Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
இலங்கையின் தேயிலை உற்பத்தி வரலாறு காணாதளவு அதிகரிப்பு
2 posters
Page 1 of 1
இலங்கையின் தேயிலை உற்பத்தி வரலாறு காணாதளவு அதிகரிப்பு
இலங்கையின் தேயிலை உற்பத்தி வரலாறு காணாதளவு அதிகரிப்பு
வெளிநாட்டு வருமானம் 18 வீதத்தால் உயர்வு; இறப்பர் உற்பத்திக்கு நியாயவிலைஇலங்கையின் தேயிலை உற்பத்தியானது வரலாறு காணாதளவு அதிகரித்திருப்பதுடன், சீனா உள்ளிட்ட புதிய சந்தை வாய்ப்புக்கள் கிடைத்திருப்பதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
2013ஆம் ஆண்டு முதல் அரையாண்டு பகுதியுடன் ஒப்பிடுகையில் 2014ஆம் ஆண்டு முதல் அரையாண்டு பகுதியில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 7.5 வீதத்தால் அதிகரித்திருப்பதுடன், இதனூடான வெளிநாட்டு வருமானம் 18 வீதத்தாலும், இலங்கை தேயிலைக்கான விலை 9.8 வீதத்தாலும் அதிகரித்திருப்பதுடன், தேயிலை உற்பத்தியானது 2 வீதத்தாலும் அதிகரித்திருப்பதாக அமைச்சர் கூறினார்.
தேயிலை மற்றும் இறப்பர் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று அமைச்சில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கும் உலக சந்தையின் கேள்விக்கு ஏற்ற வகையில் தரமுயர்ந்த தேயிலைகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இதற்காக தரம் குறைந்த தேயிலை உற்பத்திகளை கண்டுபிடிப்பதற்கு பல்வேறு சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையின் தேயிலைக்கு சீனா, அமெரிக்கா உள்ளிட்ட புதிய சந்தை வாய்ப்புக்கள் உருவாகியுள்ளன.
தேயிலையின் தரத்தை உயர்த்தும் நோக்கில் தோட்டங்களிலிருந்து தேயிலைகளை பாதுகாப்பாக வாகனங்களில் கொண்டு வருவதற்கு ஏற்ற வகையில் மாற்றங்களைச் செய்வதற்கு அமைச்சின் ஊடாக உதவிகள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.
பெருந்தோட்டத்துறை உள்ளிட்ட பயிர்ச்செய்கையாளர்களுக்கு 1300 ரூபா வீதம் 50 கிலோ கிராம் உரத்தை மானியவிலையில் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் 4500 மில்லியன் ரூபாவை செலவு செய்கிறது. அரசாங்கம் எடுத்திருக்கும் இவ்வாறான நடவடிக்கைகளின் காரணமாகவே இலங்கை தேயிலை வரலாற்றில் என்றுமில்லாதளவு உற்பத்தியை எட்ட முடிந்துள்ளது.
இறப்பர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இறப்பருக்கு நியாய விலையைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூடிய விரைவில் நியாயவிலை பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இறப்பர் உற்பத்தி விலையைவிட கூடுதல் விலைக்கே இறப்பர் கொள்வனவு செய்யப்படுகிறது. இருந்தபோதும் இறப்பர் உற்பத்தியாளர்கள் குறித்த துறையிலிருந்து வெளியேறாதிருக்க நியாயவிலை பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.
இலங்கையில் இறப்பர் உற்பத்தியில் 75 வீதமான இறப்பர் தேசிய உற்பத்தி சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. 25 வீதமான இறப்பர் பால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இறப்பர் பொருள் உற்பத்திக்காக 10 வீதத்துக்கும் குறைவான இறப்பர் பாலே வெளிநாடுகளிலிருந்து இறக்கு மதி செய்யப்படுகிறது. இறப்பர் பால் இறக்குமதி செய்யப்படுவதாலேயே இலங்கையில் இறப்பரின் விலை வீழ்ச்சியடைந்திருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் வெறுமனே அரசியல் நோக்கத்திலான குற்றச்சாட்டுக்களே.
உலக சந்தையில் இறப்பரை கொள்வனவு செய்யும் நாடுகளில் கேள்வி குறைந்திருப்பதும் இறப்பரின் விலை வீழ்ச்சியடையக் காரணமாகியுள்ளது.
அது மட்டுமன்றி இறப்பர் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் வடக்கில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் நாம் புதிதாக இறப்பர் மரங்களை நாட்டியுள்ளோம்.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் புதிய இறப்பர் செய்கையை ஆரம்பித்துள்ளோம். எப்.ஏ.ஓ அமைப்பின் கடனுதவியுடன் மொனராகலை மாவட்டத்தில் புதிதாக 9500 இறப்பர் உற்தியாளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். சுமார் 5500 ஹெக்டெயர் நிலப்பரப்பில் இறப்பர் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கையின் தேயிலை உற்பத்தி வரலாறு காணாதளவு அதிகரிப்பு
பரவாயில்லையே! அன்னியசெலாவணி அதிகரிக்கும் தானே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» 2 இலட்சம் கிலோ கழிவு தேயிலை பேலியகொடையில் சிக்கியது
» தேயிலை களஞ்சிய சாலையில் ரூ 40 இலட்சம் தேயிலை திருட்டு: சந்தேகநபர் கைது
» மாத்தளையில் ஒரு வித பூச்சி பரவல்: தேயிலை செய்கை பாதிப்பு _
» பசறையிலிருந்து கொழும்புக்கு கொண்டு வந்த 42 மூடை தேயிலை லொறியுடன் கொள்ளை
» பதுளை தேயிலை தொழிற்சாலையில் வெடிவிபத்து; மூவர் பலி _
» தேயிலை களஞ்சிய சாலையில் ரூ 40 இலட்சம் தேயிலை திருட்டு: சந்தேகநபர் கைது
» மாத்தளையில் ஒரு வித பூச்சி பரவல்: தேயிலை செய்கை பாதிப்பு _
» பசறையிலிருந்து கொழும்புக்கு கொண்டு வந்த 42 மூடை தேயிலை லொறியுடன் கொள்ளை
» பதுளை தேயிலை தொழிற்சாலையில் வெடிவிபத்து; மூவர் பலி _
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|