சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பீட்ரூட் குழம்பு
by rammalar Today at 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Today at 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Today at 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Today at 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Today at 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Yesterday at 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Yesterday at 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Yesterday at 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

சினிமா : கலி (மலையாளம்) Khan11

சினிமா : கலி (மலையாளம்)

Go down

சினிமா : கலி (மலையாளம்) Empty சினிமா : கலி (மலையாளம்)

Post by சே.குமார் Fri 29 Jul 2016 - 9:07

லியில் 'அவனுக்கு மூக்குக்கு மேல கோபம் வருமப்பா' என்று நம்ம ஊர்ப்பக்கம் சொல்வார்களே அப்படி ஒரு கதாபாத்திரம் துல்கருக்கு... எதற்கெடுத்தாலும் கோபம்... காதலித்து திருமணம் செய்து கொண்ட சாய் பல்லவியுடனும் அடிக்கடி மோதல்... அப்படியிருந்தும் காதலால் இருவரும் விட்டுக் கொடுத்து வாழ்கிறார்கள். ஒருநாள் அலுவலக பார்ட்டிக்குச் செல்லுமிடத்தில் துல்கர் நடந்து கொண்ட விதத்தினால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டை பெரிதாகி சாய் வீட்டை விட்டு தமிழ்நாட்டில் இருக்கும் தன் தாய் வீட்டிற்கு கிளம்பிவிட, இந்த இரவில் தனியாக செல்ல வேண்டாம்... நான் கொண்டு வந்து விடுகிறேன் என்று அவரை காரில் ஏற்றிக் கொண்டு பயணிக்கிறார் துல்கர். 

சினிமா : கலி (மலையாளம்) Kali-Malayalam-Movie-Poster-Stills-Dulquer-Sai-Pallavi-1


வழியில் லாரிக்காரன் ஒருவன் வேண்டுமென்றே இவர்களது காரை ரோட்டை விட்டு இறங்க வைக்க, துல்கரின் சாமர்த்தியத்தால் மிகப் பெரிய விபத்தில் தப்பிவிடுகிறார்கள். அதன் பின் லாரிக்காரனை அவன் விரட்ட, சாய் பல்லவி வேண்டாமென மன்றாட, ஒரு கட்டத்தில் லாரியை மறித்து டிரைவரை அடிப்பதற்காக காரில் இருந்து இறங்கும் துல்கரை, சாய் கெஞ்சிக் கூத்தாடி தடுத்து அழைத்துச் செல்கிறார். போகும் வழியில் பசி எடுக்க ரோட்டோர மோட்டலில் சாப்பிட போகிறார்கள். அப்போது அங்கு லாரிக்காரனும் வர, மீண்டும் ஆரம்பிக்கும் சின்ன பிரச்சினையில் படம் சூடு பிடிக்கிறது.

ரோட்டோர மோட்டல் பிடிக்காமல் வேண்டா வெறுப்பாக சாய்க்காக சாப்பிடும் துல்கர், காசு கொடுக்கும் போது வேண்டாமென திருப்பிக் கொடுத்த ஜூஸ்க்கும் காசு போட்டிருப்பது குறித்து சண்டையிட்டு ஒருவழியாக பணம் கொடுக்கப் பர்ஸை எடுத்தால் அதில் சல்லிக்காசு இல்லை. அப்போதுதான் வீட்டில் சாயுடனான சண்டைக்குப் பின்னர் வீட்டு ஓனர் வந்து பேச, அவரிடம் பர்ஸில் இருந்த காசை எல்லாம் எடுத்து வாடகை கொடுத்து விட்ட வந்தது நினைவில் வருகிறது, சாயிடம் ஏதாவது பணம் இருக்கிறதா என்று கேட்கிறான். அவளோ தானும் எடுத்துவரவில்லை என்று சொல்லிவிடுகிறாள்.  காசில்லாததால் கிரிடிட் கார்டைக் கொடுக்கிறான். அவர்களோ இங்க கிரிடிட் கார்டு வசதியெல்லாம் இல்லை... எனவே பணமாகக் கொடுங்கள்... என்று கறாராகச் சொல்ல, அந்த நேரத்தில் ஏடிஎம்மைத் தேடித் செல்லும் நிலைமை ஏற்படுகிறது. 

யாராவது ஒருவர்தான் போக வேண்டும் என்ற நிலையில் பாதுகாப்பு கருதி தான் அங்கிருந்து கொண்டு ஓரளவே கார் ஓட்டத் தெரிந்த சாய் பல்லவியை அனுப்பி வைக்கிறார். அவர் சென்ற சிறிது நேரத்தில் அவர் பின்னே லாரிக்காரனும் கிளம்புகிறான். அதிலிருந்து நமக்கும் ஹார்ட் பீட் எகிற ஆரம்பிக்கிறது... அந்த படபடப்பு இறுதிக் காட்சி வரை தொடர்கிறது. சாய் பல்லவியை லாரிக்காரன் என்ன செய்தான்...? மனைவிக்காக தன் கோபத்தை குறைத்துக் கொள்ளும் துல்கருக்கு அந்த மோட்டலில் நடந்தது என்ன..? கணவனும் மனைவியும் மீண்டும் சேர்ந்தார்களா..? என்பதே படத்தின் இறுதிப் பகுதி.

சினிமா : கலி (மலையாளம்) SAI-PALLAVI-6


சாய் பல்லவி கோபித்துக் கொண்டு வெளியே போவதில் ஆரம்பிக்கும் அவர்களின் கதையில் கல்லூரி வாழ்க்கை, காதல், கல்யாணம், வேலை என முந்தைய நிகழ்வுகள் அழகாய் விரிகிறது. லாரிக்காரனின் வரவுக்குப் பின்னர் அந்த மோட்டல் காட்சிகள் பரபர... மிரட்டலாய் இருக்கிறது. துல்கர் தனக்கு பொறுத்தமான படங்களை மிகச் சரியாக தேர்வு செய்கிறார். அப்பா மம்முட்டியின் பங்கும் இருக்குமோ என்னவோ...? பொறுத்தமான கதாபாத்திரத்தினாலேயே தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுக்கிறார். மலர் டீச்சராக பார்த்த சாய் பல்லவிக்கு இதில் கண்ணீரோடு இருக்கும் காட்சிகளே அதிகம்... அதையும் சரியாக செய்திருக்கிறார் என்றாலும் மலர் டீச்சரைவிட இதில் இன்னும் எலும்பாய் தெரிகிறார்... கொஞ்சம் சதைப்பிடிப்பு வேண்டும் பெண்ணே. 

லாரிக்காரனாக செம்பான் வினோத்தும் மோட்டல் நடத்தும் ரவுடியாக விநாயகமும் நடித்திருக்கிறார்கள். இசை : கோபி சுந்தர், கதை : ராஜேஷ் கோபிநந்தன், இயக்கம் : சமீர் தாஹிர். பாடல்களை ரசிக்கலாம்... ஆரம்பத்தில் மெல்ல நகர்ந்து இடைவேளைக்குப் பின்னர் வேகமெடுக்கும் கலி, மொத்தத்தில் படம் சூப்பருங்க...



-'பரிவை' சே.குமார். 
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum