Latest topics
» சில சுவாரஸ்ய தகவல்கள்by rammalar Yesterday at 17:04
» கொக்கோ மரம்
by rammalar Yesterday at 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Yesterday at 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Yesterday at 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Yesterday at 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Yesterday at 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Yesterday at 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Yesterday at 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Yesterday at 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 25 Jun 2024 - 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue 25 Jun 2024 - 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue 25 Jun 2024 - 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue 25 Jun 2024 - 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue 25 Jun 2024 - 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue 25 Jun 2024 - 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
+19
செய்தாலி
sikkandar_badusha
ஜிப்ரியா
rinos
Atchaya
பர்ஹாத் பாறூக்
பர்வின்
jasmin
அப்துல்லாஹ்
ஹாசிம்
ஹம்னா
நண்பன்
mufees
kalainilaa
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
மீனு
யாதுமானவள்
23 posters
Page 1 of 8
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
துடுக்கெனெப் பேசித் துள்ளித் திரிந்தவள்
மிடுக்கியாய் அனைவர் மனத்திலும் அமர்ந்தவள்
சடுதியில் பதிவுகள் பலப்பல இட்டிவள்
பிடித்தனள் முதலா மிடம்நம் சேனையில் (1)
அன்றொரு நாள்சொன் னேன்அன்பு மீனுவிடம்
என்றுநீ முதலிடம் பெறுகிறாயோ அன்றுநான்
நன்றாய் நயமாய் நற்றமிழ் கொண்டுனை
நூறுவரிக் கவியுடன் வாழ்த் துவேனென்று! (2)
அச்சொல் மனதில் ஆழமாய் ஏற்று
இச்சிறு பெண்ணும் இடைவிடா துழைத்து
நச்செனப் பதிவுகள் நன்றாய் இட்டு
உச்சம் எட்டி உயர்ந்தனள் இன்று (3)
இரவெல்லாம் கண்விழித்துத் தனியா யமர்ந்து
இவளிட்ட பதிவிற்கென் இதமான வாழ்த்து!
இணையத்தில் இணைந்துநம் இதயத்தில் அமர்ந்துவிட்ட
இனிதான பெண்ணிற்கென் கனிவான வாழ்த்து! (4)
பூவைச்சுற் றிவட்டமிட்டுத் தேனெடுக்கும் வண்டுபோல்
நம்மைச் சுற்றிநம்மீ துதேனாகக் கொட்டுபேச்சில்
நம்மை யெல்லாம் மகிழ்வித்து மகிழ்கின்ற
இம்மகள் இன்றுபெற்ற இடத்திற்கு வாழ்த்து! (5)
சுறுசுறுப்பாய் சித்தெறும்பாய் வலம்வந்து சேனையில்
விறுவிறுப்பாய் பதிவிட்டு முதலிடமும் பெற்றிட்டாள்
மறுபடியும் இன்றவள் பெற்றுவிட்ட இடத்திற்காய்
தருகின்றோம் சேனையின் மகுடமிவள் தலைமேலே (6)
இளைப்பாற வருவோரை இவள்பேச்சா லிழுத்திடுவாள்
களைப்புடனே வருவோரை களங்கமற்ற சொற்களினால்
களிப்பினில் முகிழ்த்திடுவாள் கற்கண்டாய் இனித்திடுவாள்
எளிதாக எல்லோரின் மனநிலையை மாற்றிடுவாள் (7)
நாலுபக்கம் பரந்திருக்கும் நற்றமிழர் மனங்களிலே
வாலுப்பெண் இவள்மட்டும் ஓடியோடி வலம்வந்து
வரவேற்பும் வாழ்த்தும் வேண்டுமென அடம்பிடிப்பாள்
வாழ்த்தினை அனைவரையும் வதைத்தேனும் பெற்றிடுவாள் (8)
மனயிருக்கம் உள்ளவர்கள் இவளோடு பேசினால்
மனமிளகும் மருந்தாக இவள்பேசும் பேச்சுக்கள்
மறைத்துவிடும் சிலநேரம் மனக்கவலை அதனாலே
மனம்விட்டு மகிழ்ந்திட மறுபடியும் வந்திடுவர் (9)
இனிப்புண்ட சுவைபோன்றே எவரிடத்தும் பேசுகின்ற
இனிதான மீனுக்கிணை எவரேனும் உள்ளனரோ?
இன்முகத்தோ டெல்லோரின் இதயத்தைக் கவர்ந்துவிடும்
பெண்ணிவளை விரும்பாதோர் யாரேனும் இங்குண்டோ? (10)
சிலநேரம் இவள்பேச்சும் சிறுபிள்ளை மழலைபோல்
சிலநேரம் இவளாட்டாம் சிறுபிள்ளை மகிழ்வுபோல்
சிலநேரம் இவள்பதில்கள் பெரியவரின் தோரணையில்
சிலநேரம் இவளென்ன என்பதுபோல் கேள்வியெழும் (11)
எப்படித்தான் தோற்றங்கள் மாற்றினாலும் உள்மனதில்
அப்படியே இன்னுமந்தக் குழந்தைத்தனம் மிளிர்கிறது
இப்படியே எப்போதும் மகிழ்வுடனே இவளிருக்க
எப்போதும் வாழ்த்துகிறேன் தமிழாலே கவிவடித்து (12)
எங்கிருந்து பேசுகிறாள் என்ன அவள் செய்கின்றாள்
ஒன்றுமது அறிந்திலேன் இதுவரையில் இவள்குறித்து
இருந்தாலும் இவளையான் என்றென்றும் வாழ்த்திடுவேன்
இனிதான வாழ்விவளின் விருந்தாக வேண்டுமென்று (13)
எங்கோ இருந்துகொண்டே கவிதை போட்டிகளில்
பங்களிப்பு செய்துவிட்டு இங்குவந்து கருசொல்வாள்
எழுதுங்கள் நான்குவரி இதைப்பற்றி எனக்கூறி
எல்லோரும் எழுதியபின் அதைத்தனதாய் ஆக்கிடுவாள் (14)
யாரென்று நானிவளை அறியுமுன் ஒருதவணை
நாராகக் கிழித்துவிட்டேன் இவள்செய்யும் இத்தவறை
பாராத முகமாயும் பட்டெனவே தவறுணர்ந்து
ஆராத தவறிழத்தேன் மீனுகுட்டி நானென்றாள் (15)
நட்பென்ற உறவாலே இணைந்துவிட்ட உறவிற்கு
சுட்டிப்பெண் இவளென்றால் சொந்தமெல்லாம் அப்புறந்தான்
பட்டுப் பெண் இவளன்றோ சேனையின் செல்லப்பெண்
விட்டிடாது இவள் உறவை சேனையுந்தான் என்றென்றும் (16)
பாட்டுப்பாடி மகிழ்வித்தும் பலபதிவை ஆட்கொண்டும்
ஏட்டிக்குப் போட்டியாக பதிலளிப்பாள் மிரட்டிடுவாள்
வெட்டிக்கதை பேசினாலும் வெகுளித்தனம் உள்ளிருக்கும்
குட்டிமீண் போல்நமது சேனையிலே மிளிர்கின்றாள் (17)
மீனுயென்னும் பெயருடனே சுற்றிவரும் செல்லக்குட்டி
மனங்கவர்ந்து சுகங்கொடுக்கும் சுத்தமான தங்கக்கட்டி
செந்தமிழர் மனத்தினை கொள்ளைகொள்ள ஓடிவந்து
சேனையிலே ஒட்டிக்கொண்ட சின்னஞ்சிறு வெல்லக்கட்டி (18)
சலசலவென அடிக்கும் காற்றுபோல சுகம்கொடுத்து
கலகலவென சிரிப்பினையும் பேச்சுடனே சேர்த்துவைத்து
படபடவென ஒலிக்குமொலி யாகயிவள் பலதிசையும்
சுடச்சுடவென மின்னிமின்னி சிரிப்புடனே சுழலுகிறாள் (19)
செல்லப்பெண் இவளுடனே சேர்ந்தேதான் தென்றலுமே
எல்லோரின் மனங்களையும் இதமாகவ ருடிடுமேயிவள்
இல்லாத நேரமெலாம் இலையுதிர் காலம்போலே
பொல்லாத வெறுமாயாலே பொலிவின்றி இருந்திடுமே (20)
இவளோடு சாதிக்கும் சளைக்காமல் சண்டையிட
இவள்தன்றன் அண்ணனான சம்ஸ்விடம் முறையிட
நண்பன்முதல் முனாஸ் வரைதுணையாக வரவழைத்து
அரங்கேற்றும் அரட்டையெல்லாம் கண்கொள்ளா காட்சியம்மா (21)
காட்டினிலே பூக்கின்ற கானகத்துப் பூவெல்லாம்
வீட்டினிலே பூக்கின்ற விலையில்லாப் பூவெல்லாம்
மீட்டிவரும் ராகத்தோடு சேர்த்துவைத்து கொடுக்கின்றோம்
சேனையுலா வருகின்ற தமிழரெலாம் சேர்ந்தின்று (22)
கலைநிலா கொடுக்கின்ற கவிதையெனும் வாழ்த்துடனும்
சுலைமானும் சம்ஸ்சுடனே றிமாசும் றிநோசும்
ஹம்னாவும் நண்பனும் பாறூக்கும் பாயிஸும்
மற்றெல்லாம் சேர்ந்து மனமொன்றி வாழ்த்துகிறோம்! (23)
செல்லப்பெண் ணின்சில்மிஷங் கள்இன்று போலென்றுமே
சேனையிலே சுற்றிவர சேர்ந்தஉறவு அத்தனையும்
ஒற்றுமையாய்ச் சேர்ந்து இவ்வினிய வேளையிலே
ஒர்குரலில் வாழ்த்துவோம் குறைவின்றி வாழவே ! (24)
அன்புடனே வாழ்த்துகிறோம் அகமகிழ்ந்து வாழ்த்துகிறோம்
என்றென்றும் உயர்வான வாழ்வுடனே வாழ்ந்திடவே
எம்சேனை உறவுகள் எல்லோரும் வாழ்த்துகிறோம்
வாழ்கவாழ்க வாழ்கென வளமுடன்நலமுடன் வாழ்கெனெ! (25)
அன்புடன்
யாதுமானவள்
மிடுக்கியாய் அனைவர் மனத்திலும் அமர்ந்தவள்
சடுதியில் பதிவுகள் பலப்பல இட்டிவள்
பிடித்தனள் முதலா மிடம்நம் சேனையில் (1)
அன்றொரு நாள்சொன் னேன்அன்பு மீனுவிடம்
என்றுநீ முதலிடம் பெறுகிறாயோ அன்றுநான்
நன்றாய் நயமாய் நற்றமிழ் கொண்டுனை
நூறுவரிக் கவியுடன் வாழ்த் துவேனென்று! (2)
அச்சொல் மனதில் ஆழமாய் ஏற்று
இச்சிறு பெண்ணும் இடைவிடா துழைத்து
நச்செனப் பதிவுகள் நன்றாய் இட்டு
உச்சம் எட்டி உயர்ந்தனள் இன்று (3)
இரவெல்லாம் கண்விழித்துத் தனியா யமர்ந்து
இவளிட்ட பதிவிற்கென் இதமான வாழ்த்து!
இணையத்தில் இணைந்துநம் இதயத்தில் அமர்ந்துவிட்ட
இனிதான பெண்ணிற்கென் கனிவான வாழ்த்து! (4)
பூவைச்சுற் றிவட்டமிட்டுத் தேனெடுக்கும் வண்டுபோல்
நம்மைச் சுற்றிநம்மீ துதேனாகக் கொட்டுபேச்சில்
நம்மை யெல்லாம் மகிழ்வித்து மகிழ்கின்ற
இம்மகள் இன்றுபெற்ற இடத்திற்கு வாழ்த்து! (5)
சுறுசுறுப்பாய் சித்தெறும்பாய் வலம்வந்து சேனையில்
விறுவிறுப்பாய் பதிவிட்டு முதலிடமும் பெற்றிட்டாள்
மறுபடியும் இன்றவள் பெற்றுவிட்ட இடத்திற்காய்
தருகின்றோம் சேனையின் மகுடமிவள் தலைமேலே (6)
இளைப்பாற வருவோரை இவள்பேச்சா லிழுத்திடுவாள்
களைப்புடனே வருவோரை களங்கமற்ற சொற்களினால்
களிப்பினில் முகிழ்த்திடுவாள் கற்கண்டாய் இனித்திடுவாள்
எளிதாக எல்லோரின் மனநிலையை மாற்றிடுவாள் (7)
நாலுபக்கம் பரந்திருக்கும் நற்றமிழர் மனங்களிலே
வாலுப்பெண் இவள்மட்டும் ஓடியோடி வலம்வந்து
வரவேற்பும் வாழ்த்தும் வேண்டுமென அடம்பிடிப்பாள்
வாழ்த்தினை அனைவரையும் வதைத்தேனும் பெற்றிடுவாள் (8)
மனயிருக்கம் உள்ளவர்கள் இவளோடு பேசினால்
மனமிளகும் மருந்தாக இவள்பேசும் பேச்சுக்கள்
மறைத்துவிடும் சிலநேரம் மனக்கவலை அதனாலே
மனம்விட்டு மகிழ்ந்திட மறுபடியும் வந்திடுவர் (9)
இனிப்புண்ட சுவைபோன்றே எவரிடத்தும் பேசுகின்ற
இனிதான மீனுக்கிணை எவரேனும் உள்ளனரோ?
இன்முகத்தோ டெல்லோரின் இதயத்தைக் கவர்ந்துவிடும்
பெண்ணிவளை விரும்பாதோர் யாரேனும் இங்குண்டோ? (10)
சிலநேரம் இவள்பேச்சும் சிறுபிள்ளை மழலைபோல்
சிலநேரம் இவளாட்டாம் சிறுபிள்ளை மகிழ்வுபோல்
சிலநேரம் இவள்பதில்கள் பெரியவரின் தோரணையில்
சிலநேரம் இவளென்ன என்பதுபோல் கேள்வியெழும் (11)
எப்படித்தான் தோற்றங்கள் மாற்றினாலும் உள்மனதில்
அப்படியே இன்னுமந்தக் குழந்தைத்தனம் மிளிர்கிறது
இப்படியே எப்போதும் மகிழ்வுடனே இவளிருக்க
எப்போதும் வாழ்த்துகிறேன் தமிழாலே கவிவடித்து (12)
எங்கிருந்து பேசுகிறாள் என்ன அவள் செய்கின்றாள்
ஒன்றுமது அறிந்திலேன் இதுவரையில் இவள்குறித்து
இருந்தாலும் இவளையான் என்றென்றும் வாழ்த்திடுவேன்
இனிதான வாழ்விவளின் விருந்தாக வேண்டுமென்று (13)
எங்கோ இருந்துகொண்டே கவிதை போட்டிகளில்
பங்களிப்பு செய்துவிட்டு இங்குவந்து கருசொல்வாள்
எழுதுங்கள் நான்குவரி இதைப்பற்றி எனக்கூறி
எல்லோரும் எழுதியபின் அதைத்தனதாய் ஆக்கிடுவாள் (14)
யாரென்று நானிவளை அறியுமுன் ஒருதவணை
நாராகக் கிழித்துவிட்டேன் இவள்செய்யும் இத்தவறை
பாராத முகமாயும் பட்டெனவே தவறுணர்ந்து
ஆராத தவறிழத்தேன் மீனுகுட்டி நானென்றாள் (15)
நட்பென்ற உறவாலே இணைந்துவிட்ட உறவிற்கு
சுட்டிப்பெண் இவளென்றால் சொந்தமெல்லாம் அப்புறந்தான்
பட்டுப் பெண் இவளன்றோ சேனையின் செல்லப்பெண்
விட்டிடாது இவள் உறவை சேனையுந்தான் என்றென்றும் (16)
பாட்டுப்பாடி மகிழ்வித்தும் பலபதிவை ஆட்கொண்டும்
ஏட்டிக்குப் போட்டியாக பதிலளிப்பாள் மிரட்டிடுவாள்
வெட்டிக்கதை பேசினாலும் வெகுளித்தனம் உள்ளிருக்கும்
குட்டிமீண் போல்நமது சேனையிலே மிளிர்கின்றாள் (17)
மீனுயென்னும் பெயருடனே சுற்றிவரும் செல்லக்குட்டி
மனங்கவர்ந்து சுகங்கொடுக்கும் சுத்தமான தங்கக்கட்டி
செந்தமிழர் மனத்தினை கொள்ளைகொள்ள ஓடிவந்து
சேனையிலே ஒட்டிக்கொண்ட சின்னஞ்சிறு வெல்லக்கட்டி (18)
சலசலவென அடிக்கும் காற்றுபோல சுகம்கொடுத்து
கலகலவென சிரிப்பினையும் பேச்சுடனே சேர்த்துவைத்து
படபடவென ஒலிக்குமொலி யாகயிவள் பலதிசையும்
சுடச்சுடவென மின்னிமின்னி சிரிப்புடனே சுழலுகிறாள் (19)
செல்லப்பெண் இவளுடனே சேர்ந்தேதான் தென்றலுமே
எல்லோரின் மனங்களையும் இதமாகவ ருடிடுமேயிவள்
இல்லாத நேரமெலாம் இலையுதிர் காலம்போலே
பொல்லாத வெறுமாயாலே பொலிவின்றி இருந்திடுமே (20)
இவளோடு சாதிக்கும் சளைக்காமல் சண்டையிட
இவள்தன்றன் அண்ணனான சம்ஸ்விடம் முறையிட
நண்பன்முதல் முனாஸ் வரைதுணையாக வரவழைத்து
அரங்கேற்றும் அரட்டையெல்லாம் கண்கொள்ளா காட்சியம்மா (21)
காட்டினிலே பூக்கின்ற கானகத்துப் பூவெல்லாம்
வீட்டினிலே பூக்கின்ற விலையில்லாப் பூவெல்லாம்
மீட்டிவரும் ராகத்தோடு சேர்த்துவைத்து கொடுக்கின்றோம்
சேனையுலா வருகின்ற தமிழரெலாம் சேர்ந்தின்று (22)
கலைநிலா கொடுக்கின்ற கவிதையெனும் வாழ்த்துடனும்
சுலைமானும் சம்ஸ்சுடனே றிமாசும் றிநோசும்
ஹம்னாவும் நண்பனும் பாறூக்கும் பாயிஸும்
மற்றெல்லாம் சேர்ந்து மனமொன்றி வாழ்த்துகிறோம்! (23)
செல்லப்பெண் ணின்சில்மிஷங் கள்இன்று போலென்றுமே
சேனையிலே சுற்றிவர சேர்ந்தஉறவு அத்தனையும்
ஒற்றுமையாய்ச் சேர்ந்து இவ்வினிய வேளையிலே
ஒர்குரலில் வாழ்த்துவோம் குறைவின்றி வாழவே ! (24)
அன்புடனே வாழ்த்துகிறோம் அகமகிழ்ந்து வாழ்த்துகிறோம்
என்றென்றும் உயர்வான வாழ்வுடனே வாழ்ந்திடவே
எம்சேனை உறவுகள் எல்லோரும் வாழ்த்துகிறோம்
வாழ்கவாழ்க வாழ்கென வளமுடன்நலமுடன் வாழ்கெனெ! (25)
அன்புடன்
யாதுமானவள்
Last edited by யாதுமானவள் on Sat 20 Aug 2011 - 10:40; edited 5 times in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
நூறு வரிகளையும் நான் படித்தேன் இதற்கு எப்படி நான் கருத்திட எப்படி நான் நன்றி சொல்ல ஒன்றுமே தெரியாதவளாய் தவிக்கிறேன் பாசமுள்ள என் அக்கா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
இன்றைக்கும் வேகமாக பதிவு போட ஓடிவந்தேன் அக்கா என்னால் போட முடிய வில்லை ஒரு வாரத்திற்கு நான் இந்த கவிதை வரிகளை பாரட்டை உங்கள் மனதை புரட்டிப்பார்த்த வண்ணமே இருப்பேன்
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை 876805](https://2img.net/u/3212/14/48/64/smiles/876805.gif)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
மீனு wrote:நூறு வரிகளையும் நான் படித்தேன் இதற்கு எப்படி நான் கருத்திட எப்படி நான் நன்றி சொல்ல ஒன்றுமே தெரியாதவளாய் தவிக்கிறேன் பாசமுள்ள என் அக்கா
உனக்கு சந்தோஷம் கிடைத்ததா வாழ்த்துக்கவிதை படித்தபின் ? அதுதான் தேவை. நன்றியல்ல....
எப்போதும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன் !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
மீனு wrote:இன்றைக்கும் வேகமாக பதிவு போட ஓடிவந்தேன் அக்கா என்னால் போட முடிய வில்லை ஒரு வாரத்திற்கு நான் இந்த கவிதை வரிகளை பாரட்டை உங்கள் மனதை புரட்டிப்பார்த்த வண்ணமே இருப்பேன்![]()
ஒரு வாரமா? என்னைப்போலவே நீயும் ஒரு பைத்தியம் போலிருக்கு.
நானும் எனக்கு வரும் ஒரு கடிதத்தைக் கண்ணீர் மல்கப் படிப்பேன். ஒவ்வொரு கடிதத்தையும் 100 முறை படிப்பேன். புலவர் சூசை மைகேல் நு என்னுடைய மானசீக குரு. அவர் எழுதும் கடிதங்கள் தான் என் பொக்கிஷம். என் தமிழை வளர்த்தது அவர்தான். ஒவ்வொரு வாரமும் அவர் அனுப்பும் கடிதம் தினம் குறைந்தது 10 முறைக்குமேல் படிப்பேன். அடுத்தகடிதம் வருவதற்குள் எப்படியும் நூருமுரைக்குமேல் படித்திருப்பேன்....
நீ இன்று சொன்னதால் .... என் தமிழாசான் கடிதங்கள் நான் படிக்கும் முறையோடு உன்னை ஒப்பிடத் தோன்றியது...
அன்பு மீனுக்குட்டி... வாழ்த்துக்கள்!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
கொஞ்சம் சந்தோசம் கிடைத்தாலே நான் அழுதிடுவேன் இப்போது நான் என்ன செய்கிறேன் என்று உங்களுக்கு தெரியுமா?
ஏன் அக்கா இப்படி பண்ணினீங்கள் எத்தனை நாளை நான் இதைப் பார்த்திட்டு இருப்பேனோ தெரியலயே
இனி எப்போது நான் சேனைக்கு வந்தாலும் இதைப் படித்து விட்டுத்தான் பதிவிடுவேன் என் பாசமுள்ள அக்கா சந்தோசத்தில் நான் துள்ளிக்குதிக்கிறேனே இந்த நேரம் யாரும் இல்லையே சாதிக் சம்ஸ்ண்ணா எங்கே ஓடியாங்கோண்ணா சேனையைப் பாருங்கோ
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை 876805](https://2img.net/u/3212/14/48/64/smiles/876805.gif)
ஏன் அக்கா இப்படி பண்ணினீங்கள் எத்தனை நாளை நான் இதைப் பார்த்திட்டு இருப்பேனோ தெரியலயே
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை 876805](https://2img.net/u/3212/14/48/64/smiles/876805.gif)
இனி எப்போது நான் சேனைக்கு வந்தாலும் இதைப் படித்து விட்டுத்தான் பதிவிடுவேன் என் பாசமுள்ள அக்கா சந்தோசத்தில் நான் துள்ளிக்குதிக்கிறேனே இந்த நேரம் யாரும் இல்லையே சாதிக் சம்ஸ்ண்ணா எங்கே ஓடியாங்கோண்ணா சேனையைப் பாருங்கோ
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை 678497](https://2img.net/u/3212/14/48/64/smiles/678497.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை 678497](https://2img.net/u/3212/14/48/64/smiles/678497.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை 876805](https://2img.net/u/3212/14/48/64/smiles/876805.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை 876805](https://2img.net/u/3212/14/48/64/smiles/876805.gif)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
கொஞ்சம் சந்தோசம் கிடைத்தாலே நான் அழுதிடுவேன் இப்போது நான் என்ன செய்கிறேன் என்று உங்களுக்கு தெரியுமா?
இப்படில்லாம் சொன்னால் நாங்களும் அழுதிடுவோம்.... சிரிச்சு சிரிச்சு வந்தா மீனுக்குட்டி டோய்...ன்னு எப்பவும் சொல்றமாதிரி சிரிசுகிட்டிருக்கணும்...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
என் கூட இந்த வாழ்த்தைப் படிக்க யாரும் இல்லையே இந்த நேரம் சாதிக் இருப்பாரே சாதிக் அவசரமாக வங்கோ இதைப் படிங்கோ ஐயோ என்னையே என்னை நம்ம முடிய வில்லையேயாதுமானவள் wrote:மீனு wrote:இன்றைக்கும் வேகமாக பதிவு போட ஓடிவந்தேன் அக்கா என்னால் போட முடிய வில்லை ஒரு வாரத்திற்கு நான் இந்த கவிதை வரிகளை பாரட்டை உங்கள் மனதை புரட்டிப்பார்த்த வண்ணமே இருப்பேன்![]()
ஒரு வாரமா? என்னைப்போலவே நீயும் ஒரு பைத்தியம் போலிருக்கு.
நானும் எனக்கு வரும் ஒரு கடிதத்தைக் கண்ணீர் மல்கப் படிப்பேன். ஒவ்வொரு கடிதத்தையும் 100 முறை படிப்பேன். புலவர் சூசை மைகேல் நு என்னுடைய மானசீக குரு. அவர் எழுதும் கடிதங்கள் தான் என் பொக்கிஷம். என் தமிழை வளர்த்தது அவர்தான். ஒவ்வொரு வாரமும் அவர் அனுப்பும் கடிதம் தினம் குறைந்தது 10 முறைக்குமேல் படிப்பேன். அடுத்தகடிதம் வருவதற்குள் எப்படியும் நூருமுரைக்குமேல் படித்திருப்பேன்....
நீ இன்று சொன்னதால் .... என் தமிழாசான் கடிதங்கள் நான் படிக்கும் முறையோடு உன்னை ஒப்பிடத் தோன்றியது...
அன்பு மீனுக்குட்டி... வாழ்த்துக்கள்!
இது கனவா நிஜமா என்னை நான் கிள்ள இது நிஜம்தானா யோசிக்கிறேனே
![:confused: 😕](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f615.png?v=2.2.7)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
போங்கக்கா நான் சிரித்துக்கொண்டுதான் இருக்கிறேன் ஆனால் என் கண்ணில் வரும் கண்ணீரை ஆனந்தக்கண்ணீரை நிறுத்த முடியலயே:( :( :(யாதுமானவள் wrote:கொஞ்சம் சந்தோசம் கிடைத்தாலே நான் அழுதிடுவேன் இப்போது நான் என்ன செய்கிறேன் என்று உங்களுக்கு தெரியுமா?
இப்படில்லாம் சொன்னால் நாங்களும் அழுதிடுவோம்.... சிரிச்சு சிரிச்சு வந்தா மீனுக்குட்டி டோய்...ன்னு எப்பவும் சொல்றமாதிரி சிரிசுகிட்டிருக்கணும்...
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
மீன் கண்ணில் நீரா....?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
துடுக்கெனெப் பேசித் துள்ளித் திரிந்தவள்
மிடுக்கியாய் அனைவர் மனத்திலும் அமர்ந்தவள்
சடுதியில் பதிவுகள் பலப்பல இட்டிவள்
பிடித்தனள் முதலா மிடம்நம் சேனையில் (1)
இரவெல்லாம் கண்விழித்துத் தனியா யமர்ந்து
இவளிட்ட பதிவிற்கென் இதமான வாழ்த்து!
இணையத்தில் இணைந்துநம் இதயத்தில் அமர்ந்துவிட்ட
இனிதான பெண்ணிற்கென் கனிவான வாழ்த்து! (4)
நட்பென்ற உறவாலே இணைந்துவிட்ட உறவிற்கு
சுட்டிப்பெண் இவளென்றால் சொந்தமெல்லாம் அப்புறந்தான்
பட்டுப் பெண் இவளன்றோ சேனையின் செல்லப்பெண்
விட்டிடாது இவள் உறவை சேனையுந்தான் என்றென்றும் (16)
வாவ் மீனுக்குட்டிக்கு அருமையான வாழ்த்து இப்படி ஒரு வாழ்த்து மீனுக்கு மட்டிலா மகிழ்ச்சியா இருக்குது என்பதும் புரியுது வாழ்த்துக்கள் கவிபடைத்த அன்புக்குரிய புரட்சிக்கவி யாதுமானவள் அக்காவின் கவிக்கும் நன்றி மிகவும் திறமான வரிகள் சந்தோசம் வியப்பு மதிப்பு அங்கலாய்ப்பு இன்னும் என்னவெல்லாம் சேர்த்து நல்லதொரு அல்ல நல்ல பல வரிக்கவிதை கொடுத்திருக்கும் அக்காவுக்கும் மீனுவுக்கும் வாழ்த்துக்கள்.
மிடுக்கியாய் அனைவர் மனத்திலும் அமர்ந்தவள்
சடுதியில் பதிவுகள் பலப்பல இட்டிவள்
பிடித்தனள் முதலா மிடம்நம் சேனையில் (1)
இரவெல்லாம் கண்விழித்துத் தனியா யமர்ந்து
இவளிட்ட பதிவிற்கென் இதமான வாழ்த்து!
இணையத்தில் இணைந்துநம் இதயத்தில் அமர்ந்துவிட்ட
இனிதான பெண்ணிற்கென் கனிவான வாழ்த்து! (4)
நட்பென்ற உறவாலே இணைந்துவிட்ட உறவிற்கு
சுட்டிப்பெண் இவளென்றால் சொந்தமெல்லாம் அப்புறந்தான்
பட்டுப் பெண் இவளன்றோ சேனையின் செல்லப்பெண்
விட்டிடாது இவள் உறவை சேனையுந்தான் என்றென்றும் (16)
வாவ் மீனுக்குட்டிக்கு அருமையான வாழ்த்து இப்படி ஒரு வாழ்த்து மீனுக்கு மட்டிலா மகிழ்ச்சியா இருக்குது என்பதும் புரியுது வாழ்த்துக்கள் கவிபடைத்த அன்புக்குரிய புரட்சிக்கவி யாதுமானவள் அக்காவின் கவிக்கும் நன்றி மிகவும் திறமான வரிகள் சந்தோசம் வியப்பு மதிப்பு அங்கலாய்ப்பு இன்னும் என்னவெல்லாம் சேர்த்து நல்லதொரு அல்ல நல்ல பல வரிக்கவிதை கொடுத்திருக்கும் அக்காவுக்கும் மீனுவுக்கும் வாழ்த்துக்கள்.
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
வருதே நம்ம முடியலயா எனக்கு வரும்!யாதுமானவள் wrote:மீன் கண்ணில் நீரா....?
இன்னும் உங்கள் வாழ்த்து வரிகளுக்கு பதில் இட வில்லை எத்தனை நாளாகுமோ எவ்வளவு அழகான வரிகள் அக்கா
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை 755559](https://2img.net/u/3212/14/48/64/smiles/755559.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை 755559](https://2img.net/u/3212/14/48/64/smiles/755559.gif)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
முனாஸ் சுலைமான் wrote:
நட்பென்ற உறவாலே இணைந்துவிட்ட உறவிற்கு
சுட்டிப்பெண் இவளென்றால் சொந்தமெல்லாம் அப்புறந்தான்
பட்டுப் பெண் இவளன்றோ சேனையின் செல்லப்பெண்
விட்டிடாது இவள் உறவை சேனையுந்தான் என்றென்றும் (16)
வாவ் மீனுக்குட்டிக்கு அருமையான வாழ்த்து இப்படி ஒரு வாழ்த்து மீனுக்கு மட்டிலா மகிழ்ச்சியா இருக்குது என்பதும் புரியுது வாழ்த்துக்கள் கவிபடைத்த அன்புக்குரிய புரட்சிக்கவி யாதுமானவள் அக்காவின் கவிக்கும் நன்றி மிகவும் திறமான வரிகள் சந்தோசம் வியப்பு மதிப்பு அங்கலாய்ப்பு இன்னும் என்னவெல்லாம் சேர்த்து நல்லதொரு அல்ல நல்ல பல வரிக்கவிதை கொடுத்திருக்கும் அக்காவுக்கும் மீனுவுக்கும் வாழ்த்துக்கள்.
என்கவிதையை வாழ்த்தியதற்கும்... கவிதை படைக்க கருவாய் இருந்த மீனுகுட்டியை வாழ்த்தியதற்கும் நன்றி முனாஸ்...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
அபாரமான கவிதை இத்தனைவரிகள் மீனுவுக்கா நினைத்துப்பார்க்க முடியாத அளவு ஆச்சரியத்தைத் தருகிறது
ஹேட்ஸ் ஒப் அக்கா அற்புதமாக உளள்து
ஹேட்ஸ் ஒப் அக்கா அற்புதமாக உளள்து
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
முனாஸ் சுலைமான் wrote:துடுக்கெனெப் பேசித் துள்ளித் திரிந்தவள்
மிடுக்கியாய் அனைவர் மனத்திலும் அமர்ந்தவள்
சடுதியில் பதிவுகள் பலப்பல இட்டிவள்
பிடித்தனள் முதலா மிடம்நம் சேனையில் (1)
இரவெல்லாம் கண்விழித்துத் தனியா யமர்ந்து
இவளிட்ட பதிவிற்கென் இதமான வாழ்த்து!
இணையத்தில் இணைந்துநம் இதயத்தில் அமர்ந்துவிட்ட
இனிதான பெண்ணிற்கென் கனிவான வாழ்த்து! (4)
நட்பென்ற உறவாலே இணைந்துவிட்ட உறவிற்கு
சுட்டிப்பெண் இவளென்றால் சொந்தமெல்லாம் அப்புறந்தான்
பட்டுப் பெண் இவளன்றோ சேனையின் செல்லப்பெண்
விட்டிடாது இவள் உறவை சேனையுந்தான் என்றென்றும் (16)
வாவ் மீனுக்குட்டிக்கு அருமையான வாழ்த்து இப்படி ஒரு வாழ்த்து மீனுக்கு மட்டிலா மகிழ்ச்சியா இருக்குது என்பதும் புரியுது வாழ்த்துக்கள் கவிபடைத்த அன்புக்குரிய புரட்சிக்கவி யாதுமானவள் அக்காவின் கவிக்கும் நன்றி மிகவும் திறமான வரிகள் சந்தோசம் வியப்பு மதிப்பு அங்கலாய்ப்பு இன்னும் என்னவெல்லாம் சேர்த்து நல்லதொரு அல்ல நல்ல பல வரிக்கவிதை கொடுத்திருக்கும் அக்காவுக்கும் மீனுவுக்கும் வாழ்த்துக்கள்.
வாங்கண்ணா வாங்கண்ணா பாருங்கண்ணா உங்கள் பெரும் சேரத்துள்ளது பாருங்கண்ணா எவ்வளவு அழகாக உள்ளது அண்ணா இதற்கு எப்படி அண்ணா அக்காவுக்கு நன்றி சொல்வது நீங்களும் என்னுடன் சேர்ந்து கொள்ளுங்கள் அண்ணா இன்று சேனையில் கொண்டாட்டம்
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை 678497](https://2img.net/u/3212/14/48/64/smiles/678497.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை 678497](https://2img.net/u/3212/14/48/64/smiles/678497.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை 678497](https://2img.net/u/3212/14/48/64/smiles/678497.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை 678497](https://2img.net/u/3212/14/48/64/smiles/678497.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை 678497](https://2img.net/u/3212/14/48/64/smiles/678497.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை 587993](https://2img.net/u/3212/14/48/64/smiles/587993.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை 587993](https://2img.net/u/3212/14/48/64/smiles/587993.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை 587993](https://2img.net/u/3212/14/48/64/smiles/587993.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை 587993](https://2img.net/u/3212/14/48/64/smiles/587993.gif)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
சாதிக் wrote:அபாரமான கவிதை இத்தனைவரிகள் மீனுவுக்கா நினைத்துப்பார்க்க முடியாத அளவு ஆச்சரியத்தைத் தருகிறது
ஹேட்ஸ் ஒப் அக்கா அற்புதமாக உளள்து
நன்றி சாதிக்... மீனுவப்பத்தி எழுதிகிட்டே இருக்கலாம்.. அவ்ளோ அரட்டை பெண். அதே நேரத்துல அன்புப் பெண்....!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
கொடுத்து வைத்த மீனுகுட்டி உரித்துவைத்த வரிகள் ஆச்சரியம் தாளவில்லை அக்காவுக்கு மீனுவும் சேனையும் என்றும் கடன் பட்டிருக்கிறது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
முதல் நான் படித்து விட்டு வருகிறேன் வாழ்தை
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
யாதுமானவள் wrote:சாதிக் wrote:அபாரமான கவிதை இத்தனைவரிகள் மீனுவுக்கா நினைத்துப்பார்க்க முடியாத அளவு ஆச்சரியத்தைத் தருகிறது
ஹேட்ஸ் ஒப் அக்கா அற்புதமாக உளள்து
நன்றி சாதிக்... மீனுவப்பத்தி எழுதிகிட்டே இருக்கலாம்.. அவ்ளோ அரட்டை பெண். அதே நேரத்துல அன்புப் பெண்....!
ஆமாம் அக்கா மீனுவின் சேட்டையில் அதிகம் விழுந்தது நான்தான் என்னை கௌத்து பாக்கிறதில ரொம்ப சந்தோசம் மீனுவுக்கு
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
இளைப்பாற வருவோரை இவள்பேச்சா லிழுத்திடுவாள்
களைப்புடனே வருவோரை களங்கமற்ற சொற்களினால்
களிப்பினில் முகிழ்த்திடுவாள் கற்கண்டாய் இனித்திடுவாள்
எளிதாக எல்லோரின் மனநிலையை மாற்றிடுவாள் (7)
நாலுபக்கம் பரந்திருக்கும் நற்றமிழர் மனங்களிலே
வாலுப்பெண் இவள்மட்டும் ஓடியோடி வலம்வந்து
வரவேற்பும் வாழ்த்தும் வேண்டுமென அடம்பிடிப்பாள்
வாழ்த்தினை அனைவரையும் வதைத்தேனும் பெற்றிடுவாள் (8)
மீனுக்கு ஏற்ற மிடுக்கான நடையில் உங்கள் கவிதை .
வாழ்த்துப்பாட நீங்கள் உழைத்த நேரத்தை ,
கவிதை வரிகள் சொல்கிறது,
புரட்சிக் கவியேன்றே,முன்மொழிகிறது . :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+:
களைப்புடனே வருவோரை களங்கமற்ற சொற்களினால்
களிப்பினில் முகிழ்த்திடுவாள் கற்கண்டாய் இனித்திடுவாள்
எளிதாக எல்லோரின் மனநிலையை மாற்றிடுவாள் (7)
நாலுபக்கம் பரந்திருக்கும் நற்றமிழர் மனங்களிலே
வாலுப்பெண் இவள்மட்டும் ஓடியோடி வலம்வந்து
வரவேற்பும் வாழ்த்தும் வேண்டுமென அடம்பிடிப்பாள்
வாழ்த்தினை அனைவரையும் வதைத்தேனும் பெற்றிடுவாள் (8)
மீனுக்கு ஏற்ற மிடுக்கான நடையில் உங்கள் கவிதை .
வாழ்த்துப்பாட நீங்கள் உழைத்த நேரத்தை ,
கவிதை வரிகள் சொல்கிறது,
புரட்சிக் கவியேன்றே,முன்மொழிகிறது . :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+:
Last edited by kalainilaa on Wed 17 Aug 2011 - 22:54; edited 1 time in total
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
மீனுவை நினைத்தால் புறாமையாக உள்ளது எனக்கு !
அன்பு அக்காவுக்கு வெள்ளை உள்ளம் கொண்டு வாழ்த்துகிறேன் அன்பான வாழ்த்து மீனுக்குட்டிக்கு பொருத்தம் இந்த வாழ்த்து வாழ்த்துக்கள் மீனுகுட்டி வாழ்த்துக்கள்![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை Images?q=tbn:ANd9GcQ1NcewJDIyZOS-GCKRuVL2cn5i_G9P-OfiFOtlAfaQKtM2ILoe1qeQCAI](http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQ1NcewJDIyZOS-GCKRuVL2cn5i_G9P-OfiFOtlAfaQKtM2ILoe1qeQCAI)
அன்பு அக்காவுக்கு வெள்ளை உள்ளம் கொண்டு வாழ்த்துகிறேன் அன்பான வாழ்த்து மீனுக்குட்டிக்கு பொருத்தம் இந்த வாழ்த்து வாழ்த்துக்கள் மீனுகுட்டி வாழ்த்துக்கள்
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
வந்து வாழ்த்தில் கலந்து கொண்டமைக்கு நன்றி சாதிக் ஏன் நீங்கள் அதிகமாக வருவதில்லை என்னோடு இன்று சந்தோசத்தை கொண்டாட வாருங்கள் சாதிக்சாதிக் wrote:அபாரமான கவிதை இத்தனைவரிகள் மீனுவுக்கா நினைத்துப்பார்க்க முடியாத அளவு ஆச்சரியத்தைத் தருகிறது
ஹேட்ஸ் ஒப் அக்கா அற்புதமாக உளள்து
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
kalainilaa wrote:இளைப்பாற வருவோரை இவள்பேச்சா லிழுத்திடுவாள்
களைப்புடனே வருவோரை களங்கமற்ற சொற்களினால்
களிப்பினில் முகிழ்த்திடுவாள் கற்கண்டாய் இனித்திடுவாள்
எளிதாக எல்லோரின் மனநிலையை மாற்றிடுவாள் (7)
நாலுபக்கம் பரந்திருக்கும் நற்றமிழர் மனங்களிலே
வாலுப்பெண் இவள்மட்டும் ஓடியோடி வலம்வந்து
வரவேற்பும் வாழ்த்தும் வேண்டுமென அடம்பிடிப்பாள்
வாழ்த்தினை அனைவரையும் வதைத்தேனும் பெற்றிடுவாள் (8)
மீனுக்கு ஏற்ற மிடுக்கான நடையில் உங்கள் கவிதை .
வாழ்த்துப்பாட நீங்கள் உழைத்த நேரத்தை ,
கவிதை வரிகள் சொல்கிறது,
புரட்சிக் கவியேன்றே,முன்மொழிகிறது . :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+:
நன்றி கலை நிலா....
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
இன்று என் கண்ணே எனக்கு பட்டும் போல் உள்ளதே சாதிக் ஐயோ அன்பு நன்றி சாதிக்சாதிக் wrote:கொடுத்து வைத்த மீனுகுட்டி உரித்துவைத்த வரிகள் ஆச்சரியம் தாளவில்லை அக்காவுக்கு மீனுவும் சேனையும் என்றும் கடன் பட்டிருக்கிறது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
வாருங்கள் வாருங்கள்*சம்ஸ் wrote:முதல் நான் படித்து விட்டு வருகிறேன் வாழ்தை
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» முதலிடம் பிடித்த ராஷ்மிகா மந்தனா. (சினி துளிகள்!)
» மீனுவுக்கு யார் அடிச்சாங்க?
» மீனுவுக்கு பதில் தெரியலையே ? உங்களுக்கு ?
» கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
» பிறந்த நாளைக் கொண்டாடும் மீனுவுக்கு வாழ்த்துகள்.
» மீனுவுக்கு யார் அடிச்சாங்க?
» மீனுவுக்கு பதில் தெரியலையே ? உங்களுக்கு ?
» கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
» பிறந்த நாளைக் கொண்டாடும் மீனுவுக்கு வாழ்த்துகள்.
Page 1 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|