Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
முதல்வரின் நில அபகரிப்பு
2 posters
Page 1 of 1
முதல்வரின் நில அபகரிப்பு
மைசூரில் விலை உயர்ந்த வீட்டு மனைகளை கர்நாடக முதல்வர் எதியூரப்பா தனது
உறவினர்கள் 10 பேருக்கு அடிமட்ட விலைக்கு கொடுத்தது தெரிய வந்துள்ளது.
கர்நாடக முதல்வர் எதியூரப்பா மீது ஊழல் மேல் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமதப்பட்ட வண்ணம் உள்ளன. இந்நிலையில் மைசூரில் விலை உயர்ந்த நிலங்களை எதியூரப்பா தனது உறவினர்கள் 10 பேருக்கு அடிமாட்டு விலைக்கு கொடுத்துள்ளார்.
மைசூர் விஜயநகர் பகுதியில் உள்ள 2 ஆயிரத்து 400 சதுர அடி வீட்டுமனைகள் குறைந்தது ரூ. 20 லட்சத்திற்கு விற்பனையாகும். ஆனால் எதியூரப்பா தனது சகோதரி உள்ளிட்ட 10 உறவினர்களுக்கு அந்த நிலங்களை ரூ. 85 ஆயிரம் முதல் 4.5 லட்சம் வரை விற்றுள்ளார். இது கடந்த 2009-10ம் ஆண்டில் நடந்தது.
இந்த இடங்களை வாங்க அதே பகுதியைச் சேர்ந்தவர்களும், மற்றவர்களும் வருடக்கணக்காக காத்திருக்க எதியூரப்பா உறவினர்களுக்கு அவை விற்கப்பட்டுள்ளது. பெங்களூருக்கு அடுத்தபடியாக மைசூரில் தான் நிலங்களின் விலை அதிகம். கடந்த 6 ஆண்டுகளாக கர்நாடக அரசு பெங்களூரில் யாருக்கும் நிலம் ஒதுக்காததால் மைசூர் நிலங்களுக்கு கிராக்கி அதிகம்.
மைசூரில் அரசு நிலம் ஒதுக்கும் என்று 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் எதியூரப்பா தனது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் குறைந்த விலையில் நிலத்தை கொடுத்துள்ளார். இந்த ஊழல் எங்கே வெளியே வரப்போகிறது என்பது அவரது எண்ணம் என்று எதியூரப்பாவின் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
தனது உறவினர்களுக்கு மைசூரில் உள்ள வீட்டு மனைகளை ஒதுக்கியதை எதியூரப்பா ஒப்புக் கொண்டுள்ளார்.
இது குறித்து எதியூரப்பா கூறியதாவது,
நான் எனது உறவினர்கள், நண்பர்கள் என 10 பேருக்கு நிலம் ஒதுக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நான் கருணை அடிப்படையில் எனது உறவினர்கள் 4 பேருக்கு மட்டும் தான் நிலத்தை ஒதுக்கினேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். மீதமுள்ள 6 பேருக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் எந்த முறைகேடும் செய்யவில்லை என்றார்.
சிறப்பு திட்டத்தின் கீழ் முதல்வர் யாருக்கு வேண்டுமானாலும் கருணையின் அடிப்படையில் நிலத்தை ஒதுக்கலாம் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எதியூரப்பாவின் சகோதரி தனது கணவரை இழந்துவிட்டார். கோட்டா முறையில் நிலம் ஒதுக்கப்பட்ட மற்ற 3 பேரின் நிலைமையும் பரிதாபமானது தான். பட்டியலில் மீதமுள்ள 6 பேர் முதல்வரின் உறவினர்கள் கிடையாது. அவர் அவர்களுக்கு நிலமும் ஒதுக்கவில்லை என்று முதல்வர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த சர்ச்சையால் மாநில பாஜகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
வன நில அபகரிப்பு-'முதலைகளை' காக்க முயன்ற முதல்வர் அலுவலகம்:
இந் சிக்மகளுர் பகுதியில் வன நிலத்தை அபகரித்த தோட்ட அதிபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை முதல்வர் அலுவலகம் தடுத்ததாகவும் ஒரு புகார் எழுந்துள்ளது.
இது குறித்து பொது நில மீட்பு மற்றும் அதன் பாதுகாப்பு பணி குழுவின் தலைவர் வி. பாலசுப்பிரமணியன் கூறுகையில், சிக்மகளூர் மாவட்ட காட்டுப் பகுதியில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள சில முக்கியப் புள்ளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று முதல்வர் அலுவலகத்தில் இருந்து வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு போயுள்ளது.
சும்மாவை முக்கிய புள்ளிகள் மீது வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். இந் நிலையில், இவர்கள் மீது அவரச நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று முதல்வர் அலுவலகம் வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவும் போட்டுவிட்டால், அவர்கள் என்ன மாதிரியாக நடந்து கொள்வார்கள் என்பது நாமெல்லாம் அறிந்ததே.
இந் நிலம் தவிர பெங்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நில அபகரிப்பு தொடர்பாகவும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
குமாரசாமியின் அடுத்த டிராமா 'உண்ணாவிரதம்':
இந் நிலையில் தனது குடும்பத்தார் ரூ.1,500 கோடி மதிப்புள்ள சொத்து குவித்துள்ளதாக பாஜக கூறும் புகார்கள் குறித்து முதல்வர் எதியூரப்பா விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்றால் வரும் 9ம் தேதி முதல் விதான செளதா முன் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி கூறியுள்ளார்.
விதான செளதாவில் உண்ணாவிரதத்தை அனுமதிக்க முடியாது என்று முதல்வர் எதியூரப்பா கூறிவிட்டார்.
இதையடுத்து பெங்களூர் சாளுக்கியா சர்க்கிளில் உள்ள பசவண்ணா சிலை முன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அதற்கு அனுமதி தருமாறும் குமாரசாமி முதல்வரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த எதியூரப்பா , சட்டப்படி போராட்டம் நடத்துவதற்காகவே ஒதுக்கப்பட்டுள்ள சுதந்திர பூங்காவில் குமாரசாமி உண்ணாவிரதம் இருக்கட்டும் என்றார்
Similar topics
» காஷ்மீர் முதல்வரின் கூற்றுக்கு ஆர்.எஸ்.எஸ் கடும் கண்டனம்
» சபை முதல்வரின் ஆசனத்தில் அஸ்வர் எம்.பி நோன்பு துறப்பு
» பூக்கோலம், கொண்டாட்டம் வேண்டாம்; வேலை செய்தால் போதும்: கேரள முதல்வரின் கட்டுப்பாடுகள்
» கோவையில் ரூ. 12 கோடி காகித ஆலை அபகரிப்பு
» தி.மு.க. எம்.பி, நடிகர் ரித்தீஸ் நில அபகரிப்பு வழக்கில் கைது
» சபை முதல்வரின் ஆசனத்தில் அஸ்வர் எம்.பி நோன்பு துறப்பு
» பூக்கோலம், கொண்டாட்டம் வேண்டாம்; வேலை செய்தால் போதும்: கேரள முதல்வரின் கட்டுப்பாடுகள்
» கோவையில் ரூ. 12 கோடி காகித ஆலை அபகரிப்பு
» தி.மு.க. எம்.பி, நடிகர் ரித்தீஸ் நில அபகரிப்பு வழக்கில் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|