சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Khan11

அதிசயமான அருமையான கட்டுரைகள்

4 posters

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 7:07

First topic message reminder :

சொந்த, பந்தங்களை மறந்து துறவிகளாக வாழும் சந்நியாசிகளுக்கு சொந்த வீடு என்று எதுவும் இல்லாததைப் போல மன்னார் வளைகுடா கடலில் மிக அதிகமாக வாழும் இந்த அரியவகை உயிரினமும் சொந்தவீடு இல்லாமல் சங்குகளின் கூடுகளுக்குள் தங்கி உயிர் வாழ்கின்றன இவ்வகை நண்டுகளை சந்நியாசி நண்டுகள் என்று அழைக்கிறார்கள்.
அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Sannyasi-300x186
இவை எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் விதம் மற்றும் இதன் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது..
“”பாகுராய்டே என்ற விலங்கியல் பெயருடைய இச்சிற்றினங்களில் மொத்தம் 1100 வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிக்காமல் பிறப்பிலிருந்து இறப்பு வரை தன் வளர்ச்சிக்கேற்றவாறு, இறந்து வெறும் கூடுகளாக மட்டுமே இருக்கக் கூடிய சங்குகளின் ஓடுகளுக்குள் தன் உடலை நுழைத்துக்கொண்டு தலையை மட்டும் வெளியில் நீட்டியவாறு இருக்கும். எதிரிகள் வருவது தெரிந்தால் தலையை உள்ளிழுத்துக் கொள்ளும். தன் உருவத்துக்கேற்றவாறு சங்குகளின் ஓடுகள் அமையாதபோது எதிரிகளிடம் மாட்டிக் கொள்கின்றன.
புத்திசாலியாக இருக்கும் சில சந்நியாசி நண்டுகளோ சின்னஞ்சிறு கடல் தாமரைகளை சங்கு ஓடுகளின் மேற்புறத்தில் ஒட்டி வைத்துக் கொள்ளும். எதிரிகள் இந்த நண்டுகளைப் பிடிக்க வரும்போது கடல் தாமரைகள் ஆடுவதைப் பார்த்து பயந்தோடிவிடும். சந்நியாசி நண்டுகள் சாப்பிட்டுவிட்ட போட்ட புழுக்கள், பூச்சிகளின் மிச்சத்தை கடல் தாமரைகள் சாப்பிட்டுக் கொள்கின்றன. நண்டின் மேற்புற ஓடுகளில் ஓட்டிக் கொண்டு அதற்கு பாதுகாப்பாகவும் கடல் தாமரைகள் இருக்கின்றன. இப்படியாக இரண்டும் ஒன்றுக்கொன்று உதவி செய்து கொண்டு கடலுக்குள் உயிர் வாழ்கின்றன.
இந்நண்டுகளின் உடலானது நீண்டு வளைந்த வயிற்றுப்பாகத்தையும் அதன் அடியில் கொக்கி போன்ற உடலமைப்பையும் உடையது. இந்தக் கொக்கியே சங்கின் கூடுகளை நன்றாக பற்றிக் கொள்ள பெரிதும் உதவுகிறது. நீண்டதும், வளைந்ததுமான வயிறானது சங்கின் ஓடான கூடுகளுக்குள் இருக்கும் வளைவுகளுக்குள் உருண்டு, திரண்டு இருக்கும்.பொதுவாக சந்நியாசிகள் தங்கள் இருப்பிடங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பதைப் போலவே இந்த நண்டும் அவை வாழும் வீட்டை(சங்கின் கூடுகளை) மாற்றிக் கொண்டே இருப்பதால் இதற்கு துறவி நண்டு என்றும் சந்நியாசி நண்டுகள் என்றும் அழைக்கிறார்கள்.
புண்ணிய ஸ்தலங்களில் கடலில் நீராடிக் கொண்டிருக்கும்போது கடற்கரையோரங்களில் இவ்வகை நண்டுகளைச் சாதாரணமாகப் பார்க்க முடியும். கடலுக்கு அடியில் கூட்டம், கூட்டமாக ஒன்று சேர்ந்தும் வாழும் இவை தங்களுக்குள் ஒரு குழுவையும் ஏற்படுத்திக் கொள்கின்றன.
இக்குழுவில் பல்வேறு வயதிலும் உருவத்திலுமான நண்டுகளும் இடம் பெற்றிருப்பதால் இவை தங்களுக்குள் ஒரு வரிசையை ஏற்படுத்திக் கொண்டு ஒவ்வொன்றும் அதனது உடல் உருவத்திற்கேற்றவாறு சங்கின் கூடுகளை மாற்றிக் கொள்கின்றன. அதாவது சிறிய நண்டு ஓரளவு வளர்ந்த பிறகு தன் வளர்ச்சிக்கு தக்கவாறு பெரிய சங்கின் கூட்டிற்குள் போய் நுழைந்து கொள்ளும்.
ஒற்றுமை இல்லாத கூட்டமாக இருந்தால் சில நேரங்களின் வெற்று சங்குகளின் கூடுகளுக்காக சண்டை நடந்து அதில் வெற்றி பெறும் நண்டு அந்த சங்கின் கூட்டை தன் சொந்த வீடாக ஆக்கிக் கொள்ளும். கரிபியின் துறவி நண்டு, இக்குடேரியன் துறவி நண்டு, ஆஸ்திரேலியன் துறவி நண்டு போன்றவற்றை மேலைநாடுகளில் வீடுகளில் வைத்து பராமரித்தும் பாதுகாத்தும் வருகின்றனர்.
இவ்வகை நண்டுகள் 32 ஆண்டுகள் வரையும் உயிர்வாழ்வதாகவும் தெரிய வந்துள்ளது. நீண்ட கொம்புகளும் நீண்டு வளர்ந்த வயிறும் உடைய இந்த உயிரினத்தின் கண்களில் ஆயிரக்கணக்கான லென்சுகள் இருந்தாலும் நிரந்தர வீடில்லாமல் சங்கின் கூடுகளை சார்ந்து வாழும் வித்தியாசமான உயிரினமாக இது இருக்கிறது” என்றார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 25 Dec 2015 - 17:47

சிந்திப்பது இதயமா? மூளையா?
------------
குர்ஆன், இரட்டை வேடம் போடுபவர்களைக் குறிப்பிடும் போது, அவர்கள் செவியிருந்தும் கேளாதவர்கள்; பார்வை இருந்தும் குருடர்கள்; இதயம் இருந்தும் சிந்திக்க மாட்டார்கள்' என்று ஓர் இடத்திலும் (இந்த) குர்ஆனை அவர்கள் ஆராய்ந்து பார்க்க மாட்டார்களா? அல்லது (அவர்களுடைய) இதயங்களின் மீது பூட்டுகள் (போடப்பட்டு) இருக்கின்றனவா?' (47:24) என்று ஓர் இடத்திலும் கூறுகின்றது. இந்த வசனங்களை மாற்று மதத்தவர்கள் படிக்கும் போது, சிந்திப்பது மூளை தானே? அல்லாஹ் இதயத்தைக் குறிப்பிடுகிறானே? இதயத்தின் வேலை சிந்திப்பது இல்லையே? என்று கேட்கிறார்கள். எனவே, இதற்குச் சரியான விளக்கத்தைக் கூறவும்.

- எஸ்.ஏ. இர்பான் பாஷா, தர்மபுரி.

மனிதர்களின் சிந்தனை எங்கே நிகழ்கிறது என்பதில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை நிலவி வந்தது.

சிந்திப்பது, மகிழ்ச்சியடைவது, இரக்கம் காட்டுவது, பொறாமை கொள்வது உள்ளிட்ட எல்லாக் காரியங்களும் இதயத்தில் தான் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை ஒரு கால கட்டத்தில் இருந்தது. நாடு, மொழி அனைத்தையும் கடந்து உலகம் முழுவதும் இப்படித் தான் நம்பி வந்தது.

பின்னர், அறிவு சம்பந்தப்பட்டது மூளையிலும் ஆசை சம்பந்தப்பட்டது இதயத்திலும் நிகழ்வதாக ஒரு கருத்துக்கு உலகம் வந்தது. இன்றைய விஞ்ஞானிகள் வேறு முடிவுக்கு வந்து விட்டாலும் கூட இன்றைக்கும் சாதாரண மக்களின் கருத்து இதுவாகத் தான் உள்ளது.

ஒருவன் படிப்பில், சிந்தனையில் குறைவாக இருக்கும் போதும், குறைந்த மதிப்பெண் வாங்கும் போதும், மூளை இருக்கிறதா?என்று கேட்கிறோம்.

ஒருவன் கொடியவனாக, இரக்கமற்றவனாக, பேராசை பிடித்தவனாக இருந்தால் அவனுக்கு இதயம் உள்ளதா என்று கேட்கிறோம். சிந்திப்பது மூளையின் வேலை எனவும், கவலைப்படுவது போன்றவை இதயத்தின் வேலை எனவும் மக்கள் நினைப்பதை இதிருந்து அறியலாம். இடைப்பட்ட காலத்தில் உலக மக்களின் கருத்து இதுவாகத் தான் இருந்தது. அது தான் இன்று வரை சாதாரண மக்களிடம் நீடிக்கிறது.

இரத்தத்தை முழு உடலுக்கும் விநியோகம் செய்வது மட்டுமே இதயத்தின் பணி; இதைத் தவிர வேறு எந்தப் பணியும் அதற்கு இல்லை என்பதை இன்றைய விஞ்ஞான உலகம் கண்டறிந்துள்ளது.

சிந்திப்பது சம்பந்தமான விஷயங்களும், ஆசை சம்பந்தமான விஷயங்களும் மனித உடலின் முழு இயக்கமும் மூளையில் தான் தீர்மானிக்கப்படுகின்றன. சிந்திப்பதும், கவலைப்படுவதும், மகிழ்ச்சியடைவதும், பேராசைப்படுவதும், கோபப்படுவதும் மூளையின் வேலை தான். அனைத்து செயல்களையும் மூளை தான் தீர்மானிக்கிறது.

'இதயத்தில் உனக்கு இடம் இல்லை' என்பது போன்ற வார்த்தைகளை இன்றைய விஞ்ஞானம் கேலிசெய்கிறது. மூளை யில் உனக்கு இடமில்லை என்றுதான் கூற வேண்டும். ஒருவரை நேசிப்பதும், பகைப்பதும் கூட மூளையின் பணி தான்.

இனி நீங்கள் கேட்ட கேள்விக்கு வருவோம். சிந்தனை யைக் குறிப்பிடும் போது இதயம் எனக் கூறாமல் மூளை என்று குர்ஆன் கூறுவதாக வைத்துக் கொள்வோம். இன்றைய உலகத்தின் முடிவுடன் அது அற்புதமாகப் பொருந்திப் போகும்.

ஆனால், இதயத்தில் தான் சிந்தனை மற்றும் உணர்வுகள் உள்ளன என்ற கருத்து நிலை பெற்றிருந்த காலத்தில் இவ்வாறு கூறியிருந்தால் அன்றைய மக்கள் இதையே காரணமாகக் காட்டி குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். இதயத்தில் நடக்கிற காரியங்களை மூளையில் நடப்பதாக இறைவன் தவறாகக் கூறுவானா எனக் கேட்டு அன்றைய மக்கள் குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். அவர்கள் நிராகரித்திருந்தால் குர்ஆன் பாதுகாக்கப்பட்டு நம் காலம் வரை வந்து சேர்ந்திருக்காது.

குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டு இதயம் எனக் கூறினால் அவர்கள் நிராகரிக்க மாட்டார்கள். ஆனால், மூளை தான் சிந்திக்கிறது' என்று கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் வாழும் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள். இன்றைய அறிவியல் உலகம் அதை உண்மை என ஏற்காது. இதையே காரணம் காட்டி குர்ஆன் இறைவேதமாக இருக்க முடியாது என்று வாதிடும்!

எனவே, அந்த இடங்களில் மூளை என்றும் குறிப்பிட முடியாது. இதயம் என்றும் குறிப்பிட முடியாது. ஒன்றுமே குறிப்பிடாமலும் இருக்க முடியாது.

இப்போது என்ன செய்வது? எல்லாக் காலத்துக்கும் பொருந் தக்கூடிய வகையில் இதை எவ்வாறு கூறுவது? நாமாக இருந்தால் இப்படிக் குழம்புவோம். அனைத்தையும் அறிந்த இறைவனுக்கு இவ்வாறு குழப்பம் ஏதும் இல்லை. அவன் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் கூறவல்லவன்.
அரபு மொழியில் கல்ப்' என்ற சொல்லுக்கு மூளை என்ற பொருளும் உள்ளது. இதயம் என்ற பொருளும் உள்ளது.

அரபு இலக்கியங்களில் மூளையைக் குறிக்கவும், இதயத்தைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூளை தான் எல்லாக் காரியங்களையும் நிகழ்த்துகிறது என்பதைக் கண்டு பிடிக்கும் முன் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அரபு அகராதி நூல்களில் (லிஸானுல் அரப், முக்தாருஸ் ஸஹாஹ்) சிந்திக்கும் திறன், மூளை, இதயம் ஆகிய அர்த்தங்கள் இச்சொல்லுக்கு உள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டையும் குறிக்கக்கூடிய இந்தச் சொல்லை அல்லாஹ் தேர்ந்தெடுத்து பயன்படுத்தியிருக்கிறான். இதயத்தில் தான் இந்தக் காரியங்கள் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை நிலவிய காலத்தில் குர்ஆனுக்கு மொழி பெயர்ப்பு செய்தவர்கள் இச் சொல்லுக்கு இதயம் என்று மொழி பெயர்த்தார்கள். அவர்களும் திருக்குர்ஆன் உண்மையே கூறியது என்று கருதினார்கள்.

மூளை தான் எல்லாக் காரியத்தையும் செய்கிறது என்ற நம்பிக்கை நிலவுகின்ற இக்காலத்தில் அந்தச் சொல்லுக்கு மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். அப்பொருளும் அச்சொல்லுக்கு அகராதியில் உள்ள பொருள் தான்.

5:25, 7:179, 9:87, 9:93, 17:46, 18:57, 63:3 ஆகிய வசனங்களில் சிந்தனையுடன் தொடர்புபடுத்தியே கல்ப் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதயங்கள் என்று இங்கே தமிழாக்கம் செய்வது தவறாகும்.

33:10, 40:18 ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே இச்சொல் இதயம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய எல்லா இடங்களிலும் மூளை என்ற பொருளில்தான் பயன்படுத் தப்பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களிலும் மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். அரபு மூலச் சொல் அதற்கு இடம் தரக்கூடிய வகையில் தான் அமைந்துள்ளது.

எதை நீங்கள் பலவீனமாகக் கருதி கேள்வி கேட்கிறீர்களோ, அதுவே இவ்வேதம் இறைவனுடையது என்பதை நிரூபிக்கும் பலமாக அமைந்துள்ளது.

மூளை தான் மனிதனை முழுமையாக இயக்குகிறது என்ற உண்மை இறுதிக் காலத்தில் கண்டுபிடிக்கப்படும் என்ற உண்மையை அறிந்தவனால் தான் இவ்வாறு கூற முடியும். அது அருளப்பட்ட காலத்திலும் மறுக்கப்பட முடியாமல் காப்பாற்றி - உண்மை கண்டறியப்படும் காலத்திலும் அதை மேலும் உண்மைப்படுத்தக் கூடிய வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பது தான் இறைவேதம் என்பதற்கான நிரூபனங்களில் ஒன்றாகவுள்ளது.
பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 25 Dec 2015 - 18:22

நேரத்திட்டமிடலில்” வெற்றியடைய 10 சுலபமான வழிகள்!!

வேகமான இன்றைய உலகில், நாமும் வேகமாவும், விவேகமாவும் இல்லையென்றால் வாழ்க்கை ஓட்டத்தில் மிகவும் பின்தங்கிவிடுவோம் என்பதுதான் நிதர்சனம். இந்தப் புரிதலினால், நம்மில் பலர் இன்று வாழ்வியல் முறைகளில் பலவகையான மாற்றங்களை அவ்வப்போது செய்துகொண்டு, வாழ்க்கையின் அடுத்தகட்டத்தை நோக்கி பயணிக்கிறோம்.

வாழ்வியல் முறை மாற்றங்களில் மிக முக்கியமானதும், எளிதில் கைவரப்பெறாததுமாய் ஒன்று இருக்குமென்றால், அது நேரத்திட்டமிடலே என்பது நம்மில் பலர் அறிந்திருக்கும் ஒன்று. நேரத்திட்டமிடல் குறித்த புரிதல்களையும், சில/பல நுணுக்கங்களையும் புத்தகங்கள், துறை வல்லுனர்கள், நண்பர்கள் மூலமாக எனப் பலவாறாக சேகரித்து வைத்திருப்போர் பட்டியலில் நம்மில் பலர் கண்டிப்பாக இருப்போம்!

நேரத்திட்டமிடல் குறித்த திட்டங்கள், ஆயத்தங்கள், முயற்ச்சிகள் என எல்லாம் இருந்தும் சில/பல சமயங்களில் அதில் வெற்றியடைவது என்பது நம்மில் பலருக்கு “கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட முடவன் கதையாய் போய்விடுகிறது!”. இதற்க்கு காரணம், நேரத்தை நாம் எப்படி அணுகுகிறோம் அல்லது நேரத்துடன் நம்மை நாம் எப்படி தொடர்புபடுத்திக்கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது என்கிறார்கள் உளவியலாளர்கள்!

நேரத்துடன் ஒரு நல்லுறவை ஏற்படுத்திக்கொள்வதென்பது கிட்டத்தட்ட முதலீடு செய்வதைப்போல. அதாவது, நேரத்துடனான நம் உறவு/தொடர்பு ஒரு கொடுக்கல்-வாங்கல் போலத்தானாம்?! தொடக்கத்தில் நாம் முதலீடு செய்யும் ஒரு குறிப்பிட்ட கால அளவானது இறுதியாக நமக்கு நல்ல லாபத்தைக் தரும் என்கிறார்கள் உளவியலாளர்கள்!

என்னங்க ஒன்னும் புரியலீங்களா? எனக்கும் அப்படித்தான் இருக்கு. அதுக்காக அப்படியே விட்றவா முடியும். வாங்க நேரத்திட்டமிடலா நாமளா அப்படீன்னு ஒரு கை பார்த்துடுவோம்……

நேரத்திட்டமிடலில் வெற்றியடைய முத்தான 10 சுலபமான வழிகள்!

நம்ம நேரத்தை நன்றாக திட்டமிட்டு செலவு செய்ய, அப்படிச்செய்தபின் அதற்க்கான தக்க பலனையும் அடைய உளவியலாளர்கள் பரிந்துரைக்கும் 10 முத்தான, அதேசமயம் மிகவும் சுலபமான (?) வழிகளை பின்வரும் பட்டியலில் பார்ப்போம்…..

1. ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதை நிறுத்துங்கள் (Stop multitasking): சமீபகாலங்கள்ல, பொதுவாக பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல்தான் இந்த மல்டிடாஸ்கிங் என்பது. அடிப்படையில், அறிவியல்ரீதியாக பார்த்தால் மல்டிடாஸ்கிங் என்பது ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு தாவுவது/மாறுவது என்று பொருள்படும். நம் மூளையால், ஒரே நேரத்தில் இரண்டு/மூன்று கடினமான செயல்களில் கவனம் செலுத்த முடியாது. ஆக, மல்டிடாஸ்கிங் செய்வது என்பது பயனற்றது மற்றும் அயர்ச்சியைத் தரக்கூடியது!

2. முக்கியத்துவம் வாய்ந்த செயல்களை தேர்வு செய்து கொள்ளுங்கள் (Set your priorities): ஒவ்வொரு நாளுக்குமான தலையாய செயல்களை மனதில் பதிவு செய்துகொள்ளுங்கள். உங்கள் தேர்வுகளின் முக்கியத்துவங்கள் மாற்றியமைப்பட்டால் பொறுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, தீப்பற்றிக்கொண்ட ஒரு கட்டிடத்தை விட்டு வெளியேறுவதைவிட பணியிடத்தில் ஒரு விண்ணப்பத்தை எழுதி முடிக்கவேண்டுமென்பது முக்கியமானதல்ல!

3. உடற்பயிற்ச்சி செய்யுங்கள் (Exercise): உங்கள் உழைப்புத்திறனையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்த மனநலம் என்பது மிக அவசியம்! அதனால், புதிய யுக்திகளை கண்டறியவும் மன நலனை மேம்படுத்தவும், பணிக்கிடையில் நல்ல காற்றை சுவாசித்து காலாற நடந்துவிட்டு வாருங்கள்!

4. ‘முடியாது’ என்பதை கனிவாக சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் (Learn to say ‘no’ with kindness): நம் பணிகளுக்கிடையில் நண்பர்களுக்கு சிறிய உதவிகள் செய்வதென்பது அவசியம்தான் என்றாலும், அச்சிறு உதவிகள் சில சமயங்களில் மிகுந்த நேரம் பிடிப்பவையாக, அயற்ச்சியைத் தருபவையாக, முக்கியத்துவம் குறைந்தவையாக இருக்கும் பட்சத்தில், கனிவாக “என்னால் இவ்வுதவி செய்ய இயலவில்லை” எனச் சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்! இது உங்கள் நேரத்தை சேமிக்கவும், மன உளைச்சலைத் தவிர்க்கவும் உதவும்!

5. காலையில் ஒரு 15 நிமிடம் முன்பாக எழ முயற்ச்சியுங்கள் (Get up fifteen minutes early): ஒவ்வொரு நாளும் காலையில் சீக்கிரம் எழுந்து, பணிகளைத் தொடங்கும்முன் தியானம் செய்யவோ, உங்களின் டைரிக் குறிப்பு எழுதவோ பழகிக்கொள்ளுங்கள். உடல் நலனைப்போலவே மனநலனும் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாதது! உடற்பயிற்ச்சியிலும், மனநலன் காக்கும் செயல்களிலும் ஈடுபடுங்கள்!

6. போதுமான அளவு ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் (Get enough rest): ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லுமுன், அதிகப்படியாக நீங்கள் செலவு செய்யும் ஒரு மணி நேரம், உங்களின் அடுத்த நாளின் ஒரு மணி நேர வேலையை குறைப்பதில்லை. ஓய்வின்றி வேலைசெய்பவர்கள் குழப்பத்துக்குள்ளாவார்கள் என்கிறது உளவியல்!

7. எதிர்பார்ப்புகளை மேலான்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள் (Manage expectations): உங்கள் அறையக் குப்பையாக்கிவிட்டு, விழுந்து விழுந்து சுத்தம் செய்வதற்க்கு பதிலாக, குப்பைகள் சேர்வதை முன்பே தவிர்த்துவிட்டால், குப்பையை சுத்தம்செய்வதில் வீணாகும் உங்களின் பொன்னான நேரம் சேமிக்கப்படும்!

8. மின்னஞ்சல் வாசிக்கும் நேரத்தை திட்டமிட்டு வைத்துக்கொள்ளுங்கள் (Check email at set times): ஒவ்வொரு மின்னஞ்சலும் குட்டி போடும் தெரியுமா உங்களுக்கு?! அதாங்க, நீங்க அனுப்புற ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் ஒரு பதில் மின்னஞ்சல் வருமே அதைச்சொன்னேன். அதாவது, மின்னஞ்சல்களை தினசரி சரியாக கவனித்துக்கொண்டால் நேர விரயம் ஏற்படாது. அதேமாதிரி, வேறு வேலை செய்யும்போது மின்னஞ்சல்களை பார்க்காதீங்க, கவனச்சிதறல் ஏற்படுவதை தவிர்க்க!

9. தேவையில்லாதபோது இணையம்/செல்பேசியை அணைத்துவிடுங்கள் (Unplug): அசினும், நயன்தாராவும் அடுத்த எந்த படத்துல நடிக்கிறாங்கன்னு தெரிஞ்சிக்கலைன்னா, ஒன்னும் குடி முழுகிப்பொயிடாது. அதனால, இணையத்தை உலாவுவதிலும், செல்பேசியில் குறுச்செய்தி அனுப்பவதிலுமே காலத்தைக் கழிக்காமல், இரண்டையும் சிறிது நேரம் அணைத்துவிட்டு, உடற்பயிற்ச்சியோ தியானமோ செய்து ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ளுங்கள்!

10. செயல்பட அதிக நேரம் இருப்பதாய் எண்ணிக்கொள்ளுங்கள் (Embrace time-abundant thinking): ஒவ்வொரு செயலைச் செய்யவும் போதுமான நேரம் இருக்கும்பட்சத்தில், அதை உணர்ந்து மன உளைச்சலைத் தவிர்க்கவேண்டும். குறிப்பிட்ட அந்தச் செயலுடன் தொடர்பில்லாத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். மாறாக, மனதுக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபட்டு மனதையும் லேசாக்கி, நேரத்தையும் சரியாக செலவு செய்யவேண்டும்.

நாம் எப்போதும் இறந்தகாலத்திலும், எதிர்காலத்திலும் வாழ்வதைத் தவிர்த்து நிகழ்காலத்தில் வாழப் பழகிக்கொண்டோமானால் மனஅழுத்தம் இருந்த இடம் தெரியாமல் தொலைந்துபோகும். நேற்றும் நாளையும் மாயைகள். அவை இனி இல்லை, இந்தக் கணம்தான் உண்மை என்று எண்ணி வாழ்க்கையை வாழப் பழகிக்கொள்ளுங்கள். வெற்றி நமக்கே…..

நன்றி ;தமிழ் நாட்டு தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 25 Dec 2015 - 18:23

ஒளியின் வேகம் சம்பந்தமாக...
--------
ஒளித்துகள்களின் வேகம் ஒரு நொடிக்கு 186000 மைல்கள் என்பது அளவிடப் பட்ட ஒன்று. ஆனால் ஒளித்துகள்களின் வேகத்தை மிஞ்சிய வேகத்தை வேறு எந்த விதமான சக்தியாலும் பிரபஞ்சத்தில் அடைய முடியாது என்று ஐன்ஸ்டைன் அறுதியிட்டு நிறுவி விட்டார். ஆனால் அதில் அடங்கியுள்ள சூட்சுமம் நிறைய பேருக்கு புரியும்படி யாரும் விளக்கவில்லை.

ஒளித்துகள் மட்டுமல்ல வேறு வகையான துகள்களும் ஒளியின் வேகத்தில் பயணிக்கலாம். எந்தத் துகளின் நிறையானது பூச்சியமோ அது செல்லும் வேகம் 186000 மைல்கள். ரேடியேசன் கூட அந்த வேகத்தில்தான் பயணிக்கும். பூச்சியத்துக்கும் குறைவான நிறை உடைய பொருள் பிரபஞ்சத்தில் உண்டா என எனக்குத் தெரியாது! நிறையே இல்லாத் துகளின் வேகம் 186000 மைல்கள் என்றால் அந்த வேகத்தை மிஞ்ச யாரால் முடியும்? எனவே தான் Universal Speed Limit = 186000 miles/sec.

சமீபத்தில் தான் கொரிய விஞ்ஞானிகள் Gravity இன் வேகம் கூட 186000 miles/sec என நிரூபித்துள்ளனர்!

அதன்படி பார்த்தால்...திடீரென்று வானத்தில் நமது சூரியன் காணாமல் போனால்...அது நம்மால் உணரப்பட 8 நிமிடங்கள் ஆகும்! அந்த 8 நிமிடங்களுக்கு பூமியானது இல்லாத சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கும்!

நன்றி ;தமிழ் நாட்டு தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 25 Dec 2015 - 18:34

சுவாசிக்க முடியாதவருக்கு உயிர்காக்கும் ஒட்சிசன் ஊசி
-------------------
ஒட்சிசன், நாம் உயிர்வாழ்வதற்குத் தேவையான ஒரு வளிமம், சுவாசிப்பதன்மூலம் இதைப் பெற்றுக்கொள்கின்றோம். சுவாசத்தொகுதியில் ஏதேனும் பழுது ஏற்படும் நிலையில் சுவாசம் பாதிப்படைகின்றது. ஒட்சிசன் இல்லாத நிலையில் மூளை, இதயம் போன்ற இன்றியமையாத உறுப்புக்கள் செயலிழக்கத் தொடங்கும், இதனால் இதய நிறுத்தம், மூளைச் சேதம் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.
 

இத்தகைய சந்தர்ப்பங்களில் பெரிய மருத்துவமனைகளில் இதய-நுரையீரல் இயந்திரங்களின் உதவி கொண்டு குருதியில் ஒட்சிசன் சேர்க்கப்படுகின்றது, ஆனால் இது அனைவருக்கும் சாத்தியம் இல்லை; மருத்துவமனைக்கு அப்பால் தொலைவில் உள்ள ஒரு நபருக்கு உடனடியான ஒட்சிசன் சிகிச்சை கிடைப்பது சிக்கல். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஒரு தற்காலிகமான தீர்வு கிடைத்தால் எவ்வளவு நன்று எனும் யோசனைக்கு முற்றுப்புள்ளி வைக்க அறிவியல் அறிஞர்களால் ஒட்சிசன் ஊசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொசுடன் சிறார் மருத்துவமனை ஆய்வாளர்களால் நுண்ணிய ஒட்சிசன் நிரப்பப்பட்ட நுண்துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை ஒரு நபரின் நாளம் மூலம் குருதிக்குள் செலுத்தப்படக்கூடியவை, இதனால் அவரது குருதி விரைவில் ஒட்சிசனால் நிரம்பிக்கொள்ளும். ஒவ்வொரு முதலுதவி வல்லுனர்கள், மருத்துவர்களிடம் இத்தகைய ஒட்சிசன் நுண்துகள் ஊசி இருப்பதன்மூலம் உயிர்காப்பது இலகுவில் அமையும் என நம்பலாம்.

 மருத்துவர் சோன் கேயிர் (Dr. John Kheir) மற்றும் அவரது சகாக்கள் பொசுடன் சிறார் மருத்துவமனை இதயவியல் துறைப்பிரிவில் இவ்வாராய்ச்சி நிகழ்வை நடாத்தினர்.

சுவாசக்குழாய் முற்றிலும் தடுக்கப்பட்டு சுவாசிக்காமல் உள்ள எலிக்கு கொழுப்பு உறையினால் சூழப்பட்டுள்ள ஒட்சிசன் நுண்துகள் நாளத்தினூடு குருதிக்குள் செலுத்தப்பட்டது. ஒட்சிசன் நுண்துகள் உதவியுடன் 15  நிமிடங்களுக்கு சுவாசிக்காமல் எலி இருப்பதை அவதானித்தனர். ஆய்வுகூடத்தில் ஒட்சிசன் இல்லாத நீலநிறமுடைய குருதி இத்துகள்கள் சேர்க்கப்பட்ட பின்னர் சிவப்பு நிறம் பெற்றதை கண்களால் கண்டோம் என சோன் கேயிர் தெரிவித்தார்.

ஒட்சிசன் நுண்துகள்களால்  15 – 30  நிமிடங்களுக்கே உதவமுடிகின்றது. இவை காபனீரொக்சைட்டைப் பரிமாறவில்லை, எனவே 30 நிமிடங்களுக்கும் மேற்பட்ட நேரத்தில் இவை செலுத்தப்படுவது குருதியில் காபனீரொக்சைட்டை மிகையாக்கும், ஆனால் இதனால் ஒரு நபர் இறப்பதில்லை. குறைவான ஒட்சிசனை ஈடு செய்து உயிரிழப்பைத் தடுப்பதே இச்சிகிச்சையின் நோக்கம். எடுத்துக்காட்டாக, நீரில் மூழ்கி சுவாசம் பாதிப்படைந்த ஒருவருக்கு மருத்துவமனை கொண்டு செல்லும் வரை ஒட்சிசன் வழங்குவது அவரது உயிரை மேலும் 30 நிமிடங்களுக்கு நீட்டிப்பதாக  அமைகின்றது.

நன்றி ;தமிழ் கல்வி தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 25 Dec 2015 - 18:36

துடிக்கும் இதய உயிரணுக்கள் உருவாக்கம்
-------------
மருத்துவ ஆய்வாளர்கள் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட இதயத்தை மீளவும் ஆரோக்கிய நிலைக்கு கொண்டுவருவதற்கான செயற்பாட்டில் ஒரு படி வெற்றியைக் கண்டுள்ளனர்.

இன்றைய உலகில் மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம். இதயம் சுருங்கி விரியக் காரணமாக இருக்கும் இதயத்தசை சிறப்பான இதய உயிரணுக்களால் (இதயக்கலங்கள்) ஆனது. மாரடைப்பு என்று பொதுவாகக் கூறப்படும் இதயத்தசை இறப்பின் போது
இதயத்தசையில் உள்ள இதயக்கலங்கள் தமது துடிக்கும் செயற்பாட்டை இழந்து நாளடைவில் அவை இருந்த இடம் வடுக்களை உண்டாக்கும் வெறும் நார் இழையங்களாக மாற்றப்படுகின்றது. எனவே குறிப்பிட்ட பகுதியின் துடிக்கும் செயற்பாடு இன்மையால் பாதிக்கப்பட்ட  நபரின் இதயம் படிப்படியாக செயலிழக்கத் தொடங்கி இறுதியில் இதயச் செயலிழப்பு ஏற்படுகின்றது.

இதுவரையில் நிரந்தரமானது என்று நம்பிய இந்த நிகழ்வு தடுக்கப்படலாம் என்று ஆய்வாளர்கள் (Gladstone Institutes ) தெரிவிக்கின்றனர். உருவாகிய வடு உயிரணுக்கள் மீண்டும் துடிக்கும் இதயக்கலங்களாக மாற்றப்படும் பட்சத்தில் இதயம் மீண்டும் முழுமையாக இயங்கத் தொடங்கும்.

சென்ற வருடம், இதே ஆய்வாளர்களால் வடுக்கள் உருவாகும் நாரரும்பற் கலங்கள் (fibroblasts) துடிக்கும் இதயத்தசைக் கலங்களாக உயிருள்ள எலியொன்றில் மாற்றப்பட்டிருந்தன. இன்று, அதே போன்ற செயற்பாடு மனித உயிரணுக்களுக்கு ஆய்வுகூடத்தில் பெட்ரி தட்டில் (petri dish) நிகழ்த்தப்பட்டு நாரரும்பற் கலங்கள் துடிக்கும் இதயத்தசைக் கலங்களாக மாற்றப்பட்டன.

இவ்வாய்வைத் தலைமை நின்று நடத்திய கிளாட்ஸ்டோன் இதயக்குழலிய மற்றும் குருத்தணு ஆய்வு மையத்தின் மேலாளர் பேராசிரியர் தீபக் சிறிவாஸ்தவா, “ஒரு நாள் இந்தச் செயன்முறை மூலம் புதிய தசைக் கலங்கள் இதயத்தில் உருவாக்கப்படும்” என்று தெரிவித்தார்.

சென்றவருடம் (2012) நிகழ்த்திய ஆய்வில்,  சிறிவாஸ்தவாவும் அவருடைய சகபாடிகளும் இந்த மாற்றத்தை நிகழ்த்த ஜிஎம்டி (GMT) எனப்படும் மூன்று மரபணுக்கள் போதுமானவை என்று அறிவித்திருந்தனர். இந்த GMT உயிருள்ள எலியின் இதயத்தசையில் ஊசி மூலம் செலுத்தப்பட்டு பெறுபேறு கிடைத்தது. ஆனால் மனித நாரிழையக் கலங்களை இதே முறை மூலம் மாற்றத்துக்கு உட்படுத்துவதற்கு GMT மட்டும் போதாது என்று தெரிவித்தனர்.

ஆய்வில் பலவகை மரபணுக்கள் நாரரும்பற் கலங்களுள் செலுத்தப்பட்டு எந்த மரபணுக்கள் நாரரும்பற் கலங்களை மாற்றவல்லன என்பது அவதானிக்கப்பட்டது. இறுதியில் GMT எனப்படும் மூன்று மரபணுக்களுடன் மேலும் இரு மரபணுக்கள் ESRRG மற்றும்  MESP1 மாற்றத்தை ஏற்படுத்தப் போதுமானவை என்று அறிந்து கொண்டனர். மேலும் இரண்டு மரபணுக்கள் MYOCD மற்றும்  ZFPM2 இந்த நிகழ்வை மிகவும் முழுமைப்படுத்தவல்லன என்றும் தெரிந்து கொண்டனர்.

 நன்றி ;தமிழ் கல்வி தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 25 Dec 2015 - 18:39

குடற்புற்றுநோய்க்குக் காரணமாகலாம்
-----------------
வாய்க்குழியுள் வசிக்கும் ஏராளமான பக்டீரியா வகைகளுள் பொதுவாகக் காணப்படும் ஒருவகைப் பக்டீரியா, குடற்புற்றுநோய் ஏற்படுவதற்குக் காரணியாக விளங்கலாம் என்று ஆராய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இரு வெவ்வேறு ஆய்வுகளில் இது சம்பந்தமாக ஆராயப்பட்டுள்ளன.

பற்சுற்றி அழற்சி, முரசு நோய்கள் போன்றவற்றுடன் தொடர்புடைய பியுசோபாக்டீரியம் நியுக்ளியட்டம் (Fusobacterium nucleatum) எனும் உயிரியற் பெயருடைய இந்தப் பக்டீரியா,  குடற்புற்றுநோய் உள்ளவர்களின் குடலில் கூடுதலாகக் காணப்படுவதாக உயிரியல் அறிஞர்களால் கண்டறியப்பட்டது. ஒரு ஆரோக்கியமானவரின் குடலில் காணப்படும் பலவகையான பக்டீரியா இனங்களின் வரிசையில் பியுசோபாக்டீரியா அடங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 எனினும் இற்றைவரையான தகவல்களில் இருந்து பியுசோபாக்டீரியா இழையங்களை குடற்புற்றுநோய்க்கலங்களாக உருவாக்கின்றதா அல்லது புற்றுநோயின் விளைவாக பியுசோபாக்டீரியா தோன்றுகின்றதா என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை.

குடலில் ஏற்படும் அசாதாரணமான உயிரணுக்களின் பெருக்கத்தை குடற்புற்றுநோய் என்கின்றோம். ஆண்டுதோறும் உலகளாவியரீதியில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இதனால் பாதிப்படைகின்றனர்.

இந்நிலையில், கார்வார்ட் மற்றும் டானா- ஃபார்பர் புற்றுநோய்க் கல்விமையத்து (Harvard and the Dana-Farber Cancer Institute) நிபுணர்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வில், அடினோமா (adinoma) எனப்படும் குடற்சுரப்பிகளில் ஏற்படும் கேடிலிக் கட்டிகளில் (Benign tumour)  பியுசோபாக்டீரியா மிகையாகக் காணப்படுகின்றது என்பது அவதானிக்கப்பட்டது. கெடுதியற்ற அடினோமா காலப்போக்கில் கெடுதி தரும் கேடுளிப் புற்றுநோய்க்கட்டிகளாக (Malignant tumour) மாற்றமடையும் என்பது அறியத்தக்கது.

இசுட்ரெப்டோகொக்கசு எனும் பக்டீரியாவும் குடற்புற்றுநோய் ஏற்படுத்தவல்லது என்று ஏற்கனவே கருதப்பட்ட நிலையில், ஆய்வாளர்கள் பியுசோபாக்டீரியா மற்றும் இசுட்ரெப்டோகொக்கசு போன்ற பாக்டீரியாக்களை எலிகளுக்குச் செலுத்திய ஆய்வுகூடப் பரிசோதனையின் போது ஒப்பீட்டளவில் பியுசோபாக்டீரியா செலுத்தப்பட்ட எலியின் குடற்கலங்களில் அபரிமிதமான புற்றுநோய் உயிரணு வளர்ச்சி ஏற்படுவதை அவதானித்தனர்.

வெஸ்டர்ன் ரிசேர்வ் பல்கலைக்கழகத்தில் (Western Reserve University) நடாத்தப்பட்ட வேறொரு ஆய்வில் பியுசோபாக்டீரியாவின் மேற்பரப்பில் காணப்படும் மூலக்கூறு ஒன்று புற்றுநோய்க்கலங்களுக்குள் பக்டீரியா உட்புகுவதற்கு உதவுகின்றது என்று அறிந்தனர். FadA எனப்படும் இந்த மூலக்கூறு பின்னர் புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கும் மரபணுக்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதுமூலம் புற்றுநோயை ஏற்படுத்துகின்றது. இந்த மூலக்கூறு மேலும் அழற்சியைத் தூண்டுவதன் மூலம் புற்றுநோய்க் கட்டி உருவாகுவதை ஊக்குவிக்கின்றது.

FadAயைத் தடுக்கவல்ல செயற்கை வேதியற்பொருள் இந்த நிகழ்வை நிறுத்துவதால் வருங்காலத்தில் சிகிச்சைக்கு இந்தச் செயன்முறை உதவும் என்று நம்பப்படுகின்றது.

“FadAயை உடலில் கண்டுபிடிப்பதன் மூலம் குடற்புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டு அறுதியிட்டுக்கொள்ளமுடியும் (diagnosis) என்பதை இந்த ஆய்வு தெளிவுபடுத்துகின்றது. மேலும் இதற்கான சிகிச்சையையும் புதிய மருந்துகளைக் கொண்டு மெருகூட்டமுடியும்” என்று வெஸ்டர்ன் ரிசேர்வ் பல்மருத்துவப் பல்கலைகழகத்தைச் சேர்ந்த இப்பிங் ஹான் (Yiping Han) கூறினார்.

ஆரோக்கியமான மனிதர்களுடன் குடற்புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒப்பிடுகையில் FadA மிகையாக உள்ளதையும் ஆய்வில் அறிந்துகொண்டனர்.

நம் அனைவரதும் வாயுள் இந்த புற்றுநோய் உண்டாக்கும் பக்டீரியா சிறிதளவேனும் இருக்கின்றது என்பது கசப்பான ஆனால் உண்மையான விடயம். பியுசோபாக்டீரியாதான் புற்றுநோயை உருவாக்கிவிடுகின்றதா என்பது இவ்வாய்வின் மூலம் தெளிவாக இல்லாவிடினும் புற்றுநோயின் வளர்ச்சியை விரைவாக்குகின்றது என்பதை அறியக்கூடியதாக உள்ளது. எந்தச்சந்தர்ப்பத்திலும் வாய்ச் சுகாதாரம் பேணப்படல் மிக மிக முக்கியமானது. இதுவரைக்கும் பல்நோய்கள் மற்றும் வேறு சில நோய்கள் வாயின் நலம் பேணப்படல் குறைவால் ஏற்படுகின்றது என்று தெரிந்திருந்தது, அவ்வரிசையில் இன்று புற்றுநோயும் சேர்ந்துகொண்டது.

ஒவ்வொரு நாளும் இருதடவைகளாவது பல்துலக்குகின்றீர்களா?

 

உசாத்துணைகள்
ஆய்வு வெளியிடப்பட்ட நாள்: August 14, 2013

சஞ்சிகை: Cell Host & Microbe
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by சே.குமார் Fri 25 Dec 2015 - 20:06

நல்ல தகவல்... அறியத் தந்தமைக்கு நன்றி....
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum