Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
வடக்கில் முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழருக்கு பசில் அழைப்பு
Page 1 of 1
வடக்கில் முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழருக்கு பசில் அழைப்பு
வடக்கில் முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழருக்கு பசில் அழைப்பு
நெல்லியடி சந்தை பொருளாதார மத்திய நிலையமாக மாற்றப்படும்
மர்லின் மரிக்கார்
தமிழ் மக்களின் சுபீட்சத்தி லும், விமோசனத்திலும் உண் மையான அக்கறை கொண் டவர்கள் என்றால் புலம் பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதியில் முதலீ டுகளை செய்ய முன்வரவேண் டும் எனத் தெரிவித்திருக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம், நெல்லியடி சந்தை திறப்பு உட்பட பல அபிவிருத்தித் திட்டங்களை நேற்று அங்குரார்ப்பணம் செய்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேற்கண்ட வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
குடிநீர் மற்றும் மின்விநியோகத் திட்டங்கள், வீதி அபிவிருத்தி வேலைகள் என்பவற்றையும் அமைச்சர் தொடக்கி வைத்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
யுத்தம் காரணமாக அழிவுற்றுள்ள யாழ்ப்பாணம் உள்ளிட்ட முழு வடமாகாணத்தையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக சகல வேலைத்திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இந்த வகையில் சகல உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும். இதற்காக அவர்கள் நிதி முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்நாட்டு தமிழ் மக்களின் சுபீட்சத்திலும், விமோசனத்திலும் உண்மையான அக்கறை கொண்டவர்கள் எனின் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் இங்கு முதலீடு செய்ய முன்வர வேண்டும். இது அம்மக்களின் வாழ்வில் சுபீட்சத்தை ஏற்படுத்தும். இதனை எவரும் மறுக்கமுடியாது.
இதைவிடுத்து தமிழ் மக்களின் நலன்களுக்காக குரல் கொடுப்பதாக வெளிநாடுகளில் கூறித்திரிவதால் இந்நாட்டுத் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையுமே கிடைக்காது. இதனை புலம்பெயர் தமிழர்கள் உணர்ந்து செயற்படுவது மிக அவசியம்.
அரசாங்கம் தனது பொறுப்புக்களை நன்கு உணர்ந்து செயற்பட்டு வருகிறது. இந்தவகையில் பலகோடி ரூபா முதலீட்டுடன் உட்கட்டமைப்பு வசதிகள் யாவும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த அடிப்படையிலான பல அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இன்னும் பல அபிவிருத்தித் திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டிருக்கின்றன.
உயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்பட்டுவிட்டது. அப்பிரதேசங்களில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். மீள்குடியேற்ற நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துள்ளன.நெல்லியடி சந்தை மிக விரைவில் பொருளாதார மத்திய நிலையமாக மேம்படுத்தப்படும். யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதி, கல்வியைப்போன்று விவசாயத்துக்கும் புகழ்பெற்ற பிரதேசமாகும். யாழ்ப்பாணம் வெங்காய உற்பத்தியில் தன்னிறைவுகண்டு வருகிறது.
யாழ். குடாநாட்டின் திராட்சை, வெங்காயம் மற்றும் மரக்கறி வகைகளை தென்பகுதி சந்தைக்கு அனுப்பி வைப்பதற்கான பிரதான நிலையமாக நெல்லியடி சந்தை மாற்றியமைக்கப்படும். இந்நடவடிக்கை அடுத்துவரும் ஓரிரு வருட காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்படும்.
சமாதான சூழல் ஏற்படுத்தப்பட்ட பின்னர் இப்போது வடபகுதியில் தேர்தல் நடக்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் ஓரிரு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தமிழ் மக்களை ஒன்றுபடுமாறும், தங்கள் ஒற்றுமையை உலகிற்குக் காட்டுமாறும் கூறி மக்களை பிழையான வழியில் இட்டுச்செல்ல முயற்சிக்கின்றனர்.
1977 ஆம் ஆண்டு முதல் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளுக்கு தமிழ் மக்களுக்குச் சேவை செய்வதற்கென பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அச்சந்தர்ப்பங்களை எல்லாம் வேண்டுமென்றே அவர்கள் நழுவவிட்டார்கள்.
என்றாலும் ஒவ்வொரு தேர்தலிலும் இதுதான் தமக்குக் கிடைத்திருக்கும் இறுதிச் சந்தர்ப்பம் எனக்கூறி மக்களை தவறாக கூறி வழிநடத்தியதால்தான் தமிழ் மக்கள் அழிவுகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டது. இந்த அழிவுகளிலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் குறிப்பாக தமிழ் மக்களையும் அரசாங்கம் மீட்டெடுத்திருக்கின்றது.
அம்மக்களின் சுபீட்சத்துக்கான வேலைத்திட்டங்களையும் அரசு முன்னெடுத்திருக்கின்றது. ஆகவே இச்சந்தர்ப்பத்தில் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளின் பசப்பு வார்த்தைகளை நம்பி தமிழ் மக்கள் ஏமாந்துவிடக்கூடாது என்றும் இந்நிகழ்வில் அமைச்சர் பசில் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
நெல்லியடி சந்தை பொருளாதார மத்திய நிலையமாக மாற்றப்படும்
மர்லின் மரிக்கார்
தமிழ் மக்களின் சுபீட்சத்தி லும், விமோசனத்திலும் உண் மையான அக்கறை கொண் டவர்கள் என்றால் புலம் பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதியில் முதலீ டுகளை செய்ய முன்வரவேண் டும் எனத் தெரிவித்திருக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம், நெல்லியடி சந்தை திறப்பு உட்பட பல அபிவிருத்தித் திட்டங்களை நேற்று அங்குரார்ப்பணம் செய்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேற்கண்ட வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
குடிநீர் மற்றும் மின்விநியோகத் திட்டங்கள், வீதி அபிவிருத்தி வேலைகள் என்பவற்றையும் அமைச்சர் தொடக்கி வைத்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
யுத்தம் காரணமாக அழிவுற்றுள்ள யாழ்ப்பாணம் உள்ளிட்ட முழு வடமாகாணத்தையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக சகல வேலைத்திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இந்த வகையில் சகல உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும். இதற்காக அவர்கள் நிதி முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்நாட்டு தமிழ் மக்களின் சுபீட்சத்திலும், விமோசனத்திலும் உண்மையான அக்கறை கொண்டவர்கள் எனின் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் இங்கு முதலீடு செய்ய முன்வர வேண்டும். இது அம்மக்களின் வாழ்வில் சுபீட்சத்தை ஏற்படுத்தும். இதனை எவரும் மறுக்கமுடியாது.
இதைவிடுத்து தமிழ் மக்களின் நலன்களுக்காக குரல் கொடுப்பதாக வெளிநாடுகளில் கூறித்திரிவதால் இந்நாட்டுத் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையுமே கிடைக்காது. இதனை புலம்பெயர் தமிழர்கள் உணர்ந்து செயற்படுவது மிக அவசியம்.
அரசாங்கம் தனது பொறுப்புக்களை நன்கு உணர்ந்து செயற்பட்டு வருகிறது. இந்தவகையில் பலகோடி ரூபா முதலீட்டுடன் உட்கட்டமைப்பு வசதிகள் யாவும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த அடிப்படையிலான பல அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இன்னும் பல அபிவிருத்தித் திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டிருக்கின்றன.
உயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்பட்டுவிட்டது. அப்பிரதேசங்களில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். மீள்குடியேற்ற நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துள்ளன.நெல்லியடி சந்தை மிக விரைவில் பொருளாதார மத்திய நிலையமாக மேம்படுத்தப்படும். யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதி, கல்வியைப்போன்று விவசாயத்துக்கும் புகழ்பெற்ற பிரதேசமாகும். யாழ்ப்பாணம் வெங்காய உற்பத்தியில் தன்னிறைவுகண்டு வருகிறது.
யாழ். குடாநாட்டின் திராட்சை, வெங்காயம் மற்றும் மரக்கறி வகைகளை தென்பகுதி சந்தைக்கு அனுப்பி வைப்பதற்கான பிரதான நிலையமாக நெல்லியடி சந்தை மாற்றியமைக்கப்படும். இந்நடவடிக்கை அடுத்துவரும் ஓரிரு வருட காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்படும்.
சமாதான சூழல் ஏற்படுத்தப்பட்ட பின்னர் இப்போது வடபகுதியில் தேர்தல் நடக்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் ஓரிரு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தமிழ் மக்களை ஒன்றுபடுமாறும், தங்கள் ஒற்றுமையை உலகிற்குக் காட்டுமாறும் கூறி மக்களை பிழையான வழியில் இட்டுச்செல்ல முயற்சிக்கின்றனர்.
1977 ஆம் ஆண்டு முதல் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளுக்கு தமிழ் மக்களுக்குச் சேவை செய்வதற்கென பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அச்சந்தர்ப்பங்களை எல்லாம் வேண்டுமென்றே அவர்கள் நழுவவிட்டார்கள்.
என்றாலும் ஒவ்வொரு தேர்தலிலும் இதுதான் தமக்குக் கிடைத்திருக்கும் இறுதிச் சந்தர்ப்பம் எனக்கூறி மக்களை தவறாக கூறி வழிநடத்தியதால்தான் தமிழ் மக்கள் அழிவுகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டது. இந்த அழிவுகளிலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் குறிப்பாக தமிழ் மக்களையும் அரசாங்கம் மீட்டெடுத்திருக்கின்றது.
அம்மக்களின் சுபீட்சத்துக்கான வேலைத்திட்டங்களையும் அரசு முன்னெடுத்திருக்கின்றது. ஆகவே இச்சந்தர்ப்பத்தில் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளின் பசப்பு வார்த்தைகளை நம்பி தமிழ் மக்கள் ஏமாந்துவிடக்கூடாது என்றும் இந்நிகழ்வில் அமைச்சர் பசில் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சிங்கப்பூர் பிரதமருடன் மன்மோகன்சிங் சந்திப்பு: இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு
» வடக்கில் தமிழருக்கு பெருவெற்றி 18 சபைகளும் கூட்டமைப்பு வசம்!
» புலம்பெயர் நாடுகளில் உள்ள 20 தமிழர்களை கைது செய்ய அரசு பகீரதப் பிரயத்தனம்
» வேலாயுததிற்கு முதலீடு செய்ய தயங்கும் ஆஸ்கார் தரப்பு
» இலங்கையின் எரிபொருள் துறையில் முதலீடு செய்ய பிரான்ஸ் விருப்பம்
» வடக்கில் தமிழருக்கு பெருவெற்றி 18 சபைகளும் கூட்டமைப்பு வசம்!
» புலம்பெயர் நாடுகளில் உள்ள 20 தமிழர்களை கைது செய்ய அரசு பகீரதப் பிரயத்தனம்
» வேலாயுததிற்கு முதலீடு செய்ய தயங்கும் ஆஸ்கார் தரப்பு
» இலங்கையின் எரிபொருள் துறையில் முதலீடு செய்ய பிரான்ஸ் விருப்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|