சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கையின் விந்தை…
by rammalar Today at 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Yesterday at 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Yesterday at 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Yesterday at 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Yesterday at 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Yesterday at 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

 இருளிலும் வெளிச்சம்  Khan11

இருளிலும் வெளிச்சம்

2 posters

Go down

 இருளிலும் வெளிச்சம்  Empty இருளிலும் வெளிச்சம்

Post by rapayel Sat 12 Mar 2011 - 12:19

 இருளிலும் வெளிச்சம்  Empty இருளிலும் வெளிச்சம்



நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர்; என் வாய் மீறாதபடிக்குத் தீர்மானம்பண்ணினேன். - (சங்கீதம் 17:3).


மும்பையின் அருகே ஒரு தீவு உண்டு. அந்த தீவில், பகலில் எல்லா மரங்குளும் செடிகளும் பூத்துக் குலுங்கும்போது, ஒரு படர்ந்த புதர் போன்ற செடியில் மட்டும் ஒரு சூரிய வெளிச்சம்பட்டவுடன் அதில் உள்ள எல்லா பூக்களும் வாடி கொட்டிவிடும். அது துக்கசெடி என்று அழைக்கப்படுகிறது.

ஆனால் சூரியன் மறைந்து, ஒரு மணி நேரத்திற்குள், அந்த செடி பூத்து குலுங்கி, அதன் பூக்களின் வாசனை அந்த தீவையே நறுமணத்தினால் மூழ்கடித்து விடும்.

துன்பம் என்பது நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு மணத்தை கொடுப்பதாய் இருக்கிறது. நாம் அனைவரும், எல்லாம் சரியாக இனிமையாக போய்கொண்டிருக்கும் போது, நமது வாசனையும் மிகவும் இனிமையாகதான் இருக்கும். ஆனால், நம் வாழ்வு இருளாக மாறும் போது, அல்லது துக்கங்கள், துன்பங்கள் வரும்போது, நாம் யார் என்று அப்போதுதான் விளங்கும்.

எனக்கு தெரிந்த ஒரு நண்பர், அவர் குடும்பத்தில் எல்லாம் சரியாக போய் கொண்டிருக்கும்போது, அவரது 60 வயதிலும் முப்பது வயது வாலிபனைப் போல் துள்ளிக் கொண்டிருந்தார். ஆனால் அவரது குடும்பத்தில் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்த போது, ஆளே அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து போனார். எவ்வளவு தான் விசுவாசம் இருந்த போதிலும், அவர் சரீரமும், ஆத்துமாவும் மிகவும் தளர்ந்து போனது. மெதுவாக, அவர் கர்த்தருக்குள் தன்னை திடப்படுத்திக் கொண்டார்.

ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது - (நீதிமொழிகள் 24:10) என்ற வசனம் கூறுகிறது. நாம் சோர்ந்து போவதற்காக நமக்கு துன்பங்கள் வருவதில்லை. நம்மை இன்னும் ஆவிக்குரிய வாழ்விலும், நமது ஆத்துமாவிலும் பெலன் கொள்ளும்படியாகவே நமக்கு துன்பங்கள் வருகிறது. நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர். - (சங்கீதம் 138:3) என்ற வேதம் நமக்கு கூறுகிறது. நம் தேவன் நம்முடைய ஆத்துமாவிலே பெலன் தந்து நம்மை தைரியப்படுத்துகிற தேவனாயிருக்கிறார்.

மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; (ஏசாயா 53:4) எனப் பார்க்கிறோம். அவர் நமது துக்கங்களை சிலுவையில் சுமந்து தீர்த்து விட்டபடியால் நாம் அவைகளை சுமக்க தேவையில்லை. நமது வாழ்வு இருளாக மாறினாலும், நம் இயேசு அதை ஒளியாக மாற்றுவார். அந்த நம்பிக்கை நம் இருதயத்தில் இருக்கும்போது, எந்த இருளும் நம்மை சேதப்படுத்துவதில்லை.

நீதியின் சூரியனாகிய இயேசுகிறிஸ்து நம் வாழ்வில் பிரகாசிக்கும்போது, அந்த துக்கசெடி வாடினது போல நாம் வாடி போகாமல் வெளிச்சம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, நம் வாழ்வில் இனிமை பூத்து குலுங்கும். அப்பொழுது நாம் ‘நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர்’ என்று சொல்லலாம்.

நமது துக்கங்களை துன்பங்களை சுமந்த தேவன் நமக்கு இருக்கும்போது நாம் தடுமாற வேண்டுவதென்ன? எதிர்காலத்தைக் குறித்து கலங்க வேண்டுவதென்ன? என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு - (பிலிப்பியர் 4:13) என தைரியத்தோடே சொல்லி, துன்பங்களை நாம் தாண்டிடுவோம்.

இந்த நாளின் வாக்குதத்தமாக ‘என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்’ - (சங்கீதம் 18: 28) என்று விசுவாசிப்போம். அபபடியே தேவன் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் இருக்கும் இருளை வெளிச்சமாக்குவாராக! ஆமென் அல்லேலூயா!

இருளாக வாழ்க்கை மாறிடும்போது

ஒளியை தருகின்றீரே

இமைப்பொழுதும் என்னை கைவிடாமல்

காத்து வருகின்றீரே

கர்த்தர் கிருபை என்றுமுள்ளது

என்றே என்னை பாடவைத்தீர்

rapayel
rapayel
புதுமுகம்

பதிவுகள்:- : 61
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

 இருளிலும் வெளிச்சம்  Empty Re: இருளிலும் வெளிச்சம்

Post by ஹம்னா Sat 12 Mar 2011 - 16:57

:!+:


 இருளிலும் வெளிச்சம்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum