Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
Page 1 of 1
அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
-----------
அழுதால் அவர்கள் கோழை, பெண்கள்தான் அழுவார்கள்,
அழுகை என்பது இயலாமை, அடிக்கடி அழுபவர்கள் மனதளவில்
மிகவும் பக்குவம் இல்லாதவர்களாக இருப்பார்கள் என்றுதான்
இதுவரை நமக்கு சொல்லப் பட்டிருக்கும். ஆனால், உண்மை அது
இல்லை.
சிரிப்பு, கோபம், உறக்கம், அமைதி, வலி போன்றுதான் அழுகையும்
ஓர் உணர்வு. அதை அடக்கிவைக்கத் தேவை இல்லை. எப்படி நமக்கு
அடிபட்டால் மருந்து தடவுகிறோமோ அதேபோலதான் அழுகையும்.
பல மன வலிகளுக்கு அழுகைதான் மருந்தாகிறது.
ஆண்களைவிட பெண்கள் மனதளவில் வலிமையானவர்கள் என்று
சொல்வதைக் கேட்கும் போதெல்லாம், ஆண்கள் மனதளவில்
வலிமை குறைந்துப்போவதற்குக் காரணம் அவர்கள் துன்பங்களில்
கூட அழுவதற்கு தயங்குவதுதான்.
அடக்க முடியாத மன அழுத்தம், வாழ்க்கை சிக்கல்களில் தலை
வெடித்துவிடும்போல தோன்றும்போது சத்தமாக கத்தி
அழவேண்டும்போல இருக்கும்போது அழுவதில் தவறேதும் இல்லை.
அப்படி அழுது முடிக்கும்போது மனபாரம் பெருமளவில்
குறைந்திருப்பதையும், மனம் இலகுவானதையும் நிச்சயமாக உணர
முடியும்.
அவ்வளவுதான் எல்லாம் முடிந்துவிட்டது, இனி வாழ வழியே இல்லை
என தோன்றும் நிலைகளில்கூட அழத் தோன்றினால் அழுதுவிட்டு
பார்த்தால், தெளிவான மனநிலையுடன் அசாதாரணமான திடமான
மன வலிமையுடன் மீண்டு விடுவோம்!
சிறு குழந்தைகள் அழும்போது, பெண்ணைப்போல அழாதே, அழுவது
கோழைத்தனம் நீ ஒரு வீரன் என்றெல்லாம் சொல்லிக்கொடுக்காதீர்கள்.
வீரனும் அழலாம் தவறில்லை. அழத் தோன்றினால் அழுத்துவிடு
பரவாயில்லை. ஆனால், அழுது முடித்து உன் மனநிலை சீரானதும்
சிந்தித்து முடிவெடு என்று பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்.
உங்களிடம் யாரேனும் பிரச்னையைச் சொல்லி அழுதால்
அவர்களைத் தடுக்கவேண்டாம். நன்றாக அழு. நான் இருக்கிறேன்.
பார்த்துக்கொள்ளலாம் என்று மட்டும் சொல்லுங்கள்.
அவர்கள் அழுத்து முடித்த
பின்னர் அவர்களுக்கு என்ன பிரச்னை எனக் கேளுங்கள். அவர்கள்
உங்களிடம் அறிவுரை கேட்டால், உன் மனம் சொல்வதை தைரியமாய்
செய் என்று சொல்லி நம்பிக்கை ஊட்டுங்கள்!
இங்கு பலருக்கு நம்மிடமிருந்து தேவைப்படுவது பணமோ பொருளோ
இல்லை. ஆறுதலான வார்த்தைகள்தான்.
நீங்கள் அடிக்கடி அழுபவராக இருந்தால் கவலைப்பட வேண்டாம்.
நீங்கள் மனதளவில் மிகவும் வலிமையானவர் கள், தைரியமானவர்கள்,
எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்கள்
என்பதை எண்ணி பெருமைகொள்ளுங்கள்.
சோகங்களில் மட்டுமல்ல, சில சந்தோஷமான தருணங்களில்கூட
நம்மை அறியாமல் அழுகை வந்துவிடும். எதிர்பாராத நேரத்தில்
கிடைக்கும் மகிழ்ச்சிகூட கண்களைக் கலங்க வைக்கும். இதற்கு
காரணம் அதீத மகிழ்ச்சிதான்.
அதீத சோகம் மட்டுமல்ல, அதீத மகிழ்ச்சியும் அழுகையை தரும்.
அதிகப்படியான கோவத்தில் கூட சிலர் அழுவதுண்டு. அப்படி
அழுபவர்கள் உண்மையில் மனது தூய்மையானவர்களாகவும்,
உண்மையுள்ளவர்களாகவும் இருப்பார்கள் என ஆய்வுகள்
குறிப்பிடுகின்றன.
துக்கம் தொண்டையை அடைக்கும் உணர்வு வரும்போதெல்லாம்
நிச்சயமாக கண்ணீர் வரும். அப்படி வரும்போது கட்டுப்படுத்தி அடக்கி
ஆள வேண்டாம். மாறாக கண்ணீர் வழிந்தோடட்டும். அந்தக்
கண்ணீரோடு நம் கவலைகளும், மன பாரங்களும் வழிந்தோடி
மறையட்டும்.
ஆகவே, இனி நாம் அழுவதை இயலாமை என கருதாமல் மனதின்
வலிகளுக்கு மருந்தாக நினைப்போம்.
-
-மரியசாரா - கல்கி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» எந்த சமயங்களில் பெண்கள் டென்ஷனாகிறார்கள்?
» சில சமயங்களில் விதி நல்ல பாதையிலும் செல்லும்.
» அழுகை
» அழுகை
» குழந்தையின் அழுகை
» சில சமயங்களில் விதி நல்ல பாதையிலும் செல்லும்.
» அழுகை
» அழுகை
» குழந்தையின் அழுகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|