சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

டான்சி வழக்கில் ஜெ.வை விடுத்த நீதிபதி தங்கராஜ் நடுநிலையோடு விசாரிப்பாரா?- திமுக Khan11

டான்சி வழக்கில் ஜெ.வை விடுத்த நீதிபதி தங்கராஜ் நடுநிலையோடு விசாரிப்பாரா?- திமுக

Go down

டான்சி வழக்கில் ஜெ.வை விடுத்த நீதிபதி தங்கராஜ் நடுநிலையோடு விசாரிப்பாரா?- திமுக Empty டான்சி வழக்கில் ஜெ.வை விடுத்த நீதிபதி தங்கராஜ் நடுநிலையோடு விசாரிப்பாரா?- திமுக

Post by யாதுமானவள் Thu 21 Jul 2011 - 10:01

புதிய தலைமைச் செயலகக் கட்டுமானப் பணிகள் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தங்கராஜ் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதை எதிர்த்துச் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது.

டான்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவை விடுவித்தவர் தான் நீதிபதி எஸ்.தங்கராஜ் என்றும், அவர் நடுநிலையுடன் இந்த தலைமைச் செயலக விவகாரத்தை விசாரிக்க மாட்டார் என்றும், ஜெயலலிதாவின் விருப்பப்படியே இந்தக் கமிஷனின் முடிவுகள் இருக்கும் என்றும் திமுக கூறியுள்ளது.

இவர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று அந்த வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஜெயலலிதாவுக்கு சாதகமாக நீதிபதி தங்கராஜ் பிறப்பித்திருந்த தீர்ப்பை, பதிவு ஆவணங்களில் இருந்து அழித்து உத்தரவிட்டது.

நீதிபதி தங்கராஜ் ஓய்வு பெற்ற பிறகு, ஜெயலலிதாவால் மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். எனவே இந்த வகையில் அவர்களுக்குள் நட்பு உண்டு.

எனவே நீதிபதி தங்கராஜ் தலைமையில் விசாரணை கமிஷனை நியமித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் அன்பழகன் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில்,

தமிழக அரசுக்கென்று புதிய தலைமைச் செயலகம் கட்டவேண்டுமென்பது நீண்டகால தேவையாக இருந்தது. ஜார்ஜ் கோட்டையில் அரசு அலுவலகங்களை நடத்துவதற்கு இடநெருக்கடி இருந்ததால், வசதியான புதிய கட்டிடம் தேவைப்பட்டது.

2001-06ம் ஆண்டில் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா, சட்டசபையில் இதற்கான தீர்மானத்தை கொண்டு வந்தார். எனவே சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள நூற்றாண்டுக்கும் மேலாக செயல்படும் ராணிமேரி கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு, அங்கு புதிய தலைமைச் செயலகத்தை கட்டுவதற்கு முடிவு செய்தார்.

ஆனால் அதற்கு மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே அங்கு அந்த கட்டிடத்தை கட்டுவதை ஜெயலலிதா கைவிட்டார். அதன் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் அதைக் கட்ட முடிவு செய்தார். அதற்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார். ஆனால் அதற்கு மத்திய அரசு கேட்ட அம்சங்களை அவரது அரசு பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதால், அந்த முயற்சியும் வீணாய்ப் போனது.

அவர் தான் நினைத்த இடங்களில் புதிய தலைமைச் செயலகக் கட்ட முடியவில்லை என்பதற்கு தி.மு.கதான் காரணம் என்று நினைத்து அந்த கட்சி மீது குரோதம் கொண்டார்.

இந்த நிலையில் 2006ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது. இந்த அரசும் புதிய தலைமைச் செயலகத்தை கட்டுவதற்கு முடிவு செய்து, அதை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டியது. இதற்கு அமைச்சரவை மற்றும் சட்டசபையில் முடிவு செய்யப்பட்டது.

இந்த கட்டிடம் பிரதமர் முன்னிலையில் 13.3.10 அன்று திறந்து வைக்கப்பட்டது. தலைமைச் செயலகம், சட்டசபை ஆகியவை அங்கு செயல்படத் தொடங்கின. இந்த நிலையில் தேர்தல் வந்தது. தான் வெற்றி பெற்று முதல்வரானால், புதிய தலைமை செயலகத்தை பயன்படுத்தமாட்டேன் என்று தேர்தலுக்கு முன்பதாகவே ஜெயலலிதா கூறியிருந்தார்.

திமுக மீது இருந்த வெறுப்பினால் அப்படி செயல்பட்டார். தேர்தலில் வெற்றி பெற்றதும் பழைய ஜார்ஜ் கோட்டைக்கே அனைத்து அலுவலகத்தையும் மாற்றும்படி உத்தரவிட்டார். இதை எதிர்த்து வேறொருவர் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

தனது இந்த முடிவை நியாயப்படுத்துவதற்காக பல்வேறு தவறான குற்றச்சாட்டுகளை திமுக அரசு மீது கூறி வருகிறார். இந்த கட்டிடம் கட்டியது பற்றி 3 மாதங்களுக்குள் முழு விசாரணை நடத்துவதற்காக ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.தங்கராஜ் தலைமையில் விசாரணை கமிஷனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசியல் காழ்ப்புணர்ச்சியில், பழிவாங்கும் நோக்கத்தில் இந்த கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு, புதிய தலைமைச் செயலகத்தை பயன்படுத்துவதை தவிர்க்கும் நோக்கத்திலும் இந்த கமிஷன் நியமிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த கட்டுமானம் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு எந்த வித ஆதாரமும் இல்லை. ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்காக கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே முன்னாள் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டு அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுவிட்டன.

டான்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஜெயலலிதா, தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மனுவை தனிக்கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து ஐகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை, தற்போது கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி எஸ்.தங்கராஜ் தான் விசாரித்தார்.

இவர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று அந்த வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஜெயலலிதாவுக்கு சாதகமாக நீதிபதி தங்கராஜ் பிறப்பித்திருந்த தீர்ப்பை, பதிவு ஆவணங்களில் இருந்து அழித்து உத்தரவிட்டது.

நீதிபதி தங்கராஜ் ஓய்வு பெற்ற பிறகு, ஜெயலலிதாவால் மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். எனவே இந்த வகையில் அவர்களுக்குள் நட்பு உண்டு.

எனவே நீதிபதி தங்கராஜ் தலைமையில் விசாரணை கமிஷனை நியமித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. அதை விசாரணைக்கு ஏற்கக்கூடாது. எப்போதெல்லாம் திமுக தோல்வி அடைகிறதோ, அப்போதெல்லாம் கோர்ட்டுகளில் மனு தாக்கல் செய்வதுதான் க.அன்பழகனின் வழக்கம் என்றார்.

அன்பழகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சீனிவாசன், அன்பழகன் மனு தாக்கல் செய்ததால்தான் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு பெங்களூர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. எனவே மனுதாரரை பற்றி பேசக்கூடாது என்றார்.

நவநீதகிருஷ்ணன் கூறுகையில், இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதானா என்பது பற்றி முதலில் விசாரிக்க வேண்டும் என்றார்.

அது குறித்த வாதத்துக்கு இப்போதே தயாராக இருப்பதாக அன்பழகன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சீனிவாசன் கூறினார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது பற்றிய விசாரணையை ஆகஸ்டு மாதம் 4ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics
» திமுக பெரும் தோல்வி வடிவேலுவின் வாயால் தமக்குதாமே ஆப்பு வைத்த‌ திமுக!
» நாளிதழ் அலுவலகத்தில் புகுந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த ஈரோடு பெண் மேயர் மல்லிகா
» விலைமாது விடுத்த கோரிக்கை
» கோரிக்கை விடுத்த 10 நாளில் ஜல்லிக்கட்டுக்கு தடை ஹேமமாலினி மகிழ்ச்சி
» நீதிபதி சொல்லும், பகுத்தறிவாதி செயலும்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum