சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

மகிந்த அரசாங்கத்துக்கு வீதிகள் அமைப்பதென்றால் மிகவும் விருப்பம்  Khan11

மகிந்த அரசாங்கத்துக்கு வீதிகள் அமைப்பதென்றால் மிகவும் விருப்பம்

Go down

மகிந்த அரசாங்கத்துக்கு வீதிகள் அமைப்பதென்றால் மிகவும் விருப்பம்  Empty மகிந்த அரசாங்கத்துக்கு வீதிகள் அமைப்பதென்றால் மிகவும் விருப்பம்

Post by நண்பன் Sat 6 Dec 2014 - 8:56

மகிந்த அரசாங்கத்துக்கு வீதிகள் அமைப்பதென்றால் மிகவும் விருப்பம்  Chandrika-Kumaratunga_1

யுத்தத்தின் 75 சதவீதம் தமது ஆட்சியிலேயே முடிக்கப்பட்டு விட்டதாகவும் எஞ்சிய 25 சதவீதத்தை மட்டுமே தமது அரசாங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மிச்சமாக வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போதைய எதிரணி பொது வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான  மைத்திரிபால சிறிசேனவே யுத்தம் நிறைவடையும் போது நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மாத்தறை, உயன்வத்த விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்றப் பொது எதிரணியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே சந்திரிக்கா குமாரதுங்க இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.  
அவர் இங்கு மேலும் பேசுகையில்;   "எமது போராட்டம் குறிப்பிட்ட ஒருவருக்கு எதிரானதல்ல. ஒருவர் மட்டுமே ஜனாதிபதி பதவியை வகித்துக் கொண்டு, அவரும் அவரது குடும்பமும் நாட்டுக்கு ஏற்படுத்தும் பாதிப்பை தடுத்து நிறுத்துவதே எமது போராட்டத்தின் நோக்கமாகும். அரசுக்குள்ளேயே இருந்து கொண்டு நாட்டை சீரழிக்கும் இன்னுமொரு தரப்பும் இருக்கிறது. இன்று பசி, பட்டினியை விடவும் சுதந்திரமே முக்கிய தேவையாக இருக்கிறது. பட்டப்பகலில் நடு வீதியில் மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். நடுத்தர வர்க்கத்தினர் கூட இன்றும் மூன்று வேளைகளும் சாப்பிட முடியாத நிலைமை காணப்படுகிறது. சுமார் 15 தலைமுறைகளை அடகு வைத்தே அரசாங்கம் நாட்டை அபிவிருத்தி செய்கிறது.  


அரசாங்கத்துக்கு வீதிகள் அமைப்பதென்றால் மிகவும் விருப்பம். வீதியொன்றை அமைக்க உண்மையில் செலவாகும் தொகையை விடவும் 9 மடங்கு அதிகமான தொகையை இந்த அரசாங்கம் வீதி அமைக்க செலவிடுகிறது. இந்த வீண் விரயத்தை தடுத்து நிறுத்தினால் அரசதுறை ஊழியர்களின் சம்பளத்தை இரட்டிப்பாக்க முடியும். அனைத்து ஊழல் மோசடிகளையும் நிறுத்தினால் இந்த நாட்டை சொர்க்க பூமியாக்க முடியும். எமது அரசின் கீழ் அரசதுறை ஊழியர்களின் சம்பளம் 5 மடங்காக உயர்த்தப்பட்டது. அதுவும் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதுதான். யுத்தம் செய்தார் என்று கூறி ஜனாதிபதியொருவர் முடிந்தளவு காலம் அவரே தான் ஜனாதிபதியாக இருக்க வேண்டுமா? 
அதன் பின்னர் அவரது தம்பிமார்களும் அதன் பின்னர் மகன்மார்களும் நாட்டின் ஜனாதிபதியாக வேண்டுமா?  சரத் பொன்சேகா தான் யுத்தம் செய்தார். யுத்தத்தின் 75 சதவீதம் எமது அரசின் கீழேயே முடிக்கப்பட்டுவிட்டது. 25 சதவீதத்தை மட்டுமே நாம் ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு மிச்சமாக வைத்திருந்தோம். அதுமட்டுமல்லாது, யுத்தம் நிறைவடையும் போது மைத்திரிபால சிறிசேன தான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.  
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒருபோதும் ஒன்றிணைந்து செயற்பட்டதில்லை. எனினும், இந்த கொடுமையான ஆட்சிக்கு எதிராக நாம் இன்று ஒன்று சேர்ந்துள்ளோம். எனது பிள்ளைகள் அரசியலுக்கு வரப்போவதில்லை. நான் கிரீடம் அணிவிப்பதற்கு எனக்கு தலைமுறையொன்றும் இல்லை. மக்கள் மீது நேசம் இருந்தாலும் மீண்டும் அரசியலுக்கு வருவதில்லை என்று தான் நான் நினைத்து கொண்டிருந்தேன். தனிப்பட்ட இலாபங்களை எதிர்பார்த்து நாம் மீண்டும் அரசியலுக்கு வரவில்லை.


தினக்குரல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மகிந்த அரசாங்கத்துக்கு வீதிகள் அமைப்பதென்றால் மிகவும் விருப்பம்  Empty Re: மகிந்த அரசாங்கத்துக்கு வீதிகள் அமைப்பதென்றால் மிகவும் விருப்பம்

Post by நண்பன் Sat 6 Dec 2014 - 9:07

என் கண் முன்னே கண்டேன் 20 லட்சம் பெறுமதியான ஒரு வடிகான் அமைத்து விட்டு 15 கோடி கணக்குக் காட்டினார்கள் 

400 மீட்டர் தூரம் வடிகான் அமைக்க எத்தனை கோடி ரூபாய் தேவைப் படும் 

அவர்கள் அதற்கு சிலவழித்த தொகையைப் பார்த்து ரெத்தக்கண்ணீர் வடித்தேன் 
பல கிலோ மீற்றர் தூரம் செய்ய வேண்டிய வடிகான் சிலவை வெறும் 400 மீற்றருக்கு சிலவழித்திருந்தார்கள்  என்ன கொடுமை என்ன கொடுமை அழுகை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum