Latest topics
» பல்சுவை களஞ்சியம்by rammalar Today at 9:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
இது தான் விஷயமா?
Page 1 of 1
இது தான் விஷயமா?
மிருதுவான மணல் நிறைந்த பாலைவனங்களில் பயணம் செய்ய விசேஷமான சாதனங்கள் தேவை. போர்க்காலங்களில் பாலைவனக் காவல் படையின் வாகனங்களுக்குப் பெரிய குறைந்த காற்றழுத்தமுள்ள டயர்களைப் பயன்படுத்துவர். கனம் தாங்காமல் மணலில் புதைந்து போகாதிருக்க இப்படியொரு ஏற்பாட்டை மனிதன் எப்படித் தெரிந்து கொண்டான்?
அராபியர்கள் பாலைவனங்களில் ஒட்டகத்தின் மீது இலகுவாகப் பயணிப் பதைக் கண்டனர். ஒட்டகங்களின் பாதங்கள், அகலமாக, மெத்தென்ற விசேஷ அமைப்பில் இருப்பதை கண்டான். பாலைவனத்தில் ஜெர்போ என்னும் ஒரு வகை எலிகள் உள்ளன. அதன் பாதங்கள் பெரிதாக, அகலமாக ரோமம் நிறைந்திருக்கும். ஆகவே, அவை மணலில் புதையாது. அக்கால்களை அழுத்தித்தாவிக் குதித்துச் செல்லும். அதற்கு "பாலன் ஸாக' அதன் நீண்ட வாலும் உதவும்.
இதே போல, மிருதுவான பனித்துகள் மூடிய பிரதேசங் களும் பாலை வனத்து மணல் போலவே அபாய மானவை. பயணிப்பவர் கனம் தாங்காமல் பனியில் புதை யுண்டு விடுவர். இத்தகைய பனிப் பிரதேசத்தில் ஒருவகை முயல்கள் ஆபத்தின்றி வாழ்கின்றன. ஸ்நோஷû ராபிட் என்று அதற்குப் பெயர். அதன் பின்னங்கால்கள் அகலமானவை. தரையில் அழுத்தும் போது, விரிந்து உடல் பளு பரவலாகப் பதியும். இதன் பாதங்களும் ரோமம் அடர்ந்த தோலினால் மூடப்பட்டிருக்கும்.
இயற்கை உருவாக்கித் தந்த இந்த வசதிகளை, ரகசியங்களை மனிதன் பார்த்தான். அதன் அடிப் படையில் பாலைவனத்திலும், பனிப் பிரதேசத் திலும் பயணம் செய்யப் பல சாதனங்களை உருவாக்கினான்.
அமெரிக்கச் செவ்விந்தியரிடையே பல வகை பனிப்பாதுகைகள் புழக்கத்திலுள்ளன. மரத்தா லான இவற்றில் தோல் பட்டைகள் பொருத்தப் பட்டிருக்கும். இதை அணிந்து பயணிப்பதால், புதையாமல் போக முடியும். ஐரோப்பாவில் காணும் அகலமான மரத்தாலான பனிப் பாதுகை கள் வசதியானவை. இதிலிருந்து நவீன, "ஸ்கீ' எனப்படும் பனிச்சறுக்குச் சாதனம் உருவாக்கப் பட்டது. எத்தனையோ நவீன சாதனங்களுக்கு இயற்கை முன்னோடியாக விளங்கி வருகிறது.
அராபியர்கள் பாலைவனங்களில் ஒட்டகத்தின் மீது இலகுவாகப் பயணிப் பதைக் கண்டனர். ஒட்டகங்களின் பாதங்கள், அகலமாக, மெத்தென்ற விசேஷ அமைப்பில் இருப்பதை கண்டான். பாலைவனத்தில் ஜெர்போ என்னும் ஒரு வகை எலிகள் உள்ளன. அதன் பாதங்கள் பெரிதாக, அகலமாக ரோமம் நிறைந்திருக்கும். ஆகவே, அவை மணலில் புதையாது. அக்கால்களை அழுத்தித்தாவிக் குதித்துச் செல்லும். அதற்கு "பாலன் ஸாக' அதன் நீண்ட வாலும் உதவும்.
இதே போல, மிருதுவான பனித்துகள் மூடிய பிரதேசங் களும் பாலை வனத்து மணல் போலவே அபாய மானவை. பயணிப்பவர் கனம் தாங்காமல் பனியில் புதை யுண்டு விடுவர். இத்தகைய பனிப் பிரதேசத்தில் ஒருவகை முயல்கள் ஆபத்தின்றி வாழ்கின்றன. ஸ்நோஷû ராபிட் என்று அதற்குப் பெயர். அதன் பின்னங்கால்கள் அகலமானவை. தரையில் அழுத்தும் போது, விரிந்து உடல் பளு பரவலாகப் பதியும். இதன் பாதங்களும் ரோமம் அடர்ந்த தோலினால் மூடப்பட்டிருக்கும்.
இயற்கை உருவாக்கித் தந்த இந்த வசதிகளை, ரகசியங்களை மனிதன் பார்த்தான். அதன் அடிப் படையில் பாலைவனத்திலும், பனிப் பிரதேசத் திலும் பயணம் செய்யப் பல சாதனங்களை உருவாக்கினான்.
அமெரிக்கச் செவ்விந்தியரிடையே பல வகை பனிப்பாதுகைகள் புழக்கத்திலுள்ளன. மரத்தா லான இவற்றில் தோல் பட்டைகள் பொருத்தப் பட்டிருக்கும். இதை அணிந்து பயணிப்பதால், புதையாமல் போக முடியும். ஐரோப்பாவில் காணும் அகலமான மரத்தாலான பனிப் பாதுகை கள் வசதியானவை. இதிலிருந்து நவீன, "ஸ்கீ' எனப்படும் பனிச்சறுக்குச் சாதனம் உருவாக்கப் பட்டது. எத்தனையோ நவீன சாதனங்களுக்கு இயற்கை முன்னோடியாக விளங்கி வருகிறது.
Re: இது தான் விஷயமா?
சதுப்பு நிலங்களை கனமற்ற சேறு மண்டிய தரைகளை மனிதன் கடக்க வேண்டி இருக்கு மானால்... பறவை வேட்டையாடுவோர் தாங்கள் சுட்டு வீழ்த்திய காடை, கவுதாரி, வாத்து போன்றவற்றைச் சதுப்பு நிலப் பகுதியில் நடந்து சென்று எடுத்து வர வேண்டுமானால்... தங்கள் காலணிகளில் அகலமானதோர் மரச்சாதனமான சேற்றுக் காப்புப் புதையடிகளைப் பொருத்திக் கொண்டிருப்பர். கேட்டர் பில்லர் டிராக்டர் எனப்படும் நிலத்தை சமப்படுத்தும் யந்திரத்தில், அகலமான பாதை அமைக்க, அதன் முன் சக்கரங்களில் ஒருவகை அமைப்பு இருக்கும். இது, பின்னால் வரும் வாகனங்கள் வசதியாக வர, உறுதியான பாட்டை அமைக்கும். இதை எல்லாம் மனிதன் எப்படிக் கற்றுக் கொண்டான். பிராணிகளுக்கும், பறவைகளுக்கும் இயற்கை அளித்திருக்கும் உறுப்புகளின் அமைப்பை பார்த்துத்தான், இவற்றை தானும் கற்றுக் கொண்டான்.
வெப்ப மண்டலச் சதுப்பு நிலங்களில் வாழும் பல காட்டு விலங்குகளும், பறவைகளும் சதுப்பு நிலச் சேற்றில் முழுகாமலிருக்க, தங்கள் உடல் கனம் பரவலாக அழுந்தும்படி செய்ய, அவற்றின் உடல் அமைப்பு இருக்கும். அல்லிக் குளப் பறவை லில்லி டிராட்டர் என்று ஒருவகை. நீர் நிலைகளிலோ, மிருதுவான சேற்று நிலத்திலோ வளரும் தாவரங்களின் மீதாக நடந்து போய்த் தன் இரையைத் தேடிக் கொள்ளும். ஆனால், அது சேற்றிலோ, நீரிலோ முழுகாது. அதற்குத் தோதாக இப்பறவையின் கால் விரல்கள் நீளமாக, அது காலைப்பதிக்கும் போது விரல் கள் விரிந்து பரந்து, அதன் உடல் கனம் பரவலாக அழுந்தும்படி செய்கிறது.
ஆப்பிரிக்காவில் வாழும் ஒருவகை மான் இனம். சித்து துங்கா என்று பெயர் சதுப்பு நில மான் என்றும் கூறுவர். இதன் முக்கிய உணவு சதுப்பு நிலத்தில் வளரும் தாவரங்கள் தான். இதன் குளம்பின் அமைப்பு விந்தையானது. எப்படி? நீளமாகவும், அகலமாகவும் இருக்கும். கால்களைப் பதிக்கும் போது குளம்புகள் விரிந்து கொடுத்துப் பதியும். ஆகவே, இந்த மான் சேற்றில் அழுந்தி அவதிப்படுவதில்லை. வேறு எந்தப் பிராணியும், சதுப்பு நிலத்தில் இந்த மானைப் போல இவ்வளவு இலகுவாக வாழ முடியாது. இயற்கை அளித்துள்ள இத்தகைய அமைப்புகளைக் கண்டே மனிதன், அதே போன்ற உபகரணங்களை உருவாக்கக் கற்றுக் கொண்டான்.
குகைகளில் வாழ்ந்த மனிதன், தனக்கென வீடு கட்டிக் கொண்டு வாழத் தொடங்கிய போதிலிருந்து கட்டுமானப் பொருள்களே அவன் கவலையாக இருந்திருக்கிறது. பைபிளின் பழைய ஏற்பாட்டுக் கதைகளில், இஸ்ரேலியர்கள் செங்கற்களை உருவாக்க எப்படிக் கட்டாயப்படுத்தப்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது. சேற்றைக் குழைத்து உருவாக்கிய இக்கற்கள், சூரிய வெப்பத்தினால் சுடப்பட்டவை. வறண்ட வெப்பமான பருவ நிலையில் உறுதியோடிருக்கும்.
இன்று நாம் சூளைகளில் சுடப்பட்ட உறுதி யான செங்கற்களை ஏராளமாகப் பெறுகிறோம். அதைக் கொண்டு பிரமாண்டமான கட்டடங் களை எழுப்புகிறோம். கான்கிரீட்டினாலான கட்டைகளும், செங்கற்களைப் போலப் பயன் படுத்தி வீடுகள் கட்டப்படுகின்றன. இந்த முறையை மனிதன் எப்படி எதனிடமிருந்து கற்றுக் கொண்டான்? இயற்கை, பறவை களுக்குக் கற்பித்த கலையிலிருந்தே மனிதன் இதைக் தெரிந்து கொண்டான்.
உலகின் பல பகுதிகளில் "ஸ்வாலோ' எனப்படும் ஒருவகைப் பறவை (தூக்கணாங் குருவி வகை) வாழுகின்றன. மனிதன் வீடு கட்டத் தெரிந்து கொள்ளுவதற்கு முன்பே, இப்பறவைகள் சிறுசிறு மண் உருண்டைகளைக் கொண்டு வீடு கட்டின.
குளம், குட்டை களின் கரையில், சேற்றுப் பகுதிகளில் இந்த "ஸ்வாலோ' பறவைகள் சிறு சிறு மண் உருண்டைகளை ஒன்றோடு ஒன்று இணைவதற்கு ஏற்ற அளவிலும், விரைவில் காயும் வகையிலும் உருவாக்குகின்றன.
திறந்த வெளியில் இவை கூடு கட்டு வதில்லை. கட்டடங் களின் உட்பகுதி களிலேயே உத்திரத்தில் கோப்பை வடிவில் மண் உருண்டைகளை இணைத்துக் கூடு கட்டுகின்றன. ஹவுஸ் மார்டின் என்றொரு பறவை, இதுவும் இதே முறையில் தன் கூட்டை கட்டுகிறது. கட்டடங்களில் முன் கூரை முகடுகளில் உருவாக்கும் இதன் கூடு பெரிதாக இருக்கும். உள்ளே நுழைய சிறிய துளை(வாசல்)யுடன். பறவைகள் மண் உருண்டைகளைக் கொண்டு கூடு கட்டுவதைப் பார்த்தே மனிதன் செங்கற்களை உருவாக்கி வீடு கட்ட கற்றுக் கொண்டான்.
siruvarmalar
வெப்ப மண்டலச் சதுப்பு நிலங்களில் வாழும் பல காட்டு விலங்குகளும், பறவைகளும் சதுப்பு நிலச் சேற்றில் முழுகாமலிருக்க, தங்கள் உடல் கனம் பரவலாக அழுந்தும்படி செய்ய, அவற்றின் உடல் அமைப்பு இருக்கும். அல்லிக் குளப் பறவை லில்லி டிராட்டர் என்று ஒருவகை. நீர் நிலைகளிலோ, மிருதுவான சேற்று நிலத்திலோ வளரும் தாவரங்களின் மீதாக நடந்து போய்த் தன் இரையைத் தேடிக் கொள்ளும். ஆனால், அது சேற்றிலோ, நீரிலோ முழுகாது. அதற்குத் தோதாக இப்பறவையின் கால் விரல்கள் நீளமாக, அது காலைப்பதிக்கும் போது விரல் கள் விரிந்து பரந்து, அதன் உடல் கனம் பரவலாக அழுந்தும்படி செய்கிறது.
ஆப்பிரிக்காவில் வாழும் ஒருவகை மான் இனம். சித்து துங்கா என்று பெயர் சதுப்பு நில மான் என்றும் கூறுவர். இதன் முக்கிய உணவு சதுப்பு நிலத்தில் வளரும் தாவரங்கள் தான். இதன் குளம்பின் அமைப்பு விந்தையானது. எப்படி? நீளமாகவும், அகலமாகவும் இருக்கும். கால்களைப் பதிக்கும் போது குளம்புகள் விரிந்து கொடுத்துப் பதியும். ஆகவே, இந்த மான் சேற்றில் அழுந்தி அவதிப்படுவதில்லை. வேறு எந்தப் பிராணியும், சதுப்பு நிலத்தில் இந்த மானைப் போல இவ்வளவு இலகுவாக வாழ முடியாது. இயற்கை அளித்துள்ள இத்தகைய அமைப்புகளைக் கண்டே மனிதன், அதே போன்ற உபகரணங்களை உருவாக்கக் கற்றுக் கொண்டான்.
குகைகளில் வாழ்ந்த மனிதன், தனக்கென வீடு கட்டிக் கொண்டு வாழத் தொடங்கிய போதிலிருந்து கட்டுமானப் பொருள்களே அவன் கவலையாக இருந்திருக்கிறது. பைபிளின் பழைய ஏற்பாட்டுக் கதைகளில், இஸ்ரேலியர்கள் செங்கற்களை உருவாக்க எப்படிக் கட்டாயப்படுத்தப்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது. சேற்றைக் குழைத்து உருவாக்கிய இக்கற்கள், சூரிய வெப்பத்தினால் சுடப்பட்டவை. வறண்ட வெப்பமான பருவ நிலையில் உறுதியோடிருக்கும்.
இன்று நாம் சூளைகளில் சுடப்பட்ட உறுதி யான செங்கற்களை ஏராளமாகப் பெறுகிறோம். அதைக் கொண்டு பிரமாண்டமான கட்டடங் களை எழுப்புகிறோம். கான்கிரீட்டினாலான கட்டைகளும், செங்கற்களைப் போலப் பயன் படுத்தி வீடுகள் கட்டப்படுகின்றன. இந்த முறையை மனிதன் எப்படி எதனிடமிருந்து கற்றுக் கொண்டான்? இயற்கை, பறவை களுக்குக் கற்பித்த கலையிலிருந்தே மனிதன் இதைக் தெரிந்து கொண்டான்.
உலகின் பல பகுதிகளில் "ஸ்வாலோ' எனப்படும் ஒருவகைப் பறவை (தூக்கணாங் குருவி வகை) வாழுகின்றன. மனிதன் வீடு கட்டத் தெரிந்து கொள்ளுவதற்கு முன்பே, இப்பறவைகள் சிறுசிறு மண் உருண்டைகளைக் கொண்டு வீடு கட்டின.
குளம், குட்டை களின் கரையில், சேற்றுப் பகுதிகளில் இந்த "ஸ்வாலோ' பறவைகள் சிறு சிறு மண் உருண்டைகளை ஒன்றோடு ஒன்று இணைவதற்கு ஏற்ற அளவிலும், விரைவில் காயும் வகையிலும் உருவாக்குகின்றன.
திறந்த வெளியில் இவை கூடு கட்டு வதில்லை. கட்டடங் களின் உட்பகுதி களிலேயே உத்திரத்தில் கோப்பை வடிவில் மண் உருண்டைகளை இணைத்துக் கூடு கட்டுகின்றன. ஹவுஸ் மார்டின் என்றொரு பறவை, இதுவும் இதே முறையில் தன் கூட்டை கட்டுகிறது. கட்டடங்களில் முன் கூரை முகடுகளில் உருவாக்கும் இதன் கூடு பெரிதாக இருக்கும். உள்ளே நுழைய சிறிய துளை(வாசல்)யுடன். பறவைகள் மண் உருண்டைகளைக் கொண்டு கூடு கட்டுவதைப் பார்த்தே மனிதன் செங்கற்களை உருவாக்கி வீடு கட்ட கற்றுக் கொண்டான்.
siruvarmalar
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» தமிழகத்தில் 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியை நடத்தும்போது இது பெரிய விஷயமா? - நடிகர் பார்த்திபன்
» இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
» அற்புதம் உலகில் தான் இதுவும் ஒரு அற்புதம் தான் (சம் சம்)
» இது தான் என்.எஸ்.கே..!
» முஸ்லிம்களும் மனிதர்கள் தான்...
» இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
» அற்புதம் உலகில் தான் இதுவும் ஒரு அற்புதம் தான் (சம் சம்)
» இது தான் என்.எஸ்.கே..!
» முஸ்லிம்களும் மனிதர்கள் தான்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|