Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Today at 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
புறக்கணிப்பு முடிவு வாபஸ் சட்டசபை கூட்டங்களில் தி.மு.க. உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்
2 posters
Page 1 of 1
புறக்கணிப்பு முடிவு வாபஸ் சட்டசபை கூட்டங்களில் தி.மு.க. உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்
சென்னை, ஆக.14-
சட்டசபை
கூட்டங்களில் தி.மு.க. உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்.
ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு நாங்கள் அச்சப்படவில்லை என்று சபாநாயகர்
டி.ஜெயக்குமாருக்கு தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தகவல்
தெரிவித்துள்ளார்.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
கோவி.செழியன் (திருவிடைமருதூர்), டி.ஆர்.பி.ராஜா (மன்னார்குடி) ஆகியோர்
நேற்று கோட்டைக்கு வந்தனர். சபாநாயகர் டி.ஜெயக்குமாரை சந்தித்து, தி.மு.க.
சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்து அனுப்பிய கடிதத்தைக்
கொடுப்பதற்காக அவர்கள் வந்திருந்தனர். அந்த நேரத்தில் சபாநாயகர் இல்லாததால்
சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீனிடம் அந்த கடிதத்தை கொடுத்தனர்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
எங்கள்
சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் சார்பில் கடந்த ஜுன் மாதம் 8-ந் தேதி
தங்களுக்கு நான் எழுதிய கடிதத்தில், தி.மு.க.வைச் சேர்ந்த உறுப்பினர்கள்
அனைவரையும் பேரவையில், ஒரே பகுதியில் சட்டப்பேரவையில், சட்டமன்ற தி.மு.க.
தலைவர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு பின்பகுதியில், அமர்ந்து செயலாற்ற
பேரவைத் தலைவர் என்ற முறையில் தாங்கள் ஆவன செய்தால்தான் எங்களால் தொடர்ந்து
அவையிலே பணியாற்றிட இயலும். அதற்கான வாய்ப்பினை தாங்கள் உடனடியாக
ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று நான் வைத்த வேண்டுகோள், பட்ஜெட் மீதான
பொதுவிவாதம் முடிகின்ற வரையில் ஏற்கப்படவில்லை.
இந்த
விவாதத்தில் கலந்து கொண்டு எங்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள்
தங்கள் கருத்துகளைச் சொல்லவும், தொகுதிவாழ் மக்களின் கோரிக்கைகளை எடுத்துச்
சொல்லவும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. சட்டமன்றத்திற்கு ஒவ்வொரு
கட்சியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏ.க்கள் ஒரேபகுதியில்
இருந்தால்தான் விவாதத்தின்போது எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து
அவ்வப்போது கலந்து பேசி முடிவெடுத்திட இயலும் என்பது தாங்கள் அறியாதது
அல்ல.
எதிர்கட்சிகளின் சார்பில் வைக்கப்படும்
இதுபோன்ற சாதாரண கோரிக்கைகளைக்கூட தாங்கள் புறக்கணிப்பதைப் பார்க்கும்போது,
அவை விவாதத்தில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு தங்கள்
கருத்துகளை தெரிவிக்காமல் இருப்பதையே ஆளுங்கட்சிக்கு உதவிடக்கூடிய செயல்
என்று தாங்கள் கருதுகிறீர்களோ என்ற எண்ணம் ஏற்படும் என்பதால், தங்களுக்கு
மீண்டும் ஒரு வேண்டுகோளை வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தக் கடிதம்
எழுதுகிறேன்.
நாடாளுமன்றத்திலும் சரி, மற்ற
மாநிலங்களிலும் சரி மன்றங்களில் உறுப்பினர்கள் அமர்வது என்பது கட்சிகளின்
அடிப்படையில், அந்தந்த கட்சிகளைச் சேந்த உறுப்பினர்கள் ஒரேபகுதியில்
அமருகின்ற அடிப்படையிலேதான் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். நாங்கள்
அவைக்கு வராதது குறித்து, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் அவையிலே
பேசும்போது, இந்தக் கோரிக்கையை சிறுபிள்ளைத்தனமாக கோரிக்கை என்றும், ஏதோ
அச்சப்பட்டுக் கொண்டு அவைக்கு வராமல் இருக்கிறோம் என்றும்
கூறியிருக்கிறார். பேரவைத் தலைவர் என்ற முறையில் அனைத்துக் கட்சி
உறுப்பினர்களின் வேண்டுகோளை தாங்கள் ஏற்பீர்கள் என்ற இன்னமும் நம்பிக்
காத்திருந்தோமே தவிர, பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு அச்சப்பட்டுக்
கொண்டல்ல என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
இதற்கு
பின்னரும் எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் ஒரே இடத்தில் அமரச்
செய்வதற்கு தாங்கள் அனுமதி தரவில்லை என்றால், அதையும் பொதுமக்களிடத்தில்
தெரிவித்துவிட்டு, எங்கள் ஜனநாயகக் கடமையை தொடர்ந்து ஆற்றாமல் இருப்பது
மக்களுக்கு அளிக்க வேண்டிய கடமையில் இருந்து தவறுவதாகும் என்ற எண்ணத்தோடு,
பேரவையில் பல்வேறு துறைகளின் மீது நடைபெறும் விவாதங்களில் தி.மு.க.
எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிப்பார்கள் என்பதை
தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
சட்டசபை
கூட்டங்களில் தி.மு.க. உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்.
ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு நாங்கள் அச்சப்படவில்லை என்று சபாநாயகர்
டி.ஜெயக்குமாருக்கு தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தகவல்
தெரிவித்துள்ளார்.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
கோவி.செழியன் (திருவிடைமருதூர்), டி.ஆர்.பி.ராஜா (மன்னார்குடி) ஆகியோர்
நேற்று கோட்டைக்கு வந்தனர். சபாநாயகர் டி.ஜெயக்குமாரை சந்தித்து, தி.மு.க.
சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்து அனுப்பிய கடிதத்தைக்
கொடுப்பதற்காக அவர்கள் வந்திருந்தனர். அந்த நேரத்தில் சபாநாயகர் இல்லாததால்
சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீனிடம் அந்த கடிதத்தை கொடுத்தனர்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
எங்கள்
சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் சார்பில் கடந்த ஜுன் மாதம் 8-ந் தேதி
தங்களுக்கு நான் எழுதிய கடிதத்தில், தி.மு.க.வைச் சேர்ந்த உறுப்பினர்கள்
அனைவரையும் பேரவையில், ஒரே பகுதியில் சட்டப்பேரவையில், சட்டமன்ற தி.மு.க.
தலைவர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு பின்பகுதியில், அமர்ந்து செயலாற்ற
பேரவைத் தலைவர் என்ற முறையில் தாங்கள் ஆவன செய்தால்தான் எங்களால் தொடர்ந்து
அவையிலே பணியாற்றிட இயலும். அதற்கான வாய்ப்பினை தாங்கள் உடனடியாக
ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று நான் வைத்த வேண்டுகோள், பட்ஜெட் மீதான
பொதுவிவாதம் முடிகின்ற வரையில் ஏற்கப்படவில்லை.
இந்த
விவாதத்தில் கலந்து கொண்டு எங்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள்
தங்கள் கருத்துகளைச் சொல்லவும், தொகுதிவாழ் மக்களின் கோரிக்கைகளை எடுத்துச்
சொல்லவும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. சட்டமன்றத்திற்கு ஒவ்வொரு
கட்சியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏ.க்கள் ஒரேபகுதியில்
இருந்தால்தான் விவாதத்தின்போது எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து
அவ்வப்போது கலந்து பேசி முடிவெடுத்திட இயலும் என்பது தாங்கள் அறியாதது
அல்ல.
எதிர்கட்சிகளின் சார்பில் வைக்கப்படும்
இதுபோன்ற சாதாரண கோரிக்கைகளைக்கூட தாங்கள் புறக்கணிப்பதைப் பார்க்கும்போது,
அவை விவாதத்தில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு தங்கள்
கருத்துகளை தெரிவிக்காமல் இருப்பதையே ஆளுங்கட்சிக்கு உதவிடக்கூடிய செயல்
என்று தாங்கள் கருதுகிறீர்களோ என்ற எண்ணம் ஏற்படும் என்பதால், தங்களுக்கு
மீண்டும் ஒரு வேண்டுகோளை வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தக் கடிதம்
எழுதுகிறேன்.
நாடாளுமன்றத்திலும் சரி, மற்ற
மாநிலங்களிலும் சரி மன்றங்களில் உறுப்பினர்கள் அமர்வது என்பது கட்சிகளின்
அடிப்படையில், அந்தந்த கட்சிகளைச் சேந்த உறுப்பினர்கள் ஒரேபகுதியில்
அமருகின்ற அடிப்படையிலேதான் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். நாங்கள்
அவைக்கு வராதது குறித்து, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் அவையிலே
பேசும்போது, இந்தக் கோரிக்கையை சிறுபிள்ளைத்தனமாக கோரிக்கை என்றும், ஏதோ
அச்சப்பட்டுக் கொண்டு அவைக்கு வராமல் இருக்கிறோம் என்றும்
கூறியிருக்கிறார். பேரவைத் தலைவர் என்ற முறையில் அனைத்துக் கட்சி
உறுப்பினர்களின் வேண்டுகோளை தாங்கள் ஏற்பீர்கள் என்ற இன்னமும் நம்பிக்
காத்திருந்தோமே தவிர, பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு அச்சப்பட்டுக்
கொண்டல்ல என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
இதற்கு
பின்னரும் எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் ஒரே இடத்தில் அமரச்
செய்வதற்கு தாங்கள் அனுமதி தரவில்லை என்றால், அதையும் பொதுமக்களிடத்தில்
தெரிவித்துவிட்டு, எங்கள் ஜனநாயகக் கடமையை தொடர்ந்து ஆற்றாமல் இருப்பது
மக்களுக்கு அளிக்க வேண்டிய கடமையில் இருந்து தவறுவதாகும் என்ற எண்ணத்தோடு,
பேரவையில் பல்வேறு துறைகளின் மீது நடைபெறும் விவாதங்களில் தி.மு.க.
எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிப்பார்கள் என்பதை
தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புறக்கணிப்பு முடிவு வாபஸ் சட்டசபை கூட்டங்களில் தி.மு.க. உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்
இது எல்லாம் அரசியலில் சகஜமப்பா ......
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» ஆப்கானில் வீரர்களை வாபஸ் பெற பிரான்ஸ் முடிவு
» புதுவை சட்டசபையில் காங்கிரஸ்-தி.மு.க. வெளிநடப்பு; அ.தி.மு.க. புறக்கணிப்பு
» மக்காவை நபிகள் நாயகம் வெற்றி கொள்வார்கள்
» அரசு விழாக்கள், கூட்டங்களில் பாட்டில் குடிநீருக்குத் தடை
» பாராட்டுக் கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது: அமைச்சர்களுக்கு ஜெ. தடை உத்தரவு
» புதுவை சட்டசபையில் காங்கிரஸ்-தி.மு.க. வெளிநடப்பு; அ.தி.மு.க. புறக்கணிப்பு
» மக்காவை நபிகள் நாயகம் வெற்றி கொள்வார்கள்
» அரசு விழாக்கள், கூட்டங்களில் பாட்டில் குடிநீருக்குத் தடை
» பாராட்டுக் கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது: அமைச்சர்களுக்கு ஜெ. தடை உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|