Latest topics
» பல்சுவை _ ரசித்தவைby rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
கோழி முந்தியா? முட்டை முந்தியா?
3 posters
Page 1 of 1
கோழி முந்தியா? முட்டை முந்தியா?
கோழி முந்தியா? முட்டைமுந்தியா? இது, நீண்ட நெடுங்காலமாய் எழுப்பப்படும் கேள்வி.
முட்டை முந்தியென்றால், கோழியில்லாமல் முட்டை எப்படி வந்தது? என்று மேலோட்டமாக ஆராய்ந்தால் இப்பிரச்சினை தீராது சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இப்பிரச்சினைக்கு விடை காண இயலும். இப்பிரச்சினைக்கு இரு வகைகளில் விடையளிக்க முடியும். (1) தர்க்க ரீதியாக விளக்கம் (2) அறிவியல் ரீதியான விளக்கம்.
1. தர்க்க ரீதியான விளக்கம்:
முட்டையென்று சொன்னால் அதை உருவாக்க ஒரு ஆண் கோழியும் ஒரு பெண் கோழியும் வேண்டும். ஆக, முட்டை தோன்ற வேண்டுமானால் இரண்டு கோழிகள் முதலில் வேண்டும். அதாவது கோழிகள் கலந்த பின்னே முட்டை தோன்றும். எனவே, இரண்டு கோழிகளின் சேர்க்கையால் தோன்றக்கூடிய முட்டை முதலில் தோன்றியது என்று சொல்வதைவிட, கோழியே முதலில் தோன்றியது என்று கொள்ளலாம்; சொல்லலாம்.
சுருக்கமாகச் சொன்னால் முட்டை என்பது ஒரு கரு அதேபோல் விதை என்பதும் ஒரு கரு. உயிர் தோன்றாமல் கரு தோன்ற முடியாது. எனவே, கோழியும், செடியுந்தான் முதலில் தோன்றின. முட்டையும், விதையும் பிறகுதான் தோன்றின. இது வாத ரீதியான முடிவு.
அறிவியல் ரீதியான விளக்கம்:
உலகில் உயிரினங்கள் தோன்றி வளர்ந்த விதம் குறித்து தெளிவாய் நிரூபிக்கக்கூடிய அறிவியல் கொள்கையான பரிணாமக் கோட்பாடுகளின் (Evolution theories) துணை கொண்டு இப்பிரச்சினையை ஆழ்ந்து ஆராய்ந்தால் இறுதியான, உறுதியான முடிவிற்கு வர இயலும்.
இன்றைக்குள்ள உயிரினங்கள் அப்படியே தோன்றியவை அல்ல. ஆரம்பத்தில் தோன்றிய உயிரினங்களுடைய வளர்ச்சிதான் இன்றுள்ள உயிரினங்கள். இது அறிவியல் ரீதியாக நிரூபித்துக் காட்டப்படும் உண்மை. சில உயிரற்ற பொருட்கள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், தட்ப வெப்ப நிலையில், சூரிய ஒளியின் உதவியால் ஒன்றிணைந்போது அதற்கு உயிர்ப்பு ஏற்பட்டு அது உயிரியாக மாறி அசைய ஆரம்பித்தது.
அவ்வாறு தோன்றிய உயிரிகள் ஒரு செல் உயிரிகள் ஆகும். அவற்றிற்கு உறுப்புகள் இல்லை. அவற்றிற்குள் ஆண், பெண் பாகுபாடோ, தாவரம், விலங்கு என்ற வேறுபாடோ இல்லை. பின்னர்தான், தாவரம், விலங்கு வேறுபாடு தோன்றியது. அதன் பிறகுதான் ஆண், பெண் வேறுபாடு தோன்றியது. பின்னர் சிறிய செடியிலிருந்து பெரிய ஆலமரம் வரை தாவர இனமும்; சிறிய அமீபாவில் இருந்து மனிதன் வரை விலங்கினமும் வளர்ச்சியடைந்தது. இன்று பல்வேறு வகையான உயிரினங்கள் உலகில் காணப்படுகின்றன.
(உயிரற்ற பொருள்களிலிருந்து உயிர் உருவாகி இருக்க முடியும் என்பதை அண்மையில் உருவாக்கப்பட்ட செயற்கை உயிர் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. மேலும் விரிவாய்ப் படிக்க பெரியார் பிஞ்சு ஜூன் மாத இதழைப் பார்க்கவும்).
*
ஆண் பெண் வேறுபாடின்றி இனப்பெருக்கம் எப்படிசெய்தன?
அந்த ஒரு செல் உயிரிகள், தாமே பலவாகச் சிதைந்து இனப்பெருக்கம் செய்தன. இவ்வாறு இனப்பெருக்கம் செய்யும் ஒரு செல் உயிரிகளை, இக்காலத்தில்கூட விஞ்ஞானிகள் கண்டுபிடித்துக் காட்டுகின்றனர்.
அப்படிப்பட்ட ஒரு செல் உயிரிகள்தான் காலப் போக்கில் பரிணாமம் அடைந்து, தாவரங்களாகவும் விலங்குகளாகவும் தனித்தனியே பிரிந்தன. இவ்வாறு தாவர வர்க்கமாகவும், விலங்கினமாகவும் வேறுபாடு அடைந்த ஒரு செல் உயிரிகள், பல ஆயிரமாண்டுகளாக பரிணாமம், அடைந்து ஆண் பெண் வேறுபாடு பெற்றன. அப்போது, ஆண், பெண் பாகுபாடு மிகவும் எளிய அமைப்புகளோடுதான் காணப்பட்டது. இப்பரிணாம வளர்ச்சியை இன்றைய விஞ்ஞானிகள் தெளிவாக நிரூபித்துக் காட்டுகின்றனர்.
இவ்வாறு பரிணாமம் அடைந்த ஒரு செல் உயிரிகள், பல செல் உயிரிகளாக பரிணாமம் அடைந்து; பல செல் உயிரி புழுவாகி; புழு நீந்துவனவாகி; நீந்துவன august ஊர்வனவாகி; ஊர்வன august பறப்பனவாகி; பாய்வனவாகி, குரங்காகி, மனிதக் குரங்காகி அதிலிருந்து மனித இனம் வந்தது; வளர்ந்தது.
இப்படித்தான், தாவர இனமும் ஒருசெல் உயிரியிலிருந்து பெரிய ஆலமரம் வரை பரிணமித்து வளர்ந்தது.
எனவே, இன்றுள்ள உயிரினங்கள் அனைத்தும், அது கோழியாய் இருந்தாலும் செடியாய் இருந்தாலும் அவை ஒரு செல் உயிரியிலிருந்து தோன்றியவை என்பது தெளிவாகிறது.
அந்த ஒரு செல் உயிரி, உயிரற்ற பொருட்கள் திடீரென சூரிய ஒளியின் உதவியால் ஒன்றிணைந்ததால் உருவாகியது.
எனவே, ஆரம்ப உயிரி முட்டையிருந்து தோன்றவில்லை. அது உயிரற்ற பொருளிலிருந்தே தோன்றியது என்பது விளங்குகிறது.
முட்டையென்பது கோழிக்கு மட்டும்தான் உண்டு என்பதில்லை. எறும்பைவிட சிறிய உயிரினத்திற்கும் உண்டு. விதை என்பது சிறிய தாவரத்திற்கும் உண்டு.
பறவைகளுக்கும் முட்டையிருப்பது போன்று குட்டி போடுகின்ற விலங்குகளுக்கு கரு உண்டு. (விந்துவும் சினை அணுவும் சேர்ந்து உருவானதே கரு) முட்டை என்றாலும் கரு என்றாலும் ஒன்றுதான். முட்டையென்றாலும் விதை என்றாலும் ஒன்றுதான்.
ஆண், பெண் பறவைகள் இணைவதால் உருவானது முட்டை. ஆணும், பெண்ணும் (விலங்குகளில்) இணைவதால் உருவாவது கரு. செடியில் பூவிலுள்ள ஆண் பகுதியும், பெண் பகுதியும் சேர்வதால் உருவாவது விதை, ஆக முட்டை, கரு. விதை இவை அனைத்தும் இயல்பில் ஒன்றே. எல்லாம் கரு தான்.
எனவே, இப்பிரச்சினையை ஆராயும் போது கோழியையும், கோழி முட்டையையும்; அவரைச் செடியையும் அவரை விதையையும் கருத்தில் கொள்வதற்குப் பதிலாக,
உயிரி முதலில் தோன்றியதா? அல்லது உயிரி, முட்டையிலிருந்து தோன்றியதா? என்று ஆராய்வதே சரியான முறையாகும்.
இவ்வாறு ஆராய்ந்தால், உயிரிதான் முதலில் தோன்றியது august உயிரற்ற பொருட்களிலிருந்து தோன்றியது என்பது august அறிவியல் கண்டுபிடிப்புகளின்மூலம் தெளிவாய் விளங்குகிறது. அந்த உயிரியிலிருந்து தோன்றியவையே பறவைகளும், செடிகளும். அவ்வாறு பறவைகளும், செடிகளும் தோன்றிய பிறகே முட்டையும், விதையும் தோன்றின. எனவே முட்டையும் விதையும் முந்தி தோன்றியவை அல்ல என்பது புலனாகிறது.
ஆகவே,செடி முந்தியா? விதை முந்தியா? என்றால்
செடிதான் முந்தி!
கோழி முந்தியா? முட்டை முந்தியா? என்றால்
கோழிதான் முந்தி! என்பது தெளிவாகிறது.
***
இப்போது புதிதாக அறிவியல் என்ன கண்டு பிடித்திருக்கிறது?
இங்கிலாந்து விஞ்ஞானிகள், கோழியில் இருந்துதான் முட்டை வந்தது என்று அடித்துக் கூறுகின்றனர்.
இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்ட், வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றி அண்மையில் ஆய்வு நடத்தினார்கள்.
முட்டையின் செல்களை சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்த அவர்கள், அதில் முட்டையின் செல்கள் வோக்லெடின்-17 என்ற புரோட்டின் மூலம் உருவாகி இருந்தமை தெரிய வந்தது.
இந்த வோக்லெடின்-17 செல் கோழியின் உடலில் உள்ளது. இதுவே முட்டையாக மாறி இருக்கிறது.
வோக்லெடின்-17 புரோட்டின், கிறிஸ்டல், நியூகிளீசாக மாறி, தானாக வளர்ச்சி பெற்று முட்டை செல்களாக மாறுவது இதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே கோழியில் இருந்துதான் முட்டை வந்துள்ளது என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் குழுவின் தலைவர் டாக்டர் கோலின் ப்ரீமென் கூறுகிறார்.
***
நன்றி பெரியார் பிஞ்சு.
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: கோழி முந்தியா? முட்டை முந்தியா?
இது எங்களுக்கு ஏற்கனவே தெரிந்த உண்மை
எனிவே தகவலுக்கு நன்றி ஷஹி
எனிவே தகவலுக்கு நன்றி ஷஹி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கோழி முந்தியா? முட்டை முந்தியா?
தகவலுக்கு நன்றி ஷஹி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கோழி முட்டை பிடிக்காதா? தாவர முட்டை இருக்கு!
» கோழி எதுக்கு கடைல முட்டை வாங்குச்சு?
» கோழி முதலில் வரும் ! பின்னர் முட்டை வரும் !!
» முட்டை ஒன்று முட்டை இடுமா?? அதிசயம் ஆனால் உண்மை!
» கோழி
» கோழி எதுக்கு கடைல முட்டை வாங்குச்சு?
» கோழி முதலில் வரும் ! பின்னர் முட்டை வரும் !!
» முட்டை ஒன்று முட்டை இடுமா?? அதிசயம் ஆனால் உண்மை!
» கோழி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|