Latest topics
» உப்புமா தர்றேன், சாப்பிடுறியா...by rammalar Yesterday at 16:17
» கண்ணா லட்டு தின்ன ஆசையா?
by rammalar Yesterday at 16:12
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by rammalar Yesterday at 9:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 13 Jul 2024 - 19:17
» சார்லஸ் டார்வினின் பொன்மொழிகள்
by rammalar Sat 13 Jul 2024 - 16:02
» ஆடி செவ்வாய் தேடிக் குளி!
by rammalar Sat 13 Jul 2024 - 15:39
» புதியதோர் பாதை - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:38
» இயற்கையே வாழ்வு! - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:37
» உண்மையை உணருங்கள் - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:35
» அவள் வரும்முன் ஓடி விடுங்கள்! - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:34
» இசை - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:33
» ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:32
» அன்பை பகிர்வோம் - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:31
» கண்களுக்கு விருந்து - ஹைகூ
by rammalar Sat 13 Jul 2024 - 15:30
» மலரின் மலரே - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:29
» புதிய லுக்கில் சண்டிக்குதிரை!
by rammalar Sat 13 Jul 2024 - 14:17
» இன்றைக்குப் போதும் இது! -
by rammalar Sat 13 Jul 2024 - 10:48
» இன்றைக்குப் போதும் இது! - வெண்பா போட்டி
by rammalar Sat 13 Jul 2024 - 10:47
» காமராஜர் வழி நடப்போம்!
by rammalar Sat 13 Jul 2024 - 10:29
» விருமாண்டி - உன்னை விட இந்த உலகத்தில்
by rammalar Sat 13 Jul 2024 - 10:14
» மழை நின்ற பின்பும் தூறல் போல ...
by rammalar Sat 13 Jul 2024 - 10:05
» பல்சுவை - பகுதி 11
by rammalar Thu 11 Jul 2024 - 16:07
» பல்சுவை
by rammalar Thu 11 Jul 2024 - 12:53
» கோயில் சிற்பங்களில் அந்தரங்கம்...
by rammalar Thu 11 Jul 2024 - 9:56
» ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டுமா?
by rammalar Thu 11 Jul 2024 - 9:54
» புத்தகங்கள் - கவிதை
by rammalar Thu 11 Jul 2024 - 6:14
» மனங்கவர்ந்த கவிதைகள்
by rammalar Thu 11 Jul 2024 - 5:11
» ஓடிடி தளத்தில் வெளியாகும் நடிகை த்ரிஷாவின் முதல் வெப் சீரிஸ்
by rammalar Thu 11 Jul 2024 - 4:53
» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by rammalar Wed 10 Jul 2024 - 10:57
» சுகர் லெவலை சட்டுனு குறைக்க உதவும் ஹெர்பல் பொடி!!
by rammalar Mon 8 Jul 2024 - 4:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Sun 7 Jul 2024 - 19:31
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Sun 7 Jul 2024 - 9:26
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
பவர்ஃபுல்லான ஓர் ஆன்டி கேன்சர் – “Durian Belanda” (துரியன் பழம்)
Page 1 of 1
பவர்ஃபுல்லான ஓர் ஆன்டி கேன்சர் – “Durian Belanda” (துரியன் பழம்)
பவர்ஃபுல்லான ஓர் ஆன்டி கேன்சர் – “Durian Belanda” (துரியன் பழம்)
இன்றைய உலகில் எவ்வளவோ நவீன மருத்துவ முறைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் மிஞ்சுமளவுக்கு புதுப்புது வகை நோய்களும் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன.
அப்படிப்பட்ட நோய்களில் ‘உயிர்க்கொல்லி நோய்’ என அஞ்சப்படும் சில வகைகளில் எல்லா தரப்பு மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது புற்றுநோயே!
ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல பேருக்கு உயிரைப் பறித்துவிடும் அளவுக்குதான் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய பயம் என்றுமே மனதில் குடிகொண்டுள்ளது.
மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த நோய் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பயனற்று போய்விடுவதால் மருத்துவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் கை விரித்து விடுகிறார்கள். சிலவகை புற்றுநோய்கள் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட நிலையில் தாக்குவதும் உண்டு. அதனால் எந்த மருந்து புற்றுநோய்க்கென அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை மனித நேயமுள்ள அனைவரும் உடனுக்குடன் பகிர்ந்துக் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்றைய காலக்கட்டத்தில் மிக அவசியமான ஒன்றாகும்.
புற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அதேசமயம் உணவுப் பொருட்களில் நமக்குத் தெரிந்தவரை காலிஃப்ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ், மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்கு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தியை இறைவன் வைத்திருக்கிறான்.
அவற்றில் மிக சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக “காட்டு ஆத்தாப்பழம்” கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
(எல்லாப் புகழும் இறைவனுக்கே!)
இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமேசான் மழைக்காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது.
நம் நாட்டில் கேரளாவிலும் “ஆத்தா சக்கா” (aatha chakka) என்ற பெயரில் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் அதன் பலன் தெரிந்து பயன்படுத்துவதாக தெரியவில்லை. (பலாப்பழத்திற்கு மலையாளத்தில் chakka என்பார்கள். பலாப்பழத்தைப் போன்ற முட்களும், ஆத்தாப்பழத்தைப் பழத்தைப் போன்ற தோற்றமும் கொண்டதாலோ என்னவோ ‘பலா ஆத்தா’ என்ற அர்த்தம் கொண்ட பெயர் இங்கு அழைக்கப்படுகிறது)
இதன் மரம் Graviola Tree என்று அழைக்கப்படுகிறது. பழத்தின் மேற்புறத்தில் பலாப்பழத்தைப் போன்று, ஆனால் சற்று அதிகமான இடைவெளியில் முட்கள் இருக்கும். இவை சாதாரண ஆத்தாப் பழத்தின் அளவுகளிலும், அதிக பட்சம் 20-30 செ.மீ. வரை நீளத்திலும், 2.5 கிலோ எடை வரையிலும் விளைகிறது.
அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் இலைகளும், விதைகளும் வெவ்வேறு மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளன.
காலை நேரங்களில் பூக்கும் இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது அருமையான வாசனையுடையதாக இருக்கும்.
“காட்டு ஆத்தா”வின் மருத்துவ குணம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது இறைவன் நமக்குத் தந்த மிகப்பெரிய வரமே!
அதுமட்டுமில்லாமல் கேன்சர் இல்லாதவர்கள் (அல்லது இருப்பதை அறியாதவர்கள் யாராயினும்) இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் (இறைவன் நாடினால்) அது கேன்சரைத் தடுக்கும் கேடயாமாகவும் அமைகிறதாம்!
இந்த இயற்கை கீமோ (Chemo)வினால்,
*.கடுமையான குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது. இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான ‘கீமோதெரபி’ போலல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி, அவற்றை அழிப்பதாகவும் உள்ளது.
*.சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.
இதன் மற்ற பொதுவான மருத்துவ குணங்கள்:
*.உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை (Immune System) பாதுகாக்கிறது. அதனால் மற்ற கொடிய நோய்களையும் எதிர்க்கிறது.
*.நம் உடம்பின் ஆற்றலுக்கு பூஸ்ட்டாகவும், கண்பார்வையை மேம்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது.
*.“பூஞ்சைத் தொற்று” என்று சொல்லப்படும் Fungal Infection களையும், பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துவதாக உள்ளது.
*.உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
*.மன அழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.
*.அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது.
*.இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செய்கிறது.
இந்த மரத்தின் பழங்கள் மட்டுமில்லாமல் இலைகள், வேர்கள், மரப்பட்டை, தண்டுகள், பூ, விதைகள் போன்ற பல்வேறு பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளன. இதன் தாவரவியல் பெயர் Annona muricata.
இலங்கையில் இதற்கு: “காட்டு ஆத்தா” (சில வட்டாரங்களில் “அன்னமுன்னா பழம்” அல்லது “அண்ணவண்ணா பழம்” என்றும்
ஆங்கிலத்தில்: “Soursop”, “Prickly Custard Apple”, “Soursapi” என்றும்
மலையாளத்தில்: “Aatha Chakka” என்றும் கூறப்படுகிறது.
(நன்றி: பயணிக்கும் பாதை)
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|