சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

நண்பா... Khan11

நண்பா...

+3
jasmin
முனாஸ் சுலைமான்
பார்த்திபன்
7 posters

Go down

நண்பா... Empty நண்பா...

Post by பார்த்திபன் Fri 2 Mar 2012 - 11:20

ஒன்னாப்புப் படிக்கும்போதே
ஒன்னுமன்னா திரிஞ்சோம்!
நித்தம் தூங்கும் நேரம் மட்டுந்தான
ரெண்டு பெரும் பிரிஞ்சோம்!

ஒத்த முட்டாய் வாங்கி
அதக் காக்கா கடி கடிச்சோம்!
ஒத்துமையாச் சேந்துதான
ஒண்ணுக்குக் கூட அடிச்சோம்!

மூணாப்புல பிரிஞ்சதுக்கே
மூஞ்சி வீங்க அழுதோம்!
நட்பு எனும் கலப்ப வச்சு
ரெண்டு நெஞ்ச உழுதோம்!

என்னயடிச்ச கணக்கு டீச்சர்
கண்ணாடிய ஒடச்ச!
எங்க வீட்டு நோம்புக் கஞ்சி
உன் பூணூல் நனையக் குடிச்ச!

மனசு ஒண்ணா ஆனா பெறகு
மதத்த எங்க நெனச்சோம்?
பழனிமல பள்ளிவாசல்
ரெண்டையும் ஒண்ணா மதிச்சோம்!

நான் காச்ச வந்து கெடந்த்தப்ப
உன் வீட்டைக்கூட மறந்த!
பள்ளிக்கூடம் போகாம
என் பக்கத்திலேயே கெடந்த!

என் நாயி செத்ததுக்கே
ஏழு நாளு அழுத!
எம்மேல நீ வச்ச பாசம்
என்னன்னு நான் எழுத?

என் சைக்கிள் தொலஞ்சபெறகு
உன் சைக்கிள நீ தொடல!
நீ சைவமுன்னு தெரிஞ்சபெறகு
கவிச்சி என் நாக்குல படல!

பஞ்சம் வந்து பல்லக்காட்ட
பத்தாவதையே நான் தொடல!
நீ பன்னெண்டாவது முடிச்சபோதும்
நம்ம பந்தபாசம் கெடல!

காலேஜில எடம் கெடச்சு
கண்ணீரோட பிரிஞ்ச!
மாட்டு டாக்டர் படிப்புக்காக
மதுரையில சேந்த!

காஞ்சிபுரம் பொண்ணுமேல
காதலுன்னு சொன்ன!
அவக கண்ணப் பாத்து
பேசக்கூட தெம்பில்லாம நின்ன!

மறுநாளே கெளம்பி நானும்
மதுர வந்து சேந்தேன்!
ஒனக்குக்கூடத் தெரியாம
உன் காதல அவட்ட சொன்னேன்!

தேனாட்டம் கொரலிருந்தும்
தேனீயாட்டம் கொட்டுச்சு!
இங்கிதமே தெரியலன்னு
இங்கிலீசில் திட்டுச்சு!

வாரக் கடசி லீவுல என்
வாசக்கதவ தட்டுன!
அவ சம்மதிச்ச சேதி சொல்லி
என்னத் தூக்கி சுத்துன!

நாலுமாசம் வரைக்கும் எல்லாம்
நல்லபடியா போச்சு!
அதுக்குமேல கொஞ்சம்கொஞ்சமா
பேச்சு கொரஞ்சுபோச்சு!

படிப்ப முடிச்ச பின்னால
பழனி பக்கம் நகந்த!
ஆசப்பட்ட பொண்ணு பேர்ல
ஆஸ்பத்திரி தொறந்த!

மண்டக்குள்ள காதல் ஏற
மத்ததெல்லாம் மறந்த!
கல்யாணத்துக்குப் பெறகும்கூட
கண்டுக்காம இருந்த!

நடுவுல ஒரு பொண்ணு வந்தா
நட்பு என்ன சாகுமா?
நாக்கினிக்கப் பேசினாலும்
உன் நண்பன் போல ஆகுமா?

காதலுன்னு சொல்லும்போது
கரும்பாட்டம் இனிக்கும்!
நட்புன்னு சொல்லிப்பாரு
நரம்பெல்லாம் சிலுக்கும்!

என்னிக்காச்சும் ஒரு நாளு
என்னத் தேடி வருவ!
அதுக்குள்ள மறந்துறாத
எங்க வீட்டுத் தெருவ!


நிலவை.பார்த்திபன்
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

நண்பா... Empty Re: நண்பா...

Post by முனாஸ் சுலைமான் Fri 2 Mar 2012 - 19:21

இதுக்கு எப்படி என்ன எழுத என்று உணமையில் நான் தடுமாறினேன் அப்படி அழகான வரிகள் உண்மைகள் நிஜமான என் சிறு வயது நினைவுகள் அப்படியே கண் முன்னே வந்து நிற்க்கிறது சூப்பரா பேச்சு வழக்கில் இது கிராமத்து தமிழ் போல இருக்கு
வாழ்த்துக்கள்: தோழரே
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நண்பா... Empty Re: நண்பா...

Post by jasmin Sat 3 Mar 2012 - 12:38

வாழ்துக்கள் பர்த்திபன்

நாட்டுபுற பாடலைப் போல நட்பு என்ற ஒன்றை இவ்வளவு அழகாக யாரும் சொல்லிவிட முடியாது .....மதத்தை , நிறத்தை ,இனத்தை .மொழியை மீறி மனிதனை இணைக்கும் கயிறு நட்பு ....

திருமணம் வரை மிக நெறுக்கமாக தொடரும் நட்பு திருமணத்திற்கு பின் எவ்வாறு நசிந்து போகிறது என்று அனுபவித்து எழுதியிருக்கிரார் கவிஞர் .அருமை அருமை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நண்பா... Empty Re: நண்பா...

Post by முனாஸ் சுலைமான் Sat 3 Mar 2012 - 16:44

jasmin wrote:வாழ்துக்கள் பர்த்திபன்

நாட்டுபுற பாடலைப் போல நட்பு என்ற ஒன்றை இவ்வளவு அழகாக யாரும் சொல்லிவிட முடியாது .....மதத்தை , நிறத்தை ,இனத்தை .மொழியை மீறி மனிதனை இணைக்கும் கயிறு நட்பு ....

திருமணம் வரை மிக நெறுக்கமாக தொடரும் நட்பு திருமணத்திற்கு பின் எவ்வாறு நசிந்து போகிறது என்று அனுபவித்து எழுதியிருக்கிரார் கவிஞர் .அருமை அருமை
@. @. :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நண்பா... Empty Re: நண்பா...

Post by mufees Sat 3 Mar 2012 - 19:50

வாவ் சூபர் கவிதை பகிர்வுக்கு நன்றி
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

நண்பா... Empty Re: நண்பா...

Post by செய்தாலி Sun 4 Mar 2012 - 12:57

நட்பைச்
சொல்லும் வரிகளில்
நம் கிராமத்து மண்வாசம்

என்
பால்யத்தையும் சற்று
தட்டி எழுப்பியது
மண்வாசனை நேசம் சொல்லும்
அழகிய வரிகள்

கவிஞருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

நண்பா... Empty Re: நண்பா...

Post by பார்த்திபன் Tue 6 Mar 2012 - 9:14

முனாஸ் சுலைமான் wrote:இதுக்கு எப்படி என்ன எழுத என்று உணமையில் நான் தடுமாறினேன் அப்படி அழகான வரிகள் உண்மைகள் நிஜமான என் சிறு வயது நினைவுகள் அப்படியே கண் முன்னே வந்து நிற்க்கிறது சூப்பரா பேச்சு வழக்கில் இது கிராமத்து தமிழ் போல இருக்கு
வாழ்த்துக்கள்: தோழரே

மிக்க நன்றி தோழரே! உங்கள் பாராட்டுகளுக்கு என் பணிவான நன்றிகள்! :];:
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

நண்பா... Empty Re: நண்பா...

Post by பார்த்திபன் Tue 6 Mar 2012 - 9:16

jasmin wrote:வாழ்துக்கள் பர்த்திபன்

நாட்டுபுற பாடலைப் போல நட்பு என்ற ஒன்றை இவ்வளவு அழகாக யாரும் சொல்லிவிட முடியாது .....மதத்தை , நிறத்தை ,இனத்தை .மொழியை மீறி மனிதனை இணைக்கும் கயிறு நட்பு ....

திருமணம் வரை மிக நெறுக்கமாக தொடரும் நட்பு திருமணத்திற்கு பின் எவ்வாறு நசிந்து போகிறது என்று அனுபவித்து எழுதியிருக்கிரார் கவிஞர் .அருமை அருமை

உங்கள் வாழ்த்துகளால் உற்சாகம் அடைந்தேன்! மிக்க நன்றி தோழி! :];:
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

நண்பா... Empty Re: நண்பா...

Post by பார்த்திபன் Tue 6 Mar 2012 - 9:17

mufees wrote:வாவ் சூபர் கவிதை பகிர்வுக்கு நன்றி

நன்றி நண்பரே! :];:
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

நண்பா... Empty Re: நண்பா...

Post by பார்த்திபன் Tue 6 Mar 2012 - 9:18

செய்தாலி wrote:நட்பைச்
சொல்லும் வரிகளில்
நம் கிராமத்து மண்வாசம்

என்
பால்யத்தையும் சற்று
தட்டி எழுப்பியது
மண்வாசனை நேசம் சொல்லும்
அழகிய வரிகள்

கவிஞருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

சிறப்புக் கவிஞர் பாராட்டியதில் மிக்க மகிழ்ச்சி! நன்றி தோழரே! :];:
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

நண்பா... Empty Re: நண்பா...

Post by *சம்ஸ் Wed 7 Mar 2012 - 14:06

நட்பை மையப்படுத்தி அருமையாக கிராமிய பாணியில் வடித்த கவிவரிகள் அத்தனையும் அருமை வாழ்த்துக்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நண்பா... Empty Re: நண்பா...

Post by Atchaya Thu 8 Mar 2012 - 10:09

நடுவுல ஒரு பொண்ணு வந்தா
நட்பு என்ன சாகுமா?
நாக்கினிக்கப் பேசினாலும்
உன் நண்பன் போல ஆகுமா?
நண்பா... 331844 நண்பா... 331844
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

நண்பா... Empty Re: நண்பா...

Post by பார்த்திபன் Tue 13 Mar 2012 - 13:15

Atchaya wrote:நடுவுல ஒரு பொண்ணு வந்தா
நட்பு என்ன சாகுமா?
நாக்கினிக்கப் பேசினாலும்
உன் நண்பன் போல ஆகுமா?
நண்பா... 331844 நண்பா... 331844

நன்றி! நன்றி! நன்றி! :];:
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

நண்பா... Empty Re: நண்பா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum