சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: Khan11

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

+5
ராகவா
Nisha
jaleelge
ahmad78
Naseeb Mohammed
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: Empty புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

Post by Naseeb Mohammed Wed 11 Jun 2014 - 13:18


புறம் பேசுவது சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து அல்லது பேசப்படுகின்ற நபரைப் பொறுத்து தாக்கங்கள் அதிகமாக இருக்கும். ஒருவன் கணவன் மனைவியர்களைப் பற்றி ஒவ்வொருவரிடமும் மாறி மாறி புறம் பேசுகின்ற போது அக்குடும்பத்திற்கு பிரச்சனைகளை அல்லது அக்குடும்பத்தைப் பிரித்து விடும் அளவிற்கு அவன் ஆளாகின்றான். இதனால் அந்த குடும்பமே குட்டிச்சுவராகும் அளவிற்கு சென்றுவிடும். இது ஒரு சாதாரண மனிதனைப் பற்றி புறம் பேசுவதைவிட ஆபத்தானதாகும்.

இதே போன்று ஒரு மார்க்க அறிஞரைப் பற்றி மக்களுக்கு மத்தியில் அவரது தனிப்பட்ட குறைகளைப் பற்றி புறம் பேசுகின்ற போது அவரது மற்ற சிறந்த கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ள முன்வர மாட்டார்கள். இதன் மூலம் மக்களுக்கு அவ்வறிஞரின் நேரிய பல கருத்துக்கள் மக்களைச் சென்றடையாமல் அவர்கள் நேரான பாதையை விட்டும் வழிதவறிச் செல்வதற்கும் அவ்வாறு புறம் பேசியவன் காரணமாக அமைந்து விடுகின்றான். எனவே மற்றவர்களின் குறைகளை மக்களுக்கு மத்தியில் பரப்புவதை விட்டும் முற்றாக தவிர்ந்துக் கொள்ள வேண்டும். புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற இத்தகைய விபரீதங்களுக்குத் துணை போகின்றவர்களாக நாம் ஒருபோதும் ஆகிவிடக் கூடாது.

மறுமையில் மிகப்பெரும் நஷ்டவாளியாக நேரிடும்!

புறம் பேசுவது என்பது மேலே குறிப்பிட்டது போன்று இவ்வுலகில் தீய காரியங்களுக்கு எவ்வாறு காரணமாக அமைகின்றதோ அதே போன்று மறுமையில் நாம் நன்மைகள் பல செய்திருந்தாலும் ஒரு நன்மைக்கூட பயனளிக்காத நஷ்டவாளிகளாக்கிவிடக்கூடிய அளவிற்கு தீமை நிறைந்ததாக இருக்கின்றது. மறுமையில் நஷ்டவாளிகள் யார் என்பதை நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடத்தில், ‘உங்களில் நஷ்டவாளி யார் என்று தெரியுமா? என்று கேட்டார்கள். (அதற்கு அவர்கள்) ‘எங்களில் (எவர்களிடத்தில்) தீனாரும் உலகத்தில் வாழ்வதற்கு வசதி வாய்ப்பும் இல்லையோ அவர்களே நஷ்டவாளி என்று குறிப்பிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘மறுமை நாளில் ஒரு மனிதன் தொழுகை, நோன்பு, ஜக்காத் போன்ற நல்லறங்களுடன் வருவான். ஆனால் பலர் வந்து, ‘இவன் என்னை ஏசியவன், நான் செய்யாத விஷயத்தை என் மீது சுமத்தியவன், எனது செல்வத்தை சாப்பிட்டவன், இரத்தங்கள் ஓட்டியவன், அடித்தவன் என்றெல்லாம் அவனுக்கு எதிராக மனிதர்கள் முறையீடு செய்வார்கள். அப்போது அவன் இவ்வுலகில் செய்த நல்லமல்களை எடுத்து அவர்களுக்கு கொடுக்கப்படும். நல்லமல்கள் முடிந்த பிறகு அவர்களின் தீமைகளிலிருந்து எடுக்கப்பட்டு இம்மனிதனுக்கு கொடுக்கப்படும். இவ்வாறு அவன் நரகத்திற்கு நுழைவிக்கப்படுவான். (ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)

இந்த நபிமொழி மறுமையில் புறம் பேசியவனுக்கு கொடுக்கப்படும் கூலியை தெளிவாகவே கூறுகின்றது. ஒருவன் இவ்வுலகில் எவ்வளவு தான் நற்காரியங்கள் செய்தாலும் அவனது புறம் பேசுதலுக்கு மறுமையில் ஒன்றுமே ஈடாகாது என்பதனையும் நாம் மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும். ஆகையால், முதல் காரியமாக நாம் மற்றவர்களின் குறைகளைப் பற்றி அலசி ஆராய்ந்து பிறரிடம் கூறி புறம் பேசிய பாவத்திற்கு ஆளாவதை விட்டுவிட்டு நமது குறைகளை அலசி ஆராய்ந்து அவற்றைக் களைவதற்கு முயற்சிக்க வேண்டும். நம்மை நரக வேதனையில் இருந்து காப்பாற்றிக்கொள்ள பெருமுயற்சி எடுக்க வேண்டும்.

மேலும் புறத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது,

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)
Naseeb Mohammed
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: Empty Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

Post by ahmad78 Wed 11 Jun 2014 - 15:46

என்னதான் உபதேசித்தாலும் இதை மக்களிடமிருந்து நிறுத்தவே முடியாது போலிருக்கிறது.

தகவலுக்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: Empty Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

Post by jaleelge Wed 11 Jun 2014 - 16:31

ahmad78 wrote:என்னதான் உபதேசித்தாலும் இதை மக்களிடமிருந்து நிறுத்தவே முடியாது போலிருக்கிறது.

தகவலுக்கு நன்றி

 நாம் முதலில் நிறுந்துவோம்......    

 நானும்  நிறுந்தவேண்டும் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: Empty Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

Post by Nisha Wed 11 Jun 2014 - 16:34

ஒரு விரல் எதிரே சுட்டினால் மீதி நான்கும் நம்மையே குற்றம்சாட்டும்..

நம்மை நாம் நிதானித்து அறிவோம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: Empty Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

Post by ராகவா Thu 12 Jun 2014 - 12:24

Nisha wrote:ஒரு விரல் எதிரே சுட்டினால் மீதி  நான்கும் நம்மையே குற்றம்சாட்டும்..

நம்மை நாம் நிதானித்து அறிவோம்?
புறம் பேசுபவர் பிணம் தின்னும் கழுகுக்கு நிகரானவர்..பெரும்பாலும் நான்கு பேர் ஒரு சபையில் ஒன்று கூடினால் அடுத்தவரின் குற்றங்குறைகளைப் பற்றிப் பேசாமல் அந்தச் சபையை விட்டும் விலகிச்செல்வதிலலை.
வேண்டாம் உடனே அவ்விடத்தை விட்டு ஓடுங்கள்...

ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: Empty Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

Post by பானுஷபானா Thu 12 Jun 2014 - 14:31

jaleelge wrote:
ahmad78 wrote:என்னதான் உபதேசித்தாலும் இதை மக்களிடமிருந்து நிறுத்தவே முடியாது போலிருக்கிறது.

தகவலுக்கு நன்றி

 நாம் முதலில் நிறுந்துவோம்......    

 நானும்  நிறுந்தவேண்டும் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!

யாரப்பத்தி புறம் பேசுவிங்கண்ணா _* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: Empty Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

Post by jaleelge Thu 12 Jun 2014 - 16:58

பானுஷபானா wrote:
jaleelge wrote:
ahmad78 wrote:என்னதான் உபதேசித்தாலும் இதை மக்களிடமிருந்து நிறுத்தவே முடியாது போலிருக்கிறது.

தகவலுக்கு நன்றி

 நாம் முதலில் நிறுந்துவோம்......    

 நானும்  நிறுந்தவேண்டும் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!

யாரப்பத்தி புறம் பேசுவிங்கண்ணா _* 

யாரப்பத்தி புறம் பேசுவது நம்ம ஊரு அரசியல்வாதிகளைப் பற்றித்தான்.........  நிரம்ப பேசுவன்......  *#  *#  *#  *#  *#  *#
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: Empty Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

Post by rammalar Thu 12 Jun 2014 - 17:02

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: Silence3
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24167
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: Empty Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

Post by நேசமுடன் ஹாசிம் Thu 12 Jun 2014 - 17:12

பேசாதிங்கப்பா 

அவர்ர வீட்டுல அவ ஓடிட்டாளாமா உண்மையா  :()


புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: Empty Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

Post by நண்பன் Thu 12 Jun 2014 - 17:19

நேசமுடன் ஹாசிம் wrote:பேசாதிங்கப்பா 

அவர்ர வீட்டுல அவ ஓடிட்டாளாமா உண்மையா  :()
அவளப்பத்தி பேசவேண்டாம் எனக்கு அவளைப்பிடிக்காது அவள் மோசம்  ^_ ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: Empty Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

Post by ராகவா Thu 12 Jun 2014 - 17:21

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:பேசாதிங்கப்பா 

அவர்ர வீட்டுல அவ ஓடிட்டாளாமா உண்மையா  :()
அவளப்பத்தி பேசவேண்டாம் எனக்கு அவளைப்பிடிக்காது அவள் மோசம்  ^_ ^_ 
படுமோசம்..பட்டேன் மோசம்... (_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: Empty Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

Post by Nisha Thu 12 Jun 2014 - 17:28

அதுதான் சேனைக்கு வ்ர நேரம் இல்லைபோல!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: Empty Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

Post by jaleelge Thu 12 Jun 2014 - 18:05

ஷNisha wrote:அதுதான் சேனைக்கு வ்ர நேரம் இல்லைபோல!

உண்மையை  கரக்டாக்  கண்டுபிடிச்சிட்டாங்க  நிஷா !!!!!! 

இனித் தப்ப முடியாது !!!!! ஷபாஸ்......    ))&  ))&  ))&  ))&  ))&  ))&  ))&  ))&  ))&
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: Empty Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

Post by ராகவா Thu 12 Jun 2014 - 18:08

jaleelge wrote:
ஷNisha wrote:அதுதான் சேனைக்கு வ்ர நேரம் இல்லைபோல!

உண்மையை  கரக்டாக்  கண்டுபிடிச்சிட்டாங்க  நிஷா !!!!!! 

இனித் தப்ப முடியாது !!!!! ஷபாஸ்......    ))&  ))&  ))&  ))&  ))&  ))&  ))&  ))&  ))&
என்ன அண்ணே ஆ! ஊ! கட்டையே எடுக்க கூடாது ஆமா..பெரியங்க பேசும் போது கப்சிப்...இருக்கனும்..
அப்பரம் எல்லாத்திற்கு சேர்த்து கொடுக்கப்பாங்க...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: Empty Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

Post by நண்பன் Thu 12 Jun 2014 - 18:42

அனுராகவன் wrote:
jaleelge wrote:
ஷNisha wrote:அதுதான் சேனைக்கு வ்ர நேரம் இல்லைபோல!

உண்மையை  கரக்டாக்  கண்டுபிடிச்சிட்டாங்க  நிஷா !!!!!! 

இனித் தப்ப முடியாது !!!!! ஷபாஸ்......    ))&  ))&  ))&  ))&  ))&  ))&  ))&  ))&  ))&
என்ன அண்ணே ஆ! ஊ! கட்டையே எடுக்க கூடாது ஆமா..பெரியங்க பேசும் போது கப்சிப்...இருக்கனும்..
அப்பரம் எல்லாத்திற்கு சேர்த்து கொடுக்கப்பாங்க...
 ^_ ^_ ^_ 

நீங்க திருந்துங்க நாங்க திருந்துரோம்
நாங்க திருந்தினாலும் நீங்க திருந்த மாட்டிங்க
நண்பா என்ன ஔர்ர  ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: Empty Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

Post by Nisha Thu 12 Jun 2014 - 18:48

இங்க என்ன நடக்குது.

புறம் பேசுவதால் ஏற்படும் தீமைகள் என அருமையான் ஆலோசனைகட்டுரை ஒன்றை கஷ்டப்பட்டு நஷீப் தட்டச்சிட்டு பகிர்ந்திருக்கின்றார்.

அதை அரட்டை திரி ஆக்குகின்றீர்களா? அவங்க தான் தெரியாம்ல் எழுதுறாங்க எனில் தலைமை நடத்துனர் சாருக்கு என்னாசுங்கறேன்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: Empty Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

Post by ராகவா Thu 12 Jun 2014 - 18:49

Nisha wrote:இங்க என்ன நடக்குது.

புறம் பேசுவதால் ஏற்படும் தீமைகள் என அருமையான் ஆலோசனைகட்டுரை ஒன்றை கஷ்டப்பட்டு  நஷீப் தட்டச்சிட்டு பகிர்ந்திருக்கின்றார்.  

அதை அரட்டை திரி ஆக்குகின்றீர்களா?  அவங்க தான்  தெரியாம்ல்  எழுதுறாங்க எனில் தலைமை நடத்துனர் சாருக்கு என்னாசுங்கறேன்?
 *# *# 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: Empty Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

Post by Nisha Thu 12 Jun 2014 - 18:53

“சொல் வாக்கு”  தவறின்
”செல் வாக்கு”டன் மதிக்கப்படார்.

அருமையான வார்த்தை ஜலீல் சார்! யாருமே சொன்ன வாக்கை காப்பாத்த முயற்சிப்பதே இல்லை. அந்த நேர சூழலுக்கு  வாயில் வருவதை சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க.

அதை நிஜமென நம்புவவங்க தான் கடைசில ஏமாளிங்க! ஆனால் ஒரு முறை தவறிட்டால் மறுமுறை அவர்களை  மதிக்க. தோன்றுமோ?

அர்த்தம் பொதிந்த கையெழுத்து உங்கள் உள்ளான  இருதயத்தில் சிந்தையை வெளிப்படுத்துகின்றது. மகிழ்ச்சி சார்! வாழ்விலும் இப்படியே நிலைத்து நினைக்க வாழ்த்துகள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: Empty Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

Post by ராகவா Thu 12 Jun 2014 - 18:54

Nisha wrote:
“சொல் வாக்கு”  தவறின்
”செல் வாக்கு”டன் மதிக்கப்படார்.

அருமையாட் வார்த்தை ஜலீல் சார்! யாருமே சொன்ன வாக்கை காப்பாத்த முயற்சிப்பதே இல்லை. அந்த நேர சூழலுக்கு  வாயில் வருவதை சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க.

அதை நிஜமென நம்புவவங்க தான் கடைசில ஏமாளிங்க! ஆனால் ஒரு முறை தவறிட்டால் மறுமுறை அவர்களை  மதிக்க. தோன்றுமோ?

அர்த்தம் பொதிந்த கையெழுத்து உங்கள் உள்ளான  இருதயத்தில் சிந்தையை வெளிப்படுத்துகின்றது. மகிழ்ச்சி சார்! வாழ்விலும் இப்படியே நிலைத்து நினைக்க வாழ்த்துகள்!
 சூப்பர் சூப்பர் சூப்பர் 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: Empty Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

Post by நண்பன் Thu 12 Jun 2014 - 19:03

Nisha wrote:இங்க என்ன நடக்குது.

புறம் பேசுவதால் ஏற்படும் தீமைகள் என அருமையான் ஆலோசனைகட்டுரை ஒன்றை கஷ்டப்பட்டு  நஷீப் தட்டச்சிட்டு பகிர்ந்திருக்கின்றார்.  

அதை அரட்டை திரி ஆக்குகின்றீர்களா?  அவங்க தான்  தெரியாம்ல்  எழுதுறாங்க எனில் தலைமை நடத்துனர் சாருக்கு என்னாசுங்கறேன்?
மன்னிக்கவும் அக்கா நான் அரட்டை அடிக்க வில்லை
புறம் பேசுபவர்கள் திருந்த வேண்டும் என்று அப்படி சொல்லிட்டேன்...
நான் இது வரை சின்ன வயதில் சொல்லி இருப்பேனா தெரியாது ஆனால் நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் புறம் பேசியது இல்லை ஆனால் பல பேரால் பல பேர் என்னைப்பற்றி பேசி இருக்கிறார்கள் அதுவும் மலையாளி கேரளா மாநிலம் அவர்களை எனக்கு பிடிக்கவே பிடிக்காது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: Empty Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

Post by ராகவா Thu 12 Jun 2014 - 19:07

நண்பன் wrote:
Nisha wrote:இங்க என்ன நடக்குது.

புறம் பேசுவதால் ஏற்படும் தீமைகள் என அருமையான் ஆலோசனைகட்டுரை ஒன்றை கஷ்டப்பட்டு  நஷீப் தட்டச்சிட்டு பகிர்ந்திருக்கின்றார்.  

அதை அரட்டை திரி ஆக்குகின்றீர்களா?  அவங்க தான்  தெரியாம்ல்  எழுதுறாங்க எனில் தலைமை நடத்துனர் சாருக்கு என்னாசுங்கறேன்?
மன்னிக்கவும் அக்கா நான் அரட்டை அடிக்க வில்லை
புறம் பேசுபவர்கள் திருந்த வேண்டும் என்று அப்படி சொல்லிட்டேன்...
நான் இது வரை சின்ன வயதில் சொல்லி இருப்பேனா தெரியாது    ஆனால் நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் புறம் பேசியது இல்லை   ஆனால் பல பேரால் பல பேர் என்னைப்பற்றி பேசி இருக்கிறார்கள் அதுவும் மலையாளி கேரளா மாநிலம் அவர்களை எனக்கு பிடிக்கவே பிடிக்காது
என்னையும் மன்னிக்கனும் பாஸ்..நானும் கொஞ்சம் மீரிட்டேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: Empty Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

Post by நண்பன் Thu 12 Jun 2014 - 19:07

Nisha wrote:“சொல் வாக்கு”  தவறின்
”செல் வாக்கு”டன் மதிக்கப்படார்.

அருமையான வார்த்தை ஜலீல் சார்! யாருமே சொன்ன வாக்கை காப்பாத்த முயற்சிப்பதே இல்லை. அந்த நேர சூழலுக்கு  வாயில் வருவதை சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க.

அதை நிஜமென நம்புவவங்க தான் கடைசில ஏமாளிங்க! ஆனால் ஒரு முறை தவறிட்டால் மறுமுறை அவர்களை  மதிக்க. தோன்றுமோ?

அர்த்தம் பொதிந்த கையெழுத்து உங்கள் உள்ளான  இருதயத்தில் சிந்தையை வெளிப்படுத்துகின்றது. மகிழ்ச்சி சார்! வாழ்விலும் இப்படியே நிலைத்து நினைக்க வாழ்த்துகள்!
நான் நினைத்தேன் ஜலீல் ஜீயிடம் மாற்ற சொல்ல நினைத்தேன்
காரணம் இப்போது யாரோ அவருக்கு வாக்கு கொடுத்து மாறு செய்து விட்டார்கள் அதன் பாதிப்புதான் இந்த வரிகள்
ஜலீல் ஜீயிடம் ஒரு விடயத்தை மறந்து மன்னிக்கச்சொல்லுங்கள் அக்கா மறப்போம் மன்னிப்போம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: Empty Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

Post by Nisha Thu 12 Jun 2014 - 19:15

அவருக்கு ஆலோசனை சொல்லும் படி நான் இந்த விடயத்தில் மேன்மையாய் இல்லை முஸ்ஸம்மில்!

என்னால் செய்ய முடியாததை நான் மற்றையோர் செய்யும் படி வெறும் வாய் வார்த்தைக்காக மட்டும் சொல்வதே இல்லை. மன்னிக்கணும்பா!

ஏன் எனில் என்னாலும் இந்த விடயத்தினை சகிக்க முடிவதில்லை. அதெப்படி ஒரு முறை வாக்கு கொடுத்து நம்பிக்கைகளை விதைத்து விட்டு அதை மறுதலிக்க மறந்திட முடிகின்றது.

மனட்சாட்சி உறுத்தாதோ! எனக்கு நான் உதவி செய்வதாய் சொல்லி விட்டு செய்ய முடியாது போனாலே மனசெல்லாம் பதறிப்போகும். உதவி என்பது கட்டாயம் இல்லை. ஆனால் கொடுத்த வாக்கை நிறைவேற்றணுமே எனும் மன் உறுத்தல் எம்மை தூங்க விடுவதில்லை.

பல்ர் அப்படி இல்லையே? எப்படி இவர்க்ளால் முடிகின்றது. எல்லாம் மறக்க முடிகின்றது? எமக்கிருக்கும் அதே மனது தானே அவர்களுக்கும் உண்டு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: Empty Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

Post by ராகவா Thu 12 Jun 2014 - 19:22

Nisha wrote:அவருக்கு ஆலோசனை  சொல்லும் படி நான் இந்த விடயத்தில்  மேன்மையாய் இல்லை முஸ்ஸம்மில்!

என்னால் செய்ய முடியாததை நான் மற்றையோர் செய்யும் படி  வெறும் வாய் வார்த்தைக்காக  மட்டும் சொல்வதே இல்லை. மன்னிக்கணும்பா!

ஏன் எனில் என்னாலும் இந்த விடயத்தினை சகிக்க முடிவதில்லை.  அதெப்படி  ஒரு  முறை வாக்கு கொடுத்து நம்பிக்கைகளை விதைத்து விட்டு அதை மறுதலிக்க  மறந்திட முடிகின்றது.

மனட்சாட்சி உறுத்தாதோ!  எனக்கு நான் உதவி செய்வதாய்  சொல்லி விட்டு செய்ய முடியாது போனாலே   மனசெல்லாம் பதறிப்போகும். உதவி என்பது கட்டாயம் இல்லை. ஆனால் கொடுத்த வாக்கை நிறைவேற்றணுமே எனும்  மன் உறுத்தல்  எம்மை தூங்க விடுவதில்லை.

பல்ர் அப்படி இல்லையே? எப்படி இவர்க்ளால் முடிகின்றது.  எல்லாம் மறக்க முடிகின்றது?  எமக்கிருக்கும் அதே மனது தானே அவர்களுக்கும் உண்டு!
அக்கா நாங்கள் மாறுவோம்...மறக்க வில்லை கொஞ்சம் கூடுதல் வேலைகளில் சிந்திக்காமல் செய்யும் தவறு..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: Empty Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

Post by Nisha Thu 12 Jun 2014 - 19:24

ஹலோ மைக் டெஸ்டிக்ங்க்---

இது யாருப்பா லைன் கிராஸ் ஆகுறது. நான் உங்களை என்ன சொன்னேன் ராகவரே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: Empty Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum