சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Yesterday at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Yesterday at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Yesterday at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Yesterday at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Yesterday at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Yesterday at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Sun 19 May 2024 - 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Sun 19 May 2024 - 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Sun 19 May 2024 - 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Sun 19 May 2024 - 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Sun 19 May 2024 - 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Sun 19 May 2024 - 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Sun 19 May 2024 - 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Sun 19 May 2024 - 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Sun 19 May 2024 - 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Sun 19 May 2024 - 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Sun 19 May 2024 - 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Sun 19 May 2024 - 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Sun 19 May 2024 - 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Sun 19 May 2024 - 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!  Khan11

அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!

+3
Atchaya
kalainilaa
பர்ஹாத் பாறூக்
7 posters

Go down

அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!  Empty அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!

Post by பர்ஹாத் பாறூக் Sat 10 Sep 2011 - 1:21

அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!  Ib

இவர் சிரிய தேசத்தைச் சேர்ந்த பாடகர். பெயர் இப்றாஹிம் காஷ_ஷ்.


சிரியாவின் ஹமா பிரதேசத்தைச் சேர்ந்த இவர் பொது நிகழ்வுகள், திருமண வைபவங்களில் பாடுகின்ற மரபு ரீதியான பாடகர்.

சிரியாவில் தற்போது ஏற்பட்டிருக்கும் மக்கள் எழுச்சியில் இவரும் ஒரு பிரபல
நட்சத்திரம். மிக எளிமையான வசனங்களைக் கொண்டு அவரே எழுதிப்பாடும் அவரது
பாடலின் ஒவ்வொரு வசனத்தையும் அவர் பாட அந்த வசனங்களை மீளப் பாடுகின்றனர்
லட்சக் கணக்காகத் திரண்டிருக்கும் மக்கள்.

அந்தப் பாடல் சிரியாவின் தலைவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறுகிறது.

அடக்கு முறைக்கும் அசுரத்தாக்குதலுக்கும் அரச படையினரது துப்பாக்கிக்
குண்டுகளுக்கும் எதிராக வலிமை மிக்க ஆயுதமாக அவர் பயன்படுத்தியது அவரது
குரலை மாத்திரமே!

ஹமா நகர மத்தியில் அவர் கடைசியாகப் பாடியது இவ்வருடம் ஜூலை முதலாம் திகதி.
இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடி நின்று அரச
எதிர் ஆர்ப்பாட்டத்தை நடத்திய போது அவர் பாடினார்.

“பஷர் நீர் வெளியேற வேண்டிய தருணம் இது...

பஷர், மாஹிரி. ரமி... ஆகியோர் கொள்ளையர்கள்...

அவர்கள் எனது உறவினர்களைக் கொள்ளை கொண்டவர்கள்...

பஷர்... உம் குற்றங்கள் மன்னிப்புக்குரியலையல்ல...

பஷர்... நீர் அமெரிக்காவின் கையாள்... நீர் ஒரு பொய்யன்...

பஷர்... நீ ஒரு தேசத் துரோகி...


அவமானப்படுவதை விட இறப்பது மேல்...

சுதந்திரம் வாசலில் வந்து காத்து நிற்கிறது...

மக்கள் உமது ராஜாங்கத்தை வீழ்த்தத் துடிக்கிறார்கள்...

பஷர்... நீர் வெளியேற வேண்டிய தருணம் இது....!”


இப்றாஹிம் காஷ_ஷ் இன்று உயிருடன் இல்லை.


இந்த ஆர்ப்பாட்டம் நடந்து சரியாக
நான்காவது தினம் அஸ்ஸா ஆற்றங்கரையில் இப்றாஹிம் கஷ_ஷின் உடல்
கண்டெடுக்கப்பட்டது. அவரது குரல் வளை அறுக்கப்பட்டு உடல் துப்பாக்கிச்
சன்னங்களால் துளைத்தெடுக்கப்பட்டிருந்தது.


[url=http://1.bp.blogspot.com/-8RdoOo2JAWc/TledaQM_jeI/AAAAAAAAAfE/xJuCDH0ETBw/s1600/Ibrahim Qasouse.jpg]அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!  Ibrahim Qasouse[/url]


மத்திய கிழக்கில் ஏற்பட்டு வரும்
மக்கள் எழுச்சியின் வரிசையில் சிரியாவில் ஏற்பட்ட எழுச்சியுடன்
சம்பந்தப்பட்டவர்களுக்கு பஷர் அல் அஸாத்தின் அரசு தெளிவான ஒரு எச்சரிக்கையை
இப்றாஹிம் காஷ_ஷின் கொலை மூலம் விடுத்துள்ளதாக ஆய்வாளர்கள்
கருதுகிறார்கள்.

மக்கள் அடக்குமுறைக்கெதிராகவும் அராஜகங்களுக்கெதிராகவும் குரல் கொடுக்கும்
பாடகர் ஒருவர் கொலை செய்யப்படுவது இதுவே முதற் தடவையல்ல. சிலியில் 1973ல்
ஒகஸ்டோ பினோச்சே இராணுவப் புரட்சி மூலம் அரசைக் கைப்பற்றிய பின்னர் கைது
செய்யப்பட்டவர்களில் ஒருவர் விக்டர் ஜாரா என்ற பிரபல பாடகர்.


அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!  Victor%2BJara


ஒரு மகத்தான மக்கள் கலைஞனான அவருக்கு
நேர்ந்த கதி பரிதாபத்துக்குரியது. அவரை அடித்து எலும்புளை உடைத்துச்
சித்திரவதை செய்து உடலை சந்தியாகோ தெருவில் வீசி எறிந்தது அரசு. அவரது
உடலில் 44 துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்தன.

சலீம் அல் லோஸி லெபனானியப் பத்திரிகையாளர். இவர் சிரிய அரசுக்கெதிராக
80களில் எழுதி வந்தவர். லண்டனிலிருந்து வெளிவரும் அல் ஹவாதத் பத்திரிகையின்
வெளியீட்டாளரான இவர் கடத்திச் செல்லப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.




அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!  Salim




கையில் விலங்கிடப்பட்ட நிலையில்
கொலையாகியிருந்த இவரது முகத்தில் அசிற் ஊற்றப்பட்டிருந்தது. இந்தக்
கொலையின் பின்னணியில் சிரிய அரசே செயற்பட்டது என்று ஊடகங்கள் அடித்துப்
பேசின. இன்றும் அவர் பேசப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்.

இப்றாஹிம் கஷ_ஷின் மரணத்தைத் தொடர்ந்து அரச
எதிர்ப்பு மேலும் வலுவடைந்துள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வோரின்
பதாதைகளில் “ஹாபிஸ் (பஷரின் தந்தை) எனது பாட்டனாரை 1982ல் கொலை செய்தார்.
பஷர் எங்கள் தந்தையை (இப்றாஹிம் காஷ_ஷ்) 2011ல் கொலை செய்தார்” என்று
எழுதப்பட்டிருப்பதாக ஊடகங்கள் சொல்கின்றன.




அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!  Mideast%2520syria%2520uprising%27s%2520lyricist%2520-1578623082_v2_grid-6x2

31 வருடங்களுக்கு முன்னர் தனது தந்தையாரின் அரசினால் கொல்லப்பட்ட சலீம்
லோஸியை மக்கள் இன்றும் மறக்கவில்லை என்பதை இந்தப் பதாதைகள் மூலம் பஷர்
அறிந்து கொண்டிருப்பார். ஆக அதிகாரத்தில் இருக்கும் போது யார் அநியாயக்
கொலைக்கு ஆளானாலும் மக்கள் அதனை இலகுவில் மறந்த விடுவதில்லை என்பதையும்
கூடவே அவர் புரிந்து கொண்டிருப்பார்.

எல்லாக் கணக்குகளையும் கூட்டிக் கழிக்கும்
ஒரு தினம் வரும் போது அராஜகம் நிகழ்த்தியவர்களுக்காக இரங்க ஒரு
நாய்க்குட்டி கூட முன்வருவதில்லை.


இந்த நிலைக்கு ஆளான அநேகம் பேரின் அந்திம கால வாழ்க்கை தெருக்குப்பைக்குள்ளால் ஓடும் சுண்டெலியின் நிலையை விட மோசமானது.

இவ்வாறானவர்கள் அநேகரின் சரித்திரம் கண்முன்னே இருந்த போதிலும் ஆட்சியாளர்கள் ஏனோ அதிலிருந்து கற்றுக் கொள்வதில்லை.

எழுச்சிப் பாடல் ஒலிக்கும் ஒரு தொண்டையை
அறுப்பதானது தனது தொண்டையையேத் தானே அறுத்துக் கொள்வதற்கு ஒரு லட்சம்
கத்திகளைச் செய்து கொள்வதற்கு ஒப்பானது!

https://www.youtube.com/watch?v=3mG3V2fBYbw&feature=related

இந்த இணைப்பைச் சொடுக்கினால் இப்றாஹிம்
காஷ_ஷ் பாடுவதையும் அவரைத் தொடர்ந்து மக்கள் குரல் கொடுப்பதையும் நீங்கள்
கண்டும் கேட்டும் ரசிக்கலாம்.










 வலைப்பக்கத்தில் இருந்து

http://ashroffshihabdeen.blogspot.com/2011/08/blog-post_26.html 




பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!  Empty Re: அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!

Post by kalainilaa Sat 10 Sep 2011 - 5:17

எப்படி எல்லாம் ஆட்டம் போட்ட சாதம்,மரணம் ஒரு பாடம் தானே .
இப்போது இருக்கும் மன்னர்களுக்கும் ,மற்றவர்களுக்கும் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!  Empty Re: அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!

Post by Atchaya Sat 10 Sep 2011 - 6:30

அறிந்து கொள்ளவேண்டிய பதிவு ....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!  Empty Re: அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!

Post by அப்துல்லாஹ் Sat 10 Sep 2011 - 8:58

எழுச்சிப் பாடல் ஒலிக்கும் ஒரு தொண்டையை
அறுப்பதானது தனது தொண்டையையேத் தானே அறுத்துக் கொள்வதற்கு ஒரு லட்சம்
கத்திகளைச் செய்து கொள்வதற்கு ஒப்பானது!
சிறந்த பகிர்வு. நன்றி உறவே...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!  Empty Re: அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 9:11

அறியத்தமைக்கு நன்றி பர்ஹாத் :oops:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!  Empty Re: அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!

Post by lafeer Sat 10 Sep 2011 - 10:18

அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றி
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!  Empty Re: அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!

Post by jasmin Sat 10 Sep 2011 - 11:59

இதுதான் இஸ்லாமிய நாடுகளை ஆழும் சர்வாதிகளின் இன்றைய அராஜகம் .....தன்னைக் கொல்ல வந்து பத்ருப் போரில் கைதியான கைதிகளை ரசூல் சல் அவர்கள் எப்படி நடத்தினார்கள் என்று இந்த கயவர்கள் பார்க்க வேணடாமா ..அழியட்டும் இவர்களின் அட்டகாசங்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!  Empty Re: அறுபடும் குரல்வளைகளும் ஆர்ப்பரிக்கும் பாடல்களும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum