சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Today at 21:59

» பூக்கள்
by rammalar Today at 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Today at 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09

அவதார் பரப்பிய இஸ்லாமிய விரோத கருத்துக்கள் Khan11

அவதார் பரப்பிய இஸ்லாமிய விரோத கருத்துக்கள்

Go down

அவதார் பரப்பிய இஸ்லாமிய விரோத கருத்துக்கள் Empty அவதார் பரப்பிய இஸ்லாமிய விரோத கருத்துக்கள்

Post by பாயிஸ் Sun 31 Jul 2011 - 22:45

சுவர்க்கத்தை பற்றி எந்தக் கண்ணும் கண்டிராத, எந்த காதும் கேட்டிராத அதன் இன்பங்களை, எந்த ஆன்மாவும் கற்பனை செய்ய இயலாது என்கிறது இஸ்லாம். ஆனால் கற்பனையாக ஒரு மாதிரி சுவனத்தை உருவாக்க முயன்றுள்ளது இந்த அவதார் திரைப்படம். இவ்வாறு அவதார் பரப்பிய இஸ்லாமிய விரோத கருத்துக்கள் பல இருந்தாலும், பண்டோரா எனும் கற்பனை சுவர்க்கம் சம்மந்தப்பட்டவைகளில் சிலவற்றை மட்டும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

1) சுவர்க்கம் என்பது இறைவனுக்கு கட்டுப்பட்டு நடந்த நல்லடியார்களுக்கு உரியதாகும். அங்கு அச்சமோ, துன்பமோ, துயரங்களோ, பிரச்சனைகளோ, கொடிய மிருகங்களோ இருக்காது. சுவனத்தில் 'ஸலாம்,ஸலாம்' என்னும் சொல்லையே செவியுறுவார்கள் (56:26) என்று குர்ஆன் கூறுகிறது. ஆனால் அவதார் திரைப்படம் அறிமுகப்படுத்தும் பண்டோரா சுவர்க்கத்திலோ கொடூரகுண்டுவீச்சுகள், போர்கள், சண்டை சச்சரவுகள், இரத்தம் சிந்துதல், நிம்மதியின்மை போன்ற சுவர்க்கத்தின் தன்மைகளுக்கு எதிரான விஷயங்கள் பதியவைக்கப்பட்டுள்ளன. மேலும் கொடிய மிருகங்கள் வாழ்வதாகவும், அது நவிகளை தாக்க முற்படுவதுபோன்றும் காட்சிகள் அமைந்திருக்கின்றன. இஸ்லாம் கூறுவதுபோன்று சுவர்க்கத்தை (தவறாக) கற்பனை செய்துவிட்டு அதில் இல்லாத விஷயங்களை புகுத்தும் யூத ஜியோனிஸ தந்திரமே இது.

2) குர்ஆன் சுவர்க்கவாசிகளின் உடையை பற்றி சொல்லும் போது ஸூன்துஸூ, இஸ்தபரக் என்ற பச்சைநிற அழகிய பட்டாடைகளும், கடகங்களும் அணிவிக்கப்பட்டிருப்பார்கள் என்கிறது (18:21, 44:53, 76:12, 76:21). அவதாரின் கற்பனை சுவர்க்கத்தில் நவிகளுக்கு கடகங்களைப்போல கைகைளில் அணிவிக்கப்பட்டிருந்தாலும், ஆடை விஷயத்தில் மேற்கத்திய நாகரிக ரசனைக்கொப்ப நவிகளை அரைநிர்வாணமாக அழைய விட்டுவிட்டார்கள். இஸ்லாம் ஆடை அணிவித்து உங்களை கௌரவிக்கும் முகமாக போதித்தால் நாங்கள் அதை நிர்வாணமாகக் காட்டுவோம் என்ற கயமைத்தனம் தெரிகிறது.

3) இஸ்லாம் சுவர்க்கவாசிகளை பற்றி கூறும் போது அவர்கள் மகிழ்ச்சியில் திழைத்தவர்களாக, தனக்கு இறைவன் அளித்த பரிசுகளை எண்ணி இறைவனைப் புகழ்ந்தவர்களாக இருப்பார்கள் என்று கூறுகிறது. சுவர்க்கம் ஒரு மாபெரும் அரசாங்கம் என்கிறது (பார்க்க 76 ம் அத்தியாயம் ஸூரா அத்தஹ்ர்). மேலும் சுவனத்தை அடைந்த ஒருவர் தான் சுவனத்தில்தான் இருக்க வேண்டும் என்று விரும்புவாரே அல்லாமல் அதைவிட்டுவிட்டு வெளியேறுதல் என்ற ஒரு நிலையை விரும்பமாட்டார். இவ்வவுலகம் அழிக்கப்பட்டு, நியாயத்தீர்ப்பு நாளுக்குப் பின்னர் இறைவன் தன் நல்லடியார்களுக்கு வழங்கும் பரிசுதான் சுவர்க்கம் என்னும் அழிவில்லா வாழ்க்கை. அந்நாளில் வானம் சுருட்டப்பட்டு பூமி அழிக்கப்பட்டு விடும் என்பதையும் கவனத்தில் கொள்க. ஆனால் அவதார் காட்டும் பண்டோரா சுவர்க்கத்திலோ கதாநாயகன் பூமியிலிருந்து சுவர்க்கத்திற்கும் பின்னர் சுவர்க்கத்திலிருந்து பூமிக்கும் வருவதுபோன்ற கட்சிகளை பார்க்கிறோம். இதிலிருந்து சுவர்க்கவாசிகள் மனம்போன போக்கில் சுவனத்திலிருந்து வெளியேறி வேற்றுகிரகங்களுக்கு செல்லலாம் என்றும், பூமி போன்ற மற்ற கோள்கள் அழியாமல் இருக்கும் என்றும் நச்சுப் போதனை செய்யப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

4) சுவர்க்க வாழ்க்கையை நித்திய ஜூவனுள்ள வாழ்க்கையாக இறைவன் ஆக்கியுள்ளான். சுவர்க்கவாசிகளுக்கு மரணம் என்பதே இல்லை என்கிறது இஸ்லாம். முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள் (44:56) என்ற குர்ஆன் கூறுகிறது. இதற்கு எதிராக ஜேம்ஸ் கமரூனின் கற்பனை சுவர்க்கமான பண்டோராவில் நவிகள் மரணிக்கின்றனர், கொலை செய்யப்படுகிறார்கள்.

5) இறுதியாக பண்டோரா சுவர்க்கத்தில் மரணமடைந்த கிரிஸ் என்ற மனித நவிபெண்ணை உயிராக்கும் முயற்சியும் நடக்கிறது. நவிகள் அனைவரும் அந்த பிரமாண்டமரத்தில் ஒன்று கூடி தங்களின் கைகளை கோர்த்துக்கொண்டு புரியாத பாஷையில் பாடல் ஒன்றை படிப்பார்கள். பின்னர் அந்த நவிப்பெண்ணின் பிடரியில் ஓர் ஒளிவெள்ளம் பாய்ந்து மயக்க நிலையை விட்டு அந்தப் பெண் சற்று விலகுவாள். இங்கு நாம் சொல்ல வருவது மரணித்தவர்களை உயிர்த்தெழுப்புவது யார்? மனிதனின் பிடரி நரம்பின் முக்கியத்துவம் போன்ற விஷயங்கள் அல்ல. அவைகள் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே இங்கு நாம் சொல்லவருவது புரியாத பாஷையில் பாடப்பட்ட அந்த பாடல் பற்றிதான். இதுபோன்ற புரியாத பாஷையில் பாடல் ஒன்று Jay-Z The Black Album என்ற பாப் ஆல்பத்தில் வரும். அதாவது Susej Redrum Redrum. இப்படி ஒரு ஆங்கிலச் சொல்லை நாம் படித்ததில்லையே என்று நீங்கள் என்னலாம். இதை கொஞ்சம் வலமிருந்து இடமாக படித்துப்பாருங்கள் Murder Murder Jesus என்று வரும். முஸ்லிம்கள் கண்ணியத்துக்குரிய இறைத்தூதரர்களில் ஒருவராக மதிக்கும் நபி ஈஸா (அலை) அவர்களுக்தெதிராக பாடப்பட்ட பாப் பாடலை நேர்மாறாக பதிவு செய்து கேட்டு கண்டுபிடித்தனர். அதுபோல அவதார் கண்டுபிடித்துள்ள புரியாத நவிப்பாஷையையும், அவர்கள் படிக்கும் பாடலையும் இவ்வாறு ஆய்வு செய்தால் அதில் புதைந்திருக்கும் புரட்டுகள் வெளிவரலாம்.

எனவே அவதார் போன்ற ஹாலிவுட் திரைபடங்களின் விஷமத்தனத்திலிருந்து உங்களையும் உங்களின் குடும்பத்தையும் பாதுகாப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம். மறைவான இணைவைப்பான ரியாவின் பக்கம் மெல்ல மெல்ல இழுத்துச்சென்று, பின்னர் பகிரங்க இணைவைப்பில் இட்டுச் செல்லும் ஹாலிவுட் - பாலிவுட் - கோலிவுட் சூழ்ச்சிகளை விட்டும் முஸ்லிம் சமூகத்தை அல்லாஹ் பாதுகாப்பானாக.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum