சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

சினிமா : கிடாரி Khan11

சினிமா : கிடாரி

2 posters

Go down

சினிமா : கிடாரி Empty சினிமா : கிடாரி

Post by சே.குமார் Tue 6 Sep 2016 - 6:39

சினிமா : கிடாரி Kidari_songs_review_m

ங்க பக்கம் பருவம் அடையாத... அதாவது சினை பிடிக்கும் பக்குவத்தை எட்டாத வரை மாட்டை 'கிடேரி' என்று அழைப்பார்கள். பசுவங்கிடேரி... எருமைக்கிடேரி என்பது பெயராகவே ஆகிவிடும். ஒருவேளை கிடாரி என்பதுதான் பேச்சு வழக்கில் கிடேரி என்று ஆகியிருக்கக் கூடும். எங்க வீட்டில் பிறந்து வளர்த்த மாடுகளில் பலவற்றை  'கிடேரி' என்றே அழைத்துப் பழக்கப்பட்டதால், அவற்றை மேய்க்கும் போது எங்காவது ஓட எத்தனித்தால் 'ஏய் கிடேரி' என்று கத்தினால் அப்படியே நின்று திரும்பிப் பார்த்து குரல் கொடுக்கும். கிடாரி என்பதற்கு ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொன்றிற்குச் சொல்கிறார்கள்.  கிடேரி என்பது பெண் மாட்டைக் குறிப்பதால் இந்தப் படத்திற்கு பெயர் வைத்தார்கள் என்றால் அது நாயகனைக் குறிக்கும் என்பதாக இல்லை... எல்லாவற்றிக்கும் துள்ளி எழும் அவனைப் பெட்டை என்ற பதத்தில் அழைக்கமாட்டார்களே... ஒருவேளை வில்லனாய் சித்தரிக்கப்படுபவர் தனது வாழ்க்கைக்காக மற்றவரை அழிப்பதாலும் இந்தப் பெயர் வைத்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான பெயர்காரணம் இருப்பதால் படத்தின் பெயரைப் பிரபலமாக்க நாயகனுக்கு கிடாரி என்ற பெயரை வைத்திருக்கிறார்கள். ஊரில் அடங்காப்'பிடாரி' என்று சொல்வார்களே அப்படிப்பட்டவன்தான் இந்த கிடாரி. 
கிடாரி... இங்கு யாருக்கும் அடங்காமல் திமிரிக் கொண்டு திரியும்... நம்ம பக்கம் அப்படித் திணவெடுத்துத் திரிபவனை கோவில் காளை என்றோ பொலி எருது என்றோ அழைப்போமே அப்படிப்பட்டவந்தான் இவன்... முறுக்கு மீசையும் குறுங்கத்தியுமாகத் திரிபவன். தன்னை வளர்த்து பிள்ளை போல் நினைப்பவருக்காக அடிக்கடி ரத்தம் பார்க்கும் ராட்சஸன். அவனுக்குள்ளும் மென்மையான காதல் இருக்கிறது... வளர்த்தவள் என்றாலும் அவள் மீது பெற்றவள் போன்ற அன்பு இருக்கிறது... உப்பு போட்ட வீட்டுக்கு துரோகம் பண்ண மாட்டேன் என்ற நல்ல குணமும் விரவிக் கிடக்கிறது.
கிடாரி... யாரை நல்லவன் என்று நம்புகிறோமே அவன் நல்லவன் இல்லை என்பதே படத்தோட கரு... சசிகுமாரோட படங்களில் எல்லாமே இதுதான் மையக்கரு... தனது படங்களில் வன்முறை இருந்தாலும் சில நல்ல விஷயங்களைப் பேசும் சசிகுமார், படம் முழுவது தன்னைச் சுற்றியே நகரும்படி கதை அமைப்பதில் கில்லாடி. இந்தப் படத்தில் கொஞ்சம் மாறுதலாய் வன்முறைக்கு வன்முறைதான் சரி என்று சொல்வதுடன் எல்லாக் கதாபாத்திரங்களும் தன்னைப் பற்றி பேசும்படி வைத்திருக்கிறார். இதில் சாதித்தாரா..? இல்லை நம்மைச் சோதித்தாரா...? என்றால் இரண்டும் சமபங்குதான்... பெரிய எதிர்பார்ப்பைக் கொடுத்த படம்... ரத்தச் சகதியில் சிக்கி குற்றுயிராய்க் கிடந்து தவிக்கிறது.
சினிமா : கிடாரி %25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25B2

படத்தில் எல்லாரையும் பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு நிற்பவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி அவர்கள்தான்... 'ஏய் பொட்டை வெளியில வாடா'ன்னதும் கோவணத்தை வரிந்து கட்டியபடி எண்ணெய் தேய்த்த உடம்புடன் வேல் கம்பைத் தூக்கிக் கொண்டு வீதிக்கு ஓடிவரும் போது  மனுசன் கலக்கிட்டாரு... அவர் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்... மகனிடம் கோபப்படும் இடம்... கிடாரி வரவில்லை என்று வருந்தி இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்து, அவன் வீட்டுக்குள் நுழைந்து மாடத்தில் நிற்கும் தன்னைப் பார்த்து லேசான புன்னகை பூத்ததும் விடும் ஒற்றைப்  பெருமூச்சு... மகனின் பிணத்தைப் புரட்டி செருப்பை எடுத்துக் கொண்டு பதட்டத்துடன் நடப்பது என தூள் கிளப்புகிறார். வேல ராமமூர்த்தி ஐயா அவர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார் என்றால் அவரின் போக்கில் நடிக்க வைத்த இயக்குநரையும் தயாரிப்பாளரையும் பாராட்டியே ஆகவேண்டும். பெரும்பாலான படங்களில் இது போன்ற பாத்திரங்களையே அவர் ஏற்பதுதான் ஏனென்று தெரியவில்லை... மாற்றிக் கொண்டால் மிகச் சிறப்பான இடத்தை அடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை அவர் உணர்ந்து கதாபாத்திரத்தை தேர்வு செய்ய வேண்டிய காலகட்டம் இது.
சினிமா : கிடாரி %25E0%25AE%25A8%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AE%25BE

ரத்த வாடை வீசும் படத்தில் காதல் தென்றலை வீசச் செய்து நெஞ்சை அள்ளி நம் நெஞ்சுக்குள் 'விரல் தொடும் தூரத்தில் வரம் இருக்கு' என்று அமர்ந்து கொள்பவர் நிகிலா விமல்... இந்தப் பொன்ணு என்னமா நடிக்குது... வெற்றிவேல் படத்தில் சோகமாய் இருக்கும் போதே பட்டையைக் கிளப்பியிருக்கும் இதில் சொல்லவா வேண்டும்... காதல் காட்சிகளில் எல்லாம் செம...  காதல் காட்சிகளை ரொம்ப ரசனைக்குரியதாய் ஆக்கியதில் பெரும்பங்கு இவருக்குத்தான்.... அந்த உதட்டுச் சுழிப்பு... புருவ நெளிப்பு... கண் ஜாடை... சின்னச் சின்ன துள்ளல்கள்... என எல்லாமே கலக்கல். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல நடிகை கிடைத்திருக்கிறார். ஊதாக்கலரு ரிப்பனில் ஸ்ரீதிவ்யா கண்ஜாடை காட்டுமே.... உன்மேல ஒரு கண்ணுதானில் கீர்த்தி கண்ஜாடை காட்டுமே... அதெல்லாம் பின்னுக்குத் தள்ளி வண்டியில நெல்லு வருமில் கண்ஜாடை காட்டி எல்லாரையும் தன் பக்கம் இழுத்திருச்சு... உண்மையிலேயே நல்ல நடிப்பு... தன்னோட படங்களில் கதாநாயகிக்கு நிறைய காட்சிகள்... அதுவும் நிறைவாய் கொடுப்பது சசிகுமாரின் பாணி. அது இதிலும்... நிகிலாவும் பட முழுக்க வருவது போல் காட்சிகள் வைத்ததில் ரத்தத்தின் ஊடே காதல் பாய்ந்திருக்கிறது.
சினிமா : கிடாரி %25E0%25AE%25B5%25E0%25AE%259A%25E0%25AF%2581

கொம்பையா பாண்டியன் அதாங்க வேலராமமூர்த்தி ஐயாவின் மகனான வருபவர் மிகச் சிறந்த எழுத்தாளுரும் இலக்கியவாதியுமான வசுமித்ரவாம். அவரோட வசன உச்சரிப்பு... பேசும் போது முகத்தில் காட்டும் பாவங்கள் என பக்காவாச் செய்திருக்கிறார். நடிகனின் மகன் நடிகன் ஆவது போல்... அரசியல்வாதி மகன் அரசியல்வாதி ஆவது போல் ஒரு ரவுடியின் மகன் ரவுடி ஆக ஆசைப்படுவான் என்பது நம்ம தமிழ்ச் சினிமாவில் எழுதப்படாத விதி. கபாலி குடும்பச் சிதைவுக்கும் இதுதானே காரணம்... அதேதான் இங்கும்... தன் இடத்தில் சசியா என்று பொருமுபவரை தன்னுள் அடக்கி ஏத்திவிட்டு தனக்கான வரவு செலவு கணக்கை முடிக்க நினைக்கும் பெண் ஒருத்தியின் தூண்டுதலில் சிலிர்த்தெழுந்து அடங்கிப் போகிறார்.
சினிமா : கிடாரி %25E0%25AE%259A%25E0%25AE%259A%25E0%25AE%25BF

சசிகுமார்... மீசையைத் தடவிக் கொண்டு... குறுங்கத்தியை வாயில் கடித்துக் கொண்டு... டநான் இருக்கும் போது உங்களை போட வந்துட்டானே...' என்று மதயானை போல் கொம்பையா பாண்டியனுக்காக சதக்.. சதக்குன்னு காசாப்புக் கடையில் ஆடு வெட்டுவது போல் வெட்டுகிறார். தன்னோட படத்தில் வன்முறைகள் இருந்தாலும் கடைசியில் ஒரு நல்ல தீர்வைச் சொல்லி முடிப்பார். இதில் வன்முறைக்கு வன்முறையே தீர்வு என்பதாய்த்தானே சொல்கிறார்... திருந்தி வாழவில்லை... யாரையும் திருத்தவும் இல்லை... நீண்ட முடி வைத்து வழித்துச் சீவி.... எப்பவும் போல் தாடியுடன் முறுக்கிய மீசை வைத்து கண்ணில் வன்மம் காட்டி நடித்து சசிகுமார் நாயகனாக நின்றாலும் வேலராமமூர்த்தியுடன் வரும் காட்சிகளில் எல்லாம் அந்த மனுசன் நாயகனைப் பின்னுக்குத்தள்ளி வில்லனை முன் நிறுத்திவிட்டார். சசிகுமார் வன்முறைகளில் இருந்து வெளி வரவேண்டிய காலகட்டத்துக்கு வந்துவிட்டார். வன்முறையை வைத்து மட்டுமே நல்ல கருத்தை சொல்ல வேண்டும் என்பதில்லை... சொல்ல வேண்டிய நல்லதை எப்படியும் சொல்லலாம் என்பதை உணர வேண்டும். காதல் காட்சிகளில் அசத்துகிறார். சின்னச் சின்ன சில்மிஷங்களில் நிகிலாவுக்கு இணையாய்... எப்பவுமே நகைச்சுவை காட்சிகளை தனக்கும் வைத்துக் கொள்ளும்  இவர் இதில் 'தூளியிலே ஆட வந்த' பாடலில் நகைச்சுவையில் கலக்கியிருக்கிறார்... சசி ராக்ஸ்.
தொடர்ந்து வாசிக்க 'மனசு'க்கு வாங்க... ஹி..ஹி.... இங்க முழுவதும் போட்டா யாருமே நம்ம கடைப்பக்கம் வர மாட்டேங்கிறீங்க... அதான்...
-'பரிவை' சே,குமார். 
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

சினிமா : கிடாரி Empty Re: சினிமா : கிடாரி

Post by Nisha Tue 6 Sep 2016 - 21:48

மீண்டுமாய் ஒரு அசத்தல் விமர்சனம். குமாரின் எழுத்துக்களின் இருக்கும்  கூர்மை எப்போதும் போல் ஜொலிக்கின்றது. சூப்பர்ப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum