சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

நில அபகரிப்பு தொடர்பாக பொய் வழக்கு தொடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்; கருணாநிதி Khan11

நில அபகரிப்பு தொடர்பாக பொய் வழக்கு தொடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்; கருணாநிதி

2 posters

Go down

நில அபகரிப்பு தொடர்பாக பொய் வழக்கு தொடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்; கருணாநிதி Empty நில அபகரிப்பு தொடர்பாக பொய் வழக்கு தொடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்; கருணாநிதி

Post by நண்பன் Tue 9 Aug 2011 - 5:07

சென்னை, ஆக.9-

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி:- தி.மு.க. ஆட்சிக் காலத்தின் போது உண்மையாக தங்கள் சொத்துக்களை விற்றவர்களே, தற்போது தி.மு.க. மீது புகார் கூறினால், அ.தி.மு.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க காத்திருக்கிறது என்ற நம்பிக்கையோடு வீண் புகார் கூறுகிறார்களே?

பதில்:-அதனால்தான் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பொய்யான புகார்களைக் கூறுவோருக்கு தண்டனை அளிக்க ஒரு சட்டமே கொண்டு வரப்பட்டது. நேற்றையதினம் கூட, சென்னை உயர் நீதிமன்றத்தில் தவறான நோக்கத்துக்காக, பொது நல மனு தாக்கல் செய்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அளித்த தீர்ப்பில் பிரச்சினைக்குரிய இடம் தொடர்பாக திருக்கழுக்குன்றம் முன்சீப் நீதி மன்றத்தில் சிவில் வழக்கு உள்ளதாகவும், அதிலே எந்த உத்தரவும் இன்னமும் வழங்கப்படாத நிலை உள்ளதாகவும், மனுதாரர்கள் பொது நல மனு என்ற பெயரில் தவறான நோக்கத்துடன் மனுவை தாக்கல் செய்திருப்பதாகவும் கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்வதோடு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டிருக்கிறார்கள். அதைப்போலவே நில அபகரிப்பு தொடர்பாக பொய் வழக்கு தொடுப்பவர்களுக்கும் இதுபோன்று அபராதம் விதிக்கப்பட்டால், பொய் புகார்களும் அதனால் ஏற்படும் கொடுமைகளும் குறையும் அல்லவா?

கேள்வி:- அ.தி.மு.க. அரசின் முதல் நிதி நிலை அறிக்கை குறித்து புகழ் மாலை சூட்டுவதில் ஒருவருக் கொருவர் போட்டிப் போட்டுக் கொள்கிறார்களே?

பதில்:- நிதி நிலை அறிக்கை பற்றி நான் ஏற்கனவே விளக்கமாக சொல்லியிருக்கிறேன். மேலும் அதைப் பற்றிக் கூற வேண்டுமேயானால் காலியாக உள்ள 60 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதைப் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்கு அ.தி.மு.க. ஆட்சி பின்பற்றப் போகும் முறை பற்றி எந்தவிதக் குறிப்பும் இல்லை. அண்ணா பல்கலைக் கழகங்களை இணைத்து ஒரே பல்கலைக் கழகமாக ஆக்கப்போவதாகச் சொன்னார்கள். அது என்னவாயிற்று என்று நிதி நிலை அறிக்கையில் சொல்லப்படவில்லை.

அனைத்துத் துறைகளிலும் 2 லட்சம் காலிப்பணி இடங்கள் இருப்பதாக அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி சொல்லி வருகிறது. அவற்றை நிரப்புவதற்கான திட்டம் எதுவும் இல்லை. 2004-முதல் நடைமுறையில் இருந்து வரும் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்குள்ளான பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிடுவேன் என்று தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா கூறிய வாக்குறுதி பற்றி எதுவும் இல்லை. "டாஸ்மாக்'' பணியாளர்களின் நிரந்தரம் உள்ளிட்ட அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றப்போவதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் அறிவிப்பும் இல்லை.

ஒன்றே கால் கோடி மாணவ - மாணவியரின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட சமச்சீர் கல்வி குறித்து ஒரு வார்த்தைகூடச் சொல்லப்பட வில்லை. நீதி மன்றங்கள் பல முறை காலக்கெடு விதித்து, அதற்குள் சமச்சீர் பாடப் புத்தகங்களை விநியோகிக்க வேண்டுமென்று கூறியும், அதை மதிக்கவே இல்லை. கல்விக் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்பு ஏதும் இல்லை.

சென்னை உயர் நீதி மன்றமே கல்விக் கட்டணக் குழுத் தலைவரை 19-ம் தேதிக்குள் நியமித்தாக வேண்டுமென்று கட்டளையிட வேண்டிய நிலைமை அல்லவா ஏற்பட்டிருக்கிறது. அருந்ததியர்க்கான தனி இட ஒதுக்கீடு பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. துப்புரவுப் பணியாளர்களின் துன்பத்தைத் துடைக்கவும்-அவர் தம் தன்மானம் காக்கவும்; பல திட்டங்களைக் கழக அரசு செயல்படுத்தி வந்தது. குறிப்பாக, மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றிச் சுமக்கும் கொடுமையைத் தவிர்க்கும் நடவடிக்கையிலே கழக அரசு முயற்சி மேற்கொண்டது.

அந்தத் திட்டத்திற்காக அப்போது குரல் கொடுத்த மார்க்சிஸ்ட்கள், இப்போது தோழமை கருதி, வாய் மூடிக் கொண்டிருக்கிறார்கள்போலும்! அந்தப் பணியாளர்களைப் பற்றி இந்த நிதி நிலை அறிக்கையிலே எதுவும் இல்லை. இஸ்லாமியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு தொடருமா என்ற சந்தேகம் இஸ்லாமியர்களுக்கு உள்ளது. இந்த அய்யப்பாட்டினைப் போக்கிடும் வகையில் அறிவிப்பு எதுவும் இல்லை. மத்திய அரசின் "ஆதார்'' திட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டவர்கள், "சாதி வாரிக் கணக்கெடுப்பைப்'' பற்றி எதுவும் சொல்லவில்லை. கரும்பு, நெல், பால் போன்றவற்றின் கொள்முதலுக்குக் கூடுதல் விலை தரப் போவதாகத் தேர்தலுக்கு முன்னால் உறுதிமொழி கொடுத்தவர்களின் நிதி நிலை அறிக்கையிலே, அவற்றைப் பற்றியெல்லாம் எந்தக் கருத்தும் இல்லை.

இவ்வாறு அறிக்கையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நில அபகரிப்பு தொடர்பாக பொய் வழக்கு தொடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்; கருணாநிதி Empty Re: நில அபகரிப்பு தொடர்பாக பொய் வழக்கு தொடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்; கருணாநிதி

Post by kalainilaa Tue 9 Aug 2011 - 5:12

நல்லா சொல்லுங்க தல .இபப்டி இருக்கும் போது,பொய் கேஸ் மட்டும் போட்டால்என்ன சொல்லுவது . {)) அப்படித்தானே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» பொய் வழக்கு போட்டவர்கள் மீது வழக்கு தொடருவோம்'' மத்திய மந்திரி மு.க.அழகிரி பேட்டி
» கலைஞர் டி.வி.க்கு 1.25 கோடி ரூபா அபராதம் விதிக்க வேண்டுமென்பதே சி.பி.ஐ. அபிப்பிராயம்
» 2 கோடி மதிப்புள்ள பெண் வீடு அபகரிப்பு: திருப்பூர் தி.மு.க. மேயர் மீது வழக்கு
» இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் : தமிழக சட்டசபையில் ஏகமனதான தீர்மானம்
» ஜெ., வழக்கு: ரூ. ஒரு லட்சம் அபராதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum