Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
'தர்மச்சக்கரம்'
3 posters
Page 1 of 1
'தர்மச்சக்கரம்'
இந்தப் படைப்பு, ஏறத்தாள இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டு காலத்தில் மனிதகுணமும் அதனது இயல்புகளும் எந்த விதத்திலும் மாறிவிடவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றது. அசோகச்சக்கரவர்த்தி காலத்தில் இருந்து இன்றுவரை எதுவுமே பெரிதாக மாறி விடாதது மட்டுமல்ல, மனித குணம் மேலும் மேலும்
வக்கிரமடைந்து செல்வதைக் காட்டுகின்றது.
'தர்மச்சக்கரம்'
கலிங்கம் வீழ்ந்தது!
குருதி கொப்பழித்த 'தாயா'
நதிக்கரையின் ஓரங்களில்,
கரையொதுங்கிய பிணங்களின்
இரத்த வாடை கலந்த காற்று
வெற்றிச்செய்தியை,
நெற்றியில் சுமந்து வீசியது,
அன்னப் பறவைகள் நடை பயின்ற
ஆற்றங்கரையில்,
ஆந்தைகளும் கழுகுகளும்
குந்தியிருந்தன..
கலிங்கம் வீழ்ந்தது!.
வீதியெங்கும் வெற்றியின் பூரிப்பு.
வீழ்ந்து கிடக்கும் கலிங்கத்து
வீரர்களின் கோலத்தை,
தோல்வியில் துவளும் கலிங்கத்தின்
குங்குமம் இல்லாத முகத்தைப்
பார்க்கத் துடித்தது
அவன் வக்கரித்துப்போன மனம்.
கலிங்கம் வீழ்ந்தது!
காணுமிடமெல்லாம்,
மரணத்தின் விளம்பரங்கள்.
ஆண்கள், பெண்கள் குழந்தைகள்
ஆயிரமாயிரமாய் வீழ்ந்து கிடந்தன.
ஆயுதம் தாங்காத கைகள்!
கவசம் இல்லாத மேனிகள்!.
கந்தல் ஆடைகளே கவசங்களாக,
கலப்பைப் பிடிகளே ஆயுதங்களாக,
அசோகன் கலங்கினான் .
'அகண்ட' பாரதம்.
அவன் கண்ட கனவு!
நனவாகிய வேளை,
அவன் கண்கள் பனித்தன.
கலிங்கம் வீழ்ந்தது!
மன்னனின் தலைக்குள் ஒரு குரல்!
'மன்னா பற்றைத் துறந்து விடு'.
மன்னனின் நாடி நரம்பெல்லாம்
திரும்பத் திரும்ப,
மந்திரமாக ஒலித்தது அது.
'மன்னா பற்றைத் துறந்து விடு'
சடப்பொருளிலும் ' தர்மா' வைத்
தேடியவனின் குரல்கள்..
காலம் திரும்பியது.,
மீண்டும் ஒரு கலிங்கம்!
'சர்வதேச சமுகம்'
முன்னுரையை எழுதிவைக்க
'முள்ளிவாய்க்கால்'
முடிவுரையை எழுதியது.
முன்னின்று நடத்தியது,
‘'அகண்ட' பாரதம்!
'அவாள்கள்' ஓதிய 'வேதத்தில்'
தர்மச்சக்கரத்தின் அச்சாணிகள்
மீண்டும் கழன்றன.
அழகிய தர்மச்சக்கரம்,
'அகண்ட பாரதக்' கொடியின்
அலங்கோலத்தைப்
பிரதி பலித்தது.
கலிங்கத்துப் போரில்,
பேய்கள் கூழ் காய்ச்சப்
பற்கள் கிடைத்தன.
எங்கள் கலிங்கத்தில் ..
எரிந்த 'இரசாயன' நெருப்பில்
எங்கள் பற்கள் மட்டுமல்ல
எலும்புகள் கூட,
நீறாகிப் போயின.
பதுங்கு குழிகளே எங்கள்
புதை குழிகள் ஆக,
எங்கள் வேலிகளே
எங்களை மேய்ந்தன.
புத்தனின் பல் மட்டும்
பூட்டிய பெட்டியினுள்
பத்திரமாய் இருந்தது.
‘தலதா’ மாளிகையின்
வாசற்படிகளில்.
காவலுக்கு நின்றன
இயந்திரத் துப்பாக்கிகள்!
ரத்தக் காட்டேரிகள் ஆளும்
'இலங்காபுரி'யின்
தேசீய இலச்சனையிலும்
திமிரோடு வீற்றிருந்தது
அந்தத் 'தர்மச்சக்கரம்'
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"
வக்கிரமடைந்து செல்வதைக் காட்டுகின்றது.
'தர்மச்சக்கரம்'
கலிங்கம் வீழ்ந்தது!
குருதி கொப்பழித்த 'தாயா'
நதிக்கரையின் ஓரங்களில்,
கரையொதுங்கிய பிணங்களின்
இரத்த வாடை கலந்த காற்று
வெற்றிச்செய்தியை,
நெற்றியில் சுமந்து வீசியது,
அன்னப் பறவைகள் நடை பயின்ற
ஆற்றங்கரையில்,
ஆந்தைகளும் கழுகுகளும்
குந்தியிருந்தன..
கலிங்கம் வீழ்ந்தது!.
வீதியெங்கும் வெற்றியின் பூரிப்பு.
வீழ்ந்து கிடக்கும் கலிங்கத்து
வீரர்களின் கோலத்தை,
தோல்வியில் துவளும் கலிங்கத்தின்
குங்குமம் இல்லாத முகத்தைப்
பார்க்கத் துடித்தது
அவன் வக்கரித்துப்போன மனம்.
கலிங்கம் வீழ்ந்தது!
காணுமிடமெல்லாம்,
மரணத்தின் விளம்பரங்கள்.
ஆண்கள், பெண்கள் குழந்தைகள்
ஆயிரமாயிரமாய் வீழ்ந்து கிடந்தன.
ஆயுதம் தாங்காத கைகள்!
கவசம் இல்லாத மேனிகள்!.
கந்தல் ஆடைகளே கவசங்களாக,
கலப்பைப் பிடிகளே ஆயுதங்களாக,
அசோகன் கலங்கினான் .
'அகண்ட' பாரதம்.
அவன் கண்ட கனவு!
நனவாகிய வேளை,
அவன் கண்கள் பனித்தன.
கலிங்கம் வீழ்ந்தது!
மன்னனின் தலைக்குள் ஒரு குரல்!
'மன்னா பற்றைத் துறந்து விடு'.
மன்னனின் நாடி நரம்பெல்லாம்
திரும்பத் திரும்ப,
மந்திரமாக ஒலித்தது அது.
'மன்னா பற்றைத் துறந்து விடு'
சடப்பொருளிலும் ' தர்மா' வைத்
தேடியவனின் குரல்கள்..
காலம் திரும்பியது.,
மீண்டும் ஒரு கலிங்கம்!
'சர்வதேச சமுகம்'
முன்னுரையை எழுதிவைக்க
'முள்ளிவாய்க்கால்'
முடிவுரையை எழுதியது.
முன்னின்று நடத்தியது,
‘'அகண்ட' பாரதம்!
'அவாள்கள்' ஓதிய 'வேதத்தில்'
தர்மச்சக்கரத்தின் அச்சாணிகள்
மீண்டும் கழன்றன.
அழகிய தர்மச்சக்கரம்,
'அகண்ட பாரதக்' கொடியின்
அலங்கோலத்தைப்
பிரதி பலித்தது.
கலிங்கத்துப் போரில்,
பேய்கள் கூழ் காய்ச்சப்
பற்கள் கிடைத்தன.
எங்கள் கலிங்கத்தில் ..
எரிந்த 'இரசாயன' நெருப்பில்
எங்கள் பற்கள் மட்டுமல்ல
எலும்புகள் கூட,
நீறாகிப் போயின.
பதுங்கு குழிகளே எங்கள்
புதை குழிகள் ஆக,
எங்கள் வேலிகளே
எங்களை மேய்ந்தன.
புத்தனின் பல் மட்டும்
பூட்டிய பெட்டியினுள்
பத்திரமாய் இருந்தது.
‘தலதா’ மாளிகையின்
வாசற்படிகளில்.
காவலுக்கு நின்றன
இயந்திரத் துப்பாக்கிகள்!
ரத்தக் காட்டேரிகள் ஆளும்
'இலங்காபுரி'யின்
தேசீய இலச்சனையிலும்
திமிரோடு வீற்றிருந்தது
அந்தத் 'தர்மச்சக்கரம்'
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: 'தர்மச்சக்கரம்'
பகிர்வுக்கு நன்றி வேல்
மனக்குமுறல்கள்
இங்கு வரிகளாக
உதிர்ந்துள்ளன நன்றி
மனக்குமுறல்கள்
இங்கு வரிகளாக
உதிர்ந்துள்ளன நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 'தர்மச்சக்கரம்'
@. @.நண்பன் wrote:பகிர்வுக்கு நன்றி வேல்
மனக்குமுறல்கள்
இங்கு வரிகளாக
உதிர்ந்துள்ளன நன்றி
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|