Latest topics
» பல்சுவை _ ரசித்தவைby rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
சேரிக் குடியிருப்பாளருக்கு கொழும்புக்குள்ளேயே மாற்று இடம்; வீடுகள்
2 posters
Page 1 of 1
சேரிக் குடியிருப்பாளருக்கு கொழும்புக்குள்ளேயே மாற்று இடம்; வீடுகள்
சேரிக் குடியிருப்பாளருக்கு
கொழும்புக்குள்ளேயே
மாற்று இடம்; வீடுகள்
லக்ஷ்மி பரசுராமன்
கொழும்பின் சில பகுதிகளிலும், சேரிப்புறங்களிலும் அமைக்கப் பட்டிருக்கும் ஆறு பேர்ச்
நிலப்பரப்புக்கு உட்பட்ட வீடுகள் உடைக்கப்பட மாட்டாது.
மாறாக அத்தகைய வீட்டு
உரிமையாளர்கள் விரும்பினால் அரசாங்கத்தினால் அவ்வப் பகுதிகளுக்கு நியமிக்கப்பட்டிரு
க்கும் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடி தாம் விரும்பிய இடத்தில் கொழும்புக்குள்ளேயே
வீடுகளை அமைத்துக்கொள்ள முடியுமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ
நேற்றுத் தெரிவித்தார்.
பொரள்ளை தேர்தல் தொகுதிக்குட்பட்ட சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக சமூகத்தினருடன்,
பாதுகாப்பு செயலாளர் நேற்றையதினம் பாதுகாப்பு அமைச்சில் சந்திப்பொன்றை நடத்தினார்.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்படி, ஆறு பேர்ச்சிற்கு அதிகமான நிலப்பரப்பில் சட்டவிரோதமான முறையில் வீடுகளை
அமைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்கள் ஒன்றாக இணைந்து இணக்கம் தெரிவித்தாலே யொழிய
அவர்கள் தமது சொந்த இடங்களிலிருந்து அகற்றப்பட மாட்டார்கள் எனவும் அவர் உறுதியாகக்
கூறினார்.
அனைத்து வீட்டு உரிமையாளர்களும் இணங்கும் பட்சத்தில் அவர்களுக்கு மாற்று இடத்தில்
தொடர்மாடி வீடுகள் வழங்கப்படும். அதன்போது இதுவரை காலமும் அவர்கள் குடியிருந்த
நிலப்பரப்பிற்கு ஏற்ற அளவிலான வீடுகளை வழங்குவது முக்கிய கவனத்தில்
கொள்ளப்படுமெனவும் அவர் கூறினார்.
இதேவேளை, ரயில் தண்டவாளங்கள் மற்றும் பேரா வாவியின் ஓரம் சட்டவிரோதமாக
அமைக்கப்பட்டிருக்கும் 35 ஆயிரம் குடும்பங்கள் இனங்காணப்பட்டு ள்ளன.
இக்குடும்பத்தாருக்குப் கொழும்புக் குள்ளேயே தொடர்மாடி வீடுகளை வழங்க
தீர்மானித்துள்ளோம். இது சம்பந்தமாக நாம் ஆறு செயற்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.
இதில் 3 செயற் திட்டங்களுக்கான பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏனையவற்றை
அமைப்பதற்கான காணி நிலங்கள் தெரிவுசெய்யப்பட்டிருப்பதாகவும், அதற் கான நிதி
தயாரானதும் வேலைத்திடங்கள் துரிதகதியில் முன்னெடுக்கப்படுமெனவும் பாதுகாப்பு செயலர்
சுட்டிக்காட்டினார்.
சாதாரணமாக அடிப்படை வசதிகளுடன் வீடு ஒன்றை அமைப்பதற்கு 3 தொடக்கம் 3.5 மில்லியன்
வரையிலான செலவு ஏற்படும். எனவேதான், வர்த்தக சமூகத் தினரின் உதவியை
நாடியிருப்பதாகவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டார்.
உண்மையில், கொழும்பிற்குள் சட்ட விரோதமான முறையில் வீடுகளை அமைத்துக் கொண்டிருப்போரை
நாம் ஒருபோதும் கொழும்பிலிருந்து வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யமாட்டோம். இது
ஒருபோதும் இயலாத காரியம். அவர்களுக்கு கொழும்பிற்குள்ளேயே வீடுகள் வழங்கப்படும். தனி
வீடுகளை வழங்குவதற்கு இடவசதி இல்லாமை காரணமாகவே தொடர்மாடி வீடுகளை வழங்கவுள்ளோம்
என்றும் அவர் கூறினார்.
சட்டவிரோத வீடுகள் அமைக்கப்பட் டிருக்கும் இடத்தில் அரசாங்கத்தினால் எத்தகைய பாரிய
முதலீட்டினை செய்வது இயலாத காரியம். மக்களின் தரத்தை தரத்தை உயர்த்துவதுடன்
அவர்களுக்கு பாதுகாப்பான ஒரு சூழலை பெற்றுக் கொடுப்பதற்காகவே இத்திட்டங்கள்
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இதனால் அரசாங்கத்துக்கு எந்தவொரு இலாபமும் கிடைக்கப்
போவதில்லை யெனவும் இதன்போது பாதுகாப்புச் செயலர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, இக்கலந்துரையாடலின் போது, கொழும்பு நகருக்குள் குப்கை கூளங்களை அகற்றி
துப்பரவு செய்வதிலுள்ள இடர்பாடுகளையும் பாதுகாப்பு செயலாளர், வர்த்தக
சமூகத்தினருக்கு விளக்கினார். மாநகர சபையின் ஒத்துழைப்பு இல்லாமல் இதனைத்
தொடர்ந்தும் சரிவர முன்னெடுப்பது இயலாத காரியமெனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், பாதுகாப்புச் செயலாளர் கலந்துரையாடலுக்கு சமூகம் தந்திருந்த மேல்
மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர திஸ்ஸாநாயக்கவுக்கு
கொழும்புக்குள் இடம்பெறும் கஞ்சா பாவனை, மெகசின் வீதியில் அதிகரித்துவரும் போதைவஸ்து
விநியோகம், பஞ்சிகாவத்தை, புறக்கோட்டை பகுதிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு
வாகனங்கள் நிறுத்துவதில் உள்ள இடர்பாடுகள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறும்
பணிப்புரை விடுத்தார்.
இந்தக் கலந்துரையாடலில் நகர அபி விருத்தி அதிகார சபையின் முக்கியஸ்தர்கள்,
நிலமீட்டல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் அமைச்சின்
அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
தினகரன் லங்கா
கொழும்புக்குள்ளேயே
மாற்று இடம்; வீடுகள்
லக்ஷ்மி பரசுராமன்
கொழும்பின் சில பகுதிகளிலும், சேரிப்புறங்களிலும் அமைக்கப் பட்டிருக்கும் ஆறு பேர்ச்
நிலப்பரப்புக்கு உட்பட்ட வீடுகள் உடைக்கப்பட மாட்டாது.
மாறாக அத்தகைய வீட்டு
உரிமையாளர்கள் விரும்பினால் அரசாங்கத்தினால் அவ்வப் பகுதிகளுக்கு நியமிக்கப்பட்டிரு
க்கும் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடி தாம் விரும்பிய இடத்தில் கொழும்புக்குள்ளேயே
வீடுகளை அமைத்துக்கொள்ள முடியுமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ
நேற்றுத் தெரிவித்தார்.
பொரள்ளை தேர்தல் தொகுதிக்குட்பட்ட சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக சமூகத்தினருடன்,
பாதுகாப்பு செயலாளர் நேற்றையதினம் பாதுகாப்பு அமைச்சில் சந்திப்பொன்றை நடத்தினார்.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்படி, ஆறு பேர்ச்சிற்கு அதிகமான நிலப்பரப்பில் சட்டவிரோதமான முறையில் வீடுகளை
அமைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்கள் ஒன்றாக இணைந்து இணக்கம் தெரிவித்தாலே யொழிய
அவர்கள் தமது சொந்த இடங்களிலிருந்து அகற்றப்பட மாட்டார்கள் எனவும் அவர் உறுதியாகக்
கூறினார்.
அனைத்து வீட்டு உரிமையாளர்களும் இணங்கும் பட்சத்தில் அவர்களுக்கு மாற்று இடத்தில்
தொடர்மாடி வீடுகள் வழங்கப்படும். அதன்போது இதுவரை காலமும் அவர்கள் குடியிருந்த
நிலப்பரப்பிற்கு ஏற்ற அளவிலான வீடுகளை வழங்குவது முக்கிய கவனத்தில்
கொள்ளப்படுமெனவும் அவர் கூறினார்.
இதேவேளை, ரயில் தண்டவாளங்கள் மற்றும் பேரா வாவியின் ஓரம் சட்டவிரோதமாக
அமைக்கப்பட்டிருக்கும் 35 ஆயிரம் குடும்பங்கள் இனங்காணப்பட்டு ள்ளன.
இக்குடும்பத்தாருக்குப் கொழும்புக் குள்ளேயே தொடர்மாடி வீடுகளை வழங்க
தீர்மானித்துள்ளோம். இது சம்பந்தமாக நாம் ஆறு செயற்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.
இதில் 3 செயற் திட்டங்களுக்கான பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏனையவற்றை
அமைப்பதற்கான காணி நிலங்கள் தெரிவுசெய்யப்பட்டிருப்பதாகவும், அதற் கான நிதி
தயாரானதும் வேலைத்திடங்கள் துரிதகதியில் முன்னெடுக்கப்படுமெனவும் பாதுகாப்பு செயலர்
சுட்டிக்காட்டினார்.
சாதாரணமாக அடிப்படை வசதிகளுடன் வீடு ஒன்றை அமைப்பதற்கு 3 தொடக்கம் 3.5 மில்லியன்
வரையிலான செலவு ஏற்படும். எனவேதான், வர்த்தக சமூகத் தினரின் உதவியை
நாடியிருப்பதாகவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டார்.
உண்மையில், கொழும்பிற்குள் சட்ட விரோதமான முறையில் வீடுகளை அமைத்துக் கொண்டிருப்போரை
நாம் ஒருபோதும் கொழும்பிலிருந்து வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யமாட்டோம். இது
ஒருபோதும் இயலாத காரியம். அவர்களுக்கு கொழும்பிற்குள்ளேயே வீடுகள் வழங்கப்படும். தனி
வீடுகளை வழங்குவதற்கு இடவசதி இல்லாமை காரணமாகவே தொடர்மாடி வீடுகளை வழங்கவுள்ளோம்
என்றும் அவர் கூறினார்.
சட்டவிரோத வீடுகள் அமைக்கப்பட் டிருக்கும் இடத்தில் அரசாங்கத்தினால் எத்தகைய பாரிய
முதலீட்டினை செய்வது இயலாத காரியம். மக்களின் தரத்தை தரத்தை உயர்த்துவதுடன்
அவர்களுக்கு பாதுகாப்பான ஒரு சூழலை பெற்றுக் கொடுப்பதற்காகவே இத்திட்டங்கள்
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இதனால் அரசாங்கத்துக்கு எந்தவொரு இலாபமும் கிடைக்கப்
போவதில்லை யெனவும் இதன்போது பாதுகாப்புச் செயலர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, இக்கலந்துரையாடலின் போது, கொழும்பு நகருக்குள் குப்கை கூளங்களை அகற்றி
துப்பரவு செய்வதிலுள்ள இடர்பாடுகளையும் பாதுகாப்பு செயலாளர், வர்த்தக
சமூகத்தினருக்கு விளக்கினார். மாநகர சபையின் ஒத்துழைப்பு இல்லாமல் இதனைத்
தொடர்ந்தும் சரிவர முன்னெடுப்பது இயலாத காரியமெனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், பாதுகாப்புச் செயலாளர் கலந்துரையாடலுக்கு சமூகம் தந்திருந்த மேல்
மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர திஸ்ஸாநாயக்கவுக்கு
கொழும்புக்குள் இடம்பெறும் கஞ்சா பாவனை, மெகசின் வீதியில் அதிகரித்துவரும் போதைவஸ்து
விநியோகம், பஞ்சிகாவத்தை, புறக்கோட்டை பகுதிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு
வாகனங்கள் நிறுத்துவதில் உள்ள இடர்பாடுகள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறும்
பணிப்புரை விடுத்தார்.
இந்தக் கலந்துரையாடலில் நகர அபி விருத்தி அதிகார சபையின் முக்கியஸ்தர்கள்,
நிலமீட்டல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் அமைச்சின்
அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
தினகரன் லங்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இன்று நமது தளம் நான்காவது இடம் மிக விரைவில் முதலாவது இடம்.
» காமந்த் வெல்த் பதக்க பட்டியலில் இந்தியாவுக்கு 2வது இடம்: இங்கிலாந்து 3வது இடம்.
» மாற்று…
» இன்குபேட்டருக்கு ஓர் இயற்கை மாற்று!
» மன அமைதிக்கு மாற்று வழி...!!
» காமந்த் வெல்த் பதக்க பட்டியலில் இந்தியாவுக்கு 2வது இடம்: இங்கிலாந்து 3வது இடம்.
» மாற்று…
» இன்குபேட்டருக்கு ஓர் இயற்கை மாற்று!
» மன அமைதிக்கு மாற்று வழி...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|