Latest topics
» பல்சுவை களஞ்சியம்by rammalar Today at 9:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
வீடு புரோக்கர்
Page 1 of 1
வீடு புரோக்கர்
அருமையான ஸ்பேஸ் உள்ள 2 பெட்ரூம் வீடு ஸார்... சிட்டிக்குள்ளே ப்ரைம் லொக்கேஷனில் வாடகைக்கு கிடைக்கிறது என்று ஷாப்பிங் மால்களில், லோக்கல் நியூஸ்பேப்பர்களில் மின்னும் விளம்பரங்களைக் கண்டு ஃபோன் செய்தால் அனைத்தையும் விவரிப்பார் அந்த நபர்.
சரி வீட்டைப் பார்க்கணும் என்றால் உடனே வரச் சொல்லி அழைத்துச் சென்று காட்டுவார். ஓக்கே... பிடித்திருக்கிறது. காண்ட்ராக்ட் போடலாமே? என்று சொன்னால் வீட்டு ஓனருக்கான கூடுதல் விபரங்களைத் தரும் முன், ஒருமாத அல்லது பாதிமாத வாடகை வேணும். அது "கம்பெனி செலவுக்கு / ஆபீஸ் சார்ஜ் ஸார்!" என்பார்.
அவருக்கான அந்தப் பெருந்தொகையினை கமிஷன்(!) கொடுத்த பின்னரே அவருக்கும் அந்த வீட்டு ஓனருக்கும் எந்த விதத்திலும் தொடர்பில்லை என்ற விபரமே தெரியவரும். வெறுமனே ஓனரின் தொலைபேசி எண்களை மட்டுமே வைத்துக் கொண்டு உரிமையாளர் போன்று விளம்பரங்கள் செய்து பல லட்சம் சம்பாதித்துக் கொழிக்கும் பெரும் கூட்டமே உள்ளது.
இதில் பல ரகங்கள் உள்ளன. ஒரு பங்களா டைப் வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, உரிமையாளருக்குத் தெரியாமல் அந்தக் கட்டிடத்தை பத்தாக கூறு போட்டு அதில் பதினைந்து குடும்பங்களை வாடகைக்கு விட்டு பணம் கொழிப்பது ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம், வீடு கிடைக்காத திண்டாட்டத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு, வீட்டின் உரிமையாளருக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத ஆசாமிகள், இவ்வாறு இடைத்தரகர்களாக மாறி பணம் கொழிப்பது வளைகுடா நாடுகளில் வழக்கமாகி விட்ட ஒன்று.
தமது சம்பளத்தில் பாதிக்கு மேற்பட்ட தொகையினை வாடகைக்கே செலவிடும் வயிற்றெரிச்சலுடன் வேறு வழியில்லாமல் கிடைக்கும் ஒட்டு ஒடைசல் இடத்தில் ஒதுங்கிக் கொள்ளும் குடும்பங்கள் பற்றி ஒரு பெரிய டாக்குமெண்டரி படமே எடுக்கலாம். அத்தனை சோகங்கள் ஒளித்துள்ளன. இதில் உச்சகட்டமாக அதிக பட்ச வீட்டு வாடகை விலைகள் உள்ள சிறிய நாடான கத்தரில் பல வருடங்களாக இத்தகைய புரோக்கர்களின் ஆட்டம் இருந்து வந்தது. பொதுமக்கள் மிகவும் துன்பத்திற்குள்ளாக்கி வந்த இந்த ஆட்டம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது.
ஆம். கத்தர் அரசு இத்தகைய இடைத்தரகர்களுக்கு QR. 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டமொன்றை (Law No 13 of 2011) நேற்று 26-07-2011 உருவாக்கி வெளியிட்டுள்ளது.
புதிய சட்டத்தின்படி ஏஜண்ட்/புரோக்கர் தொழில் செய்யும் தனிநபரோ, நிறுவனமோ அரசு பதிவு பெற்றபின்னரே செய்ய இயலும். இதற்கான லைசென்ஸை அரசே முன்னின்று வழங்குகிறது.
லைசென்ஸ் உரிமம் பெற்ற ஏஜெண்ட் எந்த அளவு லாபம் சம்பாதிக்க முடியும் என்பதை இதன் விண்ணப்பத்தில் காணப்படும் விதிகள் தெளிவு படுத்துகின்றன.
இந்த லைசென்ஸைப் பெற அரசிடம் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதனைப் பரிசீலித்தபின்னர் 30 நாட்களுக்குள் இதற்குண்டான பதிலை அரசு தெரிவிக்கும். இந்த லைசென்ஸ் இருவருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன்பின்னர் மீண்டும் ரினிவலுக்காக அப்ளை செய்யவேண்டும்.
லைசென்ஸ் பெற்று இதிலுள்ள விதிகளை மீறும் ஏஜெண்ட்டின் உரிமம் Articles 9, 8, 11 and 12 படி உடனடியாக ரத்து செய்யப்படும்.
இந்த லைசென்ஸ் இல்லாமல் விளம்பரம் செய்து "கம்பெனி செலவு" அல்லது "ஆபிஸ் பீஸ்" என்று சம்பாதிக்கும் இடைத் தரகர்களுக்கு உடனடியாக ஐம்பதாயிரம் ரியால்கள் (கிட்டத்தட்ட ஆறு இலட்சம் இந்திய ரூபாய்கள்) அபராதம் விதிக்கப்படும். கட்ட இயலாதவர்கள் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
இது நாள் வரை புரோக்கர்களின் கொட்டத்தில் மாட்டித் தவித்து வந்த பொதுமக்கள், அரசின் இந்த அறிவிப்பு கண்டு நிம்மதிப் பெருமூச்சுடன் தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சரி வீட்டைப் பார்க்கணும் என்றால் உடனே வரச் சொல்லி அழைத்துச் சென்று காட்டுவார். ஓக்கே... பிடித்திருக்கிறது. காண்ட்ராக்ட் போடலாமே? என்று சொன்னால் வீட்டு ஓனருக்கான கூடுதல் விபரங்களைத் தரும் முன், ஒருமாத அல்லது பாதிமாத வாடகை வேணும். அது "கம்பெனி செலவுக்கு / ஆபீஸ் சார்ஜ் ஸார்!" என்பார்.
அவருக்கான அந்தப் பெருந்தொகையினை கமிஷன்(!) கொடுத்த பின்னரே அவருக்கும் அந்த வீட்டு ஓனருக்கும் எந்த விதத்திலும் தொடர்பில்லை என்ற விபரமே தெரியவரும். வெறுமனே ஓனரின் தொலைபேசி எண்களை மட்டுமே வைத்துக் கொண்டு உரிமையாளர் போன்று விளம்பரங்கள் செய்து பல லட்சம் சம்பாதித்துக் கொழிக்கும் பெரும் கூட்டமே உள்ளது.
இதில் பல ரகங்கள் உள்ளன. ஒரு பங்களா டைப் வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, உரிமையாளருக்குத் தெரியாமல் அந்தக் கட்டிடத்தை பத்தாக கூறு போட்டு அதில் பதினைந்து குடும்பங்களை வாடகைக்கு விட்டு பணம் கொழிப்பது ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம், வீடு கிடைக்காத திண்டாட்டத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு, வீட்டின் உரிமையாளருக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத ஆசாமிகள், இவ்வாறு இடைத்தரகர்களாக மாறி பணம் கொழிப்பது வளைகுடா நாடுகளில் வழக்கமாகி விட்ட ஒன்று.
தமது சம்பளத்தில் பாதிக்கு மேற்பட்ட தொகையினை வாடகைக்கே செலவிடும் வயிற்றெரிச்சலுடன் வேறு வழியில்லாமல் கிடைக்கும் ஒட்டு ஒடைசல் இடத்தில் ஒதுங்கிக் கொள்ளும் குடும்பங்கள் பற்றி ஒரு பெரிய டாக்குமெண்டரி படமே எடுக்கலாம். அத்தனை சோகங்கள் ஒளித்துள்ளன. இதில் உச்சகட்டமாக அதிக பட்ச வீட்டு வாடகை விலைகள் உள்ள சிறிய நாடான கத்தரில் பல வருடங்களாக இத்தகைய புரோக்கர்களின் ஆட்டம் இருந்து வந்தது. பொதுமக்கள் மிகவும் துன்பத்திற்குள்ளாக்கி வந்த இந்த ஆட்டம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது.
ஆம். கத்தர் அரசு இத்தகைய இடைத்தரகர்களுக்கு QR. 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டமொன்றை (Law No 13 of 2011) நேற்று 26-07-2011 உருவாக்கி வெளியிட்டுள்ளது.
புதிய சட்டத்தின்படி ஏஜண்ட்/புரோக்கர் தொழில் செய்யும் தனிநபரோ, நிறுவனமோ அரசு பதிவு பெற்றபின்னரே செய்ய இயலும். இதற்கான லைசென்ஸை அரசே முன்னின்று வழங்குகிறது.
லைசென்ஸ் உரிமம் பெற்ற ஏஜெண்ட் எந்த அளவு லாபம் சம்பாதிக்க முடியும் என்பதை இதன் விண்ணப்பத்தில் காணப்படும் விதிகள் தெளிவு படுத்துகின்றன.
இந்த லைசென்ஸைப் பெற அரசிடம் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதனைப் பரிசீலித்தபின்னர் 30 நாட்களுக்குள் இதற்குண்டான பதிலை அரசு தெரிவிக்கும். இந்த லைசென்ஸ் இருவருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன்பின்னர் மீண்டும் ரினிவலுக்காக அப்ளை செய்யவேண்டும்.
லைசென்ஸ் பெற்று இதிலுள்ள விதிகளை மீறும் ஏஜெண்ட்டின் உரிமம் Articles 9, 8, 11 and 12 படி உடனடியாக ரத்து செய்யப்படும்.
இந்த லைசென்ஸ் இல்லாமல் விளம்பரம் செய்து "கம்பெனி செலவு" அல்லது "ஆபிஸ் பீஸ்" என்று சம்பாதிக்கும் இடைத் தரகர்களுக்கு உடனடியாக ஐம்பதாயிரம் ரியால்கள் (கிட்டத்தட்ட ஆறு இலட்சம் இந்திய ரூபாய்கள்) அபராதம் விதிக்கப்படும். கட்ட இயலாதவர்கள் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
இது நாள் வரை புரோக்கர்களின் கொட்டத்தில் மாட்டித் தவித்து வந்த பொதுமக்கள், அரசின் இந்த அறிவிப்பு கண்டு நிம்மதிப் பெருமூச்சுடன் தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|