ தேசத்துக்கு மகுடம் கண்காட்சிக்கான செலவு, ‘லங்கா புத்ர’ வங்கி, ஊழியர் சேமலாப நிதி ஆகியன உள்ளிட்ட சில விடயங்கள் அவர்களின் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.
அவர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சகல விபரங்களுடனான பதில் எதிர்வரும் ஜனவரியில் வழங்கப்படும். தனிப்பட்ட விதத்தில் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதனை அனுப்புவதற்கு ஜனாதிபதி செயலகத்தைப் பணித்துள்ளேன்.
எமது நாட்டிலுள்ள சகல மக்களின் வாழ்க்கை மேம்பாடு, அபிவிருத்தியை இலக்காகக் கொண்டே இம்முறை வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டது. அதனால் அபிவிருத்தித் மட்டும் 500 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாத்தின் போது எதிர்க் கட்சியில் பேச்சாளர்கள் இல்லாததால் பல நாட்கள் சபை அமர்வுகளை அடுத்த நாளுக்கு ஒத்திவைக்கப்பட்ட சந்தர்ப்பங்களையும் நான் இங்கு குறிப்பிட வேண்டும்.
2005 ஆம் ஆண்டிற்குப் பின்னர் நாட்டில் பாரிய அபிவிருத்தி இடம்பெறுவதை தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட எதிர்க் கட்சிகள் பல ஏற்றுக்கொண்டுள்ளன.
எம்மிடமிருந்து மீள ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சென்றுள்ள அமைச்சரே இதுபோன்ற அபிவிருத்தியை மேற்கொண்ட அரசு இதற்கு முன்பு இருந்ததில்லை என தெரிவித்ததை நான் நினைவு கூர வேண்டும்
இந்த வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, ஓய்வூதியம், உள்ளூர் உற்பத்தி, விவசாயம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இராணுவ முகாம்கள் அமைந்திருப்பது குறித்து சபையில் சிலர் கருத்துக்களை விவாதங்களின் போது தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு மாவட்டங்கள் தோறும் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தமை புதிய விடயமல்ல. அதற்கிணங்கவே அரசாங்கம் இராணுவ முகாம்கள் +(திrஜி{மியி. தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இதனை ஒருபோதும் அகற்றப்போவதில்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
Similar topics
» அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ள ஊடகங்கள் மூலம் பொய்ப் பிரசாரம்
» பலவீனமான சமூகத்தை பாதுகாக்க முடியாத அரசாங்கத்தை பலமானதெனக் கூறமுடியாது: ஹக்கீம்
» தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொள்ள...
» கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மன அழுத்தங்களை எதிர்கொள்ள அறிவுரைகள்!!!
» விழி அம்புகளை எதிர்கொள்ள முடியவில்லை..!
» பலவீனமான சமூகத்தை பாதுகாக்க முடியாத அரசாங்கத்தை பலமானதெனக் கூறமுடியாது: ஹக்கீம்
» தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொள்ள...
» கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மன அழுத்தங்களை எதிர்கொள்ள அறிவுரைகள்!!!
» விழி அம்புகளை எதிர்கொள்ள முடியவில்லை..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|