by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
ஈஸியாக செய்யக்கூடிய 7 விதமான இட்லிகள்!!!
ஈஸியாக செய்யக்கூடிய 7 விதமான இட்லிகள்!!!
பச்சை பட்டாணி இட்லி
காலை வேளையில் அலுவலகத்திற்கு செல்லும் நேரத்தில், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையிலும், சற்று வித்தியாசமானதாகவும் சமைக்க வேண்டுமென்று நினைத்தால், அப்போது வீட்டில் பச்சை பட்டாணி, ரவை மற்றும் வெந்தயக்கீரை இருந்தால், எளிதில் சூப்பராக வித்தியாசமான சுவையில் ஒரு இட்லி செய்யலாம்.
இந்த இட்லி வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, குழந்தைகளுக்கு பிடித்தவாறும் இருக்கும். இப்போது அந்த பச்சை பட்டாணி இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
ரவை - 2 கப் (வறுத்தது)
பச்சை பட்டாணி - 3/4 கப் (வறுத்து, லேசாக அரைத்தது)
வெந்தயக்கீரை - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
தயிர் - 2 டீஸ்பூன்
ஓட்ஸ் - 2 டீஸ்பூன்
இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ரவை, தயிர், வெந்தயக்கீரை, பட்டாணி, ஓட்ஸ், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு இட்லி மாவு பதத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீரை ஊற்றி, கொதிக்க வைத்து, இட்லி தட்டில் இட்லிகளாக ஊற்றி, பாத்திரத்தில் வைத்து மூடி வைக்க வேண்டும்.
பிறகு 10 நிமிடம் கழித்து, இட்லிப் பாத்திரத்தை திறந்து இட்லிகளை எடுக்க வேண்டும்.
இப்போது வித்தியாசமான பச்சை பட்டாணி இட்லி ரெடி!!! இதனை புதினா சட்னியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
http://tamil.boldsky.com/recipes/veg/delicious-green-peas-idli-002638.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஈஸியாக செய்யக்கூடிய 7 விதமான இட்லிகள்!!!
எப்போதும் அரிசி, உளுந்தை அரைத்து தான் இட்லிகளாக செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் அந்த அரிசி, உளுந்து இல்லாமல், ரவையை வைத்தே எளிதில் காலையில் இட்லிகளை செய்யலாம். மேலும் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். அதிலும் இதை காலையில் குழந்தைகளுக்கு செய்து பள்ளிக்கு கொடுத்து அனுப்பினால், மதிய வேளையில் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இப்போது அந்த ரவை இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
தயிர் - 1 கப் (சற்று புளித்தது)
தேங்காய் - 2 டீஸ்பூன் (துருவியது)
கொத்தமல்லி - சிறிது
சோடா மாவு - 1 சிட்டிகை
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி, காய வைத்து, ரவையை போட்டு வறுத்து, தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு சூடாறியதும், தயிர், தேங்காய் துருவல், கொத்தமல்லி, உப்பு மற்றும் சோடா மாவு சேர்த்து, கலந்து வைத்துக் கொள்ளவும்.
பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அந்த ரவை கலவையோடு சேர்த்து, வேண்டுமென்றால் சிறிது தண்ணீர் ஊற்றி, இட்லி பதத்திற்கு கரைத்து, ஒரு 10-15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இட்லிப் பாத்திரத்தில் அந்த மாவை இட்லிகளாக ஊற்றி, வேக வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான ரவை இட்லி ரெடி!!! இதனை சட்னி, சாம்பாருடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
http://tamil.boldsky.com/recipes/veg/rava-idli-002116.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஈஸியாக செய்யக்கூடிய 7 விதமான இட்லிகள்!!!
அரிசி, உளுந்து சேர்த்து செய்யும் இட்லி பெரும்பாலான வீடுகளில் செய்வதுதான். ஆனால் பரும்பும், காய்கறிகளும் சேர்த்து ஊட்டச்சத்து மிக்க இட்லி செய்யலாம். சத்தோடு சுவையும் சூப்பராக இருக்கும்.
தேவையானப்பொருட்கள்:
பாசிப் பருப்பு - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
ரவை - 1 கப்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 3 அல்லது 4
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
கேரட் – 1
வேகவைத்த பச்சை பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
இட்லி செய்முறை
பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் 4 அல்லது 5 மணி நேரம் ஊறவைக்கவும். பருப்பு ஊறியவுடன், தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் பச்சைமிளகாய், இஞ்சி, பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும் காரட்டை பொடியாக துருவிக்கொள்ளவும், ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவுடன் ரவை, துருவிய காரட், வேகவைத்த பட்டாணி ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு, உப்பையும் சேர்த்துக் கலக்கவும். இதோடு சிறிது தயிர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும். இட்லி தட்டில் சிறிது நெய்யைத் தடவி, அதில் இட்லி மாவை விட்டு, பத்து நிமிடங்கள் இட்லி பானையில் வைத்து வேக விடவும். கலர் கலராய், சத்துள்ள இட்லி தயார்.
இந்த மாவில் காளான் மற்றும் முந்திரியையும் சேர்க்கலாம். சிறிது சோடா உப்பைச் சேர்த்தால் இட்லி மிருதுவாக இருக்கும். குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவு
http://tamil.boldsky.com/recipes/veg/vegetable-dall-idly-001093.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஈஸியாக செய்யக்கூடிய 7 விதமான இட்லிகள்!!!
இட்லி உடலுக்கு மிகவும் நல்லது. அத்தகைய இட்லியை இதுவரை சட்னியுடன் தான் தொட்டு சாப்பிட்டிருப்போம். ஆனால் அவற்றை இப்போது சற்று வித்தியாசமாக தக்காளி மையமாக வைத்து, தக்காளி இட்லி செய்து சாப்பிடலாம். இதை இட்லி பிடிக்காத குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது அந்த இட்லியை எவ்வாறு செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு - 2 கப்
பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
அரைக்க:
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 3 பல்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் இட்லிப் பாத்திரத்தில் இட்லி மாவை ஊற்றி வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வேக வைத்துள்ள இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் மிக்ஸியில் அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்களைப் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் உப்பை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு அரைத்து வைத்திருக்கும் கலவை மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்பு நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கி, இட்லி மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கிளறி இறக்கவும்.
இப்போது சுவையான தக்காளி இட்லி ரெடி!!! இதனை எந்த ஒரு சைடு டிஷ் இல்லாமல், அப்படியே சாப்பிடலாம்.
http://tamil.boldsky.com/recipes/veg/tomato-idli-002077.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஈஸியாக செய்யக்கூடிய 7 விதமான இட்லிகள்!!!
இட்லியில் எத்தனையோ வகைகள் இருக்கின்றன. அதில் ஃப்ரைடு இட்லி மிகவும் ருசியானது. இதற்கு எந்த ஒரு சட்னியோ அல்லது சாம்பாரோ தேவையில்லை. அதிலும் இதனை காலை வேளையில் குழந்தைகளுக்கு பள்ளிகளுக்கு கொடுத்தனுப்ப ஏற்ற ஒரு டிஷ். இப்போது அந்த ஃப்ரைடு இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு - 2 கப்
இட்லிப் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் இட்லி மாவைக் கொண்டு, சிறு சிறு இட்லிகளாக ஊற்றி, வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து கறிவேப்பிலையை போட்டு, சிறிது உப்பை தூவி, பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு ஊற்றி வைத்துள்ள சிறு சிறு இட்லிகளை, அத்துடன் சேர்த்து, இட்லிப் பொடி, எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
இப்போது அருமையான ஃப்ரைடு இட்லி ரெடி!!! இதனை அப்படியே சாப்பிடலாம்.
http://tamil.boldsky.com/recipes/non-veg/delicious-fried-idli-002383.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஈஸியாக செய்யக்கூடிய 7 விதமான இட்லிகள்!!!
காலையில் சீக்கிரமாக சமைக்க வேண்டும், அதுவும் குழந்தைகள் இட்லி வேண்டுமென்று கேட்டால், அப்போது வீட்டில் இருக்கும் ரவை மற்றும் சேமியாவை வைத்து சூப்பராக 20 நிமிடத்தில் இட்லி செய்து தரலாம். இப்போது அந்த ரவை சேமியா இட்லிவயை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
சேமியா - 1/4 கப்
சற்று புளித்த தயிர் - 1 கப்
தேங்காய் - 2 டீஸ்பூன் (துருவியது)
கொத்தமல்லி - 1 டீஸ்பூன் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
இஞ்சி - சிறிது (நறுக்கியது)
நெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சேமியா மற்றும் ரவையை வறுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், மிளகு தூள், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு வதக்கி, வறுத்து வைத்துள்ள ரவை மற்றும் சேமியாவுடன் சேர்க்க வேண்டும்.
பிறகு அதோடு தயிர், தேங்காய் துருவல், கொத்தமல்லி, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை இட்லிகளாக ஊற்றி எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான ரவை சேமியா இட்லி ரெடி!!! இதனை தேங்காய சட்னியுடனோ அல்லது அப்படியே வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
http://tamil.boldsky.com/recipes/veg/rava-semiya-idli-002235.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஈஸியாக செய்யக்கூடிய 7 விதமான இட்லிகள்!!!
இட்லிகளை அளவுக்கு அதிகமாக சுட்டுவிட்டால், மீதமுள்ளவற்றை தூக்கிப் போடாமல், அதனை வைத்து இதுவரை உப்புமா தான் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் இப்போது அவற்றை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் மஞ்சூரியன் போன்று செய்து கொடுக்கலாம். அந்த இட்லி மஞ்சூரியனை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
இட்லி - 10
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கார்ன்ஃப்ளார் - 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் இட்லியை வேண்டிய வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும். பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதோடு கடலை மாவு, இஞ்சி பூண்டு விழுது, கார்ன்ஃப்ளார், கரம் மசாலா தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், கேசரி பவுடர் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கிளறிக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் இட்லித் துண்டுகளை சிறிது சிறிதாக போட்டு பொரித்தெடுக்கவும்.
இப்போது சுவையான இட்லி மஞ்சூரியன் ரெடி!!!
குறிப்பு: எண்ணெய் நன்கு காய்ந்த பின்னரே, இட்லிகளை போட்டு பொரிக்க வேண்டும். இல்லையென்றால், எண்ணெயை இட்லி குடித்துவிடும். பின் அதை சாப்பிடவே முடியாத அளவில் ஆகிவிடும்.
http://tamil.boldsky.com/recipes/veg/idli-manchurian-002158.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
» காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!!
» தேங்காய் கொண்டு செய்யக்கூடிய சில சூப்பரான ரெசிபிக்கள்!!!
» யூடியூப்பில் நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடிய கமெரா.
» சனி தோஷம் தீர வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய பரிகாரங்கள்
|
|