சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27

» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

பெரியாறு அணை விவகாரம்: மற்றொரு வாலிபர் தற்கொலை  Khan11

பெரியாறு அணை விவகாரம்: மற்றொரு வாலிபர் தற்கொலை

2 posters

Go down

பெரியாறு அணை விவகாரம்: மற்றொரு வாலிபர் தற்கொலை  Empty பெரியாறு அணை விவகாரம்: மற்றொரு வாலிபர் தற்கொலை

Post by *சம்ஸ் Fri 30 Dec 2011 - 10:23

பெரியாறு அணை விவகாரம்: மற்றொரு வாலிபர் தற்கொலை
சின்னமனூர்,
முல்லைப்பெரியாறு அணை பிரச்சினைக் காக வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பெரியாறு அணை பிரச்சினை காரணமாக தேனி மாவட்டத்தில் கடந்த 24 நாட்களாக பல்வேறு போராட் டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. நேற்று முன்தினம் கேரள அரசை கண்டித்து தேனி மாவட்டம் சின்னமனூரில் 20,000 பேர் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடந்தது.

இதில் சின்னமனூர் கஸ்பாரோட்டை சேர்ந்த சின்னராஜ் மகன் ராமமூர்த்தி (36) கலந்து கொண்டார். இவர் விஷ விதைகளை சாப்பிட்ட பிறகே ஊர்வலத்தில் நடந்து வந்துள்ளார்.

இந்நிலையில், தலைசுற்றல் எடுக்கவே உடனடியாக ராமமூர்த்தி வீட்டுக்கு சென்று வாந்தி எடுத்துள்ளார். அவரிடம் சகோதரி தமிழ்செல்வி விசாரித்த போது, முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் இதுவரை தீர்வு கிடைக்காததால் விஷம் சாப்பிட்டதாக தெரிவித்துள்ளார். உடனே அவரை அம்பியூலன்சில் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். அவரது சட்டைப் பையில் கலெக்டருக்கு ஒரு கடிதம் இருந்தது. அதில் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை ஒரு போதும் விட்டுக் கொடுக்கக் கூடாது. இப்பிரச்சினையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழுதியுள்ளார். இதனை பொலிஸார் கைப்பற்றினர்.

அங்கு வந்த உறவினர்கள், அப்பகுதியை சேர்ந்தவர்கள் பொலிஸாருடன் கடிதத்தை தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பொலிஸார் முல்லைபெரியாறு அணைப் பிரச்சினைக்காக தற்கொலை செய்து கொண்டதாக எப்.ஐ.ஆர். பதிவு செய்து கொள்வதாக தெரிவித்தனர். அவரது உடல் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதால் அங்கு ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

தற்கொலை செய்து கொண்ட ராமமூர்த்திக்கு திருமணமாகவில்லை. இவருக்கு சகோதரி தமிழ்செல்வி, சகோதரர்கள் வேலுசாமி, முருகன், செந்தில்குமார் ஆகியோர் உள்ளனர். இவரது பெற்றோர் இறந்து விட்டதால் அண்ணன் வீட்டில் தங்கி பித்தளை பாத்திரங்கள் செய்யும் தொழில்செய்து வந்தார்.

சின்னமனூர் அருகே சீலையம்பட்டியை சேர்ந்த சேகர் என்ற தே.மு.தி.க. பேச்சாளர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருத்தாச்சலத்தில் இதே பிரச்சினைக்காக விஷம் குடித்து இறந்தார். நேற்று முன்தினம் ராமமூர்த்தி இறந்துள்ளார். கடந்த வாரம் தேனி அருகே இதே பிரச்சினைக்காக 2 பேர் தீக்குளித்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதை தவிர வேறு வழியில்லை என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தொடர்ந்து கூறி வருகிறார். புதிய அணை கட்டுவதற்கான இடத்தை ஏற்கனவே, தேர்வு செய்து நிதியும் ஒதுக்கி விட்டனர். இந்நிலையில் பூமி பூஜையை எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று ரகசியமாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், 2012 ஜனவரி 1ல் பூமி பூஜை நடத்த கேரளா திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியது.

இந்நிலையில் கேரள அரசு புதிய அணைக்கு பூமி பூஜை நடத்தினால் 2012 ஜனவரி 1ம் திகதியை கறுப்பு தினமாக அறிவித்து, புத்தாண்டு கொண்டாட்டங்களை கைவிட தேனி மாவட்டத்தின் பல்வேறு விவசாய அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெரியாறு அணை விவகாரம்: மற்றொரு வாலிபர் தற்கொலை  Empty Re: பெரியாறு அணை விவகாரம்: மற்றொரு வாலிபர் தற்கொலை

Post by பானுஷபானா Fri 30 Dec 2011 - 10:53

ஏன் இப்படி முட்டாள் தனமா நடக்குராங்க பெரியாறு அணை விவகாரம்: மற்றொரு வாலிபர் தற்கொலை  688909
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics
» முல்லைப் பெரியாறு அணை விவகாரம் கேரளாவின் சுயரூபம் கலைந்தது
» முல்லைப் பெரியாறு விவகாரம்: கேரளா மந்திரிகள் உண்ணாவிரதம்
» முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தமிழக சட்டப் பேரவை இன்று கூடுகிறது
» முல்லை பெரியாறு விவகாரம் : மீண்டும் தன்னிச்சையாக ஆய்வு நடத்திய கேரளா! _
» இலங்கை பிரச்சினைக்காக மதுரை வாலிபர் தீக்குளித்து தற்கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum