Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
+15
Atchaya
முனாஸ் சுலைமான்
lafeer
அப்துல்லாஹ்
*சம்ஸ்
பர்வின்
நேசமுடன் ஹாசிம்
ஜிப்ரியா
kalainilaa
யாதுமானவள்
பாயிஸ்
ஹம்னா
நண்பன்
இன்பத் அஹ்மத்
ஹாசிம்
19 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை)
First topic message reminder :
பிறப்பால் அனாதையாக்கப்பட்டு
வளர்ப்புக்கும் அனாதரவற்று
அகிலத்தில் ஓர் மகளாய்
அவதரித்த நிலை மறக்கவில்லை
வயிற்றுக்கு உணவுதேடி
வழியற்று வரம்புமீறாது
ஒரு தியாலத்துணவுடன்
பல தினம் பசியோடு
அழுதநிலை மறக்கவில்லை
படைத்தவனின் கருணையினால்
பாதசாரி ஒரு மனிதனால்
உணர்ந்த பரிதாபத்தில்
நான் சேர்ந்த அனாதையில்லம்
இன்னுந்தான் மறக்கவில்லை
என்போன்ற ஓராயிரம்
ஒத்தழுத சகாக்களோடு
வெந்த மனங்களுக்காறுதலாய்
உறவுகலந்த நாட்களை
இப்பொழுதும் மறக்கவில்லை
எனக்கிருந்த தமிழார்வத்தில்
“ஓராயிரம் மக்களை ஈன்ற
வலியுணராத்தாய்
என்தாயம்மாள்“
என்று நான் எழுதிய வரிகளுக்கு
நெற்றி மோர்ந்து பாவெழுதிய
என்குரு தாயம்மாளை
இதுநாள்வரை மறக்கவில்லை
என்னுள் நானுணர்நத
மாற்றங்களை மகிழ்ந்தபோதும்
சந்தேகங்களை சரிசெய்திட
சந்தர்ப்பமே இல்லாது
சஞசலமடைந்த சங்கதிகளை
சற்றேனும் மறக்கவில்லை
புதிய முயற்சியாக என் முதல் தொடர்கவிதை எழுத ஆரம்பித்தேன் தோழர்களே இது பற்றிய உங்கள் கருத்து என்னை வளப்படுத்தும் என்பதில் ஐயமில்லை நன்றிகள்
பிறப்பால் அனாதையாக்கப்பட்டு
வளர்ப்புக்கும் அனாதரவற்று
அகிலத்தில் ஓர் மகளாய்
அவதரித்த நிலை மறக்கவில்லை
வயிற்றுக்கு உணவுதேடி
வழியற்று வரம்புமீறாது
ஒரு தியாலத்துணவுடன்
பல தினம் பசியோடு
அழுதநிலை மறக்கவில்லை
படைத்தவனின் கருணையினால்
பாதசாரி ஒரு மனிதனால்
உணர்ந்த பரிதாபத்தில்
நான் சேர்ந்த அனாதையில்லம்
இன்னுந்தான் மறக்கவில்லை
என்போன்ற ஓராயிரம்
ஒத்தழுத சகாக்களோடு
வெந்த மனங்களுக்காறுதலாய்
உறவுகலந்த நாட்களை
இப்பொழுதும் மறக்கவில்லை
எனக்கிருந்த தமிழார்வத்தில்
“ஓராயிரம் மக்களை ஈன்ற
வலியுணராத்தாய்
என்தாயம்மாள்“
என்று நான் எழுதிய வரிகளுக்கு
நெற்றி மோர்ந்து பாவெழுதிய
என்குரு தாயம்மாளை
இதுநாள்வரை மறக்கவில்லை
என்னுள் நானுணர்நத
மாற்றங்களை மகிழ்ந்தபோதும்
சந்தேகங்களை சரிசெய்திட
சந்தர்ப்பமே இல்லாது
சஞசலமடைந்த சங்கதிகளை
சற்றேனும் மறக்கவில்லை
இவள் இன்னும் தொடர்வாள்......................
புதிய முயற்சியாக என் முதல் தொடர்கவிதை எழுத ஆரம்பித்தேன் தோழர்களே இது பற்றிய உங்கள் கருத்து என்னை வளப்படுத்தும் என்பதில் ஐயமில்லை நன்றிகள்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
இது கவிதையா அல்லது ஒரு பேதையின் கதியை சொல்லும் கதையா என்று மலைக்கும் வண்ணம் மிக அருமையாக கொண்டுசெல்கிறார் சிறப்புக் கவிஞர் ஹாசிம் .
கவிதைகள் படைப்பது கற்பனைகென்ற என்ற விதி ஹாசிமின் கவிதைகளில் காணாமல் போயின
காலத்தின் கோலத்தில் கசக்கப்பட்ட மலர் கவிதையின் காவியத்தின் நாயகி
கல்லைக்கூட கசக்கி முகரும் கயவர்கள் காலனியில் கருணையை எதிர்பார்த்த கன்னியின் கவலைகள் .
முத்து விளக்கெரியும் மோன இரவுகலில் பித்து மனவெளியில் பிறந்த கவலை இவள்
அதை சத்துகுறையாமல் நாம் சலிக்கவியலாமல் தந்த கவிக்கள்வன் ஹாசிம்
பாராட்டுக்கள் கவிஞரே
கவிதைகள் படைப்பது கற்பனைகென்ற என்ற விதி ஹாசிமின் கவிதைகளில் காணாமல் போயின
காலத்தின் கோலத்தில் கசக்கப்பட்ட மலர் கவிதையின் காவியத்தின் நாயகி
கல்லைக்கூட கசக்கி முகரும் கயவர்கள் காலனியில் கருணையை எதிர்பார்த்த கன்னியின் கவலைகள் .
முத்து விளக்கெரியும் மோன இரவுகலில் பித்து மனவெளியில் பிறந்த கவலை இவள்
அதை சத்துகுறையாமல் நாம் சலிக்கவியலாமல் தந்த கவிக்கள்வன் ஹாசிம்
பாராட்டுக்கள் கவிஞரே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
*சம்ஸ் wrote:காதலியாக இருந்தவள் மனைவியாக மாறியதும் இருவரினதும் மகிழ்ச்சி எப்படி என்றது எதிர் பார்ப்பு.கவிஞரின் கற்பனையில் எழுந்தாலும் வரிகள் உயிர் உள்ளவை நிதர்சனம் இணைந்து கற்பனையில் வலம் வரும் உங்களின் தொடர் அருமை. ஒரு கவிஞனின் கற்பனைக்கு எட்டியது மட்டும் வார்தைகள் அல்ல அவனின் அணுகுதலும் இணைந்து பினையும் அப்படி அமையும் கவிதைக்கு அழகு அதிகமாகிறது அந்தவகையில் உங்களின் வரிகள் எனக்கு உணர்ந்து கொள்ள முடிகிறது. உங்களின் வரிகள் எனது உடலில் உள்ள நாடி நரம்புகள் அனைத்தையும் ஒரு நொடி அசைத்து சென்றது வாழ்த்துகள் உங்களின் திறமைக்கும் ஊக்கத்துக்கு பின்னியாக இருபது ஒரு பெண் அப்படிதானே நண்பா?
வாவ் அருமையான வரிகள் வாழ்த்துகள் தொடரட்டும் படிக்க ஆவலுடன் நான்.
நன்றி தோழா மிக்க நன்றி மகிழ்கிறேன் உங்கள் வார்த்தைகளில்
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
அப்துல் றிமாஸ் wrote:அழகிய நெடுந்தொடர் இன்னும் தொடருங்கள்
அழகான வரிகள் நன்றி பகிர்வுக்கு
மிக்க நன்றி றிமாஸ் உங்களின் பின்னூட்டம் நீண்ட காலத்தின் பின்னர் என்னை அடைந்திருக்கிறது
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 09)
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 08)
தன்மானத்தின் தலைவனாய்
தலைநிமிர்ந்த கணவனாய் - என்
இன்னல்களுக்கு விடைகொடுத்து
சொந்தமாய்த் தொழிலும் சிறியதாய் மனையுமென
வாழ்வில் ஐக்கியமாகி சுவனத்தை
அனுபவித்து மகிழ்ந்ததை மறக்கவில்லை
இரவுபகல் பாகுபாடுமறந்து
இன்பலோகம் இணைந்தேயடைந்து
கழிந்த நாட்கள் 90உம் விடைபெற
பெண்மைக்கு பெருமைசேர்த்து
புகள்மிகு கருவும் எனைச்சேர்ந்து
தாய்மையானதை மறக்கவில்லை
உலகமே கணவனென்றானது
இன்பமொன்று இருக்கிறதென்று
உறவானவனைக்கண்டேன்.
என்தாயாய் அவர்மாறி எடுத்த வாந்தியை
கையிலேந்தி தலைகோதிச் சீராட்டி
அவர்மகிழ்ந்தபோது வயிற்றுக்குழந்தையும்
தானாய் வளர்ந்ததை மறக்கவில்லை
என்னவனுக்காய் காத்திருந்தமாலை
எதிர்பார்த்திராத செய்திவந்தது
சாலையில் நிகழ்ந்த விபத்தொன்றில்
சாவின் எல்லைவரை சென்றுவிட்டாரென்றனர்
இருண்டது உலகம் சுற்றியது தலை
நிதானித்துத் தடுமாறி வைத்தியசாலையடைந்தேன்
அவர்நிலைகண்டு மூச்சயானதை மறக்கவில்லை
கண்விழித்துக் கதறியழுதேன்
விதியின் விளையாட்டையும்
என்நிலையின் அஸ்த்தமனத்தையும் எண்ணி
நெஞ்சம் படபடத்து கதறல் அதிகரித்தபோது
சேர்ந்த நண்பர்ளும் சூழ்ந்த நபர்களுமாய் - ஆறுதலாய்
ஏதேதோ சொல்லக் கேட்டதை மறக்கவில்லை
பிரியாத உயிருடன் பிரிந்த கால்களும்
சிதைந்த உடல்களோடு சிதறிய சிந்தையோடும்
மூர்ச்சையற்று முனகல்களுடன்
முழுமனிதனவர் அரைமனிதனாயுள்ளாரென
வைத்தியரின் வாக்கில் பைத்தியமானபோது
என்னையே இழக்கத்துணிந்ததை மறக்கவில்லை
தொடர்வது என்ன???...............காத்திருங்கள்
தன்மானத்தின் தலைவனாய்
தலைநிமிர்ந்த கணவனாய் - என்
இன்னல்களுக்கு விடைகொடுத்து
சொந்தமாய்த் தொழிலும் சிறியதாய் மனையுமென
வாழ்வில் ஐக்கியமாகி சுவனத்தை
அனுபவித்து மகிழ்ந்ததை மறக்கவில்லை
இரவுபகல் பாகுபாடுமறந்து
இன்பலோகம் இணைந்தேயடைந்து
கழிந்த நாட்கள் 90உம் விடைபெற
பெண்மைக்கு பெருமைசேர்த்து
புகள்மிகு கருவும் எனைச்சேர்ந்து
தாய்மையானதை மறக்கவில்லை
உலகமே கணவனென்றானது
இன்பமொன்று இருக்கிறதென்று
உறவானவனைக்கண்டேன்.
என்தாயாய் அவர்மாறி எடுத்த வாந்தியை
கையிலேந்தி தலைகோதிச் சீராட்டி
அவர்மகிழ்ந்தபோது வயிற்றுக்குழந்தையும்
தானாய் வளர்ந்ததை மறக்கவில்லை
என்னவனுக்காய் காத்திருந்தமாலை
எதிர்பார்த்திராத செய்திவந்தது
சாலையில் நிகழ்ந்த விபத்தொன்றில்
சாவின் எல்லைவரை சென்றுவிட்டாரென்றனர்
இருண்டது உலகம் சுற்றியது தலை
நிதானித்துத் தடுமாறி வைத்தியசாலையடைந்தேன்
அவர்நிலைகண்டு மூச்சயானதை மறக்கவில்லை
கண்விழித்துக் கதறியழுதேன்
விதியின் விளையாட்டையும்
என்நிலையின் அஸ்த்தமனத்தையும் எண்ணி
நெஞ்சம் படபடத்து கதறல் அதிகரித்தபோது
சேர்ந்த நண்பர்ளும் சூழ்ந்த நபர்களுமாய் - ஆறுதலாய்
ஏதேதோ சொல்லக் கேட்டதை மறக்கவில்லை
பிரியாத உயிருடன் பிரிந்த கால்களும்
சிதைந்த உடல்களோடு சிதறிய சிந்தையோடும்
மூர்ச்சையற்று முனகல்களுடன்
முழுமனிதனவர் அரைமனிதனாயுள்ளாரென
வைத்தியரின் வாக்கில் பைத்தியமானபோது
என்னையே இழக்கத்துணிந்ததை மறக்கவில்லை
தொடர்வது என்ன???...............காத்திருங்கள்
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
முதல் படம் காதல் ஜோடியாகவும் அடுத்த படம் விபத்தின் சறுக்கலாகவும் பின்னனி என்னமோ சொல்லுது தொடர்கவிதையின் அடுத்த பகுதியின் எதிர்பார்ப்பு இதுல் தொடர்கிறது தொடருங்கள் தோழரே அருமைபிரியாத உயிருடன் பிரிந்த கால்களும்
சிதைந்த உடல்களோடு சிதறிய சிந்தையோடும்
மூர்ச்சையற்று முனகல்களுடன்
முழுமனிதனவர் அரைமனிதனாயுள்ளாரென
வைத்தியரின் வாக்கில் பைத்தியமானபோது
என்னையே இழக்கத்துணிந்ததை மறக்கவில்லை
தொடர்வது என்ன???...............காத்திருங்கள்
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
அன்பாய் நகர்ந்து அதிரவைத்த அதிரடியாய் தொடருமென முடித்திருக்கும் விதம் கவிதையை நகர்த்த நல்ல வடிவமாய் உள்ளது.
ஒரு கணவன் மனைவி இப்படித்தான் இருக்கவேண்டுமென கவிதை வடிவில் படம்போட்டு காட்டும் விதமும் மிக்கநன்று.
கவிதையில் பல எதார்த்த உண்மைகளை நான் காணக்கூடியதாக இருந்தது ஒரு கணவன் எப்போது நல்லவனாகின்றான் என்றால் அந்த மனைவி தன் கணவனை நல்லவனென்று சொல்லாதவரை அவன் நல்ல கணவனாகவோ, மனிதனாகவோ முடியாது அதை உணர்த்தும் விதமாகத்தான் இக்கவிதை எனக்குத்தோன்றுகிறது.
மனைவி கணவன் மீது கொண்டுள்ள அன்பு அவன் நீண்ட காலம் உயிர்வாழப்போதுமானது கவிதையின் படைப்பாளன் அக்கணவனையும் வாழவைப்பானா பொருத்திருந்து பார்ப்போம்
குறிப்பு - கணவன் மறைந்தும் மனிதனாக வாழவேண்டும் தன் மனைவிமக்கள் உள்ளத்தில்.
ஒரு கணவன் மனைவி இப்படித்தான் இருக்கவேண்டுமென கவிதை வடிவில் படம்போட்டு காட்டும் விதமும் மிக்கநன்று.
கவிதையில் பல எதார்த்த உண்மைகளை நான் காணக்கூடியதாக இருந்தது ஒரு கணவன் எப்போது நல்லவனாகின்றான் என்றால் அந்த மனைவி தன் கணவனை நல்லவனென்று சொல்லாதவரை அவன் நல்ல கணவனாகவோ, மனிதனாகவோ முடியாது அதை உணர்த்தும் விதமாகத்தான் இக்கவிதை எனக்குத்தோன்றுகிறது.
மனைவி கணவன் மீது கொண்டுள்ள அன்பு அவன் நீண்ட காலம் உயிர்வாழப்போதுமானது கவிதையின் படைப்பாளன் அக்கணவனையும் வாழவைப்பானா பொருத்திருந்து பார்ப்போம்
குறிப்பு - கணவன் மறைந்தும் மனிதனாக வாழவேண்டும் தன் மனைவிமக்கள் உள்ளத்தில்.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
உள்ளத்தில் சுமந்திட்ட
உறவினை
உதட்டினிலே வார்த்தையாய்
வரையறுத்துக்
கூறிட என்னால்
இயலுமா...
கள்ளமில்லா உள்ளன்போடு
எள்ளளவும் பிரியமாட்டாரென
உள்ளத்திலே வித்திட்ட
ஆசையும் நிராசையானதே!
துடிப்புகளை விட்டு விட்டு துடிக்க வைக்கும் ஹாசீமிர்க்கு நன்றி..
உறவினை
உதட்டினிலே வார்த்தையாய்
வரையறுத்துக்
கூறிட என்னால்
இயலுமா...
கள்ளமில்லா உள்ளன்போடு
எள்ளளவும் பிரியமாட்டாரென
உள்ளத்திலே வித்திட்ட
ஆசையும் நிராசையானதே!
துடிப்புகளை விட்டு விட்டு துடிக்க வைக்கும் ஹாசீமிர்க்கு நன்றி..
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
மிக்க நன்றி அனைவருக்கும் உங்களது பின்னூட்டங்கள் மேலும் வளர்ச்சியைத் தருகிறது நன்றி
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
:!+: :!+: :!+:
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
சிறகடித்துப் பறந்ததை
இன்னும் பறக்க போவதை
பார்க்க ஆவலுடன் .... :!+: :!+:
இன்னும் பறக்க போவதை
பார்க்க ஆவலுடன் .... :!+: :!+:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 10)
» அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)
» அவள்..
» அவள்.....!
» என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:(
» அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)
» அவள்..
» அவள்.....!
» என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:(
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|