சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

கடையில் ரூபாய் நோட்டு விற்பனை ..... Khan11

கடையில் ரூபாய் நோட்டு விற்பனை .....

4 posters

Go down

கடையில் ரூபாய் நோட்டு விற்பனை ..... Empty கடையில் ரூபாய் நோட்டு விற்பனை .....

Post by அப்துல்லாஹ் Mon 26 Sep 2011 - 8:38

கோவை: 1,000, 500 மற்றும் 100 மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகள், பெட்டிக் கடை தோறும் அதிகளவில் விற்கப்படுகின்றன. கள்ள நோட்டு தடுப்புக்கான இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளை மீறி, ஒரிஜினல் நோட்டுகளை போன்றே அச்சு அசலாக போலி ரூபாய் நோட்டுகள், தனியார் அச்சகங்களில் அச்சிடப்படுகின்றன.
வெளிநாடுகளில் மறைமுகமாக அச்சிடப்படும் 1,000, 500, 100 ரூபாய் இந்திய கள்ள நோட்டுகள், இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டு புழக்கத்தில் விடப்படுகின்றன. இவற்றின் ஊடுருவலை தடுக்க மத்திய, மாநில புலனாய்வு துறைகளும், காவல்துறையினரும் மேற்கொள்ளும் முயற்சிகள் எடுபடுவதில்லை. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும், தென் மாநிலங்களிலும் கடந்த ஓராண்டில் மட்டும் 100 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளன. தமிழகத்திலும் 1,000 மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகளின் புழக்கம் சமீப காலமாக அதிகரித்துள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடப்பாண்டில் காவல்துறையினர் நடத்திய சோதனைகளில், பல லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் கட்டுக்கட்டாக பிடிபட்டுள்ளன.

இந்நிலையில், குழந்தைகளுக்கான விளையாட்டு நோட்டுகள் (சில்ரன்ஸ் பாங்க் சர்வீஸ்) என்ற பெயரில் 1,000, 500 மற்றும் 100 மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகள், கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு வீரர்களின் படத்துடன் அச்சிடப்பட்டு, தமிழகத்தில் பெட்டிக் கடை தோறும் விற்கப்படுகின்றன. இவை, சிறுவர்களுக்கான விளையாட்டு நோட்டு என குறிப்பிடப்பட்டிருந்தாலும், பார்ப்பதற்கு அசல் ரூபாய் நோட்டுகளை போலவே உள்ளன. ஒரிஜினல் ரூபாய் நோட்டுகளின் நீளம், அகலம் அப்படியே ஒத்துப் போகின்றன. ஒரிஜினல் கரன்சி நோட்டை, "ஸ்கேன்' செய்து, அதன் ஒரு பகுதியில் மட்டும் விளையாட்டு வீரர்களின் படங்களை அச்சிட்டுள்ளனர். மூன்று அல்லது நான்கு போலி ரூபாய் நோட்டுகளுடன், இரு மிட்டாய்களை வைத்து பாலித்தீன் கவரில் அடைத்து கடைகளில் விற்கின்றனர்; இதன் விலை ஒரு ரூபாய் மட்டுமே.

இவ்வளவு துல்லியமாக போலி ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு விற்பனை செய்யும் நபர்கள், ஒரிஜினல் நோட்டு போன்றே கள்ள நோட்டுகளை அச்சிடும் அபாயமும் உள்ளது. இது போன்ற போலி ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதிப்பதுடன், அச்சிடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வதும் அவசியம் என்கின்றனர் காவல்துறையினர். இந்திய ரூபாய் நோட்டுகளை அப்படியே "ஸ்கேன்' செய்து அச்சிடுவது, கலர் ஜெராக்ஸ் எடுப்பது, நோட்டுகளில் சிறு, சிறு மாற்றங்களை செய்து விளையாட்டுக்காக அச்சிடுவது, இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு எதிரானது. இச்செயலில் ஈடுபடுவோர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளவும் சட்டத்தில் இடமுள்ளது. சிறுவர்களுக்கான விளையாட்டு ரூபாய் நோட்டுகள் என்ற பெயரில் போலி ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதும், விற்பனை செய்வதும் குற்றமாகும்.இது போன்ற செயல்கள் அதிகரித்துள்ளதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால், பள்ளிகள் முன்புள்ள கடைகளை கண்காணித்து வருகிறோம்.

மேலும் போலி ரூபாய் நோட்டுகளை சில்லரை முறையில் விற்போரை பிடித்து, மொத்த வியாபாரிகள் மற்றும் அச்சிடுவோரை பிடிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கோவை மாநகர காவல் குற்றப்பிரிவு உதவி ஆணையர் கூறினார்.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கடையில் ரூபாய் நோட்டு விற்பனை ..... Empty Re: கடையில் ரூபாய் நோட்டு விற்பனை .....

Post by நண்பன் Mon 26 Sep 2011 - 9:06

அந்த ஆணையாளாருக்கும் ஒரு பெட்டியில் மொத்தமாக ஒரு தொகை அனுப்பினால் அவரும் கண்டுக்காமல் விட்டு விடுவார் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் அனைவரும் கருத்தில் கொள்ளவும் நோட்டுகளை பார்த்து கையாளவும் தகவலுக்கு நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடையில் ரூபாய் நோட்டு விற்பனை ..... Empty Re: கடையில் ரூபாய் நோட்டு விற்பனை .....

Post by kalainilaa Mon 26 Sep 2011 - 14:08

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கடையில் ரூபாய் நோட்டு விற்பனை ..... Empty Re: கடையில் ரூபாய் நோட்டு விற்பனை .....

Post by முனாஸ் சுலைமான் Mon 26 Sep 2011 - 18:59

கள்ள நோட்டா எடுத்தா நல்லா சம்பாதிக்கலாம் என்று நினைக்கன் ஆனால் :*&#: :*&#: :,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கடையில் ரூபாய் நோட்டு விற்பனை ..... Empty Re: கடையில் ரூபாய் நோட்டு விற்பனை .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum