சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

வயதாகியும் குழந்தைகள் பேசாமல் இருப்பது ஏன்?  Khan11

வயதாகியும் குழந்தைகள் பேசாமல் இருப்பது ஏன்?

Go down

வயதாகியும் குழந்தைகள் பேசாமல் இருப்பது ஏன்?  Empty வயதாகியும் குழந்தைகள் பேசாமல் இருப்பது ஏன்?

Post by *சம்ஸ் Thu 9 Jun 2011 - 22:32

குறிப்பிட்ட வயதை அடைந்த பின்னரும், காதுகேளாமை, ஆடிசம் என்ற உளவியல் பிரச்சனை, மனவளர்ச்சி குறைபாடு ஆகிய பிரச்சனைகள் ஏதுமில்லாத போதும் குழந்தைகள் மற்ற குழந்தைகளைப் போல் பேசாமல் இருந்தால் அக்குழந்தைக்கு மொழியை பேசுவதில் குறைபாடு உள்ளது எனக் கொள்ளலாம். இக்குறைபாடு உள்ள குழந்தைகளால் ஓர் மொழியின் வர்த்தைகளை உச்சரிப்பதை கற்றுக் கொள்ளவும் அம்மொழியின் இலக்கணத்தை கற்றுக் கொள்ளவும் இயலாது.

குழந்தைகளுக்கு ஏன் இக்குறைபாடு ஏற்படுகிறது என்பதற்கான காரணம் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை. ஆயினும் மூளையே இதற்கான முக்கிய காரணம் என்று அனுமானிக்கப்பட்டுள்ளது. பேச்சுக் குறைபாடு கொண்டுள்ள குழந்தைகளின் மூளையில் ஏதேனும் பிறழ்வு இருக்கக்கூடும் என்று யூகிக்கப்பட்டுள்ளது. எத்தகைய பிறழ்வு என்பதை தற்போதைய மருத்துவ அறிவியல் இன்னும் கண்டறியவில்லை அதைப் போன்றே ஏதேனும் ஒரு மரபணு பேச்சுக் குறைபாட்டுக்கு காரணமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆயினும் அது எந்த மரபணு என்று இன்னும் கண்டறியப்படவில்லை. பொதுவாக பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளிடமே இக்குறை அதிகமாக காணப்படுகிறது.

எல்லா குழந்தைகளும் எவ்வயதில் பேச ஆரம்பிக்கின்றனவோ அதே வயதில் பேச்சுக்குறைபாடு உள்ள குழந்தைகளும் பேச ஆரம்பிக்கின்றன. ஆனால் இவர்கள் பேச்சு வளர்ச்சியில் சாதாரணமாக குழந்தைகளைவிட மிக குறைவான முன்னேற்றத்தையே அடைகிறார்கள். வார்த்தைகளை உச்சரிப்பது இத்தகைய குழந்தைகளுக்கு மிக கடினமாக இருக்கும். இக்குறைபாடு குழந்தைகள் ஆறு-ஏழு வயதை அடையும் வரையில் கூட நீடித்து அவர்களின் படிக்கும் மற்றும் எழுதும் திறனைக்கூட பாதிக்கலாம். மற்ற குழந்தைகளைப் போல இயல்பாக ஒரு மொழியை கற்றுக்கொள்ள பேச்சுக் குறைபாடு உள்ள குழந்தைகளால் இயலாது. காது கேளாமை இல்லாத நிலையிலும் பேச்சுக் குறைபாடுள்ள குழந்தைகளால் வார்த்தைகளின் ஒலிகளை பிரித்தறிந்து கொள்ள இயலாது. இத்தகைய குழந்தைகளுக்கு மொழியின் ஓசை, இலக்கணம், போன்றவற்றை பற்றிய ஒட்டு மொத்த புலன்காட்சி நன்கு வளர்ச்சியடையாமலும் இருக்கும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வயதாகியும் குழந்தைகள் பேசாமல் இருப்பது ஏன்?  Empty Re: வயதாகியும் குழந்தைகள் பேசாமல் இருப்பது ஏன்?

Post by *சம்ஸ் Thu 9 Jun 2011 - 22:32

பேச்சுக் குறைபாடுள்ள குழந்தைகள் நாளடைவில் தன்னுடைய குறையை உணர்ந்து கொண்டு வயதாக வயதாக பிறரிடம் பேசாமல் விலகிச் செல்ல முயற்சிப்பர். இதனால் அவர்களின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சியும் பாதிக்கக்கூடும்.

இக்குறையை போக்க குழந்தைகளின் சூழ்நிலையில் மொழியின் பங்கு அதிகமாக இருக்குமளவுக்கு பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் எவ்வாறு வார்த்தைகளை உச்சரிப்பது மற்றும் வாக்கியமாக பேசுவது ஆகியவைகளை பெற்றோர் முன்மாதிரியாக இருந்து கற்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். இவைகளே குழந்தைகளின் பேச்சு வளர்ச்சியை அதிகப் படுத்துவதில் நல்ல பலனை அளிக்கும். எனவே மிக விரைவில் தன் குழந்தைக்கு பேச்சு குறைபாடு உள்ளதா என்று கண்டறிந்து சிகிச்சையளித்தல் முக்கியமாகும். பெற்றோர்கள் இரண்டு வயது முதல் மூன்று வயதான தங்கள் குழந்தைகு என்னென்ன வார்த்தைகள் தெரியும் என்பதையும் இரண்டு வார்த்தைகள் கொண்ட வாக்கியங்கள் எத்தனை தெரியும் என்பதையும் கண்டறிய வேண்டும். குழந்தைக்கு 50 வார்த்தைகளுக்கும் குறைவாகவும், இரண்டு சொல் வாக்கியங்கள் ஒன்று கூடவும் தெரியவில்லை என்றால் அக்குழந்தை பேச்சுக் குறைபாடு உள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். பொதுவாக இரண்டு வயதில் அதிகமாக காணப்படும் இக்குறைபாடு 3 அல்லது 4 வயதாகும் போது மெதுவாக குணமாக ஆரம்பிக்கிறது அதற்கு காரணம் பேச்சுக் குறைபாட்டை உண்டாக்கும் சில ஊறுபாடுகள் தானாகவே சரியகிவிடுவதாகும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» வயதாகியும் குழந்தைகள் பேசாமல் இருப்பது ஏன்?
» மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று.
» இன்னும் 15 ஆண்டில் 50 கோடி குழந்தைகள் பட்டினி கிடப்பார்கள்: சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு ..
» நாக்கு கசப்பாய் இருப்பது ஏன்?
» 103 வயதாகியும் ஆரோக்கியமாக வாழும் மீனம்மாள் பாட்டி சொல்லும் ஆலோசனையை படியுங்களேன்.!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum