சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது- சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதி Khan11

மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது- சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதி

5 posters

Go down

மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது- சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதி Empty மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது- சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதி

Post by யாதுமானவள் Wed 16 Nov 2011 - 8:27

டெல்லி: மரண தண்டனை விதிப்பது காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது, ஜனநாயக விரோதமானது, பொறுப்பற்றது என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த இந்தியாவில் தூக்குத் தண்டனை ஒழிப்பு என்ற பெயரிலான 2 நாள் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும்போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நீதிபதி ஏ.கே.கங்குலி பேசுகையில், நமது சட்டத்தில் தூக்குத் தண்டனை இடம் தரப்பட்டுள்ளது. ஆனால் ஒருவருக்குத் தூக்குத் தண்டனை தருவது என்பது காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது, ஜனநாயக விரோதமானது, பொறுப்பற்றது என்று நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.

வெற்று அனுமாங்களால் ஒருவருக்கு நமது அரசியல் சட்டம் அளித்துள்ள வாழ்வதற்கான உத்தரவாதத்தை இது கேள்விக்குறியாக்கி விடக் கூடாது.

மிக மிக அரிதான சம்பவங்களில் மட்டுமே தூக்குத் தண்டனை என்ற சொல் மிகவும் பலவீனமாக உள்ளது. எது அரிய செயல் என்பதை தீர்மானிப்பது சுலபமல்ல. ஒவ்வொரு நீதிபதியின் மன நிலையைப் பொறுத்து, அவர் முடிவெடுப்பதைப் பொறுத்து தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. அரசியல் சாசனச் சட்டம் நிர்ணயித்துள்ள, வழங்கியுள்ள அனைத்து அம்சங்களையும் அப்போது நீதிபதிகள் கருத்தில் கொண்டாக வேண்டும்.

ஒருவரை மரணக் குழியில் தள்ளுவது எனபது நமது சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு தண்டனைதான் என்றாலும், அது காட்டுமிராண்டித்தனமானது. ஒருவரின் வாழும் உரிமையை நிராகரிப்பதாக அது அமையும்.

எந்தவித சந்தேகமும் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட நிலை இதுவரை உருவாகவில்லை.

எனவே ஒரு நீதிபதி யாருக்காவது மரண தண்டனை கொடுக்க தீர்மானித்தால், முதலில் அதற்கான சூழல்களை மிக மிக கவனமாக ஆராய்வது அவசியம். அந்த குற்றவாளி மீண்டும் திருந்த வாய்ப்பே இல்லை என்பதை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கோர்ட்களில் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். அப்படிப்பட்ட சூழலில் மரண தண்டனை குறித்த பரிசீலனைகளைச் செய்யலாம் என்றார் கங்குலி.

இந்தியாவில் தூக்குத் தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வரும் நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர், தூக்குத் தண்டனைக்கு எதிராக வலுவாக குரல் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூக்குத் தண்டனைக்கு எதிரான போராட்டங்களுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது- சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதி Empty Re: மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது- சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதி

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 8:45

கங்குலி கூறியிருக்கும் கருத்தும் வரவேற்கத்தக்கது ஒன்றுதான் சரியாக குற்றம் நிரூபிக்கப்படாமல் அப்பாவிகளும் மரண தண்டனை அனுபவிக்கிறார்கள்.

எந்தவித சந்தேகமும் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட நிலை
இதுவரை உருவாகவில்லை.

எங்க இதெல்லாம் நடக்கிறது பணம் வந்து நல்லவனை குற்றவாழியாகவும் குற்றவாழியை நல்லவனாகவும் மாற்றுகிறது தூக்கில் போட்டு சாகடிக்க வேண்டியவெனல்லாம் நாட்டில் வெள்ளையும் சொள்ளையுமாக சுற்றித்திரிகிறார்கள்தானே!

செய்தி பகிர்ந்தமைக்கு நன்றி மேடம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது- சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதி Empty Re: மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது- சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதி

Post by gud boy Wed 16 Nov 2011 - 9:54

பிறரை கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை தான் தரப் பட வேண்டும்.அப்போது தான் அவனுக்கு ஒரு உயிரின் மதிபபு தெரியும்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது- சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதி Empty Re: மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது- சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதி

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 10:02

kiwi boy wrote:பிறரை கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை தான் தரப் பட வேண்டும்.அப்போது தான் அவனுக்கு ஒரு உயிரின் மதிபபு தெரியும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் கொலையாழியை தூக்கில்தான் இட வேண்டும் அப்போதுதான் மற்றவர்களுக்கு அது பாடமாக அமையும் மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது- சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதி 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது- சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதி Empty Re: மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது- சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதி

Post by அப்துல்லாஹ் Wed 16 Nov 2011 - 10:45

சில நேரம் சட்ட விதிகளை பயன்படுத்தி வாதாடும் வழக்கறிஞர்களின் வாதத் திறமையால் நிரபராதிகள் தண்டனை பெறத்தான் செய்கிறார்கள்... அது இங்கு வரவேண்டாம்.
ஒரு அஞ்சத்தக்க குற்றத்தை எந்த பயமும் இல்லாமல் குழந்தைகளை பலாத்காரம் செய்து கொல்வதும் வறுமையால் பிழைப்பு தேடி வரும் ஏழை நாட்டு இளம் பெண்களை தனது பாலியல் ஆசைக்கு பயன்படுத்தி பின்னர் சித்திர வதைப் படுத்திக் கொல்லுவதும்
இருபத்தோராம் நூற்றாண்டை நோக்கி வளரும் ஒரு தேசத்தின் அமைதியை அதன் பொருளாதாரக் கட்டமைப்பை சீர்குலைக்க வேண்டி அந்த நாட்டின் பிரதம அமைச்சரை அவருடன் சம்பந்தமில்லாத நூற்றுக்கணக்கான உயிர்களுடன் ஒரு துண்டம் கூட இன்ன பகுதி என அறிய முடியாத படிக்கு சிதைத்துக் கொல்வதும் மிக காட்டுமிராண்டித் தனமானது....
இவர்களை தண்டிக்க சிறைச்சாலையில் வேளாவேளைக்கு சிக்கன் கறியுடன் தொட்டில் ஒன்று கட்டி அவர்களை அதில் அமர்த்தி ஆராரோ பாடி தூங்க செய்வது தான் சரி... சனநாயக நாட்டின் அழகு...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது- சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதி Empty Re: மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது- சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதி

Post by நிலாம் Wed 16 Nov 2011 - 10:55

kiwi boy wrote:பிறரை கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை தான் தரப் பட வேண்டும்.அப்போது தான் அவனுக்கு ஒரு உயிரின் மதிபபு தெரியும்.

மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது- சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதி 111433 மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது- சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதி 111433 மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது- சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதி 111433
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது- சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதி Empty Re: மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது- சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum