Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
சர்வதேச நாடுகள் சிரியாவின் ஸ்திரத்தன்மையை நிலைகுலைக்க முயற்சி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சர்வதேச நாடுகள் சிரியாவின் ஸ்திரத்தன்மையை நிலைகுலைக்க முயற்சி
ஜனாதிபதி பஷர் அல் அசாத் குற்றச்சாட்டு
வெளிநாட்டு சக்திகள் சிரியாவின் ஸ்திரத்தன்மையை நிலை குலைக்க முயற்சிப்பதாக சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் தீவிரவாதம் இரும்புக் கரம்கொண்டு ஒடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சிரியாவில் வன்முறைகள் தொடரும் நிலையில் ஒருமாத இடைவேளைக்கு பின்னர் அந்நாட்டு ஜனாதிபதி பஷர் அல் அசாத் பொதுமக்கள் முன் உரையாற்றியுள்ளார். அதில் பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகள் சிரியாவின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுவரை நடந்த வன்முறைகளில் 5000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ. நா. கூறியுள்ளது. இந்த வன்முறைக்கு எதிராக சர்வதேச கண்டனங்கள் மற்றும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கடந்த மாதம் தொடக்கம் சிரியா வன்முறைகள் குறித்து அரபு லீக்கின் 165 கண்காணிப்பாளர்கள் சிரியாவில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சிரிய நகரங்களில் இருந்து பாதுகாப்புப்படைகள் வெளியேறவும், அரசியல் கைதிகளை விடுவிக்கவும், வன்முறைகளை நிறுத்தவும் அரபு லீக் அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் டமஸ்கஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று ஜனாதிபதி பஷர் அல் அஸாத் உரையாற்றினார். அதில் அவர் தாம் பாதுகாப்பு படையினருக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிடவில்லை எனக் குறிப்பிட்டார்.
“எந்தக் குடிமகன் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்த எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அவ்வாறு தாக்குதல் நடந்திருந்தால் அது தற்பாதுகாப்பிற்காகவும், ஆயுதக் குழுக்களுடனான மோதலின் போதும்தான் இடம்பெற்றிருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
ஏற்கனவே ஆயுதக் குழுக்களுடன் இராணுவத்தினர் மோதலில் ஈடுபட்டு வருவதாக சிரிய அரச தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மோதல்களில் 2000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் அரச தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் அண்மைக்காலமாக சிரிய இராணுவத்தில் இருந்து பிரிந்த அதிருப்தியாளர்கள், இராணுவத்துடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் ஏற்பட்டுள்ள வன்முறைகளைக் கண்டித்து அரபு லீக் சிரியாவை அந்த அமைப்பில் இருந்து இடை நீக்கியுள்ளது. இது தொடர்பிலும் அஸாத் தனது உரையில் குறிப்பிட்டார். அரபு நாடுகள் எமக்கு ஆதரவாக செயற்படாமை அதிர்ச்சி அளிக்கின்றது என அவர் கூறினார்.
சிரியாவின் இறையாண்மையை மதிக்காமல் அரபு நாடுகள் சிரியாவுக்கு எதிராக செயற்படுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார். எனினும் சிரியா அரபு நாடுகளுக்கு தனது கதவை பூட்டிவிடாது. ஆனால் சிரியாவின் இறையாண்மையை மதிக்கும் வரைதான் இந்த நிலை நீடிக்கும் என பஷர் அல் அஸாத் குறிப்பிட்டார். இதில் கடந்த 10 மாத கால நிகழ்வுகளுக்கு தாம் வருத்தப்படுவதாக கூறிய அசாத் இது சிரியாவுக்கான சோதனைக் காலம் எனவும் கூறினார்.
அதேபோன்று சிரியாவுக்கு எதிராக செயற்படும் தீவிரவாதிகள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் எனவும் அவர் எச்சரித்தார்.
ஐ. நா. பாதுகாப்புச் சபையின் இந்த ஆண்டுக்கான முதலாவது கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையிலே பஷர் அல் அஸாத் உரையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு சக்திகள் சிரியாவின் ஸ்திரத்தன்மையை நிலை குலைக்க முயற்சிப்பதாக சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் தீவிரவாதம் இரும்புக் கரம்கொண்டு ஒடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சிரியாவில் வன்முறைகள் தொடரும் நிலையில் ஒருமாத இடைவேளைக்கு பின்னர் அந்நாட்டு ஜனாதிபதி பஷர் அல் அசாத் பொதுமக்கள் முன் உரையாற்றியுள்ளார். அதில் பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகள் சிரியாவின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுவரை நடந்த வன்முறைகளில் 5000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ. நா. கூறியுள்ளது. இந்த வன்முறைக்கு எதிராக சர்வதேச கண்டனங்கள் மற்றும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கடந்த மாதம் தொடக்கம் சிரியா வன்முறைகள் குறித்து அரபு லீக்கின் 165 கண்காணிப்பாளர்கள் சிரியாவில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சிரிய நகரங்களில் இருந்து பாதுகாப்புப்படைகள் வெளியேறவும், அரசியல் கைதிகளை விடுவிக்கவும், வன்முறைகளை நிறுத்தவும் அரபு லீக் அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் டமஸ்கஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று ஜனாதிபதி பஷர் அல் அஸாத் உரையாற்றினார். அதில் அவர் தாம் பாதுகாப்பு படையினருக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிடவில்லை எனக் குறிப்பிட்டார்.
“எந்தக் குடிமகன் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்த எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அவ்வாறு தாக்குதல் நடந்திருந்தால் அது தற்பாதுகாப்பிற்காகவும், ஆயுதக் குழுக்களுடனான மோதலின் போதும்தான் இடம்பெற்றிருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
ஏற்கனவே ஆயுதக் குழுக்களுடன் இராணுவத்தினர் மோதலில் ஈடுபட்டு வருவதாக சிரிய அரச தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மோதல்களில் 2000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் அரச தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் அண்மைக்காலமாக சிரிய இராணுவத்தில் இருந்து பிரிந்த அதிருப்தியாளர்கள், இராணுவத்துடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் ஏற்பட்டுள்ள வன்முறைகளைக் கண்டித்து அரபு லீக் சிரியாவை அந்த அமைப்பில் இருந்து இடை நீக்கியுள்ளது. இது தொடர்பிலும் அஸாத் தனது உரையில் குறிப்பிட்டார். அரபு நாடுகள் எமக்கு ஆதரவாக செயற்படாமை அதிர்ச்சி அளிக்கின்றது என அவர் கூறினார்.
சிரியாவின் இறையாண்மையை மதிக்காமல் அரபு நாடுகள் சிரியாவுக்கு எதிராக செயற்படுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார். எனினும் சிரியா அரபு நாடுகளுக்கு தனது கதவை பூட்டிவிடாது. ஆனால் சிரியாவின் இறையாண்மையை மதிக்கும் வரைதான் இந்த நிலை நீடிக்கும் என பஷர் அல் அஸாத் குறிப்பிட்டார். இதில் கடந்த 10 மாத கால நிகழ்வுகளுக்கு தாம் வருத்தப்படுவதாக கூறிய அசாத் இது சிரியாவுக்கான சோதனைக் காலம் எனவும் கூறினார்.
அதேபோன்று சிரியாவுக்கு எதிராக செயற்படும் தீவிரவாதிகள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் எனவும் அவர் எச்சரித்தார்.
ஐ. நா. பாதுகாப்புச் சபையின் இந்த ஆண்டுக்கான முதலாவது கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையிலே பஷர் அல் அஸாத் உரையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஆப்கானுக்கு தொடர்ந்து உதவ சர்வதேச நாடுகள் தீர்மானம்
» சிரியாவின் எரிவாயு தளம் ஐ எஸ் ஐ எஸ் கிளர்ச்சியாளர் வசம்
» இலங்கை முஸ்லிம்களை பாதுகாக்க சர்வதேச அமைப்பொன்றை நிறுவ முயற்சி!
» சி.ஐ.ஏ. ரகசிய செயற்பாடுகளுக்கு 54 நாடுகள் ஒத்துழைப்பு
» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
» சிரியாவின் எரிவாயு தளம் ஐ எஸ் ஐ எஸ் கிளர்ச்சியாளர் வசம்
» இலங்கை முஸ்லிம்களை பாதுகாக்க சர்வதேச அமைப்பொன்றை நிறுவ முயற்சி!
» சி.ஐ.ஏ. ரகசிய செயற்பாடுகளுக்கு 54 நாடுகள் ஒத்துழைப்பு
» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|