சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Today at 10:24 pm

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Today at 10:18 pm

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Today at 1:33 pm

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Today at 6:44 am

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Today at 1:59 am

» பூக்கள்
by rammalar Yesterday at 11:13 pm

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 11:06 pm

» கால பைரவர் யார்?
by rammalar Yesterday at 6:06 pm

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Yesterday at 11:45 am

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Yesterday at 10:17 am

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Yesterday at 10:16 am

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Yesterday at 10:14 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 1:29 am

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat Jun 29, 2024 8:30 pm

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat Jun 29, 2024 4:15 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat Jun 29, 2024 2:27 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat Jun 29, 2024 2:25 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat Jun 29, 2024 2:24 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat Jun 29, 2024 2:23 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat Jun 29, 2024 2:22 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat Jun 29, 2024 10:30 am

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat Jun 29, 2024 10:25 am

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat Jun 29, 2024 10:23 am

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat Jun 29, 2024 8:47 am

» பல்சுவை தகவல்கள்
by rammalar Sat Jun 29, 2024 12:27 am

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri Jun 28, 2024 1:39 pm

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu Jun 27, 2024 9:04 pm

» கொக்கோ மரம்
by rammalar Thu Jun 27, 2024 5:11 pm

» கமல் ஹேப்பி
by rammalar Thu Jun 27, 2024 5:05 pm

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu Jun 27, 2024 5:02 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu Jun 27, 2024 1:04 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu Jun 27, 2024 12:57 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu Jun 27, 2024 8:28 am

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu Jun 27, 2024 8:19 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu Jun 27, 2024 7:45 am

எல்லைகளைக் கடந்த ஏர்டெல்  Khan11

எல்லைகளைக் கடந்த ஏர்டெல்

Go down

எல்லைகளைக் கடந்த ஏர்டெல்  Empty எல்லைகளைக் கடந்த ஏர்டெல்

Post by ஹம்னா Mon Jan 31, 2011 6:49 pm

எல்லைகளைக் கடந்த ஏர்டெல்  Mobilemalar-2-13362008

வயர்லெஸ் இணைப்பு போன் குறித்து மக்கள் கனவில் மட்டுமே எண்ணிக் கொண்டிருந்த போது தன் தொலைதொடர்பு துறையைத் தொடங்கிய ஏர்டெல் இன்று அதனை நனவாக்கி ஒவ்வொரு இந்தியனின் அன்றாட சாதனமாக மொபைல் போனை மாற்றி சரித்திரமும் சாதனையும் படைத்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 20 லட்சம் இணைப்புகளைத் தரும் நிறுவனமாகத் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

இந்தியாவின் அனைத்து 23 தொலை தொடர்பு மண்டலங்களிலும் இயங்கும் ஏர்டெல் நிறுவனத்தின் சந்தாதாரர் எண்ணிக்கை ஏப்ரல் மாத இறுதியில் 6 கோடியே 45 லட்சத்தைத் தாண்டி இருந்தது. தொடர்ந்து உயர்ந்தும் வருகிறது.

ஏர்டெல் தன் சேவையினை மூன்று பிரிவுகளாகப் பிரித்து நிர்வகித்து வருகிறது. மொபைல் இணைப்புகளை மொபைல் சர்வீசஸ் என்ற பெயரில் ஜி.எஸ்.எம். தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தித் தருகிறது. டெலிமீடியா என்ற பிரிவில் 94 நகரங்களில் பிராட்பேண்ட் மற்றும் தொலைபேசி தொடர்பு வசதியினைத் தருகிறது. இந்த பிரிவில் தொடர்ந்து ஐ.பி.டி.வி. மற்றும் டி.டி.எச். சேவையைத் தர இருக்கிறது. என்டர்பிரைஸ் சர்வீசஸ் என்ற பெயரில் நிறுவனங்களுக்கான நெட்வொர்க் சர்வீஸ் மற்றும் பன்னாட்டளவிலான இணைப்புகள் தரப்படுகின்றன. தேசிய அளவில் பைபர் ஆப்டிக் சிஸ்டம் ஒன்றை ஏர்டெல் அமைத்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் பைபர் ஆப்டிக் கட்டமைப்பு இந்தியாவின் அனைத்து பெரிய நகரங்களையும் இணைக்கின்றன. 73 ஆயிரத்து 787 கிமீ அளவில் இது செல்கிறது.



சென்னையில் இரண்டு இன்டர்நேஷனல் லேன்டிங் ஸ்டேஷன் அமைத்து கடலுக்கடியில் செல்லும் சப் மரைன் கேபிள்களுடன் இணைப்பினை ஏற்படுத்தியுள்ளது. தரை வழி தொலை தொடர்பில் இறுதிவரையிலான சிறப்பான தொடர்பு, மொபைல் மண்டலங்களில் கோபுரங்கள், விசாட் தொழில்நுட்பம், இன்டர்நேஷனல் பேண்ட்வித் இணைப்பு வசதி, கடல்வழி கேபிள் இணைப்பில் பங்கு என தன் நெட்வொர்க்கினை மிகச் சிறப்பாக பல முனைகளில் ஏற்படுத்தி வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவையினை வழங்கி வருகிறது.

மக்கள் அனைவரையும் தன் சேவை சென்றடைய வேண்டும் என்ற ஏர்டெல் இலக்கு இன்று அதனை முதல் நிறுவனமாக ஆலமரம் போல் வளர வைத்துள்ளது. யாரும் வாங்கக் கூடிய நிலை, அனைவரையும் அடையக் கூடிய நெட்வொர்க் மற்றும் சேவைகள் மற்றும் எளிமை என்ற மூன்று விஷயங்களை முன்னிறுத்தி ஏர்டெல் செயல்பட்டு வருகிறது. ஒரு தீப்பெட்டி கிடைக்கும் இடத்தில் தன் தொலைபேசி இணைப்பு கிடைக்க வேண்டும் என்ற கொள்கையுடன் நாடெங்கும் குறிப்பாக கிராமப் புறங்களில் தன் சேவையினை ஏர்டெல் விரிவுபடுத்தியதால் தான் இன்றைக்கு இந்நிலைக்கு உயர்ந்துள்ளது. மூன்றரை லட்சம் கிராமங்களில் 8 லட்சத்திற்கும் மேலான எண்ணிக்கையில் சில்லரை விற்பனை மையங்களை அமைத்துள்ளது. விரைவில் ஏர்டெல் இயங்கும் கிராமங்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்ட உள்ளது.


எல்லைகளைக் கடந்த ஏர்டெல்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

எல்லைகளைக் கடந்த ஏர்டெல்  Empty Re: எல்லைகளைக் கடந்த ஏர்டெல்

Post by ஹம்னா Mon Jan 31, 2011 6:53 pm

அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற இலக்கினை அடைய முதன் முதலாக வாழ்நாள் முழுவதும் வேலிடிட்டி என்ற திட்டத்தினை ஏர்டெல் கொண்டு வந்தது. தொடர்ந்து ரூ.1 திட்டம் மற்றும் எளிய முறையில் ரீ சார்ஜ் எனப் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இன்று இந்நிறுவனத்தின் வேறுபட்ட பல திட்டங்கள் அனைவரையும் ஏர்டெல் பக்கம் இழுக்கிறது. பிளாக் பெரி நிறுவன சேவையை இந்தியாவிற்கு முதலில் கொண்டு வந்ததும் ஏர்டெல் தான். மொபைல் இணைப்பினை போன் செட்டுடன் இணைத்து இட ரீதியாக சில வசதிகளைத் தந்ததும் ஏர்டெல் நிறுவனமே. ஏர்டெல் பஸார் போன்ற எம்–காமர்ஸ் திட்டம் தருவதில் முதலாவதாக இருந்தது. மொபைல் சார்ந்த கூடுதல் வசதிகளைத் தருவதிலும் ஏர்டெல் முன்னணியில் இருக்கிறது.

ரிங் பேக் டோன், டாக் டைம் ட்ரான்ஸ்பர், மொபைல் மியூசிக், பாலிவுட், ஸ்போர்ட்ஸ் அன்ட் கேமிங், சாங் கேட்சர் எனப் பல்வேறு வசதிகளை எடுத்துக் காட்டுகளாகக் கூறலாம். ஏர்டெல் வருமானத்தில் இத்தகைய வசதிகள் மூலம் கிடைக்கும் வருமானம் 9 சதவிகிதமாகத் தற்போது இருந்து வருகிறது. இது தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் பெருகி வருகின்றன.
அண்மையில் பார்சிலோனாவில் நடந்த மொபைல் உலக மாநாட்டில் ஏர்டெல் நிறுவனம் தரும் எம்–செக் வசதி சிறந்த பில்லிங் மற்றும் வாடிக்கையாளர் சேவை வசதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து ஏதேனும் சலுகையை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஏர்டெல் செயல்பட்டு வருகிறது. அண்மையில் எஸ்.டி.டி. (நிமிடத்திற்கு ரூ.1.50) மற்றும் ரோமிங் கட்டணத்தை (50 பைசா குறைத்து ரூ.1) வெகுவாகக் குறைத்தது. கிராமப் புறங்களில் முழுமையான விரிவாக்கம் மேற்கொள்ள ரூ.10,000 கோடி அளவில் திட்டங்களை மேற்கொள்ள ஏர்டெல் முடிவெடுத்து செயல்படுத்தி வருகிறது. கிராமங்களில் வாழும் 70 கோடி வாடிக்கையாளர்களைத் தன் நெட்வொர்க்கில் கொண்டு வரும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. புதிய வழி சேவைகள், நெட்வொர்க் விரிவாக்கம், எதனையும் எடுத்துச் செய்திடும் திறன் ஆகிய மூன்று உறுதியான கட்டமைப்பில் தொடரும் இந்நிறுவனம் இந்திய தொலைதொடர்பின் தூணாக தொடர்ந்து இயங்கும் என்பதில் ஐயமில்லை.

ஏர்டெல் தரும் சில சேவைகள்



போன் பேக் அப்: உங்களுடைய மொபைல் போனில் பல முக்கிய தகவல்களை, படங்களை வைத்திருப்பீர்கள். போன் கெட்டுப் போனாலோ அல்லது தொலைந்து போனாலோ இவைநிச்சயமாய்த் திரும்ப கிடைக்கப் போவதில்லை. இதற்காக ஏர்டெல் செக்யூர் மொபைல் போன் பேக்கப் சிஸ்டம் ஒன்றை இயக்குகிறது. மாதம் ரூ.30 கட்டணத்தில் இந்த தகவல்களைப் பாதுகாத்து உங்களுக்குத் திருப்பித் தருகிறது.

எஸ்.எம்.எஸ். 2 : இந்த வசதி இலவசமாகக் கிடைக்கிறது. டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இதன் மூலம் நீங்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ். செய்திகளுடன் எமோட்டிகான் என்னும் சிறு படங்களை இணைக்கலாம். எழுத்துக்களுக்கு குறிப்பிட்ட வண்ணம் அளிக்கலாம். அத்துடன் பாலிவுட் கிசுகிசுக்கள் மற்றும் சில கசியும் தகவல்கள் போன்றவை கிடைக்கின்றன.
கிரிக்கெட் சென்டர்: உங்களிடம் பிளாக் பெரி ஸ்மார்ட் போன் இருந்தால் கிரிக்கெட் ஸ்கோரினை ஏர்டெல் அவ்வப்போது அந்த போனுக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும். அப்போதைய தகவல்கள் மட்டுமின்றி முந்திய தகவல்களுடன் ஒப்பிட்டும் பார்க்கும் வகையிலும் தகவல்கள் கிடைக்கும். இதற்கான மாதக் கட்டணம் ரூ.50.

எம்–செக்: உங்களுடைய போஸ்ட் பெய்ட் பில்கள், எஸ்.எம்.எஸ். வழி ரீசார்ஜ் ஆகிய சேவைகள் இதன் வழி வழங்கப்படுகின்றன. இந்த சேவை ஏர்டெல் வாடிக்கை யாளர்கள் ஐ.சி.ஐ.சி.ஐ.பேங்க், எச்.டி.எப்.சி. பேங்க், ஸ்டேட் பேங்க், கார்ப்பரேஷன் பேங்க் ஆகிய ஏதேனும் ஒன்றில் அக்கவுண்ட் வைத்திருந்தால் கிடைக்கிறது.

நேவிகேஷன்: இடத்திற்கான வழி காட்டும் மேப். பிளாக் பெரி போன் 8800 ல் இது கிடைக்கிறது. மேப்களை டவுண்லோட் செய்து வழி காணலாம். முதல் ஆறு மாதத்திற்கு இது இலவசம்.



எல்லைகளைக் கடந்த ஏர்டெல்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

எல்லைகளைக் கடந்த ஏர்டெல்  Empty Re: எல்லைகளைக் கடந்த ஏர்டெல்

Post by ஹம்னா Mon Jan 31, 2011 6:56 pm

ஏர்டெல் மெசஞ்சர்: யாஹூ மற்றும் எம்.எஸ்.என். மெசஞ்சர் ஆகியவற்றுடன் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ள இந்த சேவை வழி தருகிறது.

சாங் கேட்சர்: 543215 என்ற எண்ணுக்கு டயல் செய்து நீங்கள் விரும்பும் பாடல் வரி ஒலிக்கின்ற இடத்தில் மிக அருகே போனைக் கொண்டு சென்று 30 விநாடிகள் வைத்திருக்கவும். இந்த 30 விநாடி ஒலிக்கும் பாடல் உங்கள் காலர் ட்யூனாக மாறிவிடும்.

பேக் கிரவுண்ட் ட்யூன்: இந்த வசதி நீங்கள் இன்னொருவருடன் பேசும்போது பின்னணியில் இசையை அளிக்கும். மாதக் கட்டணம் ரூ.20.

கால் ஹோம் சர்வீசஸ்: அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பேச குறைந்த கட்டணத்தில் வசதி தரும் திட்டம்.

ஏர்டெல் இலக்குகள்: வாடிக்கையாளர் களின் தேவைகள் குறித்தும் அவர்கள் ஏர்டெல் குறித்து எப்படி உணர வேண்டும் என்பது குறித்தும் புதிய மற்றும் நவீன வழிகளில் ஏர்டெல் சிந்திக்கிறது. நாங்கள் சொல்வதைச் செய்வதுடன் வாடிக்கையா ளர்கள் சற்று கூடுதலாக மகிழ்ச்சியாக இருக்க எங்கள் வழிகளையும் மீறிச் செயல் படுகிறோம்.

மார்ச் மாதத்தில் ஏர்டெல் வாடிக்கையாளர் எண்ணிக்கை:
சென்னை மண்டலம் : 17,14,841
சென்னை அல்லாத தமிழ்நாடு: 39,46,801
ஆக மொத்த தமிழ்நாடு: 56,61,642
முதலிடம் கொண்டுள்ள
கர்நாடக மாநிலம் : 68,70,678
இரண்டாவது இடம் கொண்ட
ஆந்திர மாநிலம்: 60,62,546


எல்லைகளைக் கடந்த ஏர்டெல்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

எல்லைகளைக் கடந்த ஏர்டெல்  Empty Re: எல்லைகளைக் கடந்த ஏர்டெல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வாடிக்கையாளர்களை தட்டிக்கழித்த ஏர்டெல்
» ஒபாமாவின் போட்டோவைப் பயன்படுத்தி ஏர்டெல் கனெக்ஷன் வாங்கிய குசும்பர்!
» ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம்?
» இனி நிமிடத்திற்கு 2 ரூபாய்: ஐடியா, வோடாபோன், ஏர்டெல் செல்போன் கட்டணம் உயர்வு
» புது ரூல்ஸ்.. கால் சேவை.. ஏப்.15 கெடு.. ஜியோ, ஏர்டெல், வோடபோன்.. இதை நிறுத்துங்க.. இந்திய அரசு போட்ட

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum